uFOCUS: விசுவாமித்திர கோத்திரத்தில் ஒரு செயலி
-
Pa Raghavan
சொர்க்கம் உனக்கில்லை, நரகம் உனக்கு வேண்டாமெனில் உனக்கென ஒரு சொர்க்கத்தை
நான் உருவாக்கித் தருவேன் என்று சூரிய வம்சத்துத் திரிசங்குவுக்கு
நம்ப...
I Sharmi Diamond Ep39
-
39. Me
This time, the door wasn't knocked; it sounded like it was being rammed
open, as if they had decided to break it down. The faces of those i...
நெடுங்குருதி - கசப்பின் எல்லையில் கனியும் மணம்
-
(அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த கூடுகையில் , மூத்த எழுத்தாளர்
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் 'நெடுங்குருதி' நாவலைப் பற்றிய சிற்றுரை)
*இ*ன்றைய கா...
திரை புத்தகம் – புதிய தொடர்
-
Zero Degree பதிப்பகத்தில் இருந்து புதிதாக வெளிவந்திருக்கும் சினிமா பற்றிய
இணைய இதழ் – The Talkie – https://thetalkie.in/ . இந்த இணைய இதழின்
பதிப்பாசியர்களா...
காசா க்ராண்ட் எச்சரிக்கை
-
இந்த காசா க்ராண்ட் எலீஸியம் ப்ராஜக்ட் லாஞ்ச் சென்று வந்தது பற்றி கீழே உள்ள
லிங்கில் விரிவாக எழுதி உள்ளேன்,மொத்தம் 1350 அடுக்கக வீடுகளில் இதுவரை 500
வீட...
பங்குசந்தையில் பயணிக்கும் ஒருவனின் சுவாரஸ்ய வாழ்வு
-
ஏன் சமூக வலைத்தளங்களில் இயங்குவதில்லை. அதற்கான பதிலே பாட்ஷா மாணிக்கமாய்
இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தான். வலையுலக வழக்கமே
எதிர்வினையும்...
அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!
-
www.arunchol.com
என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!
‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம்
தெரிவிப்பேன் என்று க...
குழந்தை அண்ணா!
-
பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில்
இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம்
இருந்திருக்கிறது. நாளந்தா ...
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
2019- சிறந்த 10 படங்கள்
-
இவ்வருடம் 175 க்கும் மேல் தமிழ் படங்கள் வெளியானது. அவற்றில் போட்ட பணத்தை
எடுத்த படங்கள் 20 அல்லது 25 இருக்கலாம். இவ்வருடம் சின்ன படங்கள் -
தியேட்டரும் கிட...
பெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்
-
*பெருங்கற்கள் சுமக்கும் குளம்*
*’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும்
எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்துள்ள என்னுரை....
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
-
நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார
நெருக்கடியை சந்திக்கும்னு
சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்...
ஒச்சாயி - சினிமா விமர்சனம்
-
*25-03-2018*
*என் இனிய வலைத்தமிழ் மக்களே..!*
*தியேட்டருக்கு போயி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. வேலை நிறுத்தப்
போராட்டத்தினால் வேலையும் இல்லை. வீட்லேயும் ...
adwords find keywords
-
[image: adwords find keywords]
having the right keywords is the key to getting your ads to show on
relevant searches. but what if you’re not sure which o...
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
-
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட
நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு (
https://www.facebook.com/grou...
இறைவி - எண்ணங்கள் எனது !
-
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய
தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது.
வி...
கோழிக்குஞ்சு
-
சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு.
கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா
நிறைய கோழிக...
வழுவுச்சம்
-
முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன்
அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும்
பாறையில் எப்போத...
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
இணையம் வெல்வோம் - 23
-
முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில்
சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும்,
தங்களைப் பற்றியும், வாழ்...
ஆகாயத்தாமரைகள்..
-
கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன்
..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட
முடியுமோ அப்போ...
Deeper Analysis of "Vishwaroopam" :
-
These are just spoilers,if you haven’t watched vishwaroopam yet,Don't go
further.Let me get to core of the movie.Right fro...m first scene,
Kamal use...
திரும்பி வந்த சிங்கம்
-
லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு
பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி
வந்தால் ஒரு ...
அனுகிரகம்
-
மித வெப்பம் இதமான காற்று ஈரப் பதம் சுரக்கும் நீரூற்று பழாச்சுளைகள் நான்
உயிர் வாழ தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது உன் செவ்வாயில். என்
உ'தட்டை' தரையிற...
ப்ளாட் படும் பாடு....!!
-
ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர்
ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும்
பெண் புது பட்...
ஆரண்ய காண்டம்
-
ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம். எக்கச்சக்க எதிர்பார்ப்பை
எகிறவிட்டிருந்தார்கள். The film deserve all those.
ஒரு Gangster கதைதான். முதல...
சின்ன சின்ன நடை நடந்து...
-
இன்னிசைப் பாடல்களை மனது தேடித்தேடி ரசித்தாலும், பழைய பாடல்களில் உள்ள
இனிமையை ரசிக்க ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. பழைய பாடல்களின்
காட்சியைமைப்பு...
மன்மதன் அம்பு - திரை விமர்சனம்.
-
நிஷா (அம்புஜம்) பிரபல நடிகை. அவரை மாதவன் (மதனகோபால்) என்கிற பணக்கார வாலிபர்
காதலிக்கிறார். நடிகையானதால் மதனுக்கு சந்தேகம். காதல் ஒரிடத்தில் ஊடலாக நிஷா
ப...
அவளுடன் காணும் பொங்கல்
-
செங்கரும்பின் சாறு
செவ்விதழ்களை தாண்டி
வழிந்தோட நீ அடிக்கரும்பை
சுவைக்க ஆரம்பிக்கும்போது
அதை நான் ரசிக்க
ஆரம்பிக்கும்போது
என்ன என என்னைப் பார்க்க
பொங்கல் வா...
மனிதனைப் பொறுத்தவரை, அடுத்தவர்களை பாதிக்காத எந்த ஒரு விஷயத்தையும் செய்ய அவனுக்கு உரிமை உண்டு. உணவிலும் அப்படியே..! அவனுக்கு சைவம் பிடித்தால் சைவ உணவு உண்ணட்டும், அசைவ உணவு பிடித்தால் அசைவ உணவு உண்ணட்டுமே..! அதை வேண்டாம் என்று சொல்ல நாம் யார்..? (இந்த நேரத்தில் சைவ உணவை மட்டும் உண்ணும் கணவன், தன் மனைவி அசைவம் விரும்பி உண்டால் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்கள். அந்த கணவன்மார்களுக்கு என் ஹேட்ஸ் ஆஃப்..!) அதனால் நமக்கு என்ன நஷ்டம்..? நாம் மாடு, யானை, குதிரை போன்ற விலங்குகளை வேலைகளுக்கு பயன்படுத்துகிறோம். கோழி, ஆடு போன்றவற்றால் உணவை தவிர, மனிதனுக்கு வேறு பயன் என்ன..? அதைக் கூட வேண்டாம் என்று சொன்னால் என்ன சொல்வது..? கடவுளால் அவை படைக்கப்பட்டதன் நோக்கம் மனிதனுக்கு உணவாகத்தான்.
தனக்கு அசைவம் பிடிக்காது என்பதற்காக ஊரில் உள்ள முனியாண்டி விலாஸ்களையும், செட்டி நாடு ஹோட்டல்களையும், டெல்லி தர்பார்களையும் (பட்டியல் நீண்டு கொண்டே போகும், இத்தோடு நிறுத்தி விடுகிறேன்) மூடி விட வேண்டும் என்று ஒருவன் நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அது போல் தான் அசைவம் சாப்பிடக்கூடாது என்று அடுத்தவர்களை கட்டாயப்படுத்துவதும். இவ்வளவு அசைவத்திற்கு ஆரத்தி எடுத்து பேசும் நான் ஒரு சைவப் பிரியன் என்பது உங்களுக்கு தெரியுமா..? எனக்கு மிகவும் பிடித்த உணவு வற்றல் குழம்பும், கத்திரிக்காய் பச்சடியும்..! ஆனால், நான் யாரையும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று வற்புறுத்தியது கிடையாது..! வற்புறுத்தவும் கூடாது. என் உடன்பிறந்த சகோதரன் பறப்பதில் விமானத்தையும், கடலில் மிதப்பதில் கப்பலையும் தவிர வேறு எல்லாவற்றையும் வெளுத்துக் கட்டுவான் (அவன் சாப்பிடும் போது எதற்கும் நான் கொஞ்சம் எட்டியே நிற்பேன்..!!! விட்டால் என்னையும் விழுந்து, கடித்து தின்று விடுவானோ என்று பயமாக இருக்கும்..!!). ஊரில் இருக்கும் போது நான் வெளியூர் போனால் மதிய நேரம் என்னை கற்பகம் ரெஸ்ட்டாரண்டிலோ, லஷ்மி நாராயணபவனிலோ காணலாம். காரணம், எங்கள் வீட்டில் பெரும்பாலும் அசைவ உணவே சமைக்கப்படும் என்பதால், எனக்கு பிடித்த சைவ உணவை ஹோட்டலில் “வெட்டி” விட்டுத் தான் வீட்டுக்கே போவேன்..!! (ஊரில் நிறைய சைவ ஹோட்டல்களை வாழ வைத்த பெருமை எனக்குண்டு..!).
அரசின் உத்தரவால் விலங்குகள் பலி கொடுக்கப்படுவது நின்று விடும் என்றா நினைக்கிறீர்கள்..? நிச்சயம் நடக்காது..!! அதே போல் நாட்டில் விலங்கு, பறவைகளை பலி கொடுத்து நடத்தப்படும் இறைச்சிக் கடைகளை தடை செய்ய தைரியம் உண்டா இந்த அரசுக்கு..! (அப்படி செய்தால் கசாப்பு கடைக்காரர்களின் கத்திக்கு புது வேலை வரும்..!!). நம் மாநிலத்தில் பலி கொடுக்கப்படாவிட்டால், அவை வேறு இடத்தில் பலி கொடுக்கப்பட்டு, நாம் உண்ணாத அவற்றை வெளிமாநிலக்காரனோ அல்லது வெளிநாட்டுக்காரனோ உண்பான். இதனால் உள்நாட்டில் இறைச்சியின் விலை அநியாயத்திற்கு அதிகரிக்கும். காய்கறிகள் உண்பவர்கள் அதிகமாவதால் அதை ஈடு செய்யும் அளவுக்கு உற்பத்தி குறைவு என்பதால் காய்கறி விலையும் எகிறும். இறைச்சியை விற்பனை செய்து பிழைக்கும் பல குடும்பங்கள் நலிவடையும் (அவர்களும் தீட்டிய கத்தியை தூர வீசாமல் இன்னும் நன்றாக கூர் தீட்டிக் கொண்டு சாலைகளில் நடமாட ஆரம்பித்தால், நமக்கெல்லாம் சனி உச்சம் தான்..!). இவை தான் இந்த சட்டத்தினால் ஏற்படப் போகும் பலன்கள்..! ஜனநாயக நாட்டில் இது போன்ற அடாவடித்தனமான அதிகார துஷ்பிரயோக சட்டங்கள் அநாவசியமானவை. அப்பாவி மக்கள் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடவேண்டும் என்று ஆசைப்படவில்லை. அவர்களின் ஒரே கனவு வறுமையற்ற, நிம்மதியான வாழ்க்கை. அதை ஆட்சியாளர்கள் அளிப்பது என்பது அத்தனை கஷ்டமான விஷயமும் இல்லை. அவர்களின் ஏக்கத்தை நிறைவேற்ற அவர்களின் எண்ணங்களை நன்கு அறிந்த, வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்த, முக்கியமாக சமூகத்தின் மேல் அன்பு கொண்ட இதயம் வேண்டும்.
இப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் பதவியை சுயலாபத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும், அரசியல் எதிரிகளை பழி தீர்க்கவும் பயன்படுத்துகிறார்கள். அதற்காக அவர்கள் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது தான் வலிக்கிறது. அரசியலுக்கு வந்து வாய்ப்பு கேட்கும் ஒவ்வொருவரையும் “இவராவது வந்து நமக்கு நல்லது செய்யமாட்டாரா..?” என்ற என்ற நம்பிக்கையில் தான் தேர்ந்தெடுத்து, ஆட்சிப் பொறுப்பை கையில் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்களும் “பழைய குருடி, கதவை திறடி” கதையாக மற்றவர்கள் செய்ததையே தொடர, மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பதவிக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத, தகுதியில்லாதவரைக் கூட தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகி விடுகிறார்கள். இந்த போக்கு நாட்டிற்கு தீமையையே விளைவிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஒரு நாடு சிறக்க வேண்டுமென்றால் அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தனி மனித ஒழுக்கம் சரியான முறையில் பேணப்பட வேண்டும். அதனால் உங்களை சுத்தப்படுத்துங்கள் வீடு சுத்தமாகும், உங்கள் வீட்டை சுத்தப்படுத்துங்கள் தெரு சுத்தமாகும், உங்கள் தெருவை சுத்தப்படுத்துங்கள் நாடே சுத்தப்படும்..! நம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவேண்டும், தவறை தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர வேண்டும், திறமைக்கு, தகுதிக்கு மதிப்பு கொடுக்கும் குணம் வரவேண்டும்..! நம் தாய் திருநாடு ஒரு நாள் உலக அரங்கில் முதலிடம் வகிக்கும் என்ற நம்பிக்கையை உள்ளடக்கிய கனவோடு, அந்த நல்ல நாளுக்காய் ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் ஒரு உண்மையான இந்தியக் குடிமகனாய்..!! மெய்ப்படுமா என் கனவு..???
1 கருத்து:
பொருளாதார முறைகளில் .....
நீங்கள் சொல்வதை ஏற்று கொள்ளலாம்
கருத்துரையிடுக