நேரம்:

திங்கள், 29 மார்ச், 2010

பெரியார்தாசன் இறைநேசன் ஆன கதை..!! (02)

பெரியார்தாசன் என்கிற அப்துல்லாஹ்வை பற்றி நிறைய சுவையான சம்பவங்கள், சிறந்த சிந்தனைகள், அழகான தத்துவார்த்த எண்ணங்கள் பல இருந்தாலும் நேரமின்மை காரணத்தால் எழுத முடியவில்லை. அவரைப்பற்றிய இந்த பதிவை முடிக்கும் வண்ணமாக அவரின் குடும்பம், இளமைப்பருவம், பால்ய நண்பர்கள், பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு, தீவிர கடவுள் மறுப்பு கொள்கை பரப்புதல், அம்பேத்காரால் கவரப்பட்டு புத்த மதத்தில் இணைதல், இஸ்லாத்தின் மீது ஏற்பட காரணமாக இருந்த நிகழ்வுகள், இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொள்ளுதல் ஆகிய அனைத்தையும் அவரின் வாய் மொழியின் வாயிலாகவே சொல்கிறார். அவர் சார்ந்திருந்த கழகம், கொள்கை, இப்போது இணைந்திருக்கும் மார்க்கம் என்று எதையும் மனதில் இருத்தாமல் அவரின் இந்த பேச்சை கேட்டால் நீங்கள் நிச்சயம் இரசிப்பீர்கள்..!! 40 வருடங்களாக தீவிர கடவுள் மறுப்பு  கொள்கையை பரப்பி வந்த ஒருவர் இத்தனை தீவிரம், ஈடுபாட்டுடன் ஒரு கடவுள் கொள்கையை ஓங்கி உரைப்பது ஏன் என்ற ஒரு கேள்வி உங்களை நிச்சயம் உலுக்கும்..!!


பகுதி - 1


பகுதி - 2



பகுதி - 3


பகுதி - 4



பகுதி - 5


பகுதி - 6

வியாழன், 25 மார்ச், 2010

பெரியார்தாசன் இறைநேசன் ஆன கதை..!! (01)


அங்கே நாத்திகம் தொடர்பான பிரமாண்ட கடவுள் மறுப்பு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் தந்தை பெரியார் கலந்து கொண்டு பேசுகிறார் என்பதால் பெரும் கூட்டம் திரண்டிருக்கிறது. எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த பெரியாரின் சிறப்புரை முடிந்து வேறொருவர் நன்றியுரை நிகழ்த்த வேண்டும். நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் அதற்கான ஆளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் பேச்சை கேட்ட மக்கள் கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்து வரப்போகும் நன்றியுரையை கேட்க பொறுமை இல்லாமல் கலைகிறார்கள். அந்த நேரத்தில் இவற்றை எல்லாம் மேடையின் ஓரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்த அந்த இளைஞன் திடீரென்று மேடையின் மேல் ஏறி மைக்கை கைப்பற்றுகிறான். ”கடவுள் இல்லை.. கடவுள் இல்லவே இல்லை” என்று இத்தனை நேரமும் திராவிட தோழர்கள் முழங்கிய அதே மேடையில் அந்த இளைஞன் முழங்கியது என்ன தெரியுமா..? “சாமியேஏஏஏஏய்.... சரணம் ஐயப்பா..!!! சபரி மலை சாஸ்தாவே.. சரணம் ஐயப்பா..!!” என்பது தான்..!! 

“பகுத்தறிவு பகலவன்” என்று புகழப்படும் பெரியாரின் மேடையில் இப்படி ஒரு நாத்திக முழக்கத்தை கேட்டதும் கலைந்து கொண்டிருந்த அதிர்ச்சியில் கல் சிலை போல் அப்படி நிற்கிறார்கள். குரல் வந்த மேடையின் திசை நோக்கி அதிர்ச்சியும், ஆர்வமுமாய் திரும்பி பார்க்கிறார்கள். இப்பொழுது மைக்கை கையில் பிடித்திருந்த இளைஞன் தன் பேச்சை “.....என்றெல்லாம் முழங்கி கொண்டிருப்பவர்களுக்கு எதிராய் நாத்திக கொள்கையை நிலை நாட்ட வந்திருக்கும் திராவிடர் கழக சிங்கங்களே..!!!” என்று முடிக்கிறான். கூட்டம் இளைஞனின் புத்திசாலித்தனத்தில் புல்லரித்துப்போய் அப்படியே அமர்ந்து அவன் பேச்சை கேட்க தயாராகிறார்கள். அதன் பிறகு அந்த இளைஞன் 45 நிமிடங்கள் அதே மேடையில் பேசுகிறான். நன்றியுரையை அவன் 45 நிமிடங்கள் நிகழ்த்தியதும், அதனை அத்தனை ஆர்வமுடன் குழுமியிருந்த மக்கள் கேட்டு ரசித்ததும் தமிழக பொதுக்கூட்ட வரலாற்றில் அது தான் முதல் முறையாக இருக்க வேண்டும்.!! 


அந்த இளைஞன் சாஸ்திர சம்பிரதாயங்கள் மிகுந்த ஒரு குலத்தில் பிறந்தவன். ஆனால் அவன் சிந்தனைகளோ அவன் குலத்திற்கு எதிரான நாத்திகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் அவனிருக்கும் ஊருக்கு அருகில் இருக்கும் ஊருக்கு பெரியாரின் பிரமாண்ட கடவுள் மறுப்பு தொடர்பான  பொதுக்கூட்டம் சில நாட்களில் நடக்கவிருக்கிறது. இவனின் நாத்திக சிந்தனைகளை அறிந்த திராவிடர் கழக தோழர் ஒருவர் பெரியாரின் வருகை குறித்து அவனிடம் சொல்லி, அதில் பேசுகிறாயா என்று கேட்கிறார். ஏற்கனவே பெரியாரின் கருத்துக்களில் அளவற்ற பற்று கொண்டிருந்த அவனும் அதை பெரும் பேறாக நினைத்து ஆவலுடன் அதற்கு சம்மதிக்கிறான். அடுத்து வந்த இரவுகளில் எல்லாம் தூங்காமல் அந்த  மேடையில் பேசுவதற்கு உரை தயாரிக்கிறான். பொதுக்கூட்ட நாளன்று மேடையில் பேசப்போவதை தன் தந்தையிடம் தெரிவிக்கிறான்.  நாத்திக மேடையில் பேசப்போகும் அந்த இளைஞனுக்கு அவன் தந்தை சொன்னது என்ன தெரியுமா..? “நல்லா சாமியை கும்பிட்டு விட்டு போய் மேடையில் ஏறி பேசு..!!” 

ஆனால் பாவம்.. அத்தனை கஷ்டப்பட்டு உரை தயார் செய்து கொண்டு போன அவனுக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டே போனார்கள். கடைசியாக நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர் பெரியாரும் பேசி முடித்து விட்டார். அவனுக்கு தெரிந்து விட்டது, சிறப்பு பேச்சாளர் பேசி முடித்து விட்டார் என்றால் நன்றியுரையோடு பொதுக்கூட்டமே முடிந்து போகும் என்று..! ஆனால் அவன் நினைத்தது ஒன்று.. கடவுள் நினைத்தது ஒன்று..!! அப்படியென்றால் அன்று என்ன தான் நடந்தது..? அன்று நடந்ததை தான் முதல் பாராவில் படித்தீர்கள்..!!


இரசனைக்குரிய மேற்கண்ட நிகழ்ச்சியில் வரும் அந்த இளைஞன் வேறு யாருமல்ல, சமீபத்தில் இஸ்லாத்தை தழுவி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெரியார்தாசன் என்கிற அப்துல்லா தான்.!! ஒரு சிறு திருப்பம் நம்மில் பலரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விடும். அப்படி தான் கல்லில் கடவுளை கண்டு, அதை கண்ணெதிரே வைத்து வைத்து வழிபடும் குலத்தில் பிறந்த இவர், அந்த கல்லால் ஆன சிலைகளை உடைக்கும் கழக கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பெரியார்தாசன் ஆனார். அதே பெரியார்தாசன் என்கிற நாத்திகவாதி கண்ணுக்கு தெரியாத நிலையிலும் கடவுளை வணங்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கு வந்திருக்கிறார். யார் இந்த பெரியார்தாசன்..? கருத்தம்மா திரைப்படம் வரும் வரை இந்த பெரியார்தாசன் யாரென்று எனக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் தெரியாது. அந்த திரைப்படத்தில் இவர் பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கொலைகார தந்தையின் வேடத்தில் நடித்திருந்தார். இவரின் பாமர தோற்றம், எளிய பேச்சு பெரும் ஆர்வத்தை அவர் மேல் எனக்கு ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர் பெயரின் முன் ஒட்டியிருந்த பேராசிரியர் பட்டமும், பெரியார்தாசன் என்ற அடை மொழியும் அவரை பற்றி அறியும் ஆர்வத்தை எனக்குள் விதைத்தது. 

பிறகு தெரிந்தது...அந்த பாமர தோற்றத்திற்குள் ஒரு பழுத்த பகுத்தறிவாளர் நிறைந்திருந்தார். சிறந்த சிந்தனாவாதி ஒளிந்திருந்தார். மனோவியலை கரைத்துக்குடித்த மனோதத்துவ நிபுணர் மறைந்திருந்தார். பட்டங்கள் பல பெற்ற படிப்பாளி மறைந்திருந்தார். பெரியாருடனான நேரடி தொடர்பு வைத்திருந்தவர் போன்ற அவரைப்பற்றிய தகவல்கள் எனக்கு பெரும் ஆச்சரியத்தை விதைத்தாலும், இத்தனை பெருமைகளுக்கு பிறகும் தளும்பா நிறை குடமாக அவர் காட்சியளித்தது அவரை என் மனதில் பெரிதும் உயர்த்தி கொண்டு சென்று வைத்தது. இந்துவாக பிறந்த இந்த சேஷாசலம், பிறகு நாத்திக கொள்கையில் ஈடுபட்டு பெரியார்தாசன் என்ற அவதாரம் எடுத்தார். பின் ”அன்பே கடவுள்” என உபதேசிக்கும் புத்தமதக்கொள்கைகளால் கவரப்பட்டு அதில் இணைந்து சித்தார்த்தன் ஆனார். பிறகு ஓரிறைக் கொள்கையை கொண்ட இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அப்துல்லாவாக ஆகியிருக்கிறார். அப்படி என்றால்... அடுத்து...?????????


(தொடரும்...!!)

வெள்ளி, 12 மார்ச், 2010

நித்யானந்தா லேட்டஸ்ட் வீடியோ - மசாஜ் ஸ்பெஷல்

நித்தி பையன் ரொம்பத்தான் வாழ்க்கையை அனுபவிச்சிருக்கான்..!! பாருங்க வீடியோவை..!!


நித்யானந்தா லேட்டஸ்ட் வீடியோ - மசாஜ் ஸ்பெஷல்

வியாழன், 11 மார்ச், 2010

நித்யானந்தா ஹரித்துவாரில் கைது..! பரபரப்பு காட்சிகள்..!!




ஹரித்துவாருக்கு ஓடி, ஒளிந்து இருந்து கொண்டிருந்த நித்யானந்தாவை நம் தமிழ் நாடு போலீஸ் அங்கு போய் கோழியை அமுக்குவது போல் “லபக்”கென்று பிடித்து கொண்டு வந்து விடுகிறது. அடுத்த நாள் அவர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். மனதில் வலிமை, எண்ணத்தில் நேர்மை(!), பேச்சில் திறமை (!), காசில் கடுமை என்று கனகச்சிதமாக இருந்த நித்யானந்தா, பெண் விஷயத்தில் இருந்த பலவீனத்தால் மாட்டிக்கொண்டதில் விழி பிதுங்கி குற்றவாளிக்கூண்டில் நிற்கிறார். அவரின் லீலையை ரிலீஸ் செய்த சன் டிவியே அவரின் நீதி மன்ற காட்சிகளையும் நேரலையில் ஒளிபரப்புகிறது. என்ன தான் பயம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் தரப்பு நியாயத்தை தைரியமாக கூறி அவர் வாதாடும் பரபரப்பு காட்சிகள் இனி உங்கள் விழிகளுக்காக..!!

இதோ காட்சி..!

நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நின்று கொண்டிருக்கிறார் நித்யானந்தா. நீதிபதி அவரை பார்த்து “நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா..?”. அவரின் சம்மதத்தை கூட எதிர்பார்க்காமல் நித்யானந்தா தன் பேச்சை தொடங்குகிறார். பேசித்தானே அவர் இலட்சக்கணக்கான மக்களை கவர்ந்து காவி உடைக்குள் திணித்தார்..!! நித்யானந்தா தன் தரப்பு வாதத்தை தொடங்குகிறார்..!!!

இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல.  வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாக ஊரை ஏய்த்துப் பிழைக்கும் ஒண்ணாம் நம்பர் கேடி சாமியார்களில் நானும் ஒருவன்.

பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள் என்று கூறி ஊரை ஏமாற்றினேன். தியானம் என்கிற பேரில் தில்லுமுல்லுகள் செய்தேன். கண்ட நடிகைகளுடன் கதவை திறந்து வைத்து “கசமுசா” பண்ணினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.!! நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் இதை எல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று..!! இல்லை..நிச்சயமாக இல்லை..!!

பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள் என்று கதை அளந்தேன்.  ஏன்.. மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா..? மனதெல்லாம் கஷ்டங்களுடன் வருபவர்களிடம் காசை வாங்கி கொண்டு ஆறுதல் தரவேண்டும் என்பதற்காக..!!

கண்ட நடிகைகளுடன் கதவை திறந்து வைத்து “கசமுசா” பண்ணினேன். ஏன் அவர்களிடம் சல்லாபித்து இன்ப லோகததை காணவா..? இல்லை..மக்கள் நடிகைகள் என்ற மலையாள மாமிகளின் மாயையிலிருந்து வெளி வரவேண்டும் என்பதற்காக..!

தியானம் என்கிற பேரில் தில்லுமுல்லுகள் செய்தேன். மக்களை மயக்கி கன்னக்கோல் வைக்கவா..?  இல்லை... திருட்டுத்தனம் செய்து மாட்டிக்கொண்டாலும் அது தியானத்தின் ஒரு பகுதி என்று சொல்லி தப்பித்து விடவேண்டும் என்பதற்காக..!!

உனக்கேன் இவ்வளவு அக்கறை.. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன்...நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலம் என்பீர்கள். எனது இந்த சுயநலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது. நடிகைகளுடன் சல்லாபித்தாலும் நாளொரு பேட்டாவும், பொழுதொரு சன்மானமுமாக அள்ளிக்கொடுத்தேனே.. அதைப்போல..!!  என்னை குற்றவாளி, அயோக்கியன் என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையை சற்றே திரும்பி பார்த்தால் நான் செய்த திருட்டுத்தனங்கள், அதற்காக வாங்கிய அடிகள், அதனால் கிடைத்த அவமானங்கள் விளங்கும்..!! மனதை வருடும் மந்திரங்கள் இல்லை என் பாதையில், மனசை கெடுக்கும் தந்திரங்கள் நிறைந்திருக்கின்றன. கடவுளை தீண்டியதில்லை நான். ஆனால் காமத்தின் எல்லையை தாண்டி இருக்கிறேன். கேளுங்கள் என் ”தில்லுதுர” கதையை நீதிபதி அவர்களே..! என்னை ஜெயிலுக்குள் விட்டு டவுசரை கழட்டுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..!!

போலி ஆன்மீகம் பொங்கி வழியும் இந்தியாவில், கண்டவர்களை எல்லாம் கடவுளர்களாக நினைக்கும் தங்க தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான்..! பிறக்க ஒரு ஊர்.. பிழைக்க ஒரு ஊர்..! ஆன்மீகம் என்ற பெயரில் ஊரை அடித்து உலையில் போடும் சாமியார்களை நம்பி ஏமாறும் தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா..? திருவண்ணாமலையில் பிறந்து, காவிரிக்கரையில் அமர்ந்து வாயில் வந்ததை எல்லாம் ஜோஸியம் என்று வாந்தி எடுத்துக்கொண்டிருந்தேன். ஆரம்ப வியாபாரமே வெகு சிறப்பாக தான் நடந்தது.

என்னை கண்டவர்கள் கடவுள் அவதரித்து விட்டார் என்றனர். தொட்டால் துலங்குகிறது என்றார்கள். பார்வை பட்டால் பலன் கிடைக்கிறது என்றார்கள். ஆனால் கடைசியில் நடந்ததை நினைத்தாலோ கண்ணைக்கட்டுகிறது..!! வீடியோ மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ரஞ்சிதா, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். மனதை பறிகொடுத்தேன். பின் பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். வீடியோவில் படமாக்கப்பட்டேன். அதனால் அடிபட்டேன்.. ஆத்திரப்பட்டேன்... ஆவேசப்பட்டேன்.. ஒன்றும் வேலைக்காகாததால் மாட்டிக்கொண்டேன்.

அவள் பெயரோ ரஞ்சிதா..! கேட்டாலே கிறக்கம் கொடுக்கும் பெயர்..!! ஆனால் பேச்சில் உண்மை இல்லை.! செயலில் நன்மை இல்லை..!! ஆதரவாய் கட்டிக்கொண்ட ஆர்மிக்காரனுக்கும் அல்வா கொடுத்து விட்டாள். அவளுக்கு கண்ணி வீசினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் கண்டதையும் கேட்டனர். வீடியோ எடுப்பதில் ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் லெனின் என்கிற பிரேமானந்தா, இவன் பண ஆசையில் என் அறைக்குள் பல முறை கேமரா வைக்க முயன்றான். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் ”கதவை மூடு.. கேமரா தொலையட்டும்..!!” என்று அப்போதே அவனுக்கு ஆப்பு வைத்திருப்பேன்..!!

நான் ஏமாற்றாத நாளில்லை..!! ஏமாறாத பரமஹம்ச பக்தனும் இல்லை..!! நான் மட்டும் நினைத்திருந்தால் சாமியாராகாமல் அரசியலில் புகுந்து அனைவரையும் ஏமாற்றியிருக்கலாம். பெண்ணாசை வந்தால் கள்ளக்காதல் செய்து காலத்தை ஓட்டி இருக்கலாம். மட்டமான மசாலா படங்களில் நடித்து மக்களின் மனதை கெடுத்திருக்கலாம். இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

சன் டிவியில் என் படத்தை சகட்டு மேனிக்கு போட்டு சந்தி சிரிக்க வைத்தார்கள்..... ஓடினேன்..! என் மடங்களில் புகுந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள்... ஓடினேன்...!! என் பேனர்களை எரித்து என்னை கொலை வெறியோடு தேடினார்கள்.. யூட்யுப்-ல் என் வீடியோவுக்கு மட்டும் ஏகப்பட்ட ஹிட்டுகளை கொடுத்தார்கள்..ஓடினேன்..!! கள்ளச்சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று கலகம் செய்தார்கள் ஓடினேன்..!!

ஓடினேன்... ஓடினேன்... ஹரித்துவாரின் கடைசி எல்லை வரைக்கும் ஓடினேன்.. ஆனால் எத்தனை ஓடியும் இந்த எடுபட்ட தமிழ் நாட்டு போலீஸ் என்னை எப்படியோ அமுக்கி பிடித்து விட்டது..!! புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து விட்டேன்..!!

சரியான அரசு சன் டிவியின் வீடியோ ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும். என் வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும்..இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா இந்த நித்யானந்தாவை..?!!

துறவியாக இருந்து கொண்டு ஆடை களைந்து அழகியுடன் சல்லாபித்தது ஒரு குற்றம். ஆசிரம் அமைப்பதற்காக அடுத்தவன் நிலத்தை அபகரித்தது ஒரு குற்றம். ஆன்மீகம் என்ற பெயரில் அத்தனை மக்களின் நம்பிக்கையை நாசமாக்கியது ஒரு குற்றம். காணிக்கை என்ற பெயரில் கணக்கிடலங்கா கருப்பு பணம் சேர்த்தது ஒரு குற்றம்..!!

இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம்..?

பாலாஜி சக்திவேல் பட ஹீரோ போல் இருந்த என்னை துறவியென நம்பியது யார் குற்றம்.? சாமியார் வேஷம் போட்டு காசு பார்க்க நினைத்த என் குற்றமா..? இல்லை..எத்தனை டுபாக்கூர் சாமியார்கள் மாட்டினாலும்,  மறு நிமிடமே மறந்து விட்டு மீண்டும் மீண்டும் நம்பும் முட்டாள் மக்களின் குற்றமா..?

நடிகையுடன் சல்லாபித்தது யார் குற்றம்..? ஜாலியாக இருந்து இவ்வுலகிலேயே சொர்க்கலோகத்தை சுகிக்க நினைத்த என் குற்றமா.? இல்லை..பணத்துக்காக என்னிடம் பல்லைக்காட்டி படுக்கையில் விழுந்த நடிகையின் குற்றமா.?

பல கோடி ரூபாய் பணம் சேர்த்தது யார் குற்றம்..? நான் உண்டு என் லீலைகள் உண்டு என்று இருந்த என் குற்றமா..? இல்லை..சாமியார் என்றாலே சாக்கு பையில் பணத்தை கொண்டு வந்து கொட்டும் ஏமாளிகள் குற்றமா.?

இக்குற்றங்கள் களையப்படும் வரை நித்யானந்தாக்களும், ரஞ்சிதாக்களும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்..!!! நன்றி... வணக்கம்..!! 


சுபம்..!! (நித்தி மாட்டினா சுபம் தானே..!! ஆமான்னு சொல்றவங்க ஓட்டு போட மறக்கவேண்டாம்..!!) 





நீ..!

 நீ..
தொடா
வானம்.!

நீ..
சுடா
தீ..!

நீ..
வாடா
மலர்..!


நீ
ஓடா
மான்..!

நீ
பாடா
தேனீ..!


நீ
கரையா
சர்க்கரை..!

நீ
உறையா
பனிக்கட்டி..!

நீ..
வரையா
ஓவியம்..!

நீ
இறையா
விண்மீன்..!

நீ
குறையா
செல்வம்..!

நீ
மறையா
நிலவு..!
__________________

நீ
பூங்கா
வாசம்..!

நீ
பொங்கா
எரிமலை..!

நீ
நீங்கா
உயிர்..!

நீ
மங்கா
புகழ்..!

நீ
(ஸ்ரீ)லங்கா
தமிழ்..!

-------------------

நீ
விழுங்கா
உணவு..!

நீ
துலங்கா
உண்மை..!

நீ
வழங்கா
பரிசு..!

நீ
கலங்கா
தமிழச்சி..!

-----------

நீ
படிக்கா
கவிதை..!

நீ
வெடிக்கா
மொட்டு..!

நீ
துடிக்கா
இதயம்..!

நீ
அடிக்கா
அப்பா..!

நீ
கடிக்கா
குலோஜாமூன்..!

நீ
நடிக்கா
(கவர்ச்சிக்)கன்னி..!

நீ
இடிக்கா
மாளிகை..!

நீ
வடிக்கா
பொற்சிலை..!

நீ
குடிக்கா
மது..!

நீ
ஒடிக்கா
கரும்பு..!

நீ
முடிக்கா
கவிதை..!

--------------------


நீ
தீண்டா
நாகம்..!

நீ
தாண்டா
எல்லை..!

நீ
தூண்டா
கிளர்ச்சி..!

நீ
சீண்டா
சில்மிஷம்..!

நீ
ஏண்டா
அழகு..?!

------------

நீ
கறக்கா
பால்..!

நீ
பறக்கா
மயில்..!


நீ
பிறக்கா
குழந்தை..!

நீ
மறக்கா
காதலி..!

நீ
துறக்கா
இன்பம்..!

நீ
திறக்கா
சொர்க்கம்..!

நீ
இறக்கா
காதல்..!

----------

நீ
சுட்டா
விரல்..!

நீ
குட்டா
கை..!

நீ
கொட்டா
மழை..!

நீ
எட்டா
கனி..!

நீ
வெட்டா
வாழை..!

நீ
பட்டா
நிலம்..!

நீ
சொட்டா
தேன்..!

நீ
தொட்டா
இன்பம்..!

------------------

நீ
தீரா
பசி..!

நீ
ஆறா
சோறு..!

நீ
கூறா
நகைச்சுவை..!

நீ
பாரா
அதிசயம்..!

நீ
ஏறா
சிகரம்..!

நீ
மாறா
கொள்கை..!

நீ
சோரா
மழலை..!

நீ
வாரா
சுனாமி..!

நீ
கோரா
நிவாரணம்..!

நீ
மேரா
லடிக்கி..!


----------------

நீ
வணங்கா
சிலை..!

நீ
சிணுங்கா
செல்ஃபோன்..!

நீ
முணங்கா
காமுகி..!

நீ
இணங்கா
பசு..!

நீ
சுணங்கா
வீராங்கனை..!!


----------------------


நீ
அறுக்கா
வாள்..!


நீ
கருக்கா
மேகம்..!

நீ
பருக்கா
பாவை..!

நீ
உருக்கா
பொன்..!


நீ
முறுக்கா
காதலி..!

நீ
வெறுக்கா
இதயம்..!


நீ
மறுக்கா
கொடையாளி..!

நீ
(உயிர்) எடுக்கா
கொலையாளி..!

------------------


நீ
ஏற்கா
மதம்..!

நீ
விற்கா
கல்வி..!

நீ
கற்கா
கலவி..!

நீ
விளங்கா
புதிர்..!

நீ
கலங்கா
மனம்..!

நீ
முழங்கா
மந்திரம்..!

நீ
துலங்கா
செப்புச்சிலை..!

நீ
புழங்கா
அரண்மனை..!


----------------



நீ
உழுகா
நிலம்..!

நீ
ஒழுகா
தேனடை..!

நீ
விழுகா
பைசா கோபுரம்..!

நீ
அழுகா
மழலை..!

நீ
புழுகா
அரசியல்வாதி..!

நீ
முழுகா
பொண்டாட்டி..!

---------------------------------


நீ
அள்ளா
வைரம்..!

நீ
கிள்ளா
மலர்..!

நீ
நில்லா
தேர்..!

நீ
சொல்லா
சிந்தனை..!

நீ
கொள்ளா
போதைப்பொருள்..!

நீ
வெல்லா
வீராங்கனை..!

நீ
தள்ளா
தாய்..!

நீ
கொல்லா
கொலையாளி..!

-----------------


நீ
உடுத்தா
பட்டு..!

நீ
படுத்தா(த)
குழந்தை..!

நீ
தடுத்தா
நியாயம்..!

நீ
கொடுத்தா
முத்தம்..!

நீ
எடுத்தா
பாக்கியம்..!


-----------------------

நீ
வாழா
அன்னம்..!

நீ
சோழா
பூரி..!

நீ
கூலா
கோக்..!

நீ
ஆளா
தேசம்..!

நீ
வீழா
சாம்ராஜ்யம்..!

நீ
மீளா
சொர்க்கம்..!

------------------

நீ
கொழுக்கா
குதிரை..!

நீ
குலுக்கா
(நாட்டியத்)தாரகை..!

நீ
பழுக்கா
நெல்லி..!

நீ
உலுக்கா
மாமரம்..!

நீ
வெளுக்கா
இரவு..!

நீ
அலுக்கா
பாடம்..!

நீ
சலிக்கா
விளையாட்டு..!

------------------------------


நீ
காணா
காட்சி..!

நீ
தோணா
கற்பனை..!

நீ
கோணா
குணம்..!


நீ
பேணா
அழகு..!

நீ
தானா
இதயம்..?









ஞாயிறு, 7 மார்ச், 2010

நித்யானந்தா..ரஞ்சிதா..ரகசிய கேமரா..!! (Full coverage)



நித்யானந்தாவின் வெளிவராத இரகசியங்கள்..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம். 33 நாடுகளில் கிளைகள். 32 வயதில் இரண்டாயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதி. உலகம் முழுவதும் 1,500 கிளைகள். விவேக் ஓபராய் முதல் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா வரை விசிறிகள் என காவி சாம்ராஜ்யத்தை நிலை நாட்டிய சுவாமி நித்யானந்த பரமஹம்சர், தன்னுடைய காவி உடைக்குள் ஒளித்து வைத்திருந்த காமம், நடிகை ரஞ்சிதா ரூபத்தில் அம்பலப்பட்டுப் போகும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கதவைத் திற காற்று வரட்டும் என்றவர் கதவைச் சாத்து காதல் வரட்டும் என்று அம்பலமாகட்டும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது சர்வதேச மீடியாக்களின் பக்கங்களில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் நித்தியானந்தர், தான் நடத்திய ஆபாச வேட்டை சி.டி. அம்பலமாகாமல் இருக்க நடத்திய கடைசி கட்ட சேஸிங் ஒரு விறுவிறுப்பான ஆங்கிலப் படம் போன்றது.

பெயர் வைத்த ரஜினியின் குரு!

மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹீலிங் தெரபியில் எக்ஸ்பர்ட்டான நித்யானந்தரை முதன் முதலில் அடையாளம் கண்டுகொண்டது திருவண்ணாமலை விசிறி சாமியார்தான். எட்டு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் பற்று கொண்டிருந்த ராஜசேகருக்கு, இமயமலையில் வைத்து பரமஹம்ச நித்யானந்தர் எனப் பெயர் சூட்டியது நடிகர் ரஜினியின் ஆன்மிக குருவான பாபாஜி. மெக்கானிக்கல் டிப்ளமோ பட்டம் மட்டுமே வாங்கியிருந்த நித்யானந்தருக்கு சரளமாகப் பேசத் தெரிந்த ஆங்கிலமும், தீவிர புத்தக வாசிப்பும் தனித்த புகழைத் தேடித் தந்தது. இதுவரை யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளாத நித்யானந்தர், தனக்கென ஒரு பெருங் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை நடத்தி வந்த சண்முகசுந்தரம் நித்யானந்தரிடம் பக்தியைக் காட்ட மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள பிடாடியில் 200 ஏக்கர் ஆசிரமம் எழுந்தது.

ஆனந்த நடன அசிங்கம்!

இந்த ஆசிரமம் உருவாவதற்கும் ஒரு பின்னணியைச் சொல்கிறார்கள். பெங்களூரு ஆசிரமத்தில் அய்நூறு ஆண்டுகள் பழைமையான ஆலமரம் ஒன்று இருக்கிறது. அந்த ஆலமரத்தின்கீழ் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சித்தர் சமாதியானாராம். அந்த சித்தர்தான் இந்த ஜென்மத்தில் அவதரித்துள்ள நான் என்றாராம் நித்யானந்தா. சாமியார் கைகாட்டிய அந்த இடத்திலேயே மிகப் பெரிய காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டு, நித்யானந்த தியான பீட ஆசிரமம் உருவானது. எட்டு ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரமத்தின் அசிங்கப் பக்கங்கள் அம்பலமானது 2005 ஆம் ஆண்டில் சிறு வயதுப் பெண்களை நித்யானந்தா அருகில் அவரது சீடர்கள் அனுமதிக்கிறார்கள். ஹீலிங் தெரபியைக் கொடுக்கும் போது இளம்பெண்களின் உடல்களை வருடுகிறார். இவர் நடத்தும் ஆனந்த நடனத்தில் நடக்கும் காட்சிகள் அருவருப்பானவை. ஸ்டார் ஓட்டல்களை விஞ்சும் வகையில் ஆனந்த நடனம் இருக்கிறது என்றெல்லாம் புகார் சொல்லப்பட்டது.

பெங்களூரு டூ சேலம் ...

இன்றைக்கு சுவாமிகளின் படங்களுக்குச் செருப்படி கொடுக்கிறார்கள். போராட்டம் ஆர்ப்பாட்டம் எனத் தீவிரம் காட்டுகிறார்கள். முதலியார் இனத்தில் பிறந்தவரை வேற்று சாதி சன்னியாசிகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்தப் பிரச்சினையெல்லாம் என புதுக் காரணத்தை அடுக்கிய ஆசிரம நிருவாகி ஒருவரிடம் அப்படியானால் வெளியான படங்கள் அவருடையது அல்ல என்கிறீர்களா? என்றோம்.

இது பற்றி உண்மைகளைப் பேச ஆரம்பித்தால் எனக்கு நேரும் விளைவுகளை நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்த ஆபாச சி.டி. விவகாரத்தின் பின்னணி எட்டுப் பேருக்குத் தெரியும். ஆசிரமத்தில் சுவாமிக்கு அடுத்தடியாக இருக்கும் இவர்கள் மூலம்தான் பெரும் தொகையைக் குறி வைத்துப் பேரம் நடந்தது. இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருந்த இந்த சேஸிங் காட்சிகள் பெங்களூரு ஆசிரமத்தில் தொடங்கி, சேலம் அழகாபுரத்தில் முடிந்தது என்று சொன்னால்தான் பொருத்தமானதாக இருக்கும். இந்தப் பேரத்தில் பங்கெடுத்த ஒருவரிடம் அனுப்புகிறேன். அவரிடம் பேசுங்கள். இன்னும் விளக்கமாகத் தகவல் கிடைக்கும் என நம்மை அங்கிருந்து சென்னை நகரின் பிரதான பகுதியில் உள்ள அந்த நபரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

நாம் சந்தித்த ஆசிரமத்தின் அந்த முக்கிய நபர் கூறும் காட்சிகள் இனி அப்படியே.

ரஞ்சிதா என்ட்ரி ...

இதுவரை மீடியாக்களில் ஒளிபரப்பான காட்சிகள் இருபது நிமிடம் அய்ந்து செகண்ட். ஆனால், உண்மையில் ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் கொண்ட முழுநீளஆபாசப்படம் அது. நடிகை ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் அறை பெங்களூருவில் உள்ள அவரது படுக்கை அறைதான். அந்தப் படுக்கையறைக்குள் அவ்வளவு சுலபத்தில யாரும் நுழைய முடியாது. ராணுவத்தில் மேஜராக இருந்த ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ரஞ்சிதா. நாடோடித் தென்றல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி வரிசையில் வந்த நேரத்தில் திருமணமும் செய்து கொண்டார். காஷ்மீரில் சில காலம் சேர்ந்து வாழ்ந்த ரஞ்சிதாவுக்கு அந்த வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து வாங்கினார். மிகுந்த மனப் போராட்டத்தில் இருந்த அவரிடம் நடிகை ராகசுதா, சுவாமி நித்யானந்தாவிடம் ஹீலிங் தெரபி வாங்கினால், மனசாந்தி கிடைக்கும் என பெங்களூரு நெடுஞ்சாலைக்கு ரூட் போட்டுக் கொடுத்தார். இதன் பிறகு ஆசிரமத்திலேயே தங்கி சேவை செய்ய ஆரம்பித்தார் ரஞ்சிதா என தொடக்கத்தை விவரித்தவர்,

அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் . . .

மரணத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்கவேண்டும். அடிமனதில் மன அமைதியை உருவாக்குவதன்மூலம் இறைவனை அடையலாம் என்ற சுவாமியின் அடிப்படை தியரி ரஞ்சிதாவுக்கும் பிடித்துப் போய்விட்டது. பெங்களூரு ஆசிரமம் ஒரு வினோதமானது. அங்கு ஆண், பெண் பாகுபாடெல்லாம் கிடையாது. ஓரிரு மணி நேர உறக்கம். மற்ற நேரமெல்லாம் தியானம்தான்.

எப்போதும் இளம் பெண் துறவிகளும், ஆண் துறவிகளும் நடந்து கொண்டேயிருப்பார்கள். இந்த வாழ்க்கையோடு ரொம்பவே பழக்கப்பட்டு விட்டார் ரஞ்சிதா. நித்யானந்தரின் படுக்கையறையைச் சுத்தம் செய்ய பல பெண்கள் வந்து போவார்கள். அவர்களைப் போல்தான் இவரும் ஒரு கட்டத்தில் சுவாமியோடு மிகவும் நெருக்கமாகிவிட்டார். இதை ஒரு சில துறவிகள் பார்த்துவிட்டாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள வாழ்க்கை முறைகள் அப்படி. அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் தவறில்லை என்பது ஓஷோவின் தத்துவம்தான் என்றாலும், அதை வெளிப்படையாக யாரும் சொன்னதில்லை.

அமெரிக்க கேமரா அஸ்திரம் . . .

இந்த நேரத்தில் சுவாமிகளின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளைப் பார்த்த ரஞ்சிதாவுக்கு சின்ன ஆசை ஏற்பட்டிருக்கிறது. சரியான நேரம் பார்த்துக் காத்துக் கிடந்தார். அவருக்குப் பின்புலமாக இருந்து தூண்டில் வீசியது ஆசிரமத்தின் ஒரு சில துறவிகள்தான். (அட). அவர் பயன்படுத்திய கேமிரா உளவுத் துறைக்குப் பயன்படுத்தும் அதிநவீன கேமரா. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பது நாங்கள் பின்பு நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அந்த கேமிராவின் தொழில் நுட்பம் எப்படியென்றால் ஏதாவது பொருள்கள் அசைந்தால் மட்டுமே படம் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. சுவாமியோடு தான் இருக்கும் நாட்களில் உடலுறவுக் காட்சிகளைப் படம் பிடிக்கவேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரது அறையைச் சுத்தம் செய்யப் போனவர் படுக்கையில் இடதுபுறத்தில் உள்ள பூச்சட்டியில் இந்த கேமராவை சரியான கோணத்தில் பொருத்தியிருக்கிறார். வழக்கம் போல் அன்றிரவு இருவரும் இணைந்திருக்கிறார்கள். நீங்கள் பார்த்த ஒரு காட்சியின் போது விளக்கை அணைக்க சுவாமி முயலும்போது ரஞ்சிதா அதைத் தடுக்கும் காட்சிகள் தெளிவாகத் தெரியும். இதிலிருந்தே ரஞ்சிதாவின் சூழ்ச்சியைத் தெரிந்து கொள்ளலாம்.

துணையோடு தூண்டில்

இதன்பிறகு எதையும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் ஆசிரமத்தின் பணிகளில் தீவிரம் காட்டிய ரஞ்சிதா, சுவாமியின் அனுமதியோடுதான் டி.வி.சீரியல்களில் தலைகாட்டி வந்தார். இந்தக் காட்சிகளை வியாபாரமாக்கும் நோக்கத்தில் இருந்தவருக்கு தூபம் போட்ட சாமியார்களும் ஆசிரமத்தில் ஒரு சில பாலியல் விவகாரங்களில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்கள்தான். இவர்களது சீண்டல்களால் இதுவரை அய்ந்து இளம் பெண்கள் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு கனடா நாட்டு இளம் துறவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதெல்லாம் ஆசிரம வளாகத்திற்குள்ளேயே மூடி மறைக்கப்பட்ட உண்மைகள். இதில் நித்யானந்தா டார்ச்சரால் இரு பெண்கள் தற்கொலை வரை போனதாகவும் சொல்கிறார்கள் என்றனர்.

ரஞ்சிதாவை இயக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சுவாமி தர்மானந்தா. சேலத்தைச் சேர்ந்த இந்தத் துறவியின் இயற்பெயர் லெனின். 2004 ஆம் ஆண்டு காந்தப் படுக்கைமோசடியில் சேலம் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. இந்த விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்தான் லெனின். பின்னர் பெயரை மாற்றிக் கொண்டு சுவாமியின் நம்பிக்கைக்குரிய ஒருவராக மாறினார். ஆசிரமத்தின் முதல் பத்து முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். ரஞ்சிதா விவகாரத்தில் இருந்து சாமியைக் காப்பாற்ற, தான் பாடுபடுவதாகக் கடைசி வரை காட்டிக் கொண்ட இந்தத் துறவிதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்போது மீடியாக்களுக்கு இதை அனுப்பி வைத்ததும் இந்த லெனின்தான்.

ஆபாசத்தின் விலை அய்ம்பது கோடி ரூபாய்

இரண்டு மாதங்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை தொடங்கியது. அப்போது லெனின் தன்னிடம் மிக ரகசியமாக இதை ரஞ்சிதா கொடுத்ததாக சில படங்களை ஆசிரமத்தின் தலைமை நிர்வாகியிடம் கொடுத்தார். அதில் ரஞ்சிதாவும், சுவாமியும் இருக்கும் ஆபாசப் படங்கள் மட்டுமே இருந்தன. இதற்கு மசியாத ஆசிரம நிர்வாகிகளிடம் சி.டி.யும் காட்டப்பட்டது. இது வெளியாகாமல் இருக்க ரஞ்சிதா நிர்ணயித்த தொகை அய்ம்பது கோடி ரூபாய். இதில், சரிபாதி லெனின் மற்றும் அவரது அண்ணன் குமார் ஆகியோருக்கு என்று முடிவானது.

நித்தியானந்தரின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் சதானந்தா உள்ளிட்ட வெகுசிலருக்கு மட்டும் இந்த சி.டி.காட்டப்பட்டது. இந்தக் காட்சிகளைப் பார்த்த பெங்களூரு ஆசிரமத்தின் வி.அய்.பி. துறவி ஒருவர், இது பக்கா பிளாக்மெயில். இது சுவாமியே கிடையாது. அவளை உள்ளே அனுமதித்ததற்கு அய்ம்பது கோடி ரூபாய் என்பது டூ மச் என சத்தம் போட்டார். இவரது அவசர செயல்பாடுதான் முதலில் போடப்பட்ட அச்சாரம். இந்த சி.டி.விவகாரம் பல கட்டங்களாக சென்னை மற்றும் பெங்களூருவில் பேரம் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை நடக்கும் போது செல்போனில் மட்டுமே ரஞ்சிதா பேசுவார். தர்மானந்தாதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்.

நேரடிப் பேச்சில் நித்தியானந்தா

பின்னர் விவகாரம் சீரியஸாகப் போன நேரத்தில் மட்டும் நான்கு முறை நேரடிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் நித்யானந்தா. பெங்களூரு ஆசிரமத்தில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், சக துறவிக்கு இவ்வளவு பணம் செல்வதை நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. லெனினை சந்தேகத்துடன் பார்த்து வந்தனர். பணம் வருவதற்குத் தாமம் ஏற்பட்டதால் ரஞ்சிதாவுக்குச் சாதகமாக நேரடி வியாபாரத்திற்கு உதவி செய்ய முன்வந்தார் சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவ தொழில் அதிபர் ஒருவர். சுவாமியின் பெயர் கண்டிப்பாக நாறிப்போகும். பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணுங்கள் என அவர் சொல்ல, இரண்டு வாரத்திற்கு முன்பு சென்னையில் முக்கிய ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஆசிரம நிர்வாகிகள், தர்மானந்தா, தொழிலதிபர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஃபைனல் ரேட் 15 கோடி ரூபாய்

நீண்ட நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் அய்ம்பது கோடி என்பது அதிகம். கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என கோரிக்கை வைக்கப்பட கடைசியாக யாருக்கும் பாதகமில்லாமல் முடிவாக 15 கோடி கொடுக்கிறோம். அந்த சி.டி.யின் ஒரிஜினல் பிரிண்ட் படங்கள் என அனைத்தும் செட்டில் செய்யப்பட வேண்டும் என ஆசிரம நிர்வாகிகள் உறுதியாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் நித்யானந்தருக்கு அப்போதே செல்போனில் சொல்லப்பட நான் கட்டிக் காத்த பெயர் காற்றில் பறந்துவிடக்கூடாது. 15 கோடி ரூபாயை செட்டில் பண்ணுங்கள். தர்மானந்தாதான் இவ்வளவும் செய்திருக்கிறான். அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் எனப் பேசியிருக்கிறார். இதன் பிறகும், இந்தப் பணம் லெனினுக்குப் போய்ச் சேரக்கூடாது என ஆசிரம நிர்வாகிகள் வஞ்சம் பார்த்ததன் விளைவுதான் இப்படி ஊரெல்லாம் சிரிப்பாய் சிரிக்கக் காரணம் என பேரத்தின் உச்சத்தை அதிர்ச்சியோடு விவரித்தவர், லெனினுக்குச் சொந்த ஊர் சேலம். இதே சேலம்தான் நித்தியானந்தருக்கு இறுதி சவக்குழி தோண்டக் காரணம். கடந்த 15 ஆம் தேதியில் கோவை சேலத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார் சுவாமி. கோவை வ.உ.சி. மய்தானத்தில் அவரைப் பார்க்கத் திரண்ட கூட்டமே அவரது மகிமையைச் சொல்லும். சேலம் அழகாபுரத்தில் உள்ள ஆசிரமத்துக்குச் சென்றவர், முக்கிய வி.அய்.பி.களின் வீடுகளுக்குச் சென்று பூஜையும் செய்தார். சேலம் நேரு அரங்கில் மாபெரும் சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு ராமகிருஷ்ணா தெருவில் உள்ள ஆசிரமத்தின் கிளைக்கு இரவு வந்தார். தர்மானந்தாவும் அங்கு இருந்தார். இந்தக் கிளையில் நள்ளிரவு இரண்டு மணி வரை நடந்த வாக்குவாதங்களை சாகும் வரையில் நித்யானந்தாவால் மறக்கமுடியாது.

தர்மானந்தா உள்பட பேரம் பேச அழைக்கப் பட்டவர்கள், தொகை போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றெல்லாம் பேச, ஒரு கட்டத்தில் கடுப்பின் உச்சிக்கே போன சுவாமி, ஆசிரமத்தில் தர்மானந்தா செய்த செயல்களைப் பற்றியும் ரஞ்சிதாவோடு சேர்ந்து கொண்டு என்னை பிளாக் மெயில் செய்வது சரியானதா? எனவேதனைப்பட்டார். அருகில் இருந்த ஆசிரம நிர்வாகிகள் சுவாமியின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். தர்மானந்தாவுக்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவை, தான் அனுபவிப்பதாகப் புலம்பினார் சுவாமி. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரஞ்சிதா தரப்பினர் பணம் வந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் ஊரெல்லாம் அம்பலமாகும். அதான் ஆசிரமத்தில் பல ஆயிரம் கோடிகள் இருக்கிறதே என அழுத்தமாகப் பேச ஒரு கட்டத்தில் தன் முகத்தில்தானே அறைந்து கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டார் நித்யானந்தா.

நீண்ட நேரம் நீடித்த அவரது அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை. பின்னர் ஒரு வழியாகத் தன்னைத் தேற்றிக் கொண்டவர், இத்தோடு செட்டில் செய்துவிடுங்கள். நான் இனி தர்மானந்தா முகத்திலேயே விழிக்கக் கூடாது என முடிவாகச் சொல்லிவிட்டார். அத்தோடு பிரச்சினை முடிந்தது. பணத்தை செட்டில் செய்வதற்குக் கால அவகாசம் கேட்கப்பட்டது. அந்த நேரத்தில் சுவாமியின் கதறலைப் பார்த்திருக்கிறார் வி.அய்.பி. பக்தர் ஒருவர். அவர் ஆசிரமத்தின் தலைமை நிர்வாகி ஒருவரிடம், தர்மானந்தாவின் கதையை நான் பார்த்துக் கொள்கிறேன். பணம் எதுவும் தரவேண்டாம். போலீஸ் அதிகாரிகள் நமக்குத் துணை நிற்பார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

டி.ஜி.பி. இருக்கிறார்

இந்தத் தகவலை சுவாமியிடம் கூறிய ஆசிரமத்தின் துறவி தமிழ்நாட்டில் டி.ஜி.பி. லத்திகா சரணிடம் பேசப் போகிறார்கள். அவனை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடலாம். போலீஸ் விட்டாலும் உங்களுக்காக உயிரை விடக் காத்திருக்கும் மூன்றரை லட்சம் பக்தர்கள் அவனை சும்மா விடமாட்டார்கள். என ஆறுதல்படுத்த நிம்மதிப் பெருமூச்சில் ஆழ்ந்தார் நித்யானந்தா. இந்த விவரம் தர்மானந்தாவுக்குத் தெரிந்தால் திருந்திவிடுவான். 15 கோடி ரூபாய் மிச்சம் எனஆசிரம நிர்வாகி ஒருவர் கணக்கு போட்டார். இதைத் தெரிந்து கொண்ட தர்மானந்தா, இரண்டு மாதம் பாடுபட்டும் பைசா தராமல் ஏமாற்றுகிறார்கள். போலீசில் போனால் சிக்கிவிடுவோம். போலீசிலிருந்து தப்பினால் இவர்கள் உயிரோடு விடமாட்டார்கள் எனப் பயந்து முதல் கட்டமாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார்.

இப்போது ரஞ்சிதா

நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் தர்மானந்தாவைப் பிடிக்க முடியவில்லை. சேலத்திலும் தேடினோம். இதன் பிறகு ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் ஒரு சில காட்சிகளை மட்டும் அனைத்து மீடியாக்களுக்கும் சென்று சேரச் செய்தார். இதை வைத்து ஒரு மீடியா, இரண்டு கோடி ரூபாய் கொடுங்கள். செய்தியை வெளியிட மாட்டோம் என மிரட்டிய தகவலும் உண்டு. இதே மீடியா நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்கத் தூண்டியபோது நான் தவறு செய்துவிட்டேன். என் விவகாரத்தை நான் கையாளாமல் மூன்றாம் நபரிடம் பொறுப்பை ஒப்படைத்ததுதான் பெருங்குற்றம். சுவாமிஜிக்கு எதிராக நான் எந்தப் புகாரும் சொல்லமாட்டேன் என உறுதியாக மறுத்துவிட்டார்.

இப்போது நித்யானந்தாவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டு பெங்களூரு ஆசிரமத்தில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ரஞ்சிதா. மீடியாக்களின் பார்வை திசை மாறும்போது சீரியல் வேலைகளில் இறங்குவார். சுவாமி இப்போது வாரணாசியில் பூரண கும்பமேளாவில் இருக்கிறார். ஒரு வாரம் கழித்துதான் வருவார். அதற்குள் எல்லாம் மாறிவிடும். இதுதான் நடக்கப் போகிறது என்றவர், எது நடக்கக்கூடாது என சுவாமி நினைத்தாரோ அது நடந்து விட்டது. இதில் குற்றவாளி யார்?காமத்திற்கு சபலப்பட்டவரிடம் பணத்திற்கு சபலப்பட்டவர் விளையாட நினைத்தார். இரண்டு பேரின் பசியும் ஒன்றுமில்லாமல் மீடியாவின் பெரும் பசியைத் தீர்த்துவிட்டதுதான் இந்த இருவரும் செய்த அருஞ்செயல் என சேஸிங்கை படிப்படியாக விவரித்து முடித்தார். நமக்கு வியர்த்துக் கொட்டியது

மீடியாக்களில் நித்யானந்தரின் ஆலிங்கனங்கள் அம்பலமாகும் தகவல்கள் வாரணாசியில் இருக்கும் அவருக்குத் தெரிவிக்கப்பட, எல்லாம் எனது விதிப் பயன். உங்கள் எல்லோரையும் நான் மனதார நம்பினேன். என்னைக் கைவிட்டு விட்டீர்கள். இந்தச் செயலால் நான் காராஹிருகத்திற்குச் (சிறை) செல்ல வேண்டிய நிலை வந்தாலும் ஏற்றுக் கொள்வேன். கடவுளின் விருப்பம் எதுவோ அதுதான் நடக்கும் எனச் சொல்லிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாராம்.

இப்போது அவத் தேற்றுவதற்குப் புதிய வார்த்தைகளைத் தேடி அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரம துறவிகள்.


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், 11.3.2010

நித்யானந்தா மாட்டிக்கொண்ட பிறகு ஊடகத்திற்கு கொடுத்த முதல் பேட்டி கீழே..!!


மனதில் கடவுளாய் வைத்து கொண்டாட ம(மா)க்கள், மாட மாளிகை,  மலையளவு பணம், மயக்கும் நடிகைகள் என்று உல்லாசத்தின் உச்சத்தில் இருந்த நித்யானந்தாவுக்கு ஏழரையில் பிடிச்ச சனியால் இப்போது எல்லாமே தலைகீழ்..! ஒளிந்து வாழும் வாழ்க்கை, சுதந்திரம் இல்லாமல் போன நிலை, உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள சூழல், மனிதனாய் கூட மதிக்க நினைக்காதபடி சமூகத்தில் அவமானம்.. அவ்வளவு ஏன்... தன் பேட்டியை கூட மொபைல் கேமராவில் மட்டும் படம் பிடிக்க முடிந்திருக்கும் அவலம் என்று இப்பொழுது காலம் அவனை தலைகீழாய் புரட்டி போட்டு விட்டது. ”எப்படி இருந்தவ(ன்)ர் இப்படி ஆயிட்டா(ன்)ர்..?” என்று சொல்ல தோன்றுகிறது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை..!!

மற்ற சாமியார்களை கேட்டால் ”எல்லாம் சிவ மயம்” என்பார்கள்..!! ஆனால் இவன் மட்டும் ”எனக்கு  கேமரா பயம்” என்பான்..!!!

செவ்வாய், 2 மார்ச், 2010

நித்திரை தொலைக்கப் போகும் நித்யானந்தர் சுவாமிகள்..!!




போலி ஆன்மீகம் என்பது இன்றைய தினத்தில் மிகவும் இலாபகரமான, முதல் போட தேவையில்லாத தொழில். மக்களின் துன்பங்கள், பேராசை, மூடநம்பிக்கையை மையமாக வைத்து ஏமாற்று பேர்வழிகள் உலகெங்கும் கோடிகளை குவிக்கிறார்கள், ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள். சராசரி மனிதனுக்கே உரிய எல்லா வகையான பலவீனங்களை கொண்ட குள்ளநரிகள் ”சாமியார்” என்ற பெயரில் செய்யும் தில்லுமுல்லுகள் இந்தியாவில் கொஞ்ச நஞ்சமல்ல. அதுவும் தமிழகத்தில் மாதம் ஒரு போலிச்சாமியார் கையும் களவுமாக மாட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் பரமஹம்ச நித்தியானந்த சாமிகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்த நித்தியானந்தா..!! இவர் ஒரு பிரபல தமிழ் நடிகையுடனான ஆபாச வீடியோவை சன் தொலைக்காட்சி வெளியிட்டு இவரின் போலி ஆன்மீக முகத்திரையை கிழித்திருக்கிறது. இது அவரை நம்பிய பல்லாயிரம் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்பங்களை தவிர்த்து துறவற நிலையில் இருக்க வேண்டிய ஒரு துறவி திரைப்பட நடிகையுடன் கொண்ட தொடர்பும், அது தொடர்பான வீடியோவும் ஆன்மீகத்தை கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.! இந்த குள்ளநரியின் உண்மையான பெயர் இராஜசேகரன். 32 வயதாகும் இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர். சாமியார்களுக்கே உரிய சித்து வேலைகளை சிறு வயது முதலே கற்று, அதை மக்கள் முன் காட்டி தான் ஒரு சக்தி வாய்ந்த சாமியார் என்று நம்ப வைத்தார். தியான பீடம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தியானத்தில் மக்களை ஈடுபட வைத்து அவர்களின் நோய்கள், பிரச்சினைகளை தீர்க்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டார். இந்த அமைப்பு பெங்களூருவை தலைமையகமாக கொண்டு பல கிளைகளுடன் தன் வியாபாரத்தை ஜெகஜ்ஜோதியாக நடத்தி வந்தது. இதையெல்லாம் தாண்டி பெரும் நகைச்சுவையாக 2007-ம் வருடம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் அமெரிக்க இந்து பல்கலைக்கழகத்தின் (Hindu University of America) சேர்மனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். Life Bliss Foundation என்ற பெயரில் 2003-ம் ஆண்டு இவர் தொடங்கி நடத்தி வந்த தியான அமைப்பு 33 நாடுகளில் 1000 மையங்களை கொண்டது என்று சொன்னால் நம்புவீர்களா..? ஆனால் அத்தனையும் உண்மை..!! யார் கண் பட்டதோ.. சன் டிவியின் மூலம் சாமியாரின் கெட்ட நேரம் தொடங்கி விட்டது..!!

பசுத்தோல் போர்த்திய இந்த போலி ஆன்மீகப்புலி சில ஆண்டுகளுக்கு முன் பிரபல தமிழ் வார இதழான குமுதத்தில் “கதவைத்திற..காற்று வரட்டும்..!!” என்ற தலைப்பில் ஆன்மீக கட்டுரைகளை எழுதி மக்களை ஏமாற்றி வந்தது. அந்த தொடர் மூலம் தான் சாமானிய மக்களிடையே மிகவும் பிரபலமானார். இன்றைய காலகட்டத்தில் பெரும் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட எல்லா தரப்பிலும் பெரும் எண்ணிக்கையில் பக்தர்களை பெற்றிருக்கிறார். பதிவுலகில் பரபரப்புக்கு பெயர் போன எழுத்தாளர் சாரு நிவேதிதா இவரின் தீவிர பக்தர்..! ”இவர் தொட்டால் எல்லா நோயும் குணமாகிறது” என்று சொல்லிக்கொண்டிருந்தார். இனி என்ன சொல்வாரென தெரியவில்லை..!! அதென்னவோ தெரியவில்லை, இவர் தூக்கி புகழும் அத்தனை பேரும் சில நாட்களிலே தூற்றும் படியான நிலையை அடைகிறார்கள் அல்லது சாருவாலேயே தூற்றப்படுகிறார்கள்.!!!

இவருடன் ஆபாச வீடியோவில் இருந்த அந்த பிரபல தமிழ் நடிகையின் பெயரை சன் தொலைக்காட்சி வெளியிடாமல் “ஆர்” எழுத்தில் தொடங்கும் நடிகை என சஸ்பென்ஸ் வைத்தார்கள்.. ஆர்வ மிகுந்தவர்கள் பேப்பர், பேனாவுடன் உட்கார்ந்து “ஆர்” எழுத்தில் தொடங்கும் நடிகைகள் யார் என்று பட்டியலிட தொடங்கியிருந்தார்கள். ஆனால் நக்கீரன் பத்திரிக்கை அந்த நடிகை ”நாடோடி தென்றல்” படத்தில் பாரதிராஜா அறிமுகம் செய்த ரஞ்சிதா தான் என்று பட்டவர்த்தனமாக வெளியிட்டு, பெரும் சஸ்பென்ஸை உடைத்து அவர்களின் புண்ணியத்தை தேடிக்கொண்டு விட்டது. நடிகைகளுக்கு இது போன்ற செய்திகளில் தொடர்பு இருப்பதாக செய்து வெளிவருவது ஒன்றும் புதிதல்ல. அது மட்டுமல்லாமல் பிரேமானந்தாவில் தொடங்கி இன்றைய நித்தியானந்தா வரை பெண்கள் விஷயத்தில் மாட்டிக்கொள்வது கூட புதிதில்லை தான். ஆனால் என்ன தான் சன் போன்ற தொலைக்காட்சி ஊடகங்கள் உண்மையை உலகத்துக்கு கொண்டு வந்தாலும் ஆன்மீகம் என்ற பெயரில் ஏமாறும் ஏமாளிகள் இருக்கும் வரை நித்தியானந்தா போன்று இன்னுமொரு வித்யானந்தா போன்ற ஏமாற்று பேர்வழிகள் தோன்றிக்கொண்டு தான் இருப்பார்கள். அது ஒரு தொடர் கதை..!!

”கதவைத்திற... காற்று வரட்டும்..!” என்று ஊருக்கு உபதேசம் செய்து புத்தகம் எழுதிய நித்தியானந்தரிடம் ”கதவைத்திற.. காவல்துறை வரட்டும்..!” என்று தான் எனக்கு இப்போது சொல்ல தோன்றுகிறது..!!


 
Related Posts with Thumbnails