நேரம்:

சனி, 26 மார்ச், 2011

அ.தி.மு.க அணி வகுக்கும் தொகுதிகள்..!! - தேர்தல் ஸ்பெஷல்

கூட்டணிகளுடான தொகுதிப்பங்கீட்டில் ஏகப்பட்ட குழப்பங்கள், மாற்றங்களுக்கு பிறகு அதிமுக தான் போட்டியிடப்போகும் தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

1. ஸ்ரீரங்கம்:- ஜெ.ஜெயலலிதா

திருவள்ளூர் மாவட்டம்
2. பொன்னேரி (தனி):- பொன்.ராஜா
3. திருவள்ளூர்:- பி.வி.ரமணா,
4. பூவிருந்தவல்லி (தனி):- இரா.மணிமாறன்,
5. ஆவடி:- எஸ்.அப்துல் ரஹீம்
6. அம்பத்தூர்:- எஸ்.வேதாச்சலம்
7. மாதவரம்:- வி.மூர்த்தி
8. திருவொற்றியூர்:- கே.குப்பன்

சென்னை மாவட்டம்
9. ராதாகிருஷ்ணன் நகர்:- பி.வெற்றிவேல்
10. கொளத்தூர்:- சைதை சா.துரைசாமி
11. வில்லிவாக்கம்:- ஜே.சி.டி.பிரபாகர்
12. திரு.வி.க.நகர் (தனி):- வ.நீலகண்டன்
13. ராயபுரம்:- டி.ஜெயக்குமார்
14. துறைமுகம்:- பழ.கருப்பையா
15. ஆயிரம்விளக்கு:- பா.வளர்மதி
16. அண்ணாநகர்:- எஸ்.கோகுல இந்திரா
17. சைதாப்பேட்டை:- ஜி.செந்தமிழன்
18. தியாகராயநகர்:- வி.பி.கலைராஜன்
19. மைலாப்பூர்:- ஆர்.ராஜலட்சுமி
20. வேளச்சேரி:- எம்.கே.அசோக்

காஞ்சீபுரம் மாவட்டம்
21. சோழிங்கநல்லூர்:- கே.பி.கந்தன்
22. ஸ்ரீபெரும்புதூர் (தனி):- மொளச்சூர் இரா.பெருமாள்
23. பல்லாவரம்:- ப.தன்சிங்
24. தாம்பரம்:- டி.கே.எம்.சின்னையா
25. திருப்போரூர்:- தண்டரை கே.மனோகரன்
26. செய்யூர் (தனி):- வி.எஸ்.ராஜி
27. மதுராந்தகம் (தனி):- எஸ்.கணிதா சம்பத்
28. உத்திரமேரூர்:- வாலாஜாபாத் பா.கணேசன்
29. காஞ்சீபுரம்:- வி.சோமசுந்தரம்

வேலூர் மாவட்டம்
30. அரக்கோணம் (தனி):- சு.ரவி
31. காட்பாடி:- எஸ்.ஆர்.கே.அப்பு (எ) ராதாகிருஷ்ணன்
32. ராணிப்பேட்டை:- அ.முஹம்மத்ஜான்
33. ஆற்காடு:- ஆர்.சீனிவாசன்
34. வேலூர்:- டாக்டர் வி.எஸ்.விஜய்
35. வாணியம்பாடி:- கோவி.சம்பத்குமார்
36. ஜோலார்பேட்டை:- கே.சி.வீரமணி
37. திருப்பத்தூர்:- கே.ஜி.ரமேஷ்

தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்கள்
38. ஊத்தங்கரை (தனி):- மனோரஞ்சிதம் நாகராஜ் 39. பர்கூர்:- கே.இ.கிருஷ்ணமூர்த்தி
40. கிருஷ்ணகிரி:- கே.பி.முனுசாமி
41. பாலக்கோடு:- கே.பி.அன்பழகன்
42. பாப்பிரெட்டிப்பட்டி:- பி.பழனியப்பன்

திருவண்ணாமலை மாவட்டம்
43. திருவண்ணாமலை:- எஸ்.ராமச்சந்திரன்
44. கீழ்பென்னாத்தூர்:- ஏ.கே.அரங்கநாதன்
45. கலசபாக்கம்:- அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,
46. போளூர்:- எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன்
47. செய்யார்:- முக்கூர் என்.சுப்பிரமணியன்
48. வந்தவாசி (தனி):- செய்யாமூர் வே.குணசீலன்
49. மைலம்:- கே.பி.நாகராஜன்
50. திண்டிவனம் (தனி):- டாக்டர் த.அரிதாஸ்
51. வானூர் (தனி):- ஐ.ஜானகிராமன்
52. விழுப்புரம்:- சி.வி.சண்முகம்
53. உளுந்தூர்பேட்டை:- இரா.குமரகுரு
54. சங்கராபுரம்:- ப.மோகன்
55. கள்ளக்குறிச்சி (தனி):- பா.அழகுவேல் பாபு

சேலம்-நாமக்கல் மாவட்டங்கள்
56. ஆத்தூர் (தனி):- எஸ்.மாதேஸ்வரன்
57. ஏற்காடு (பழங்குடி):- செ.பெருமாள்
58. ஓமலூர்:- பல்பாக்கி சி.கிருஷ்ணன்
59. எடப்பாடி:- எடப்பாடி கே.பழனிசாமி
60. சங்ககிரி:- விஜயலட்சுமி பழனிச்சாமி
61. சேலம் (மேற்கு):- ஜி.வெங்கடாஜலம்
62. சேலம் (தெற்கு):- எம்.கே.செல்வராஜ்
63. வீரபாண்டி:- எஸ்.கே.செல்வம்
64. ராசிபுரம் (தனி):- ப.தனபால்
65. நாமக்கல்:- கே.பி.பி.பாஸ்கர்
66. குமாரபாளையம்:- பி.தங்கமணி

ஈரோடு-திருப்பூர் மாவட்டங்கள்

67. ஈரோடு (மேற்கு):- கே.வி.ராமலிங்கம்
68. மொடக்குறிச்சி:- ஆர்.என்.கிட்டுசாமி
69. தாராபுரம் (தனி):- கே.பொன்னுசாமி
70. காங்கேயம்:- என்.எஸ்.என்.நடராஜ்
71. பெருந்துறை:- தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்
72. பவானி:- பி.ஜி.நாராயணன்
73. அந்திïர்:- எஸ்.எஸ்.ரமணீதரன்
74. கோபிசெட்டிப்பாளையம்:- கே.ஏ.செங்கோட்டையன்
75. உதகமண்டலம்:- புத்தி சந்திரன்

கோவை மாவட்டம்
76. மேட்டுப்பாளையம்:- ஓ.கே.சின்னராஜ்
77. அவினாசி (தனி):- ஏ.ஏ.கருப்புசாமி
78. திருப்பூர் (வடக்கு):- எம்.எஸ்.எம்.ஆனந்தன்
79. பல்லடம்:- பல்லடம் கே.பி.பரமசிவம்
80. கவுண்டம்பாளையம்:- வி.சி.ஆறுக்குட்டி
81. கோயம்புத்தூர் (வடக்கு):- தா.மலரவன்
82. தொண்டாமுத்தூர்:- எஸ்.பி.வேலுமணி
83. கோயம்புத்தூர் (தெற்கு):- சேலஞ்சர் துரை (எ) ஆர்.துரைசாமி,
84. சிங்காநல்லூர்:- ஆர்.சின்னசாமி
85. கிணத்துக்கடவு:- செ.தாமோதரன்
86. பொள்ளாச்சி:- எம்.கே.முத்துகருப்பண்ணசாமி
87. உடுமலைப்பேட்டை:- பொள்ளாச்சி ஏ.ஜெயராமன்
88. மடத்துக்குளம்:- சி.சண்முகவேலு

திண்டுக்கல்-கரூர் மாவட்டங்கள்
89. பழனி:- கே.எஸ்.என்.வேணுகோபாலு
90. ஒட்டன்சத்திரம்:- பி.பாலசுப்பிரமணி
91. நத்தம்:- இரா.விசுவநாதன்
92. வேடசந்தூர்:- ச.பழனிச்சாமி
93. அரவக்குறிச்சி:- வி.செந்தில்நாதன்
94. கரூர்:- வி.செந்தில்பாலாஜி
95. கிருஷ்ணராயபுரம் (தனி):- எஸ்.காமராஜ்

திருச்சி-பெரம்பலூர்
96. குளித்தலை:- பாப்பாசுந்தரம்
97. மணப்பாறை:- ஆர்.சந்திரசேகர்
98. திருச்சி (மேற்கு):- என்.மரியம்பிச்சை
99. திருச்சி கிழக்கு:- ஆர்.மனோகரன்
100. மணச்சநல்லூர்:- பூனாட்சி
101. முசிறி:- என்.ஆர்.சிவபதி
102. துறையூர் (தனி):- இந்திராகாந்தி
103. பெரம்பலூர் (தனி):- இளம்பை இரா.தமிழ்ச்செல்வன்,
104. அரியலூர்:- துரை.மணிவேல்
105. ஜெயங்கொண்டம்:- பா.இளவழகன்
106. நெய்வேலி:- எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன்

கடலூர்-நாகை மாவட்டங்கள்
107. கடலூர்:- எம்.சி.சம்பத்
108. குறிஞ்சிப்பாடி:- சொரத்தூர் இரா.ராஜேந்திரன்
109. புவனகிரி:- செல்வி ராமஜெயம்
110. காட்டுமன்னார்கோயில் (தனி):- என்.முருகுமாறன்
111. சீர்காழி (தனி):- ம.சக்தி
112. பூம்புகார்:- எஸ்.பவுன்ராஜ்
113. நாகப்பட்டினம்:- கே.ஏ.ஜெயபால்
114. வேதாரண்யம்:- என்.வி.காமராஜ்
115. மன்னார்குடி:- சிவா.ராஜமாணிக்கம்
116. திருவாரூர்:- குடவாசல் எம்.ராசேந்திரன்
117. நன்னிலம்:- ஆர்.காமராஜ்
118. திருவிடைமருதூர்(தனி):- டி.பாண்டியராஜன்

தஞ்சை மாவட்டம்
119. கும்பகோணம்:- இராம.ராமநாதன்
120. பாபநாசம்:- இரா.துரைக்கண்ணு
121. திருவையாறு:- எம்.ரெத்தினசாமி
122. தஞ்சாவூர்:- எம்.ரெங்கசாமி
123. ஒரத்தநாடு:- ஆர்.வைத்திலிங்கம்
124. கந்தர்வகோட்டை (தனி):- ந.சுப்ரமணியன்
125. விராலிமலை:- டாக்டர் சி.விஜயபாஸ்கர்
126. திருமயம்:- பி.கே.வைரமுத்து
127. ஆலங்குடி:- கு.ப.கிருஷ்ணன்

சிவகங்கை-மதுரை மாவட்டங்கள்
128. அறந்தாங்கி:- மு.ராஜநாயகம்
129. காரைக்குடி:- சோழன் சித.பழனிச்சாமி
130. திருப்பத்தூர்:- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்
131. மானாமதுரை (தனி):- ம.குணசேகரன்
132. மேலூர்:- ஆர்.சாமி
133. மதுரை கிழக்கு:- கே.தமிழரசன்
134. சோழவந்தான் (தனி):- எம்.வி.கருப்பையா
135. மதுரை வடக்கு:- ஏ.கே.போஸ்
136. மதுரை மேற்கு:- செல்லூர் கே.ராஜு
137. திருமங்கலம்:- ம.முத்துராமலிங்கம்

தேனி-விருதுநகர் மாவட்டங்கள்
138. ஆண்டிபட்டி:- தங்க தமிழ்செல்வன்
139. போடிநாயக்கனூர்:- ஓ.பன்னீர்செல்வம்
140. ராஜபாளையம்:- கே.கோபால்சாமி
141. சாத்தூர்:- ஆர்.பி.உதயகுமார்

142. சிவகாசி:- கே.டி.ராஜேந்திர பாலாஜி
143. அருப்புக்கோட்டை:- வைகைச்செல்வன்
144. பரமக்குடி (தனி):- டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ்
145. முதுகுளத்தூர்:- மு.முருகன்

நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்கள்
146. விளாத்திகுளம்:- ஜி.வி.மார்க்கண்டேயன்
147. தூத்துக்குடி:- ஏ.பால்         
148. திருச்செந்தூர்:- பி.ஆர்.மனோகரன்
149. ஸ்ரீவைகுண்டம்:- எஸ்.பி.சண்முகநாதன்
150. கோவில்பட்டி:- கடம்பூர் செ.ராஜா
151. சங்கரன்கோவில் (தனி):- சொ.கருப்பசாமி
152. வாசுதேவநல்லூர் (தனி):- டாக்டர் எஸ்.துரையப்பா,
153. கடையநல்லூர்:- பி.செந்தூர்பாண்டியன்
154. ஆலங்குளம்:- பி.ஜி.ராஜேந்திரன்
155. திருநெல்வேலி:- நயினார் நாகேந்திரன்
156. அம்பாசமுத்திரம்:- இசக்கி சுப்பையா

குமரி மாவட்டம்
157. கன்னியாகுமரி:- கே.டி.பச்சைமால்
158. நாகர்கோவில்:- நாஞ்சில் ஏ.முருகேசன்
159. குளச்சல்:- பி.லாரன்ஸ்
160. கிள்ளியூர்:- ஆர்.ஜார்ஜ்

புதன், 16 மார்ச், 2011

என்னைக் கவர்ந்த ஜப்பானியர்கள் - மலரும் நினைவுகள்..!


கடந்த 11-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவில் மிகவும் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் அந்நாட்டில் பெரும் சீரழிவு ஏற்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து ஜப்பானைப்பற்றி வரும் செய்திகள் மனதுக்கு மிகவும் வேதனை தருகின்றன. இது வரை பலியானவர்கள் எண்ணிக்கை 17,000-ஐ தாண்டியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம் என்றும் செய்திகளில் சொல்லப்படுகிறது. இலட்சக்கணக்கானவர்கள் வீடிழந்திருக்கிறார்கள். மின்சாரம், குடிதண்ணீர் இல்லாமல் மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அங்கிருந்த அணு உலைகள் குளிரூட்டப்படுவது நின்று போனதால் வெப்பம் அதிகரித்து வெடித்து விட்டிருக்கிறது. இதனால் அணு உலை கதிர் வீச்சு அபாயமும் உண்டாகியிருக்கிறது. பொதுவாகவே இது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிர்கள் பலியாவது இப்பொழுதெல்லாம் சகஜமாகிப்போனது. ஆனால்,  நான் குறிப்பாக ஜப்பானைக் குறித்து வேதனைப்பட இது ஒரு பேரழிவு என்ற ஒரு காரணம் மட்டுமில்லாமல் இன்னொரு காரணமும் இருக்கின்றது. பொதுவாக ஜப்பான் என்றால் வல்லரசு நாடுகளில் ஒன்று, வறுமை இல்லாத தேசம், தொழில்நுட்பத்தில் உயர்ந்த நாடு என்று உங்களைப்போல் தான் நானும் தெரிந்து வைத்திருந்தேன். அதை விட அதிகமாக ஜப்பானை, ஜப்பானியர்களை பற்றி நான் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதைப்பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு.

ஜித்தாவிலிருந்து 170 கிமீ தூரத்தில் மதினா செல்லும் வழியில் இருக்கிறது ராபிக் என்ற சிறிய நகரம். ஒரு நேரத்தில் அதிக வசதிகள் இல்லாத பெரிய கிராமம் போல் இருந்த ராபிக்கில் இன்று பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. காரணம், சவுதியின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக விளங்கும் அராம்கோ என்ற எண்ணெய் நிறுவனம். அது ராபிக்கில் ஒரு மிகப்பெரும் எண்ணெய், எரிவாயு ஆலையை கட்ட முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக அராம்கோ நிறுவனம் ஜப்பானின் புகழ்பெற்ற சுமிட்டோமோ (sumitomo) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி, இருவரும் சேர்ந்து அந்த ஆலையை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. அதில் வரும் வருமானத்தை இரு நிறுவனங்களும் சரி சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து, புது நிறுவனத்திற்கு பெட்ரோராபிக் எனப்பெயரிட்டு ஆலை கட்டும் வேலையை தொடங்கினார்கள். அதன் கட்டுமானத்தின் தலைமை நிர்வாகக் குழுவில்(Project Management Team) நானும் ஒருவனாக 4 வருடங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தேன். அதில் பெரும்பாலோனோர் ஜப்பானியர்கள். மீதி இந்தியர் மற்றும் சவுதியை சேர்ந்தவர்கள். இது தவிர கட்டுமான பகுதியில் வேலை பார்க்கும் எஞ்சினியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களில் கணிசமான ஜப்பானியர்கள் இருந்தனர். எங்களின் புராஜெக்ட் மேனேஜர் தக்கெஹிக்கோ கவாசே (Takehiko Kawase) என்ற ஜப்பானியர் தான். சவுதி வந்த பின் ஜப்பானியர்கள் பலரை நான் பார்த்திருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய கிடைத்த முதல் வாய்ப்பு அது. மற்ற எந்த நாட்டவரையும் விட ஜப்பானியர்கள் என்னை பல வகைகளில் கவர்ந்தனர். வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் அவர்களிடம் பார்த்த பல விஷயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது, கற்றுக்கொள்ள உதவியது.

ஜப்பானியர்களுக்கு தாய் மொழிப்பற்று ரொம்ப அதிகம். அவர்களின் படிப்பு முதல், பார்க்கும் வேலை, பயன்படுத்தும் கம்ப்யூட்டர் என்று எல்லாவற்றிலும் ஜப்பானிய மொழி தான். ஆங்கிலம் என்றாலே அவர்களுக்கு கசப்பு தான். சவுதியில் நாங்கள் வேலை தொடர்பான மின்னஞ்சல், டாக்குமெண்டேஷன் போன்ற எல்லாவற்றிலும் ஆங்கிலத்தை பயன்படுத்தினோம். ஆனால் அவர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பும் போது ஜப்பானிய மொழியில் தான் அனுப்பி கொள்வார்கள். ஆங்கிலம் புரியாமல் பல ஜப்பானியர்கள் கையோடு ஜப்பான் - ஆங்கில அகராதி சாதனத்தை எப்பொழுதும் கையில் வைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் அவர்களின் உடைந்த ஆங்கிலம் எனக்கு புரியவில்லை. T உச்சரிப்பு சுட்டுப்போட்டாலும் அவர்களுக்கு வராது. தேங்க்ஸ் என்பதை சேங்க்ஸ் என்று தான் சொல்வார்கள். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் அவர்கள் மற்றவர்களை மதிக்கும் பண்பு. வயது வித்தியாசம் பார்க்க மாட்டார்கள். பதவியில் உயர்ந்தவர், குறைந்தவர் பார்க்கமாட்டார்கள். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக மிகுந்த மரியாதையுடன் பழகுவார்கள், பேசுவார்கள்.

நாம் மரியாதைக்கு ”சார்” என்று சொல்வது போல் அவர்கள் ”சான்” என்பார்கள்.  நானும் சான் போட்டு தான் எல்லோரையும் கூப்பிடுவேன். இப்படியே பழக்கமாகி அதன் பிறகு சவுதிகளையும் நான் சான் போட்டு கூப்பிட ஆரம்பித்தது பெரிய காமெடி. அவர்கள் முறையில் வணக்கம் சொல்ல உடம்பை கொஞ்சம் முன்பக்கம் வளைத்து செய்வது பார்க்க சுவராஸியமாக இருக்கும். அவர்களிடம் நான் கற்றுக்கொள்ள பல நல்ல விஷயங்கள் இருந்தன. அவர்கள் கடும் உழைப்பாளிகள். வேலை என்று இறங்கி விட்டால் ஊண், உறக்கம் பார்க்க மாட்டார்கள். அதே போல் நேரத்தை பேணுவதில் மிகவும் சிறந்தவர்கள். அலுவலகம் ஏழு மணிக்கு என்றால் அனைவரும் ஆறே முக்காலுக்கே வந்து விடுவார்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கோபமே வராது. மிகவும் பொறுமைசாலிகள். மற்றவர்களை ஊக்கப்படுத்தி வேலை வாங்குவதில் மன்னர்கள். நாங்களெல்லாம் கலர் கலரா உடையுடன் வேலைக்கு போவோம். ஆனால் ஜப்பானியர்களில் புராஜெக்ட் மேனேஜரிலிருந்து கடை நிலை பணியாளர் வரை யூனிஃபார்மில் தான் வருவார்கள். அவர்களின் சாப்பாடை பார்த்தால் ஆச்சரியம் வரும். நம்மை விட மிகவும் குறைவாக சாப்பிடுவார்கள். நம்மை போல் அரிசி சாதம் தான் அவர்களும் சாப்பிடுவார்கள் என்றாலும் அது எவ்வளவு, எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதில் தான் சுவராஸியம் அடங்கி இருக்கிறது. நம்மை போல் அவர்கள் அரிசியை அடுப்பில் வேக வைத்து வடித்து சாப்பிடுவதில்லை. ப்ளாஸ்டிக் பேப்பர்களுக்குள் உருண்டையாக சுற்றிய அரிசியை வைத்திருக்கிறார்கள். சாப்பிடுவதற்கு முன் கொதிக்கும் நீரில் அந்த அரிசி உருண்டைகளை போடுகிறார்கள். 5 நிமிடம் கழித்து எடுத்து சுற்றி இருக்கும் ப்ளாஸ்டிக் பேப்பரை பிரித்து பார்த்தால் சோற்று உருண்டைகள் நம் ஊரில் கிடைக்கும் லட்டு அளவில்..!! ஒரு ஆள் அதிகபட்சம் 3 அல்லது 4 உருண்டைகள் தான் சாப்பிடுகிறார்கள். நமக்கு அதையெல்லாம் வைத்து பசியடக்க முடியுமா.? கூடவே கொஞ்சம் காய்கறி, பழங்கள் அடங்கிய சாலட் சாப்பிடுகிறார்கள். சில நேரங்களில் எங்கள் அலுவலகத்தில் ஜப்பானிய முறையில் விருந்து கொடுப்பார்கள். அதில் பல உணவுகள் நம் ஊர் மசாலா எதுவும் இல்லாததால் சாப்பிடவே முடியாது.

நிறுவன பயிற்சிக்காக சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை அராம்கோ நிறுவனம் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவுக்கு அனுப்பினார்கள். அங்கு போய் வந்த நண்பர்கள் அங்கு கண்டவற்றை அதிசயத்துடன் எங்களிடம் வாய்வலிக்க சொன்னார்கள். அங்குள்ள அதி வேக புல்லட் ட்ரெய்ன், அதிநவீன பாலங்கள், பெரும் அடுக்குமாடி கண்ணாடி கட்டிடங்கள், சுரங்க பாதைகள், பொம்மை போல் இருக்கும் ஜப்பானிய பெண்கள், எங்கும் வரிசை கட்டி நிற்கும் கார்கள், போகுமிடமெல்லாம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், அங்கிருக்கும் விண்ணை முட்டும் விலைவாசி என்று அவர்கள் சொன்ன பல விஷயங்கள் மிகவும் சுவராஸியமாக இருந்தன. இன்றைய தேதியிலும் ஜப்பானிய பொருட்கள் தான் தொழில்நுட்பத்திலும், தரத்திலும் சிறந்தவை. அப்படிப்பட்ட பெருமைகள் கொண்ட ஜப்பான் சிதைந்து நொறுங்கி நிற்கிறது. ஜப்பானுக்கு அழிவு ஒன்றும் புதிதல்ல. அடிக்கடி சுனாமி, பூகம்பம் என சந்தித்துக்கொண்டிருப்பவர்கள். அவ்வளவு ஏன், அமெரிக்கா 1945-ம் வருடம், ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதி ”லிட்டில் பாய்” என்ற அணுகுண்டுகளை வீசி ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற பெரு நகரங்களை முழுதும் அழித்த பின்னும் தங்களின் கடுமையான உழைப்பால் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட கடும் உழைப்பாளிகளை இறைவன் அடிக்கடி இயற்கை சீற்றங்களை கொண்டு சோதித்துக்கொண்டே இருக்கின்றான். வாழ்க்கையை இழந்து நிற்கும் அவர்களுக்கு இப்பொழுது இறைவன் மட்டுமே துணை..!!

செவ்வாய், 15 மார்ச், 2011

காங்கிரஸ் களமிறங்கும் தொகுதிகள்..!! - தேர்தல் ஸ்பெஷல்



தேர்தல் தீபாவளி தொடங்கி விட்டது. கூட்டணிகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சுயேட்சைகள், லெட்டர் பேட் கட்சிகள் கூட சுறுசுறுப்புடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள். இப்போதைக்கு திமுகவுடன், பாமக கூட்டணி சேர்ந்ததும், காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டில் பிணக்கு ஏற்பட்டு பிறகு பாமக மற்றும் முஸ்லீம் லீக்கிடம் இருந்து 3 தொகுதிகளை எடுத்து காங்கிரஸுக்கு தானம் செய்ததும் சுவராஸியமான நிகழ்வுகள். அதை விட பெரும் சுவராஸியம் விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை விட்டுக்கொண்டிருந்த ஜெயலலிதாவும், மக்களுடன் மட்டுமே கூட்டணி என வசனம் பேசிக்கொண்டிருந்த விஜயகாந்தும் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள். இனியும் கட்சி மாற்றம், காட்சி மாற்றம் நிறைய பார்க்கலாம். 

இது வரை உறுதியாகியிருக்கும் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு கீழே:

* திமுக – 121
* காங்கிரஸ் – 63
* பாமக – 30
* விடுதலைச் சிறுத்தைகள் – 10
* கொங்குநாடு முன்னேற்றக் கழகம் – 7
* இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 2
* மூவேந்தர் முன்னேற்றக் கழகம் – 1



காங்கிரஸ் தான் போட்டியிடப்போகும் 63 தொகுதிகளின் பெயர்களை இன்று வெளியிட்டுள்ளது. இதனடிப்படையிலேயே அதிமுக கூட்டணியின் தொகுதி ஒதுக்கீடு இருக்கும் என அரசியல் வட்டாரம் சொல்கிறது.

காங்கிரஸ் போட்டியிடப்போகும் தொகுதிகள் கீழே:

சென்னை மாவட்டம்

1. தி.நகர்
2. அண்ணா நகர்
3. ராயபுரம்
4. மைலாப்பூர்
5. ஆவடி
6. திரு.வி.க.நகர்

திருவள்ளூர் மாவட்டம்

7. மதுரவாயல்
8. பூந்தமல்லி
9. திருத்தணி

காஞ்சிபுரம் மாவட்டம்

10. மதுராந்தகம்
11. ஆலந்தூர்
12. ஸ்ரீபெரும்புதூர்

வேலூர் மாவட்டம்

13. வேலூர்
14. சோளிங்கர்
15. ஆம்பூர்

திருவண்ணாமலை மாவட்டம்

16. செய்யார்
17. கலசப்பாக்கம்

கடலூர் மாவட்டம்

18. விருத்தாச்சலம்

விழுப்புரம் மாவட்டம்

19. ரிஷிவந்தியம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

20. கிருஷ்ணகிரி
21. ஓசூர்

சேலம் மாவட்டம்

22. சேலம் (வடக்கு)
23. ஆத்தூர்

நாமக்கல் மாவட்டம்

24. திருச்செங்கோடு

கோவை மாவட்டம்

25. சிங்காநல்லூர்
26. வால்பாறை
27. தொண்டாமுத்தூர்

திருப்பூர் மாவட்டம்

28. திருப்பூர் (தெற்கு)
29. அவினாசி

ஈரோடு மாவட்டம்

30. மொடக்குறிச்சி
31. ஈரோடு (மேற்கு)
32. காங்கேயம்

நீலகிரி மாவட்டம்

33. ஊட்டி

திண்டுக்கல் மாவட்டம்

34. நிலக்கோட்டை
35. வேடசந்தூர்

நாகப்பட்டினம் மாவட்டம்

36. மயிலாடுதுறை

தஞ்சாவூர் மாவட்டம்

37. பேராவூரணி
38. பட்டுக்கோட்டை
39. பாபநாசம்

திருவாரூர் மாவட்டம்

40. திருத்துறைப்பூண்டி

புதுக்கோட்டை மாவட்டம்

41. அறந்தாங்கி

பெரம்பலூர் மாவட்டம்

42. அரியலூர்

கரூர் மாவட்டம்

43. கரூர்

திருச்சி மாவட்டம்

44. முசிறி
45. மணப்பாறை

மதுரை மாவட்டம்

46. மதுரை (மேற்கு)
47. மதுரை (வடக்கு)
48. திருப்பரங்குன்றம்

ராமநாதபுரம் மாவட்டம்

49. ராமநாதபுரம்
50. பரமக்குடி

சிவகங்கை மாவட்டம்

51. சிவகங்கை
52. திருமயம்
53. காரைக்குடி

விருதுநகர் மாவட்டம்

54. விருதுநகர்

தூத்துக்குடி மாவட்டம்

55. விளாத்திகுளம்
56. ஸ்ரீவைகுண்டம்

நெல்லை மாவட்டம்

57. வாசுதேவநல்லூர்
58. கடையநல்லூர்
59. நாங்குநேரி
60. ராதாபுரம்

கன்னியாகுமரி மாவட்டம்

61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்
Related Posts with Thumbnails