நேரம்:

திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 பிப்ரவரி, 2010

கனவுலகின் கம்பீர விருது - ஆஸ்கார்..! - 02




விருதாக வழங்கப்படும் ஆஸ்கர் சிலையின் மொத்த உயரம் பதிமூன்றரை அங்குலம் (அதாவது ஒரு அடி நீளத்திற்கு சற்றே கூடுதல்). எடையோ எட்டரை பவுண்ட். இடையில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது சிலை செய்ய உலோகம் கிடைக்கவில்லை என ஆஸ்கரை 'பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்' என்ற சிலை செய்யும் சுண்ணாம்பினால் செய்து தங்க முலாம் பூசியும் கொடுத்திருக்கிறார்கள் (நம் ஊரில் கூட சாமி சிலை, தாஜ்மஹால், மிருகங்களி‎ன் சிலைகளை செய்து தெருவோரம் 5 ரூபாய், 10 ரூபாய்க்கு விற்பனை செய்வார்களே, அந்த முறையில்..!). சில நேரங்களில் பிரிட்டானியம் என்ற உலோகக் கலவை சிலை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் பல முறை விருது வழங்கும் தினம் முடிவு செய்யப்பட்ட தேதிக்கு முன்னும், பின்னும் மாறிப் போனாலும் கூட அனைவரது கவனத்தையும் கவர்ந்த முக்கிய செய்தியாக அது அப்போது மாறியிருந்தது. முதல் ஆண்டு விருது வழங்கப்பட்டபோது மொத்தம் 15 விருதுகள் கை மாறின. ஆனால் இரண்டாம் ஆண்டு, இது ஏழு ஆக குறைந்து போனது. சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குனர், எழுத்து வடிவம், ஒளிப்பதிவு, அரங்க வடிவமைப்பு (Art Direction) என்பன மட்டுமே ஆரம்ப நாட்களில் அகாடமி விருதுக்கான துறைகளாக இருந்தன. இவை மட்டுமின்றி சிறப்பு விருது என்று ஒன்றை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டிருந்தாலும் முதல் ஆண்டில் இது இடம் பெறவில்லை. இதனால் இரண்டாம் ஆண்டில் இரண்டு விருதுகளாக வழங்கப்பட்டன.

அச்சிறப்பு விருதுகளில் ஒன்றை, 'சர்வ சிரஞ்சீவி'யாகிவிட்ட நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினும், மற்றொன்றை வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் பெற்றன. ''சர்க்கஸ்'' என்ற படத்தைத் தயாரித்து இயக்கி, நடித்து என பல்வேறு பணிகளில் வித்தைகள், சாகசம் செய்து காட்டியதற்காக சாப்ளினுக்கும், பேசா மடந்தையாகக் கிடந்த திரைப்படங்களைப் பேச வைக்கும் முயற்சிகள் நடந்த போது 'தி ஜாஸ் சிங்கர்' எனும் பேசும் படத்தை துணிந்து எடுத்து வெற்றி கண்டதற்காக வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்பிறகு திரைப்படத் தொழில் நுட்பம் இன்று எவ்வளவோ மு‎‎ன்னேறி ஸ்டீரியோ, டால்ஃபி, டி.டி.எஸ் எ‎ன்று தாண்டி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது தனி கதை. அது சரி அகாடமி அவார்ட் எ‎ன்று இருந்த இந்த விருதுக்கு ஆஸ்கார் எ‎ன்று எப்படி பெயர் வந்தது..? அது ஒரு சுவராஸ்யமான சம்பவம்..!

'அகாடமி' தொடங்கி அதன் மூலம் விருது கொடுப்பதாக முடிவு செய்த பிறகு இந்த விருதுக்கான 'மாடல் சிலை எப்படியிருக்கலாம்' என்ற கேள்வி எழுந்தது. படம் வரையத் தெரிந்த அகாடமி உறுப்பினர்கள் பலரும் இதற்கான மாடல் என நிறைய வரைந்து தள்ளினார்கள். இதில் எம்.ஜி.எம் என்ற கம்பெனியின் ஆர்ட் டைரக்டர் 'செட்ரிக் ஜிப்பான்ஸ்' என்பவரும் ஒரு மாடல் வரைந்தார். அந்த மாடல் பலருக்கும் பிடித்துப் போக அதுவே இறுதித் தேர்வானது. டேபிள் கிளாத் ஒன்றில் ஜிப்பான்ஸ் வரைந்த மாடலைக் கொடுத்து 'ஜார்ஜ் ஸ்டான்ஸி' என்பவரை சிலை வடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்டான்ஸி அன்று உருவாக்கிய அந்த சிலைதான் இன்றுவரை அகாடமி விருது சிலையாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது (பார்க்க படம்). ஆரம்பத்தில் இந்த சிலை வெண்கலத்தான சிலையாக வடிக்கப்பட்டுதான் விருதாக வழங்கப்பட்டது.

ஒரு முறை இந்த சிலை செய்யப்பட்டு அகாடமிக்கு வந்தபோது அப்போதைய அகாடமியின் செயலாளர் மார்கரெட் ஹெரிக் “இந்த சிலை எங்க மாமா 'ஆஸ்கார்' மாதிரியே இருக்குப்பா..!” என்று கிண்டலடித்துள்ளார் (கிண்டல் இவரது மாமா பற்றியதுதான்). இதனால் சிலையைக் குறிப்பிடும்போது அவர் 'ஆஸ்கார்' என்றே சொல்வது பலரையும் பாதித்து, பிடித்துப் போய் “அட..! சொல்வதற்கும் கூட இது எளிதாக இருக்கிறதே..!” என்று எண்ணி பலரும் இதை 'ஆஸ்கார் விருது' என தப்பிதமாக குறிப்பிடப்போய் மெல்ல, மெல்ல 'அகாடமி விருது', 'ஆஸ்கார் விருது' ஆக பெயர் மாறிப் போனது. இன்றைக்கும் ஆஸ்கார் விருது என்றால் விளக்கம் ஏதுமின்றி அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் விருதின் நிஜ பெயரைச் சொன்னால் இன்று பெரும்பாலானவர்களுக்குப் புரிவதில்லை. 'எந்த அகாடமி...?, எந்த விருது..? என எதிர் கேள்வி கேட்கும் நிலையே உருவாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் ஆஸ்காரின் பழைய கதையையும், தற்போதைய நிலையையும் நினைக்கும் போது நமக்கு ஏற்படுவது ஒரே உணர்வு தான்.! அது ஆச்சரியம்..!!!

இந்த முறை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களும் அது தொடர்புடையவர்களின் பெயர்களும் கீழே..!

Best Picture 

'Avatar'
'The Blind Side'
'District 9'
'An Education'
'The Hurt Locker'
'Inglourious Basterds'
'Precious'
'A Serious Man'
'Up'
'Up in the Air'


Best Director
Kathryn Bigelow
'The Hurt Locker'

James Cameron
'Avatar'

Lee Daniels
'Precious'

Jason Reitman
'Up in the Air'

Quentin Tarantino
'Inglourious Basterds'


Best Actor
Jeff Bridges
'Crazy Heart'

George Clooney
'Up in the Air'

Colin Firth
'A Single Man'

Morgan Freeman
'Invictus'

Jeremy Renner
'The Hurt Locker'


Best Actress
Sandra Bullock
'The Blind Side'

Helen Mirren
'The Last Station'

Carey Mulligan
'An Education'

Gabourey Sidibe
'Precious'

Meryl Streep
'Julie and Julia'


Best Supporting Actor
Matt Damon
'Invictus'

Woody Harrelson
'The Messenger'

Christopher Plummer
'The Last Station'

Stanley Tucci
'The Lovely Bones'

Christoph Waltz
'Inglourious Basterds'


Best Supporting Actress
Penelope Cruz
'Nine'

Vera Farmiga
'Up in the Air'

Maggie Gyllenhaal
'Crazy Heart'

Anna Kendrick
'Up in the Air'

Mo'nique
'Precious'


Best Animated Feature Film
'Coraline'
'Fantastic Mr. Fox'
'The Princess and the Frog'
'The Secret of Kells'
'Up'



Best Original Screenplay
Mark Boal
'The Hurt Locker'

Quentin Tarantino
'Inglourious Basterds'

Alessandro Camon and Oren Moverman
'The Messenger'

Joel Coen and Ethan Coen
'A Serious Man'

Peter Docter, Bob Peterson, Tom McCarthy
'Up'

Best Adapted Screenplay
Neill Blomkamp and Terri Tatchell
'District 9'

Nick Hornby
'An Education'

Jesse Armstrong, Simon Blackwell, Armando Iannucci, Tony Roche
'In the Loop'

Geoffrey Fletcher
'Precious'

Jason Reitman, Sheldon Turner
'Up in the Air'


Best Documentary Feature
'Burma VJ'
'The Cove'
'Food, Inc.'
'The Most Dangerous Man in America: Daniel Ellsberg and the Pentagon Papers'
'Which Way Home'


Best Foreign Language Film
'Ajami'
Israel

'El Secreto de Sus Ojos'
Argentina

'The Milk of Sorrow'
Peru

'Un Prophète'
France

'The White Ribbon'
Germany

Best Original Score
'Avatar'
'Fantastic Mr. Fox'
'The Hurt Locker'
'Sherlock Holmes'
'Up'


Best Original Song
'Almost There' from 'The Princess and the Frog'
Music and Lyric by Randy Newman

'Down in New Orleans' from 'The Princess and the Frog'
Music and Lyric by Randy Newman

'Loin de Paname' from 'Paris 36'
Music by Reinhardt Wagner Lyric by Frank Thomas

'Take It All' from 'Nine'
Music and Lyric by Maury Yeston

'The Weary Kind (Theme from Crazy Heart)' from 'Crazy Heart'
Music and Lyric by Ryan Bingham and T Bone Burnett

Best Film Editing
'Avatar'
'District 9'
'The Hurt Locker'
'Inglourious Basterds'
'Precious'


Best Cinematography
'Avatar'
'Harry Potter and the Half-Blood Prince'
'The Hurt Locker'
'Inglourious Basterds'
'The White Ribbon'


Best Visual Effects
'Avatar'
Joe Letteri, Stephen Rosenbaum, Richard Baneham and Andrew R. Jones

'District 9'
Dan Kaufman, Peter Muyzers, Robert Habros and Matt Aitken

'Star Trek'
Roger Guyett, Russell Earl, Paul Kavanagh and Burt Dalton


Best Sound Editing
'Avatar'
Christopher Boyes and Gwendolyn Yates Whittle

'The Hurt Locker'
Paul N.J. Ottosson

'Inglourious Basterds'
Wylie Stateman

'Star Trek'
Mark Stoeckinger and Alan Rankin

'Up'
Michael Silvers and Tom Myers


Best Sound Mixing
'Avatar'
Christopher Boyes, Gary Summers, Andy Nelson and Tony Johnson

'The Hurt Locker'
Paul N.J. Ottosson and Ray Beckett

'Inglourious Basterds'
Michael Minkler, Tony Lamberti and Mark Ulano

'Star Trek'
Anna Behlmer, Andy Nelson and Peter J. Devlin

'Transformers: Revenge of the Fallen'
Greg P. Russell, Gary Summers and Geoffrey Patterson


Best Short Film (Live Action)
'The Door'
Juanita Wilson and James Flynn

'Instead of Abracadabra'
Patrik Eklund and Mathias Fjellström

'Kavi'
Gregg Helvey

'Miracle Fish'
Luke Doolan and Drew Bailey

'The New Tenants'
Joachim Back and Tivi Magnusson


Best Short Film (Animated)
'French Roast'
Fabrice O. Joubert

'Granny O'Grimm's Sleeping Beauty'
Nicky Phelan and Darragh O?Connell

'The Lady and the Reaper (La Dama y la Muerte)'
Javier Recio Gracia

'Logorama'
Nicolas Schmerkin

'A Matter of Loaf and Death'
Nick Park



முடிப்பதற்கு முன் ஆருடம் சொல்கிறேன். இந்த முறை ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் பல துறைகளில் ஆஸ்கார்களை அள்ளும்..!!


முற்றும்..


ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

கனவுலகின் கம்பீர விருது - ஆஸ்கார்..! - 01



இன்றைய உலகில் சிபாரிசு, அதிர்ஷ்டம் இல்லாத இடமேயில்லை என்றாலும் கூட, திறமைக்குத் தனி இடம், மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நாட்டிலும், பிரதேசத்திலும் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு அதன் அடையாளமாக விருதுகளும் கூட வழங்கப்பட்டுத்தான் வருகின்றன. அந்த வகையில் ஜிகினா உலகமான திரைப்படத்துறையில் உலகின் முதல் தர விருதாகத் திகழ்வது ஆஸ்கார் (Oscar) விருது. 2009-ம் ஆண்டின் சிறந்த படங்களுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் 7-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கனவுலகத்தின் கம்பீர விருதான ஆஸ்கார் பற்றி கொஞ்சம் பார்ப்போமா..?!!

ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஹாலிவுட் பகுதிகளில் விளையாட்டாகத் தொடங்கிய இந்த விருது வழங்கும் சம்பவம் இன்றைக்கு உலகம் முழுதும் உள்ள எல்லா நாடுகளிலும் மதிக்கப்படும், திரை உலகின் உன்னத அடையாளமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்துடன் சந்தேகத்திற்கிடமின்றி முதல் தகுதி பெற்றது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் விருதாகவும் இது உருமாறியிருக்கிறது. ஆஸ்கர் விருது அறிவிப்பு என்பது இன்றைக்கு இந்தியாவின் கடைக்கோடி கிராமமான “கொட்டாம்பட்டி” கோவிந்தசாமியிலிருந்து, “லாஸ் ஏஞ்சல்ஸ்” லாரா வரை எல்லாரையும் கவரும் விஷயமாக மாறி விட்டாலும் கூட இந்த விருதின் பின்னணி, அத‎ன் வளர்ச்சி போன்றவற்றில் புதைந்து கிடக்கும் நிறைய விஷயங்கள் பலருக்குத் தெரியாது.

”ஆஸ்கார்” என்பதே இந்த விருதுக்கான பெயர் என்று இன்று மாறிப் போ‎னாலும் இதன் நிஜப் பெயர் அதுவல்ல..! ஆமாம்..! இந்த விருதி‎ன் உண்மையான ஆரம்பப் பெயர் அகாடமி விருது (Academy Award) என்பதுதான்.

1927-ம் ண்டு அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாநிலத்தின் ஒரு மூலையில் இருந்த திரைப்படத்துறைத் தொடர்புடையவர்கள் பலர் சேர்ந்து அடித்த 'உருப்படியான' அரட்டையில்தான் இந்த ஜடியா உருவானது. இதற்கென அவர்களெல்லாம் சேர்ந்து தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (The Academy of Motion Picture Arts and Science) என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பு ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து அந்த படத்திற்கும் அதை உருவாக்கியவர்களுக்கும் கெளரவம் செய்ய, பாராட்ட விருது வழங்குவது என முடிவெடுத்தார்கள். அதை இந்த அமைப்பின் பெயரிலேயே 'அகாடமி அவார்ட்' எனவும் குறிப்பிட முடிவானது. இந்த அமைப்பு உரு பெற்ற வெகு விரைவிலேயே கிட்டத்தட்ட 5000 முதல் 6000 வரையிலான திரைப்படக் கலைஞர்கள் இதில் உறுப்பினர்களாக ஆகிவிட்டனர். ஆனாலும் அகாடமி தொடங்கியது வெறும் 36 உறுப்பினர்களுடன்தான். அகாடமியின் முதல் தலைவர் டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் என்பவர். இன்றைக்கு அகாடமியில் உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள், இயக்குனர்கள், செயலாளர், பொருளாளர், தலைவர் என ஒரு பெரும் கூட்டமே இந்த அகாடமியின் செயல்பாட்டை, நிர்வாகத்தை, இதன் சொத்துகளை, வருமானத்தை கவனித்து வந்தாலும் அகாடமியின் ஆரம்ப நாட்களில் ஏன், 1946 வரை கூட வாடகைக் கட்டடத்தில்தான் அகாடமி செயல்பட்டு வந்தது..!

அகாடமியின் முதல் விருது 1929-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதியன்று வழங்கப்பட்டது. முதல் முறை இந்த விருது வழங்கப்பட்டபோது இந்த நிகழ்ச்சியை சீந்துவாரில்லை. ஹாலிவுட் நகரத்தின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 'ப்ளாசம் ரூம்' என்ற அறையில் நடந்த விருந்து ஒன்றில் இவ்விருது வழங்கல் தொடங்கியது. விருது பெறப் போவது யார் என்பதை முன்னதாகவே முடிவு செய்த அந்நாளைய அகாடமி இதை அன்றைய தின, மாலைப் பத்திரிகைகளுக்கு செய்தியாக கொடுத்திருந்தும், அந்த முதல் விழாவில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 250 மட்டும் தா‎ன். அந்த நாளிலேயே இதற்கு கட்டணமாக 10 அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்ததுதான் காரணமோ என்னமோ..! ஆனால் இரண்டாம் ஆண்டிலேயே இந்த விருதுக்கான மவுசு கூடத் தொடங்கி விட்டது. பத்திரிகைகள் இதையும் ஒரு பொருட்டாக கவனிக்கத் தொடங்கி விட்டன என்பது ஒருபுறமிருக்க, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்து வானொலி இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொகுத்து ஒரு மணி நேர நிகழ்ச்சியாக அன்று ஒலிபரப்பியது. அன்றிலிருந்து 'அகாடமி அவார்ட்' நிகழ்ச்சி அடுத்தடுத்து வானத்தை பார்த்தபடி வளர்ந்து கொண்டேதான் வருகிறதேயன்றி கீழ் நோக்கவில்லை.!!

தொடரும்..!

செவ்வாய், 8 டிசம்பர், 2009

Orphan - திரைவிமர்சனம்

நேற்றிரவு Orphan என்ற ஆங்கில த்ரில்லர் படம் பார்த்தேன். தரமான திரைக்கதை, வித்தியாசமான கதை, அழகான மற்றும் அதிர வைக்கும் காட்சிகள் என்று நம்மை ஆங்கிலப்படங்கல் மிக எளிதாக கட்டிப்போட்டு விடுகின்றன. வர வர பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் எனக்கு பிடிக்காமல் போனதற்கு இது போன்ற எதுவும் படத்தில் இல்லாமல் போவது தான். அதை விட்டு விட்டு தமிழில் ஒரே படத்தில் காதல், சண்டை, சோகம், பாடல், காமெடி, ஹீரோயிஸம் என்று எல்லாம் கலந்து கொடுக்கும் மசாலா படம் பார்த்தால் எனக்கு வாந்தி தான் வருகிறது.

மிகக்குறைந்த கதாப்பாத்திரங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, அதிர வைக்கும் இறுதி முடிச்சு என்று இந்த படம் பார்ப்பவரை நிச்சயம் இந்த படம் அதிர வைத்துவிடும். இதன் கதை என்னவென்று பார்ப்போமா..? ஒரு அழகான குடும்பத்தில் ஜான் (Peter Starsaard ) என்ற தந்தை, கேட் (Vera Farmiga ) என்ற தாய், டேனியல் (Jimmy Bennett ) என்ற மகன், மேக்ஸ் (Aryana Engineer) என்ற காது கேளா, வாய் பேசா முடியா மகள் ஆகியோர் ரம்மியமான பனிப்பிரதேச வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். கேட்டுக்கு 3-வது குழந்தை உருவாகி, அது குறைமாதத்தில் வயிற்றிலேயே இறந்து விடுகிறது. இதனால் பெரும் வேதனைக்குள்ளாகும் கேட் அந்த குழந்தையின் நினைவாக அதை தன் வீட்டிற்கு அருகிலேயே புதைத்து அந்த இடத்தில் ஒரு ரோஜா செடியை வளர்த்து அதில் பூக்கும் ரோஜாக்களை தன் குழந்தையை போல் பார்த்து வருகிறாள். அவளின் இறந்த குழந்தை பற்றிய மனக்கவலையை மறக்க குடி பழக்கம் தொற்றிக்கொள்ள டாக்டர் கவுன்சிலிங் செய்யும் நிலை வரை போகிறது. இந்த பிரச்சினைக்கெல்லாம் முடிவு காண அநாதை இல்லத்திலிருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது என்று என்று தம்பதிகளுக்குள் முடிவாகிறது

அதன்படி அங்கிருக்கும் ஒரு அநாதை இல்லத்தில் எஸ்தர் (Isabelle Fuhrman) என்ற 12 வயது குட்டிப்பெண்ணை தத்தெடுத்து கூட்டி வருகிறார்கள். சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையை நீங்கள் கேள்வி பட்டதுண்டா..! அந்த குழந்தையை கூட்டி வந்த அந்த குடும்பத்துக்கு அது நடக்கவில்லை, அதை விட விபரீதமாக நடக்கிறது. தத்தெடுத்த பெண்ணின் மேல் ஜான், கேட் இருவரும் அன்பை பொழிகிறார்கள். சிறிய பெண் மேக்ஸ் எஸ்தருடன் அன்பாய் ஒன்றி விடுகிறாள். கை, வாய் சைகை மூலம் சொல்வதை புரிந்து கொள்ளும் குழந்தை என்பதால் எஸ்தரும் சைகை பேச்சை கற்கிறாள். இதையெல்லாம் கவனிக்கும் பையன் டேனியலுக்கு ஏனோ ஆரம்பம் முதலே எஸ்தரை பிடிக்கவே இல்லை. தன் வெறுப்பை பல வழிகளில் வெளிக்காட்டுகிறான். எஸ்தரின் தோற்றம் 12 வயது பெண் குழந்தையாக இருந்தாலும் அவளின் மெச்சூரிட்டியும், திறமையும் மிகவும் அதிகமாக தெரிகிறது தம்பதிகளுக்கு. அவளுக்கு மிக அழகாக பெயிண்டிங் செய்ய வருகிறது, பியானோ வாசிக்க தெரிகிறது. பேச்சில் ஜெனரல் நாலெட்ஜ் பொங்கி வழிகிறது. உடையில் மற்ற குழந்தைகள் போல் இல்லாமல் மிகவும் வித்தியாசமாக உடை அணிகிறாள். எப்பொழுதும் கழுத்தில், கையில் பட்டை அணிகிறாள். இதை நினைத்து பெற்றோர்களுக்கு பெருமையாக இருக்கிறது.


இச்சூழ்நிலையில் எஸ்தரின் அளவுக்கு மீறிய அறிவு மற்றும் சந்தேகத்துக்குரிய சில நடவடிக்கைகள் கேட்டை கலங்க வைக்கின்றன. ஒரு முறை தன்னை அவமானப்படுத்திய பள்ளித்தோழியை உயரத்தில் இருந்து தள்ளி விட்டு கொல்ல முயல்கிறாள். அந்த பெண்ணுக்கு கால் முறிந்தாலும் அதிர்ஷ்டவசமாக பெண் பிழைத்துக்கொள்கிறாள். அவளின் கொலை முயற்சிக்கு ஒரே சாட்சி வாய் பேசா அந்த சிறு பெண் தான். ஆனால் தன் அக்காவை காட்டிக்கொடுக்க அந்த குழந்தை விரும்பாததால் அவள் தான் தள்ளிவிட்டாள் என நிரூபணம் ஆகாமல் போகிறது. இவளின் இது போன்ற சந்தேக நடவடிக்கைகள் அதிகமாக அதை பற்றி பேச அவளை http://i205.photobucket.com/albums/bb52/The_Playlist/more/2009/orphan_movie_image.jpgதத்தெடுத்த அநாதை ஆசிரம் காப்பாளரை வரவழைத்து பேசுகிறார்கள் பெற்றோர். அந்த காப்பாளர் அவர்களிடம் பேசிவிட்டு திரும்பி போகும் வழியில் அவரை தந்திரமாக வழி மறித்து கொடூரமாக கொலை செய்கிறாள் எஸ்தர். அதற்கும் சாட்சி அந்த ஊமை பெண் தான். ஆனால் இதை வெளியே சொன்னால் தாய் கேட்டை கொன்று விடுவேன் என்று மிரட்டியதால் குழந்தை அது பற்றி யாருக்கும் தெரிய படுத்தவில்லை. எஸ்தரின் மேல் சந்தேகப்படும் அண்ணன் டேனியலை அவனின் மர வீட்டின் உள்ளே வைத்து எரித்து கொலை செய்ய முயல்கிறாள். அப்போது கேட் அங்கே வந்து விடுவதா அவன் அதிலிருந்து தப்பினாலும், அவனின் உயிர் ஊசலாடும் நிலைக்கு போய் விடுகிறது.

ஏற்கனவே எஸ்தரின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்ட கேட் அதன் பிறகு நடக்கும் மோசமான சம்பவங்களை கண்டு இவற்றிற்கும் எஸ்தருக்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடிக்கிறாள். ஆனால் அதை தன் கணவன் ஜானிடம் சொன்னால் அவன் அதை நம்ப மறுக்கிறான். எஸ்தரை பிடிக்காததால் இப்படி அபாண்டமாக பழி சுமத்துவதாக சொல்கிறான். தன்னை ஏன் அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்று நடிக்கும் எஸ்தரிடம் "கேட்"டுக்கு ஏதாவது பரிசு கொடுத்து அவளின் மனசை கவர்வதற்கு முயற்சி செய்" என்று ஜான் ஐடியா கொடுக்க, அதற்கு எஸ்தர் தந்திரமாக கேட் தன் உயிராக வளர்த்த ரோஜா செடியில் இருந்த ரோஜாக்களை எல்லாம் பறித்து பூச்செண்டாக கொடுக்கிறாள். வேண்டுமென்றே தான் எஸ்தர் இப்படி செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்த கேட் அதிர்ச்சி, கோபம் கொண்டு அவளை அடிக்கும் நிலைக்கு போகும் போது ஜான் வந்து விலக்கி விடுகிறான்.

கேட்டின் மேல் கடும் கோபம் கொள்ளும் எஸ்தர் தன் தாய் கேட் மேல் பழியை போட தன் கை மணிக்கட்டு எலும்பை தானாக உடைத்துக்கொண்டு, தாய் அடித்ததில் தான் உடைந்து விட்டது என்று ஜானை நம்ப வைக்கிறாள். கேட் தான் உடைத்து விட்டதாக நம்பும் ஜான், அவள் மேல் ஆத்திரப்பட்டு அவளை பிரியும் மனநிலைக்கு தள்ளப்படுகிறான். கேட் மன விரக்தியில் திரும்பவும் மது குடிக்க கூட முடிவு செய்து பிறகு மனம் மாறுகிறாள். அதையும் ஜானுக்கு தெரிய வைத்து இருவருக்குள்ளும் பெரும் கலகத்தை ஏற்படுத்துகிறாள். அடுத்த குறியாக எஸ்தரின் அடுத்த குறி அவள் கொலை செய்த உண்மை அறிந்த ஹாஸ்பிடலில் இருக்கும் டேனியலை கொலை செய்வது. பிறகு அவளுக்கு பிடிக்காத தாய் கேட்டை காலி பண்ணுவது...!!! பிறகு வாய் பேசாத, காது கேளாத பிஞ்சு குழந்தையை கொல்வது என்று போகிறது எஸ்தரின் வெறி.!! அவளின் கொலை பட்டியலில் எதிர்பாராத விதமாக தந்தை ஜான் வந்துவிட வேறு வழியில்லாமல் http://i205.photobucket.com/albums/bb52/The_Playlist/more/2009/the-orphan-horror-movie.jpgஅவனையும் குத்திக்கொல்கிறாள்.

இங்கே ஒரு கேள்வி..!! ஒரு அநாதை பெண் குழந்தையின் மேல் இரக்கம், அன்பு கொண்டு அவளை தத்தெடுத்து கொண்டு வந்தவர்கள் கேட்டும், ஜானும். அன்பு மழையை பெய்து அவளுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால், எஸ்தர் அவர்கள் வீட்டுக்கு வந்து குடும்ப நிம்மதியை குலைத்ததும், தனக்கு பிடிக்காதவர்களை எல்லாம் ஒவ்வொருவராக தீர்த்துக்கட்டுவதும் ஏன் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் இப்போது நிற்கும். அங்கே தான் இருக்கிறது அதிர வைக்கும் முடிவு முடிச்சு.!! அதை நான் இங்கே சொன்னால் படத்தின் சுவராஸியமே தகர்ந்து போகும். அதனால் சொல்ல மாட்டேன். படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

படத்தில் எஸ்தராக நடித்த Isabella Fuhrman-ன் நடிப்பு அபாரமானது. சாந்த சொரூபியாக எப்பொழுதும் காட்சியளிக்கும் எஸ்தர், கொலை வெறி வரும் போது முகம், செயல் எல்லாம் மாறுவதை மிக அழகாக செய்திருக்கிறாள். அதுவும் கடைசி காட்சி ட்விஸ்டும், அப்போது அவளின் தோற்றமும் நம்மை அதிர வைக்கிறது. வாய் பேச முடியா, காது கேட்காத அந்த குட்டிப்பெண் செம க்யூட். தன் அழகு சிரிப்பால் நெஞ்சை அள்ளுகிறாள். கடைசி காட்சியில் அக்கா எஸ்தர் அவளை கொல்ல அலையும் போது அந்த குட்டி தேவதை அங்குமிங்கும் ஓடி தப்பிப்பது மனசை நம் கனக்க செய்து பரிதாபத்தை அள்ளுகிறாள்.

இது மிக அருமையான படமென்றாலும் 18 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்க முடியாத படி சில காட்சிகள் உண்டு. ஆங்கில படங்களில் இது சர்வசாதாரணம் என்றாலும், இந்த படத்தில் அவற்றை வியாபார நோக்கத்திற்காக அந்த காட்சிகளை வைக்காமல் கதைக்கு அவசியமானது என்பதால் தான் டைரக்டர் Jaume Collet-Serra வைத்திருக்கிறார் என்பதை நம்மால் படத்தின் கடைசியில் உணர்ந்து கொள்ள முடிகிறது. எஸ்தரின் அளவுக்கு மீறிய அறிவு, திறமை, உடை உடுத்தும் பழக்கம், நடவடிக்கைகளுக்கு என்ன காரணம் என்பதை அறியும் பொழுது நம்மை பேரதிர்ச்சி தாக்குவதை தவிர்க்க முடியாது. இந்த படம் மனித வாழ்க்கையில் பங்கு பெரும் விஞ்ஞானம், உளவியல், குடும்பத்திற்குள் இருக்கும் அந்நியோன்யம் என்று எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்திருக்கிறது. நான் சமீபத்தில் பார்த்த படங்களில் இந்த ஆர்பன் சிறந்த திரில்லர் படம் என்பேன்.!! நீங்களும் பார்த்து விட்டு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்..!!


மொத்தத்தில் இந்த அநாதை நம்மை அலற வைக்கிறாள்..!! 








பின்குறிப்பு: அதே போல் சமீபத்தில் பார்த்த இதற்கு இணையான சிறந்த தமிழ் த்ரில்லர் படம் ஈரம்..!!





என்றும் அன்புடன்,
ஜாஃபர் (இதயம்)

http://idhayampesukirathu.blogspot.com



சனி, 5 டிசம்பர், 2009

விஜய்(க்கு) வெடிகள்..!!

நண்பர்களே..!

இன்றைய தேதிக்கு தமிழகத்தில் ஸ்டார் வேல்யூ, மாஸ் அதிகம் உள்ள இளம் தலைமுறை ஹீரோ விஜய். அவரின் முதல் படமான "நாளைய தீர்ப்பு" முதல் விஜயை கவனித்து வருகிறேன். இந்த படத்திற்கு அப்போது விமர்சனம் எழுதிய "குமுதம்" பத்திரிக்கை விஜயின் முகத்தை பற்றி "இது போன்ற முகத்தை எல்லாம் திரையில் பார்த்து தொலைக்க வேண்டும் என்பது நம் தலையெழுத்து" என்று ரொம்ப காட்டமாகவே எழுதியிருந்தது. அதற்கு பொருந்துவது போலவே அப்போதைய அவருடைய முகமும், நடிப்பும், படங்களும் இருந்தன (இந்த கோபத்தில் பிரபல ஹீரோ ஆகி வெகுநாளாகியும் குமுத்திற்கு பேட்டி எதுவும் கொடுக்காமல் இருந்த்து தனிக்கதை..!!) வெகுகாலமாக மாமியாருக்கு சோப்பு போடும் "ரசிகன்" போன்ற உப்புமா படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜயின் திரை உலகப்பாதையை திருப்பி, விஜய்க்கு "பூவே உனக்காக" படம் மூலம் புத்துயிர் கொடுத்தவர் டைரக்டர் விக்ரமன். அதன் பிறகு வந்த விஜயின் படங்கள் கதையம்சங்களுடனே வந்தன. விஜய் நடித்ததில் எனக்கு பிடித்த படம் டைரக்டர் பாஸிலின் "காதலுக்கு மரியாதை". அதன் பிறகு என்னவாயிற்றோ தெரியவில்லை, விஜய் அடுத்து வந்த தன் படங்களில் மீண்டும் ஆரம்ப காலத்தை போலவே கதையை பற்றியும் கவலைப்படவில்லை, நடிப்பை பற்றியும் கவலைப்படவில்லை.

 

இரசிகர் மன்றம் என்ற போதை தலைக்கேறி விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு தோதாக பஞ்ச் டயலாக், பறந்தடிக்கும் சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்தார். நான் சந்திக்கும் பெரும்பாலானவர்கள் எல்லோரும் விஜயின் நடிப்பையும், படத்தையும் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனாலும் விஜயின் மாஸ் ஏறிக்கொண்டே இருந்ததே தவிர கொஞ்சம் கூட குறையவே இல்லை. இத்தனைக்கும் சமீப காலங்களில் அவர் கொடுத்த 2002  -  புதிய கீதை, 2003  -  வசீகரா, 2004  -  உதயா, 2005  -  சச்சின், 2006  -  ஆதி, 2007  -  அழகிய தமிழ் மகன், 2008  -  குருவி, 2009  -  வில்லு என்று எல்லாம் அட்டர் ஃப்ளாப் படங்கள். இவற்றின் உச்சமாக விஜயை வைத்து "தமிழன்" என்று ஒரு படம் எடுத்து அந்த தோல்வி கொடுத்த நஷ்டம் தாங்க முடியாமல் பிரபல தயாரிப்பாளர் ஜி.வி என அழைக்கப்படும் ஜி.வி ஃபிலிம்ஸ் உரிமையாளர் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலையே பண்ணிக்கொண்டார். ஆனாலு விஜய் கொஞ்சம் கூட அசரவில்லை. அடுத்து தான் கொடுக்கப்போகும் அடுத்த மொக்கை படத்திற்கு அடி போடுவதிலேயே எப்பொழுதும் கவனமாக இருக்கிறார்.

 

விஜயின் வீரபராக்கிரமங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை. சமீபத்தில் அரசியலில் சேர்ந்து அதையும் ஒரு வழி பண்ண நினைத்து ராகுல் காந்தியை சந்தித்த போது தமிழகமே கலங்கி போனது. நல்லவேளையாக அப்படி ஒரு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் காங்கிரஸ் தப்பித்தது. விஜயின் சமீபத்திய படமான வேட்டைக்காரனுக்கு வழக்கம் போலவே பெரும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. விஜய்யின் படங்கள் வரிசையாக அடி வாங்கியும் படத்துக்கு படம் எதிர்பார்ப்பு மட்டும் கூடும் மாயம் என்னவென்று எனக்கு புரியவே இல்லை. விஜய்க்கு இருக்கும் ஃப்ளாப் சிக்கல் போதாதென்று அவரின் புதிய படத்தின் தலைப்பை பற்றி ஒரு சனி வெடியை கொளுத்தி போட்டிருக்கிறார்கள். அதாவது இது வரை பழைய எம்ஜியார் பட டைட்டில் வந்த எல்லா புதுப்படங்களில் ஒன்று கூட வெற்றி பெற வில்லை (உதா: நம் நாடு, அவசர போலீஸ் 100,  நாடோடி மன்னன் இப்படி நிறைய படங்களை சொல்லலாம்). இவை எல்லாமே ஒரே மாதிரியாக மண்ணைக்கவ்வியிருக்கின்றன. இந்த இலட்சணத்தில் எந்த புண்ணியவான் இந்த படத்திற்கு எம்ஜியாரின் படப்பெயரான வேட்டைக்காரனை விஜய் படத்திற்கு வைத்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை விஜய்க்கு எதிரி வெளியில் இல்லையோ..?!! இனி திரைக்கு வரப்போகும் "வேட்டைக்காரன்" வெற்றியில் கோட்டை விட்டால் விஜயின் முதல்வர் கனவு தவிடு பொடியாகும் என்பது நிதர்சனம். காரணம் ஒரு நடிகனின் பொதுவாழ்க்கை வெற்றி என்பது அவன் நடிக்கும் படத்தின் வெற்றியை வைத்தே அமைவது தமிழகத்தின் தலையெழுத்து..!!!

 

நடிகர்களில் அதிகமாக நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்டவர் விஜய் என்பது கருத்து. உடனே விஜய் நல்லா காமெடி செய்கிறார் என்று சீரியஸாக நினைத்து விடாதீர்கள். பிறகு அதுவே பெரிய காமெடி ஆகிவிடும். நான் சொன்னது அவரின் நடிப்பு, பொது வாழ்க்கை, அவரின் படங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இண்டர்நெட்டில் வந்த பதிவுகள், விமரிசனங்கள், குறுஞ்செய்திகளைத்தான் அப்படி சொன்னேன். உங்களின் சந்தோஷத்தையே பெரும் இலட்சியமாக(!!) கொண்டிருக்கும் நான் இங்கே உங்களுக்காக விஜய் காமெ(வெ)டிகளை கொளுத்தி வீசியிருக்கிறேன். படித்து இரசியுங்கள்...!!!

 

 

 

 

விஜய்(க்கு) ஜோக்ஸ் (வெடிகள்)..!!

 

 

டைரக்டர்: படத்துக்கு வடிவேல் போடலாமா?
அல்லது விவேக் போடலாமா?

Dr.
விஜய்: சார் கவலைய விடுங்க நானே காமெடி ரோலும் பண்ணிடறேன்.....
டைரக்டர்: காமெடி ரோல் நீங்க தான் பண்ணுறீங்க , நான் படத்துக்கு ஹீரோவா யார போடலாம்னு கேட்டேன்....

************************************************************************************************************************************

சினிமா தியேட்டரில் விஜய் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏன் இஞ்சி மிட்டாய் கொடுக்கிறார்கள் .?


கதையை ஜீரணிக்க முடியாததால்.!!


************************************************************************************************************************************


villu film record:

இந்த வார விற்பனை:


அமிர்தாஞ்சன் - 30000
அனாசின் -  20000
poison
- 10000
அனைத்து மருந்து கடைகாரர்களும் பாராட்டு விழா நடத்தியதாக கேள்வி....


************************************************************************************************************************************

எங்கே கொஞ்சம் சிரிங்க....
கொஞ்சம்...
வேணாம்.. சொன்னா கேளுங்க ...
சிரிக்க வச்சுடுவேன்....
இப்ப சிரிக்க போறீங்க .....
இதோ வந்துடுச்சு....
"DR.
விஜய்"..!!!!
(
ஹி ஹி ஹி)


************************************************************************************************************************************

அதோ போறாரே அவர் வில்லு படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார்.

அவ்வளவு தீவிர விஜய் ரசிகரா...?

ம்ஹும்.. அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...!


************************************************************************************************************************************
விஜய் படம் வெளியிட்டிருக்கிற தியேட்டரில் மட்டும் நாற்காலியின் உள் பகுதியை வெட்டி இருக்கீங்களே ஏன்?


அப்பத்தானே மக்கள் மத்தியில் சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்த்தாங்கன்னு சொல்லலாம்.

************************************************************************************************************************************


விஜய் யோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?

ஏன்யா...! என்னாச்சு?

பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க

************************************************************************************************************************************


கணவன்: ஏண்டி! பிச்சகாரனை நடு வீட்ல வச்சி சோறு போட்டு, டி.வி பார்க்க விட்ருக்க...?

மனைவி: விடுங்க... பார்த்துட்டு போகட்டும்.. அந்த காலத்தில அவர் எடுத்த விஜய் படம் தானாம் அது....

 

************************************************************************************************************************************

 

நிருபர் : சார் , ஒபாமா பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க ?

விஜய்:  well, how to say in Tamil எங்க அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க .

நிருபர்: உங்க அப்பா அம்மா இல்ல மூதேவி...  ஒபாமா..!!

 

 

************************************************************************************************************************************

 

சுப்ரமணியபுரம்  Dialogue,..

 

ஐயோ நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் பரமா. எனக்கு சாவு பயத்தை காட்டிட்டாங்க... வேட்டைக்காரன் பாட்டை கேக்க வெச்சிட்டாங்கடா அவங்கள கொல்லணும்..பரமா...

 

************************************************************************************************************************************

 

எச்சரிக்கை

உங்களுக்கு 9994499999 இந்த நம்பர்ல எந்த கால் இருந்து வந்தாலும் attend பண்ணாதீங்க , உடனே cut பண்ணி  switch off பண்ணிடுங்க.... ஏன்னா அது விஜய் நம்பர்..!! போன் பண்ணி தான் நடிச்ச படத்தை பார்க்க சொல்லி கெஞ்சுது பயபுள்ள ...

 

************************************************************************************************************************************

 

எல்லா நடிகர்களும் அவர்களது flop movie பத்தி எஸ்ஸே எழுத ஆரம்பிக்கிறாங்க அப்பா சிம்பு வந்து aditional paper கேக்குறார் ,

 

Hall superviser: சாரி, பேப்பர் காலி ஆய்டுச்சி எல்லாத்தையும் விஜய் வாங்கிட்டாரு ...

 

************************************************************************************************************************************

 

வடிவேலுவின் தங்கச்சி: ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?

 

வடிவேலு: வரும்போது ஒரு நாதாரி பய குருவி பட டிக்கேட் ஓசில தந்தான். சரினு போனா போகுதுனு போனா...மூணு மணி நேரம் தெனர தெனர பாத்தேன்.. அதான்

 

தங்கச்சி: ஓடி வந்துருக்கலாமே?

 

வடிவேலு: படம் பாக்கும்போது ஒருத்தன் சொன்னான்.. இவன் 'விஜய்' படம் பாக்க வந்துருக்கான்.. இவன் ரொம்ப 'தைரியசாலி'னு சொல்லிட்டாமா!!...

 

************************************************************************************************************************************

 

முதல் நபர் : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும்,

இரண்டாம் நபர் : கேக்குறவன் விஜய் fan மாதிரி மாக்கானா இருந்தா, குருவி படம் ஆஸ்கர் போகணும்னு சொல்லுவீங்களே!!!

 

************************************************************************************************************************************

 

ஆறிலும் சாவு,  நூறிலும் சாவு..!!

 

கொய்யால விஜய் படத்த பாத்தா அப்பவே சாவு!!!

 

************************************************************************************************************************************

 

வேட்டைக்காரன் கிளைமாக்ஸ்:

பத்து ரன் ஒரு பந்தில் அடிக்கணும். அதுவும் நம்ம விஜய் தான் Batsman

அடிச்சாரு ஒரு அடி...!!

 

பந்து அடிச்ச அடியில இரண்டா பிளந்து ஒண்ணு எல்லை கோட்டை மேலாக தாண்டி ஆறு ரன்..!!

மற்றது வழக்கம் போல் நாலு ரன்..!!!

 

அப்புறம் பார்த்திட்டு நின்ற ரசிகர்கள் கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்ய

நம்ம விஜய் சொல்லுறார் பஞ்ச்

எவளவோ கொடுமைய தாங்கிட்டீங்க .. இதையும் சேர்த்துகுங்க..............

 

************************************************************************************************************************************

 

விஜய் : நான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா அப்புறம் என் படத்தை நான் கூட பார்க்க மாட்டேன்

 

ரசிகர்: கொய்யால.... நாங்க உங்க போஸ்டர் கூட பார்க்க மாட்டோம்.. அப்புறம் எங்க படத்தை பார்க்கிறது..?!!!

 

************************************************************************************************************************************

பாவ மன்னிப்பு சொல்லும் ஃபாதர் :

 

தினமும் சிகரெட் குடி- 10 வருஷம் முன்னர் உனக்கு சாவு

தினமும் தண்ணியடி - 20 வருஷம் முன்னர் உனக்கு சாவு

யாரையாவது நீ உண்மையா காதலி - நீ தினமும் செத்து கொண்டு இருப்பாய்!!!

 

அதற்கு

அந்த பாவ மன்னிப்பு கேட்க வந்த பையன் சொன்னான்

ஃபாதர், நீங்க ஒருவாட்டி வில்லு படம் இல்லாட்டி போனால் போகுது.. வேட்டைக்காரன் பாருங்க ஒவ்வொரு நிமிஷமும் செத்து கொண்டு இருப்பீங்க.............!!!

============================================================

விஜய் அமீர்கானை மும்பையில் சந்திக்கிறார்)

 

விஜய்- ஸாரி அமீர். எனக்கு இந்தி தெரியாது

 

அமீர் - ஸாரி, எனக்கு உங்களையே யாருன்னு தெரியாது

 

************************************************************************************************************************************

போலீஸ் : இன்னைக்கு உனக்கு தூக்கு... உன் கடைசி ஆசை என்ன?

கைதி : படம் பார்க்கணும்...

போலீஸ் : சரி குருவி போகலாமா ?

கைதி :அதுக்கு என்னை நீங்க தூக்குலயே போட்டுடலாம்...

 

************************************************************************************************************************************

ஒருவர்: அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?

மற்றொருவர்: யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...

 

************************************************************************************************************************************

விஜய் fan: தளபதி வாங்க செஸ் விளையாடலாம்....

இளயதளபதி: நீங்க போங்க... நான் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுட்டு வந்துடறேன்....

 

************************************************************************************************************************************

அருணாசலம் பார்ட் 2 ;

ரகுவரன்: என்ன அருணாசலம் முப்பது கோடிய முப்பது நாள்ல எப்படி செலவு பண்ண போற ?

ரஜினி: ஹா ஹா ஹா .. விஜய் வெச்சு படம் எடுப்பேண்டா.,

 

************************************************************************************************************************************

 

விஜய் பிரபுதேவாவிடம் :இந்த பாட்டு சூப்பரா இருக்கே... இத நம்ப படத்துல ரீமிக்ஸ் பண்ணலாமா?

 

பிரபுதேவா : டேய்... நாசமா போனவனே அது தேசிய கீதம்டா!!!

 

************************************************************************************************************************************

 

விஜய்: நான் அடிச்சா தாங்க மாட்டே

நாலுமாசம் தூங்க மாட்டே..!!!

ரசிகர்: டேய் நீ அடிச்சாக்கூட பரவாயில்லடா

நீ நடிச்சாத்தான் தாங்க முடியல

************************************************************************************************************************************


பிச்சைக்காரர்: அய்யா தருமம் பண்ணுங்கய்யா...

நடிகர் விஜய்: இந்தா 1000 ருபா வைச்சுக்க

விஜயின் பிஏ: என்ன சார் பிச்சைக்காரனுக்கு 1000 ருபா போட்டுட்டிங்க..?

நடிகர் விஜய்: யோவ்.. உனக்கு இந்த பிச்சைக்காரன தெரியல? இரண்டு வருசத்துக்கு முன்னாடி என்ன வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர்யா..!!

************************************************************************************************************************************

ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா? எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....

உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல அந்த படத்தையே போடுறோம்...

************************************************************************************************************************************
நிருபர்: நீ நடிக்க வரலேன்னா என்னவாயிருப்பீங்க?

விஜய்: ஐ ஏ ஸ் ஆகியிருப்பேன்.

நிருபர்: அதான் இப்பவும்.. நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?!!!

************************************************************************************************************************************

நண்பர் : நான் elevator-ல போகும் போது கரண்ட் கட் ஆகி இரண்டு மணி நேரம் உள்ளேயே நிக்க வேண்டியதாயிடுச்சு....

விஜய் : நீங்களாவது பரவாயில்லை, நான் மூன்று மணி நேரம் escalator- ல நிக்க வேண்டியதாயிடுச்சு...

************************************************************************************************************************************

விஜய் அவங்க அம்மாவிடம் : ஏம்மா என்ன கருப்பா பெத்த?

ஷோபா : கலரா இருந்தா மட்டும் நீ என்ன நடிக்கவா போற ? ரீமேக்குக்கு இது போதும்.

 

************************************************************************************************************************************

 

 

போலீஸ்: உன்னை கைது செய்கிறேன் .

 

ஆண் : ஏன் ? சார் நான் என்ன தப்பு பண்ணினேன்..?

 

போலீஸ்: உன் கைல என்ன வெச்சிருக்க?

 

ஆண்: விஜய் பட வீ.சீ.டீ வில்லு சார்.!!

 

போலீஸ்: தற்கொலை முயற்சி.. அதனால கைது பண்றேன்..!!'

 

ஆண் : என்ன கொடுமை சார்..!! வீட்ல பொண்டாட்டி தொல்லை தங்க முடிலன்னு தற்கொலை பண்ண போனா.. அதை கூட பண்ண விட மாட்டேங்கிறாங்க..!!

 

************************************************************************************************************************************

 

அஜித் & விஜய் எக்ஸாம் ஹால் :

 

விஜய்: தல கொஞ்சம் காட்டு தல..!!

 

அஜித் : எனக்கு ஹிந்தி எக்ஸாம்.

 

விஜய்: பரவா இல்ல நீ அத காட்டு நா அதை தமிழ்ல ரீமேக் பண்ணிக்கறேன் .

 

அஜீத்: இதுக்கு பிச்சை எடுக்கலாம்.!

 

விஜய்: எவ்வளவோ பண்றோம் இத பண்ண மாட்டோமா ...?!!

 

************************************************************************************************************************************

 

ஒருத்தன் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்யும் முடிவில் இருக்கான். அவனுக்கு தன்னம்பிக்கை வரணும்னு நண்பன் அவனை குருவி படத்துக்கு கூட்டிட்டி போறான்.

 

படத்தை பார்த்திட்டு, அவன் நேரா விஜய் வீட்டுக்கு போய் சொல்றான்.

 

"கொய்யால...!!! நீயெல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏண்டா சாகணும்?"

 

************************************************************************************************************************************

பையன் : அம்மா ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கு. எந்த செய்தி முதல்ல சொல்ல?

 

அம்மா : கெட்ட செய்திய சொல்லு

 

பையன் : குருவி படம் ரிலீஸ் ஆகி இருக்கு

 

அம்மா : அப்ப நல்ல செய்தி?

 

பையன் :நம்ப ஊர்ல ரிலீஸ் ஆகல!!!

 

************************************************************************************************************************************

 

 

விஜய் (பொல்லாதவன் கருணாஸ் ஸ்டைலில்) :   ஏய் மச்சி நீ கேளேன்ஏய் மாமா நீ கேளேன்ஏய் மாப்பு நீ கேளேன்நீ கேளேன்நீ கேளேன்....  

 

 

டேய்..... எவனாச்சும் கேட்டுத்தொலைங்கலேண்டா....

 

 

"வில்லுபாட்டு ரிலீஸாகியிருக்குது...

 

************************************************************************************************************************************

 

" சார் இந்த TV புதுசா மார்க்கெட்ல வந்துருக்கு .  இது தான் இப்ப fast movingநீங்க வேணா இந்த TV வாங்கிக்கிறீங்களா...?"

 

 

" அப்படிங்களா...!  என்ன விலைங்க?"

 

 

" just ஒரு லட்சம்தாங்க..."

 

 

"ஏங்க இவளோ விலை...?"

 

 

"நீங்க பாக்குற சேனல்ல விஜய் படம் வந்தா இது automatic channel மாத்திடும்.."

 

************************************************************************************************************************************

 

"சரோஜாபிரேம்ஜி ஸ்டைலில் படிக்கவும்...

 

 

2002  -  புதிய கீதை

 

 

2003  -  வசீகரா

 

 

2004  -  உதயா

 

 

2005  -  சச்சின்

 

 

2006  -  ஆதி

 

 

2007  -  அழகிய தமிழ் மகன்

 

 

2008  -  குருவி

 

 

2009  -  வில்லு

 

 

இவ்வளவு தாங்கிட்டோம்....

 

 

2010 – வேட்டைக்காரன் ---->   இதைத் தாங்க மாட்டோமா...?

 

************************************************************************************************************************************

   

 (சூரியன் பட ஸ்டைலில்) கவுண்டமணி  :    நச்சு நச்சுங்கிராங்கப்பா....  "குருவி" னு ஒரு படமாம்.  அதைப் பாக்கச்சொல்லி அனத்துறாங்கப்பா...  அது கூட பரவாயில்லை...  "வில்லு" னு ஒரு படமாம்.  அதை விஜய் ரசிகர்களாலேயே (!) பாக்க முடியலயாம்.  அத நம்மல பாக்கச் சொல்லி ஒரே டென்ஷன் பண்றாங்கப்பா...  அந்த கொடுமையெல்லாம் கூட தாண்டி வந்துட்டேன்...  இப்ப வேட்டைகாரன்னு ஒரு படம் வருதாம்.  அதை நான்தான் first show பாக்கனுமாம்...  ஒரே குஷ்டமப்பா..."

 

 

அருகிலிருக்கும் விஜய் :  ண்ணா.....  ஃபோன் வயர் பிஞ்சு நாளு நாள் ஆச்சுங்ணா..."

 

 

கவுண்டமணி :  டேய் பனங்கா மண்டைத்தலையா இது செல்போன்டா....  ஐயோ ஐயோ...!!!

 

 

************************************************************************************************************************************

நண்பா உன்னைப்போல் என் கண்ணீர் துடைக்க ஒருவன் இருந்தால்

-

-

100 விஜய் படம் வந்தாக் கூட துணிந்துப் பார்ப்பேன்.

 

 

************************************************************************************************************************************

 

ஹிஸ்டரி டீச்சர்: ராஜா ராம் மோகன் ராய் யாரு?

 

விஜய்: அவுங்க நாலு பேரும் பெஸ்ட் பிரண்டு டீச்சர்.

 

 

 

 

 

போதும்.. இத்தோட நிறுத்திக்கிறேன். இன்னும் எழுதினா விஜய் பஞ்ச் டயலாக் பேசி என்னைக்கொன்னுடுவார்..!!

 

 

Related Posts with Thumbnails