ஆன்மாவும் அவரைக்காயும்
-
Pa Raghavan
இந்த மனிதர் ஏன் இலக்கியத்தை விட்டு வைத்தார் என்றுதான் அவரைப் பற்றிப்
படிக்கும்போது தோன்றியது. ஏ ஸ்கொயரும் பி ஸ்கொயரும் எக்கேடு கெடட்டும்.
இவ...
I Sharmi Diamond Ep-40
-
42. 40 A Flashback
"What is it, Raja? You're the one who's always 'busy, busy' when I call,
and now you've called me? What do you need?" I looked ...
நெடுங்குருதி - கசப்பின் எல்லையில் கனியும் மணம்
-
(அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த கூடுகையில் , மூத்த எழுத்தாளர்
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் 'நெடுங்குருதி' நாவலைப் பற்றிய சிற்றுரை)
*இ*ன்றைய கா...
திரை புத்தகம் – புதிய தொடர்
-
Zero Degree பதிப்பகத்தில் இருந்து புதிதாக வெளிவந்திருக்கும் சினிமா பற்றிய
இணைய இதழ் – The Talkie – https://thetalkie.in/ . இந்த இணைய இதழின்
பதிப்பாசியர்களா...
காசா க்ராண்ட் எச்சரிக்கை
-
இந்த காசா க்ராண்ட் எலீஸியம் ப்ராஜக்ட் லாஞ்ச் சென்று வந்தது பற்றி கீழே உள்ள
லிங்கில் விரிவாக எழுதி உள்ளேன்,மொத்தம் 1350 அடுக்கக வீடுகளில் இதுவரை 500
வீட...
பங்குசந்தையில் பயணிக்கும் ஒருவனின் சுவாரஸ்ய வாழ்வு
-
ஏன் சமூக வலைத்தளங்களில் இயங்குவதில்லை. அதற்கான பதிலே பாட்ஷா மாணிக்கமாய்
இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தான். வலையுலக வழக்கமே
எதிர்வினையும்...
அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!
-
www.arunchol.com
என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!
‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம்
தெரிவிப்பேன் என்று க...
குழந்தை அண்ணா!
-
பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில்
இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம்
இருந்திருக்கிறது. நாளந்தா ...
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
2019- சிறந்த 10 படங்கள்
-
இவ்வருடம் 175 க்கும் மேல் தமிழ் படங்கள் வெளியானது. அவற்றில் போட்ட பணத்தை
எடுத்த படங்கள் 20 அல்லது 25 இருக்கலாம். இவ்வருடம் சின்ன படங்கள் -
தியேட்டரும் கிட...
பெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்
-
*பெருங்கற்கள் சுமக்கும் குளம்*
*’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும்
எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்துள்ள என்னுரை....
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
-
நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார
நெருக்கடியை சந்திக்கும்னு
சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்...
ஒச்சாயி - சினிமா விமர்சனம்
-
*25-03-2018*
*என் இனிய வலைத்தமிழ் மக்களே..!*
*தியேட்டருக்கு போயி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. வேலை நிறுத்தப்
போராட்டத்தினால் வேலையும் இல்லை. வீட்லேயும் ...
adwords find keywords
-
[image: adwords find keywords]
having the right keywords is the key to getting your ads to show on
relevant searches. but what if you’re not sure which o...
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
-
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட
நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு (
https://www.facebook.com/grou...
இறைவி - எண்ணங்கள் எனது !
-
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய
தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது.
வி...
கோழிக்குஞ்சு
-
சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு.
கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா
நிறைய கோழிக...
வழுவுச்சம்
-
முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன்
அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும்
பாறையில் எப்போத...
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
இணையம் வெல்வோம் - 23
-
முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில்
சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும்,
தங்களைப் பற்றியும், வாழ்...
ஆகாயத்தாமரைகள்..
-
கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன்
..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட
முடியுமோ அப்போ...
Deeper Analysis of "Vishwaroopam" :
-
These are just spoilers,if you haven’t watched vishwaroopam yet,Don't go
further.Let me get to core of the movie.Right fro...m first scene,
Kamal use...
திரும்பி வந்த சிங்கம்
-
லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு
பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி
வந்தால் ஒரு ...
அனுகிரகம்
-
மித வெப்பம் இதமான காற்று ஈரப் பதம் சுரக்கும் நீரூற்று பழாச்சுளைகள் நான்
உயிர் வாழ தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது உன் செவ்வாயில். என்
உ'தட்டை' தரையிற...
ப்ளாட் படும் பாடு....!!
-
ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர்
ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும்
பெண் புது பட்...
ஆரண்ய காண்டம்
-
ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம். எக்கச்சக்க எதிர்பார்ப்பை
எகிறவிட்டிருந்தார்கள். The film deserve all those.
ஒரு Gangster கதைதான். முதல...
சின்ன சின்ன நடை நடந்து...
-
இன்னிசைப் பாடல்களை மனது தேடித்தேடி ரசித்தாலும், பழைய பாடல்களில் உள்ள
இனிமையை ரசிக்க ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. பழைய பாடல்களின்
காட்சியைமைப்பு...
மன்மதன் அம்பு - திரை விமர்சனம்.
-
நிஷா (அம்புஜம்) பிரபல நடிகை. அவரை மாதவன் (மதனகோபால்) என்கிற பணக்கார வாலிபர்
காதலிக்கிறார். நடிகையானதால் மதனுக்கு சந்தேகம். காதல் ஒரிடத்தில் ஊடலாக நிஷா
ப...
அவளுடன் காணும் பொங்கல்
-
செங்கரும்பின் சாறு
செவ்விதழ்களை தாண்டி
வழிந்தோட நீ அடிக்கரும்பை
சுவைக்க ஆரம்பிக்கும்போது
அதை நான் ரசிக்க
ஆரம்பிக்கும்போது
என்ன என என்னைப் பார்க்க
பொங்கல் வா...
இன்றைய காலத்தில் தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளாக மாறிவிட்ட நிலையில் அதில் வன்முறை, முறையற்ற பாலுறவு, கலாச்சார சீர்கேடுகள் இல்லாத நிகழ்ச்சிகளை, தொடர்களை திரைப்படங்களை பார்ப்பது என்பது அரிதாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் இருக்கும் குடும்பங்களில் தொலைக்காட்சியை மிகவும் கவனத்துடன் பயன்படுத்துவது என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.
ரியாலிட்டி ஷோ மற்றும் டாக் ஷோ என்ற பெயரில் தொலைக்காட்சியின் மூலம் வெளிப்படும் உண்மைகள் நம் சமூகம் எத்தனை சிதைந்தும், சீர்குலைந்தும் போய் இருக்கிறது என்பதை காட்டுகிறது. விஜய் டிவியின் நீயா நானா மற்றும் ஜி தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். அதுவும் குறிப்பாக சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி ஏற்படுத்தும் அதிர்வுகள், வெளிப்படுத்தும் அவலங்கள் காண்பவர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. குடும்ப உறவுகளுக்குள் எத்தனை கோபம், குரோதம், வன்முறை, துரோகங்கள் இருக்கின்றன என்பதை உணரும் போது குடும்ப உறவுகள் பாதுகாப்பானவை, பிரச்சினைகள் அற்றவை என்ற எண்ணமே பலவீனப்படுகிற உணர்வே ஏற்படுகிறது.
சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் வெளிப்பட்ட உண்மைகளை அறிந்தால் நீங்கள் அதிர்ந்தே போவீர்கள். ராஜி என்ற 35 வயதுக்கு மேலான ஒரு பெண். அவளின் கணவன் ஒரு குடிகாரன் மற்றும் சந்தேகப் புத்திக்காரன். வேலைக்கு போவதில் இஷ்டமில்லாதவன், அப்படியே போனாலும் சம்பாத்தியத்தை மனைவிக்கு தராதவன். அவர்களுக்கு 4 குழந்தைகள். அதில் 2 வயதுக்கு வந்த மகள்கள் மற்றும் 2 மகன்கள். இதில் ஒரு மகன் ஏதோ காரணத்தால் இறந்து விட்டான். அடுத்த மகன் ஒரு கொலையில் சம்பந்தம் என்று குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் இருக்கிறான். அவனுக்கு ஒரு நண்பன். ஆண் பிள்ளை துணை இல்லாத வீட்டில் உதவிகள் செய்ய வருகிறான் புஷ்பராஜ் என்கிற 20 வயதிற்குட்பட்ட நண்பன். கணவனால் பல வகைகளில் கஷ்டப்பட்ட, ஏமாற்றம் அடைந்த ராஜிக்கு புஷ்பராஜ் உறவு ஆறுதலாக அமைகிறது. நண்பனின் தாய் என்பதால் அவளை அம்மா என்றே அழைக்கிறான்.
ஒரு கட்டத்தில் இருவரின் நெருக்கம் கூடி போய் அவர்களுக்குள் தவறான உறவு உண்டாகிறது. கணவன், தாய், புஷ்பராஜின் பெற்றோர், உறவுகள் என்று பலரும் கண்டித்தும் இருவரும் உறைவை முறித்துக்கொள்ள தயாரில்லை. இந்த சூழ்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டார்கள் இருவரும். தாயை போன்ற நண்பனின் தாயோடு கள்ள உறவு என்ற அதிர்ச்சியில் நாம் உறைந்து இருக்கும் பொழுது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக வருகிறது மேலும் சில அசிங்கமான உண்மைகள்.
ராஜியோடு நெருங்கி பழகியதால் அவர்கள் குடும்பத்தில் ஒன்றிய புஷ்பராஜ் அடுத்து செய்த காரியம் ராஜியின் மூத்த மகளான கல்கியை காதலிப்பதாக கூறி ஏமாற்றியிருக்கிறான். அந்த அப்பாவி பெண்ணும் நம்பி மோசம் போய் இருக்கிறாள். ஒரே நேரத்தில் அந்த அயோக்கியன் தாய், மகளை ஏமாற்றி இருக்கிறான் என்பதறிந்து அனைவருக்கும் பேரதிர்ச்சி. இந்நிலையில் நிகழ்ச்சியில் ராஜி, அவளின் கள்ளக்காதலன் புஷ்பராஜ், அவளின் இரு மகள்கள், ராஜியின் கணவன், புஷ்பராஜின் பெற்றோர் கலந்து கொண்டனர். நடந்த விஷயங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது, புஷ்பராஜ் ராஜியின் மகளை காதலிப்பதாக ஏமாற்றியதை தவிர. அதுவும் இறுதியில் அனைவருக்கும் தெரிந்து போனது.
ராஜியின் கணவன் அவள் திருந்தி வந்தாள் ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறினான். ஆனால் ராஜிக்கு அவனோடு வாழ்வதில் இஷ்டமில்லை. புஷ்பராஜின் பெற்றோரோ தங்கள் பிள்ளை தனக்கு வேண்டும் என்று கண்ணீர் விட்டனர். ஆனால் புஷ்பராஜ்க்கு ராஜி இல்லாமல் வாழ முடியாது என்று (கள்ளக்)காதல் வசனம் பேசினான். நிகழ்ச்சியின் போது புஷ்பராஜ் ராஜியின் மகளை ஏமாற்றிய விஷயம் வெளிவந்த போது ராஜிக்கு பெரும் அதிர்ச்சி. தன்னிடம் நடித்து துரோகம்(!) செய்த "அவன் இனி எனக்கு வேண்டாம்" என்று சொன்னாள். இதனால் பெரும் வேதனையான புஷ்பராஜ் தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் படி கண்ணீருடன் அவள் காலில் விழுந்து மன்றாடினான்.
இந்த நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் செய்ய முயற்சி செய்த முடிவுகள்:
1. ராஜியின் மகள் காதலில் ஏமாற்றிய புஷ்பராஜின் பக்கமே இனி போகக்கூடாது. இடையில் நிறுத்திய பள்ளிப்படிப்பை தொடர வேண்டும்.
2. புஷ்பராஜ் ராஜியை மறந்து பெற்றோருடன் வாழ வேண்டும்.
3. ராஜி நடந்ததை மறந்து கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும்.
இறுதியில் புஷ்பராஜ் பெற்றோருடன் சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டு அவர்களுடன் கிளம்பி சென்றான். ஆனால், ராஜி இறுதி வரை கணவனுடன் வாழ மறுத்துவிட்டாள்.
இத்தனை அசிங்கங்கள் அரங்கேறிய அந்த நிகழ்ச்சியில் ஆறுதலான விஷயம் என்றால் புஷ்பராஜ்க்கு விழுந்த அடிகள் மற்றும் கிடைத்த அவமானம் தான்.
இது போன்ற நிகழ்ச்சிகள் சம்பந்தவர்களை திருத்திவிடும் என்றோ, பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விடுமென்றோ எனக்கு தோன்றவில்லை. ஆனால், நாம் அறியாத, நம் எண்ணங்கள் மற்றும் கற்பனையையும் தாண்டிய கேவலமான விஷயங்கள் சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணரவும், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி இது போன்ற கலாசார அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தன் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ளவும் மட்டுமே பயன்படும் என்பது தான் உண்மை.
கணவன் மனைவி இருவருக்கிடையே இருக்க வேண்டிய காதல், அன்பு, பாசம், புரிதல், விட்டுக்கொடுத்தல், அர்ப்பணிப்பு, சம உரிமை, அதே போல் குழந்தைகள் மேல் பெற்றோர் காட்ட வேண்டிய பாசம், அக்கறை, கண்டிப்பு ஆகியவை இல்லாத பட்சத்தில் எந்த குடும்பத்திலும் இது போன்ற அவலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பது தான் இந்நிகழ்ச்சிகள் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.!!!