ஆயுதமின்றி, ஆதரவின்றி
செல்லாத வழியில்
செய்வதறியாத என் பயணம்.!
உள்ளத்துள் உனை வைத்து
உயிர் பயத்துடன் தொடர்கிறது..!
வழியெங்கும் வலியென்றாலும்
போதையாய் உன் காதல்..!
முள்ளாய் உன் பிரிவிருக்க
முனைப்புடன் கால்கள் உனை நோக்கி.!
எண்ணியது நடக்காது போனாலும்
முயற்சித்த புண்ணியம் அது போதும்
புண்பட்ட இதயத்திற்கு புத்துயிர் தர..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக