ஆன்மாவும் அவரைக்காயும்
-
Pa Raghavan
இந்த மனிதர் ஏன் இலக்கியத்தை விட்டு வைத்தார் என்றுதான் அவரைப் பற்றிப்
படிக்கும்போது தோன்றியது. ஏ ஸ்கொயரும் பி ஸ்கொயரும் எக்கேடு கெடட்டும்.
இவ...
I Sharmi Diamond Ep-40
-
42. 40 A Flashback
"What is it, Raja? You're the one who's always 'busy, busy' when I call,
and now you've called me? What do you need?" I looked ...
நெடுங்குருதி - கசப்பின் எல்லையில் கனியும் மணம்
-
(அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த கூடுகையில் , மூத்த எழுத்தாளர்
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் 'நெடுங்குருதி' நாவலைப் பற்றிய சிற்றுரை)
*இ*ன்றைய கா...
திரை புத்தகம் – புதிய தொடர்
-
Zero Degree பதிப்பகத்தில் இருந்து புதிதாக வெளிவந்திருக்கும் சினிமா பற்றிய
இணைய இதழ் – The Talkie – https://thetalkie.in/ . இந்த இணைய இதழின்
பதிப்பாசியர்களா...
காசா க்ராண்ட் எச்சரிக்கை
-
இந்த காசா க்ராண்ட் எலீஸியம் ப்ராஜக்ட் லாஞ்ச் சென்று வந்தது பற்றி கீழே உள்ள
லிங்கில் விரிவாக எழுதி உள்ளேன்,மொத்தம் 1350 அடுக்கக வீடுகளில் இதுவரை 500
வீட...
பங்குசந்தையில் பயணிக்கும் ஒருவனின் சுவாரஸ்ய வாழ்வு
-
ஏன் சமூக வலைத்தளங்களில் இயங்குவதில்லை. அதற்கான பதிலே பாட்ஷா மாணிக்கமாய்
இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தான். வலையுலக வழக்கமே
எதிர்வினையும்...
அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!
-
www.arunchol.com
என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!
‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம்
தெரிவிப்பேன் என்று க...
குழந்தை அண்ணா!
-
பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில்
இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம்
இருந்திருக்கிறது. நாளந்தா ...
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
2019- சிறந்த 10 படங்கள்
-
இவ்வருடம் 175 க்கும் மேல் தமிழ் படங்கள் வெளியானது. அவற்றில் போட்ட பணத்தை
எடுத்த படங்கள் 20 அல்லது 25 இருக்கலாம். இவ்வருடம் சின்ன படங்கள் -
தியேட்டரும் கிட...
பெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்
-
*பெருங்கற்கள் சுமக்கும் குளம்*
*’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும்
எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்துள்ள என்னுரை....
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
-
நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார
நெருக்கடியை சந்திக்கும்னு
சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்...
ஒச்சாயி - சினிமா விமர்சனம்
-
*25-03-2018*
*என் இனிய வலைத்தமிழ் மக்களே..!*
*தியேட்டருக்கு போயி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. வேலை நிறுத்தப்
போராட்டத்தினால் வேலையும் இல்லை. வீட்லேயும் ...
adwords find keywords
-
[image: adwords find keywords]
having the right keywords is the key to getting your ads to show on
relevant searches. but what if you’re not sure which o...
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
-
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட
நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு (
https://www.facebook.com/grou...
இறைவி - எண்ணங்கள் எனது !
-
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய
தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது.
வி...
கோழிக்குஞ்சு
-
சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு.
கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா
நிறைய கோழிக...
வழுவுச்சம்
-
முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன்
அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும்
பாறையில் எப்போத...
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
இணையம் வெல்வோம் - 23
-
முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில்
சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும்,
தங்களைப் பற்றியும், வாழ்...
ஆகாயத்தாமரைகள்..
-
கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன்
..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட
முடியுமோ அப்போ...
Deeper Analysis of "Vishwaroopam" :
-
These are just spoilers,if you haven’t watched vishwaroopam yet,Don't go
further.Let me get to core of the movie.Right fro...m first scene,
Kamal use...
திரும்பி வந்த சிங்கம்
-
லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு
பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி
வந்தால் ஒரு ...
அனுகிரகம்
-
மித வெப்பம் இதமான காற்று ஈரப் பதம் சுரக்கும் நீரூற்று பழாச்சுளைகள் நான்
உயிர் வாழ தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது உன் செவ்வாயில். என்
உ'தட்டை' தரையிற...
ப்ளாட் படும் பாடு....!!
-
ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர்
ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும்
பெண் புது பட்...
ஆரண்ய காண்டம்
-
ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம். எக்கச்சக்க எதிர்பார்ப்பை
எகிறவிட்டிருந்தார்கள். The film deserve all those.
ஒரு Gangster கதைதான். முதல...
சின்ன சின்ன நடை நடந்து...
-
இன்னிசைப் பாடல்களை மனது தேடித்தேடி ரசித்தாலும், பழைய பாடல்களில் உள்ள
இனிமையை ரசிக்க ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. பழைய பாடல்களின்
காட்சியைமைப்பு...
மன்மதன் அம்பு - திரை விமர்சனம்.
-
நிஷா (அம்புஜம்) பிரபல நடிகை. அவரை மாதவன் (மதனகோபால்) என்கிற பணக்கார வாலிபர்
காதலிக்கிறார். நடிகையானதால் மதனுக்கு சந்தேகம். காதல் ஒரிடத்தில் ஊடலாக நிஷா
ப...
அவளுடன் காணும் பொங்கல்
-
செங்கரும்பின் சாறு
செவ்விதழ்களை தாண்டி
வழிந்தோட நீ அடிக்கரும்பை
சுவைக்க ஆரம்பிக்கும்போது
அதை நான் ரசிக்க
ஆரம்பிக்கும்போது
என்ன என என்னைப் பார்க்க
பொங்கல் வா...
ஹரித்துவாருக்கு ஓடி, ஒளிந்து இருந்து கொண்டிருந்த நித்யானந்தாவை நம் தமிழ் நாடு போலீஸ் அங்கு போய் கோழியை அமுக்குவது போல் “லபக்”கென்று பிடித்து கொண்டு வந்து விடுகிறது. அடுத்த நாள் அவர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். மனதில் வலிமை, எண்ணத்தில் நேர்மை(!), பேச்சில் திறமை (!), காசில் கடுமை என்று கனகச்சிதமாக இருந்த நித்யானந்தா, பெண் விஷயத்தில் இருந்த பலவீனத்தால் மாட்டிக்கொண்டதில் விழி பிதுங்கி குற்றவாளிக்கூண்டில் நிற்கிறார். அவரின் லீலையை ரிலீஸ் செய்த சன் டிவியே அவரின் நீதி மன்ற காட்சிகளையும் நேரலையில் ஒளிபரப்புகிறது. என்ன தான் பயம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் தரப்பு நியாயத்தை தைரியமாக கூறி அவர் வாதாடும் பரபரப்பு காட்சிகள் இனி உங்கள் விழிகளுக்காக..!!
இதோ காட்சி..!
நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நின்று கொண்டிருக்கிறார் நித்யானந்தா. நீதிபதி அவரை பார்த்து “நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா..?”. அவரின் சம்மதத்தை கூட எதிர்பார்க்காமல் நித்யானந்தா தன் பேச்சை தொடங்குகிறார். பேசித்தானே அவர் இலட்சக்கணக்கான மக்களை கவர்ந்து காவி உடைக்குள் திணித்தார்..!! நித்யானந்தா தன் தரப்பு வாதத்தை தொடங்குகிறார்..!!!
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாக ஊரை ஏய்த்துப் பிழைக்கும் ஒண்ணாம் நம்பர் கேடி சாமியார்களில் நானும் ஒருவன்.
பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள் என்று கூறி ஊரை ஏமாற்றினேன். தியானம் என்கிற பேரில் தில்லுமுல்லுகள் செய்தேன். கண்ட நடிகைகளுடன் கதவை திறந்து வைத்து “கசமுசா” பண்ணினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.!! நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் இதை எல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று..!! இல்லை..நிச்சயமாக இல்லை..!!
பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள் என்று கதை அளந்தேன். ஏன்.. மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா..? மனதெல்லாம் கஷ்டங்களுடன் வருபவர்களிடம் காசை வாங்கி கொண்டு ஆறுதல் தரவேண்டும் என்பதற்காக..!!
கண்ட நடிகைகளுடன் கதவை திறந்து வைத்து “கசமுசா” பண்ணினேன். ஏன் அவர்களிடம் சல்லாபித்து இன்ப லோகததை காணவா..? இல்லை..மக்கள் நடிகைகள் என்ற மலையாள மாமிகளின் மாயையிலிருந்து வெளி வரவேண்டும் என்பதற்காக..!
தியானம் என்கிற பேரில் தில்லுமுல்லுகள் செய்தேன். மக்களை மயக்கி கன்னக்கோல் வைக்கவா..? இல்லை... திருட்டுத்தனம் செய்து மாட்டிக்கொண்டாலும் அது தியானத்தின் ஒரு பகுதி என்று சொல்லி தப்பித்து விடவேண்டும் என்பதற்காக..!!
உனக்கேன் இவ்வளவு அக்கறை.. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..
நானே பாதிக்கப்பட்டேன்...நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலம் என்பீர்கள். எனது இந்த சுயநலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது. நடிகைகளுடன் சல்லாபித்தாலும் நாளொரு பேட்டாவும், பொழுதொரு சன்மானமுமாக அள்ளிக்கொடுத்தேனே.. அதைப்போல..!! என்னை குற்றவாளி, அயோக்கியன் என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையை சற்றே திரும்பி பார்த்தால் நான் செய்த திருட்டுத்தனங்கள், அதற்காக வாங்கிய அடிகள், அதனால் கிடைத்த அவமானங்கள் விளங்கும்..!! மனதை வருடும் மந்திரங்கள் இல்லை என் பாதையில், மனசை கெடுக்கும் தந்திரங்கள் நிறைந்திருக்கின்றன. கடவுளை தீண்டியதில்லை நான். ஆனால் காமத்தின் எல்லையை தாண்டி இருக்கிறேன். கேளுங்கள் என் ”தில்லுதுர” கதையை நீதிபதி அவர்களே..! என்னை ஜெயிலுக்குள் விட்டு டவுசரை கழட்டுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..!!
போலி ஆன்மீகம் பொங்கி வழியும் இந்தியாவில், கண்டவர்களை எல்லாம் கடவுளர்களாக நினைக்கும் தங்க தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான்..! பிறக்க ஒரு ஊர்.. பிழைக்க ஒரு ஊர்..! ஆன்மீகம் என்ற பெயரில் ஊரை அடித்து உலையில் போடும் சாமியார்களை நம்பி ஏமாறும் தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா..? திருவண்ணாமலையில் பிறந்து, காவிரிக்கரையில் அமர்ந்து வாயில் வந்ததை எல்லாம் ஜோஸியம் என்று வாந்தி எடுத்துக்கொண்டிருந்தேன். ஆரம்ப வியாபாரமே வெகு சிறப்பாக தான் நடந்தது.
என்னை கண்டவர்கள் கடவுள் அவதரித்து விட்டார் என்றனர். தொட்டால் துலங்குகிறது என்றார்கள். பார்வை பட்டால் பலன் கிடைக்கிறது என்றார்கள். ஆனால் கடைசியில் நடந்ததை நினைத்தாலோ கண்ணைக்கட்டுகிறது..!! வீடியோ மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ரஞ்சிதா, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். மனதை பறிகொடுத்தேன். பின் பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். வீடியோவில் படமாக்கப்பட்டேன். அதனால் அடிபட்டேன்.. ஆத்திரப்பட்டேன்... ஆவேசப்பட்டேன்.. ஒன்றும் வேலைக்காகாததால் மாட்டிக்கொண்டேன்.
அவள் பெயரோ ரஞ்சிதா..! கேட்டாலே கிறக்கம் கொடுக்கும் பெயர்..!! ஆனால் பேச்சில் உண்மை இல்லை.! செயலில் நன்மை இல்லை..!! ஆதரவாய் கட்டிக்கொண்ட ஆர்மிக்காரனுக்கும் அல்வா கொடுத்து விட்டாள். அவளுக்கு கண்ணி வீசினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் கண்டதையும் கேட்டனர். வீடியோ எடுப்பதில் ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் லெனின் என்கிற பிரேமானந்தா, இவன் பண ஆசையில் என் அறைக்குள் பல முறை கேமரா வைக்க முயன்றான். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் ”கதவை மூடு.. கேமரா தொலையட்டும்..!!” என்று அப்போதே அவனுக்கு ஆப்பு வைத்திருப்பேன்..!!
நான் ஏமாற்றாத நாளில்லை..!! ஏமாறாத பரமஹம்ச பக்தனும் இல்லை..!! நான் மட்டும் நினைத்திருந்தால் சாமியாராகாமல் அரசியலில் புகுந்து அனைவரையும் ஏமாற்றியிருக்கலாம். பெண்ணாசை வந்தால் கள்ளக்காதல் செய்து காலத்தை ஓட்டி இருக்கலாம். மட்டமான மசாலா படங்களில் நடித்து மக்களின் மனதை கெடுத்திருக்கலாம். இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?
சன் டிவியில் என் படத்தை சகட்டு மேனிக்கு போட்டு சந்தி சிரிக்க வைத்தார்கள்..... ஓடினேன்..! என் மடங்களில் புகுந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள்... ஓடினேன்...!! என் பேனர்களை எரித்து என்னை கொலை வெறியோடு தேடினார்கள்.. யூட்யுப்-ல் என் வீடியோவுக்கு மட்டும் ஏகப்பட்ட ஹிட்டுகளை கொடுத்தார்கள்..ஓடினேன்..!! கள்ளச்சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று கலகம் செய்தார்கள் ஓடினேன்..!!
ஓடினேன்... ஓடினேன்... ஹரித்துவாரின் கடைசி எல்லை வரைக்கும் ஓடினேன்.. ஆனால் எத்தனை ஓடியும் இந்த எடுபட்ட தமிழ் நாட்டு போலீஸ் என்னை எப்படியோ அமுக்கி பிடித்து விட்டது..!! புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து விட்டேன்..!!
சரியான அரசு சன் டிவியின் வீடியோ ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும். என் வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும்..இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா இந்த நித்யானந்தாவை..?!!
துறவியாக இருந்து கொண்டு ஆடை களைந்து அழகியுடன் சல்லாபித்தது ஒரு குற்றம். ஆசிரம் அமைப்பதற்காக அடுத்தவன் நிலத்தை அபகரித்தது ஒரு குற்றம். ஆன்மீகம் என்ற பெயரில் அத்தனை மக்களின் நம்பிக்கையை நாசமாக்கியது ஒரு குற்றம். காணிக்கை என்ற பெயரில் கணக்கிடலங்கா கருப்பு பணம் சேர்த்தது ஒரு குற்றம்..!!
இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம்..?
பாலாஜி சக்திவேல் பட ஹீரோ போல் இருந்த என்னை துறவியென நம்பியது யார் குற்றம்.? சாமியார் வேஷம் போட்டு காசு பார்க்க நினைத்த என் குற்றமா..? இல்லை..எத்தனை டுபாக்கூர் சாமியார்கள் மாட்டினாலும், மறு நிமிடமே மறந்து விட்டு மீண்டும் மீண்டும் நம்பும் முட்டாள் மக்களின் குற்றமா..?
நடிகையுடன் சல்லாபித்தது யார் குற்றம்..? ஜாலியாக இருந்து இவ்வுலகிலேயே சொர்க்கலோகத்தை சுகிக்க நினைத்த என் குற்றமா.? இல்லை..பணத்துக்காக என்னிடம் பல்லைக்காட்டி படுக்கையில் விழுந்த நடிகையின் குற்றமா.?
பல கோடி ரூபாய் பணம் சேர்த்தது யார் குற்றம்..? நான் உண்டு என் லீலைகள் உண்டு என்று இருந்த என் குற்றமா..? இல்லை..சாமியார் என்றாலே சாக்கு பையில் பணத்தை கொண்டு வந்து கொட்டும் ஏமாளிகள் குற்றமா.?
இக்குற்றங்கள் களையப்படும் வரை நித்யானந்தாக்களும், ரஞ்சிதாக்களும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்..!!! நன்றி... வணக்கம்..!!
//பாலாஜி சக்திவேல் பட ஹீரோ போல் இருந்த என்னை துறவியென நம்பியது யார் குற்றம்.? சாமியார் வேஷம் போட்டு காசு பார்க்க நினைத்த என் குற்றமா..? இல்லை..எத்தனை டுபாக்கூர் சாமியார்கள் மாட்டினாலும், மறு நிமிடமே மறந்து விட்டு மீண்டும் மீண்டும் நம்பும் முட்டாள் மக்களின் குற்றமா..?//
இந்த ஒரு பேராவுக்காக எழுந்து நின்னு கைதட்டலாம் நண்பா!
அப்பா.. அப்பா ஓரே மூச்சில் படித்தாலும்.... ஓரு பக்கம் பிடித்து்க் கொண்டு வயிறு வலிக்க சிரிக்க வைத்த உம் மீது வழக்குத் தொடரப் போகிறேன்...... காத்திருக்கவும்....
14 கருத்துகள்:
super....
Nice
Realy nice one and true one
Realy nice one and true one
Good.
நல்ல கற்பனை
நித்யானந்தரிடம் சாருவின் புலம்பல்கள்
http://vanakkamnanbaa.blogspot.com/2010/03/blog-post_11.html
நல்ல கருத்துள்ள கற்பனை. மிகவும் நன்றாக இருந்தது.
நல்ல கருத்துள்ள கற்பனை. மிகவும் நன்றாக இருந்தது.
நல்லா இருக்கிறது ஆனால் அந்தப்படத்துக்கு சொந்தக்காரன் நானே என்பதை கவனத்தில் கொள்ளவும்...
(http://nbavan7.blogspot.com/2010/03/blog-post_07.html)
//பாலாஜி சக்திவேல் பட ஹீரோ போல் இருந்த என்னை துறவியென நம்பியது யார் குற்றம்.? சாமியார் வேஷம் போட்டு காசு பார்க்க நினைத்த என் குற்றமா..? இல்லை..எத்தனை டுபாக்கூர் சாமியார்கள் மாட்டினாலும், மறு நிமிடமே மறந்து விட்டு மீண்டும் மீண்டும் நம்பும் முட்டாள் மக்களின் குற்றமா..?//
இந்த ஒரு பேராவுக்காக எழுந்து நின்னு கைதட்டலாம் நண்பா!
தூள் மச்சி..........
அப்பா.. அப்பா ஓரே மூச்சில் படித்தாலும்.... ஓரு பக்கம் பிடித்து்க் கொண்டு வயிறு வலிக்க சிரிக்க வைத்த உம் மீது வழக்குத் தொடரப் போகிறேன்...... காத்திருக்கவும்....
சாமி நித்யானந்தா எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சுட்டாருங்க ..
வீடியோவைப் பாருங்க
http://manakkan.blogspot.com/2010/03/blog-post_11.html
Subu,
நீ மனக்கண் இல்லை, பிணக்க
ண்.
கருத்துரையிடுக