வாசன் மலர்
-
Pa Raghavan
உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம்
ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில் இருக்கும் எந்தப்
...
லவ் ஸ்டோரி -1
-
”நான் ஏன் அவனை லவ் பண்ணேன்னு எனக்கு தெரியலை”
“அழகா இருந்தானோ?”
“அழகுன்னா.. அப்படியும் சொல்ல முடியாது. ஆனா அழகாத்தான் இருந்தான்”
“சரி எப்ப உங்க லவ் ஸ்டா...
புதிய வலைத்தளம் - அறிவிப்பு
-
அனைவருக்கும் வணக்கம்.
2009ல் துவங்கப்பட்ட blog (பிளாக் ) வலைத்தளம் இது. Google Blogspot மூலம்
பெறப்பட்ட இணைய தள வசதி . மொபைல் வந்த பிறகு , பிளாகில் ...
நெடுங்குருதி - கசப்பின் எல்லையில் கனியும் மணம்
-
(அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த கூடுகையில் , மூத்த எழுத்தாளர்
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் 'நெடுங்குருதி' நாவலைப் பற்றிய சிற்றுரை)
*இ*ன்றைய கா...
திரை புத்தகம் – புதிய தொடர்
-
Zero Degree பதிப்பகத்தில் இருந்து புதிதாக வெளிவந்திருக்கும் சினிமா பற்றிய
இணைய இதழ் – The Talkie – https://thetalkie.in/ . இந்த இணைய இதழின்
பதிப்பாசியர்களா...
காசா க்ராண்ட் எச்சரிக்கை
-
இந்த காசா க்ராண்ட் எலீஸியம் ப்ராஜக்ட் லாஞ்ச் சென்று வந்தது பற்றி கீழே உள்ள
லிங்கில் விரிவாக எழுதி உள்ளேன்,மொத்தம் 1350 அடுக்கக வீடுகளில் இதுவரை 500
வீட...
பங்குசந்தையில் பயணிக்கும் ஒருவனின் சுவாரஸ்ய வாழ்வு
-
ஏன் சமூக வலைத்தளங்களில் இயங்குவதில்லை. அதற்கான பதிலே பாட்ஷா மாணிக்கமாய்
இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தான். வலையுலக வழக்கமே
எதிர்வினையும்...
அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!
-
www.arunchol.com
என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!
‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம்
தெரிவிப்பேன் என்று க...
குழந்தை அண்ணா!
-
பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில்
இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம்
இருந்திருக்கிறது. நாளந்தா ...
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
2019- சிறந்த 10 படங்கள்
-
இவ்வருடம் 175 க்கும் மேல் தமிழ் படங்கள் வெளியானது. அவற்றில் போட்ட பணத்தை
எடுத்த படங்கள் 20 அல்லது 25 இருக்கலாம். இவ்வருடம் சின்ன படங்கள் -
தியேட்டரும் கிட...
பெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்
-
*பெருங்கற்கள் சுமக்கும் குளம்*
*’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும்
எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்துள்ள என்னுரை....
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
-
நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார
நெருக்கடியை சந்திக்கும்னு
சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்...
ஒச்சாயி - சினிமா விமர்சனம்
-
*25-03-2018*
*என் இனிய வலைத்தமிழ் மக்களே..!*
*தியேட்டருக்கு போயி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. வேலை நிறுத்தப்
போராட்டத்தினால் வேலையும் இல்லை. வீட்லேயும் ...
adwords find keywords
-
[image: adwords find keywords]
having the right keywords is the key to getting your ads to show on
relevant searches. but what if you’re not sure which o...
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
-
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட
நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு (
https://www.facebook.com/grou...
இறைவி - எண்ணங்கள் எனது !
-
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய
தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது.
வி...
கோழிக்குஞ்சு
-
சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு.
கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா
நிறைய கோழிக...
வழுவுச்சம்
-
முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன்
அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும்
பாறையில் எப்போத...
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
இணையம் வெல்வோம் - 23
-
முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில்
சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும்,
தங்களைப் பற்றியும், வாழ்...
ஆகாயத்தாமரைகள்..
-
கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன்
..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட
முடியுமோ அப்போ...
Deeper Analysis of "Vishwaroopam" :
-
These are just spoilers,if you haven’t watched vishwaroopam yet,Don't go
further.Let me get to core of the movie.Right fro...m first scene,
Kamal use...
திரும்பி வந்த சிங்கம்
-
லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு
பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி
வந்தால் ஒரு ...
அனுகிரகம்
-
மித வெப்பம் இதமான காற்று ஈரப் பதம் சுரக்கும் நீரூற்று பழாச்சுளைகள் நான்
உயிர் வாழ தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது உன் செவ்வாயில். என்
உ'தட்டை' தரையிற...
ப்ளாட் படும் பாடு....!!
-
ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர்
ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும்
பெண் புது பட்...
ஆரண்ய காண்டம்
-
ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம். எக்கச்சக்க எதிர்பார்ப்பை
எகிறவிட்டிருந்தார்கள். The film deserve all those.
ஒரு Gangster கதைதான். முதல...
சின்ன சின்ன நடை நடந்து...
-
இன்னிசைப் பாடல்களை மனது தேடித்தேடி ரசித்தாலும், பழைய பாடல்களில் உள்ள
இனிமையை ரசிக்க ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. பழைய பாடல்களின்
காட்சியைமைப்பு...
மன்மதன் அம்பு - திரை விமர்சனம்.
-
நிஷா (அம்புஜம்) பிரபல நடிகை. அவரை மாதவன் (மதனகோபால்) என்கிற பணக்கார வாலிபர்
காதலிக்கிறார். நடிகையானதால் மதனுக்கு சந்தேகம். காதல் ஒரிடத்தில் ஊடலாக நிஷா
ப...
அவளுடன் காணும் பொங்கல்
-
செங்கரும்பின் சாறு
செவ்விதழ்களை தாண்டி
வழிந்தோட நீ அடிக்கரும்பை
சுவைக்க ஆரம்பிக்கும்போது
அதை நான் ரசிக்க
ஆரம்பிக்கும்போது
என்ன என என்னைப் பார்க்க
பொங்கல் வா...
நான் இங்கே எழுதியிருப்பவை நாட்டுப்பற்று கொண்ட, சமூகத்தின்பால் அக்கறை கொண்ட, மானிட ஒற்றுமையில் ஆர்வம் கொண்ட, மனிதர்களை ஜாதி, மதம், இனம், மொழி கடந்து நேசிக்கும் ஒரு சராசரி மனிதனின் மனதில் ஏற்பட்ட எண்ணச் சிதறல்கள் மட்டுமே தவிர, வேறு எதுவும் இல்லை..! இதற்கு நீங்கள் எந்த வர்ணமும் பூச மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இது தொடர்பில் உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை, குட்டுக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நீங்கள் கொடுக்கும் எதையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். எனவே நம் முன் இருக்கும் இரும்புத் திரை விலக்கி தாராளமாய் விமர்சியுங்கள்..! நான் ஏராளமாய் மகிழ்வேன்..!! சரி..! இனி, நம் விஷயத்திற்கு போவோம்.
கடவுளுக்கு விலங்குகளை, பறவைகளை காணிக்கையாக பலியிடுவது குறித்தும், நம் நாட்டில் நிலவும் சைவ, அசைவ வேறுபாடு குறித்தும் பதிவெழுத நெடுநாட்களாக நினைத்திருந்தேன். இன்று சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. காணிக்கை கொடுப்பது சரியா என்பதற்கு முன், அவை ஏன் பலியிடப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் பலியிடுதல் என்பது நேர்ச்சையை நோக்கமாக கொண்டது மட்டுமே..! அதாவது, தான் வேண்டுவதை நிறைவேற்றினால், அதற்கு பிரதிபலனாக ஆடு, கோழி உள்ளிட்ட உயிரினமோ அல்லது அ·றிணையான சில்லரை காசிலிருந்து, விலை மதிப்புள்ள ஆபரணங்கள்வரை தருவதாக சொல்லி கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் செய்யப்படும் ஒரு ஒப்பந்தம் தான் நேர்ச்சை என்பது. இதில் நேர்ச்சைக்கும், காணிக்கைக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு. ஒரு வேண்டுதலின் பொருட்டு கடவுளுக்காக செய்யப்போவதாக சொல்லப்படும் அட்வான்ஸ் புக்கிங் தான் நேர்ச்சை..! அப்படி வேண்டிக் கொண்டது நிறைவேறினால், சொன்னபடி வேண்டுதலை நிறைவேற்றுவது காணிக்கை (இந்த நேர்ச்சைக்கும், காணிக்கைக்கும் எந்த மதங்களும் விதி விலக்கல்ல..!). பகுத்தறிவு படி பார்த்தால் நேர்ச்சை மற்றும் காணிக்கையில் அர்த்தமில்லை என்றாலும் மனிதனின் மன திருப்திக்காக பகுத்தறிவு கடந்து செய்யக்கூடிய இது போன்ற சில விஷயங்களை ஆராய்வது ஏற்புடையது ஆகாது என்றாலும், அது கடவுளோடு சம்பந்தப்படுத்தப்படும் போது தான் அங்கே முரண்பாடு தோன்றுகிறது..!.
இவ்வாறு கடவுளுக்கு காணிக்கை செய்யப்படும் எந்தப் பொருளையும் கடவுள் உண்பதில்லை அல்லது உபயோகப்படுத்துவதில்லை (நம்மிடம் அவர் கேட்பதும் இல்லை என்பது உபரி தகவல்..!). அதாவது, நாமாகவே ஒரு கற்பனையை செய்து கொண்டு, கடவுளை “கவனித்து” காரியங்களை கைக்குள் அடக்க நினைக்கும் நம் அறியாமையின் வெளிப்பாடு தான் நேர்ச்சையும், காணிக்கையும் (இதனால் தான் இன்னும் திருப்பதி உண்டியல் “ஹவுஸ்·புல்” கவும், உலகின் பணக்கார கடவுளாக திருப்பதி வெங்கடாஜலபதி இருக்கவும் காரணமாய் இருக்கிறது). மனிதர்கள் மன நிறைவிற்காக கடவுளுக்கு காணிக்கை அளிக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் சிறந்தது என்றாலும், அதை அடைய அவர் போகும் வழி சரியானதா என்பதை நான் சிந்திக்க வேண்டும். கடவுளின் கருணைப் பார்வை நமக்கு கிட்ட காணிக்கை அளிப்பது தான் சரி என்றால் தாலுகா ஆஃபீஸ் பியூனுக்கும், தன்னுடைய மகாசக்தியால் உலகத்தை காக்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லுங்கள். எந்த தேவைகளும் இல்லாத கடவுளுக்கு, நாம் உண்டியலில் போடும் ஒரு ரூபாயும், இரண்டு ரூபாயும் எதற்கு..? உண்மை என்னவென்றால், கடவுளின் பெயரைச் சொல்லி சமூகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் சில நயவஞ்சகர்களின் நாச வேலை இது..! கடவுளின் பெயரைச் சொல்லி கௌரவமாக பைசா பார்ப்பது இன்று நாட்டில் முதல் போடாத முக்கிய பிஸினஸாக இருந்து வருகிறது. நாம் கடவுளின் அருளை அடைவது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. நல்லதை மட்டும் செய்தால் வெகு சுலபமாக கடவுளின் அருளை அடையலாம்..! கடவுளுக்கு காணிக்கை அளிப்பதாக நினைத்துக் கொண்டு, நாம் நாசகாரர்களுக்கு அளிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியூட்டி, கடவுளின் கருணைப்பார்வையை வெகு சுலபமாக பெறலாமே..! சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் காணிக்கை என்பது நம்முடைய சுயநலத்தையும், பேராசையையும் வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு கண்ணாடி..!
அடுத்து விலங்குகள் மற்றும் பறவைகளை கடவுளுக்கு காணிக்கை கொடுப்பது குறித்து முன்பு அரசின் தடை கூட இருந்தது. ஆடு, மாடு உள்ளிட்டவற்றை உண்ணாத பிரிவினர் கூட நம்மிடையே இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன..? உயிர்களைக் கொல்வது பாவம் என்பதாலா..? ஆமாம், அது தான் உண்மை என்றால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. உயிர் என்பது விலங்குகளுக்கு மட்டும் உரியதா.? அப்படியென்றால் தாவரங்களுக்கு உயிர் இல்லையா..? உயிர் இல்லாமலா அவை முளைத்து, துளிர்த்து, கிளைத்து, செடியாகி, மரமாகி, காய்த்து தன் வாழ்நாள் முடிந்தவுடன் மற்ற உயிரினங்கள் போலவே செத்துப் போகிறது..? சரி, தாவரங்களை விட்டு விடுவோம். உலகில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை மட்டுமா உயிருள்ளவை..? நாம் அருந்தும் நீரில் எவ்வளவு பாக்டீரியாக்கள் உள்ளது தெரியுமா..? நாம் சுவாசிக்கும் காற்றில் எவ்வளவு நுண்ணியிரிகள் உள்ளன தெரியுமா..? அதையெல்லாம் கொல்கிறோமே..! அது பாவமில்லையா..? நியாயம் என்பது கண்ணுக்கு தெரிந்த உயிரினத்திற்கு மட்டும் தானா..? இப்படி ஆடு, மாடு, கோழி போன்ற உயிர்களை பலியிடுவதை, உண்ணுவதை தடுக்க நினைப்பவர்கள் மதக்கலவரம், ஜாதிக்கலவரம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் மூலம் ஆறறிவு உயிர்கள் ஆயிரக்கணக்கில் அநியாயமாய் பலி கொள்ளப்படுகிறதே, அதை எந்த சட்டம் போட்டு அல்லது எப்படி தடுக்கப் போகிறார்கள்..? நம் நாட்டில் ஐந்தறிவு விலங்குகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட ஆறறிவு மனிதனுக்கு கொடுக்கப்படுவதில்லையே அது ஏன்..? இந்தக் கேள்விக்கு மேனகா காந்தியால் கூட பதில் சொல்ல முடியாது. முதலில் நாம் கடவுள் படைப்பில் உள்ள உயிரினங்களின் வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரும், மற்ற உயிர்களை சார்ந்தே வாழ்கிறது. வாழ்ந்தே ஆக வேண்டும்..! தாவரம் இல்லையென்றால் தாவர உண்ணிகளுக்கு வாழ்க்கையில்லை. விலங்குகள் இல்லையென்றால் ஊண் உண்ணிகளுக்கு வாழ்க்கையில்லை. கடவுளின் படைப்பு மிகச் சரி..! ஆனால், பலவீனங்கள் நிறைந்த மனிதன் அதை மாற்ற நினைப்பது தான் நகைப்பை உண்டாக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக