நேரம்:

வியாழன், 9 செப்டம்பர், 2010

இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-12)



அசைவம் உண்பது பாவமா..?


விலங்குகளைக் கொல்வது என்பது கொடிய செயல் எனும் போது முஸ்லீம்கள் ஏன் அசைவ உணவுகளை விரும்பி உண்கிறார்கள்..? அதனால் தான் அவர்கள் வன்முறையில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அந்த கருத்து உண்மையா..? அதைப்பற்றி இங்கே காண்போம். அதற்கு முன்பு அசைவத்தை மனிதர்கள் உண்ணலாமா என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.

இது முஸ்லீம்களை குறை சொல்ல பயன்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று. நான் ஏற்கனவே சொன்னது போல் இஸ்லாம் தர்க்க ரீதியிலும், விஞ்ஞான ரீதியிலும் தன் கொள்கையை விளக்கி அதன் பரிசுத்தத்தை நிலைநாட்டுகிறது. அதே வழியில் மேலே உள்ள குற்றச்சாட்டிற்கும் நான் பொருத்தமான விளக்கத்தை அளிக்கிறேன்.


உணவில் சைவம் என்பது இப்போது �Vegetarianism� என்ற பெயரில் உலகளவில் பேசப்பட்டுவரும் ஒரு விஷயம். அவர்கள் விலங்குகளை கொல்வதற்கு எதிராகவும், அவற்றின் உரிமை பற்றியும் பேசுகிறார்கள். அவர்கள் இறைச்சி உண்பது பற்றியும், அசைவ உணவுகள் பயன்படுத்துவது பற்றியும் விலங்குகளின் உரிமைகளுக்கு எதிரான விஷயம் என்ற வகையில் பேசி வருகிறார்கள். உயிர்களின் மீது கருணை, ஆதரவு காட்டுவதை இஸ்லாம் வரவேற்கிறது. அதே நேரம் இந்த உலகம், அதிலுள்ள குறிப்பிட்ட ஜீவராசிகள், தாவரங்கள் மனித குலத்தின் பயன்பாட்டிற்காக படைக்கப்பட்டது என்பதையும் மறுக்காமல் நிலைநாட்டுகிறது. இந்த உலகத்தில் மனிதனின் பயன்பாட்டிற்கு கிடைக்கும் அனைத்தும் இறைவனின் ஆசியுடன் கூடிய பரிசு ஆகும். ஒரு சில விஷயங்களை பட்டியலிட்டு "அப்படியா" என்று கேட்குமளவுக்கு ஆச்சரியப்படுத்தி விடுகிறேன்.


1. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? ஒரு முஸ்லீம் அசைவத்தை தொட்டுக்கூட பார்க்காத சைவனாக தன் வாழ்நாள் முழுதும் எந்த ஒரு ஆட்சேபணையும் இல்லாமல் இஸ்லாத்தில் இருக்க முடியும். அவனுக்கு அசைவ உணவு என்பது கட்டாயப்படுத்தப்படவில்லை. அதே நேரம் (ஒரு குறிப்பிட்ட இஸ்லாம் தடுக்கும் பறவை, விலங்கினங்களை தவிர) மற்ற விலங்குகளை கொண்ட அசைவ உணவு உண்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது


2. இறைச்சி உணவு மனித உடம்புக்கு சக்தியை கொடுக்கக்கூடியது. அது தான் உடம்புக்கு தேவையான புரோட்டினுக்கு ஆதாரமாக இருக்கிறது. இறைச்சியில் அமினோ அமிலத்தை உள்ளடக்கிய 8 வகையான அடிப்படை மூலங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இறைச்சியில் இரும்புச்சத்து, நியாசின், விட்டமின் B1-ம் கூட அமைந்துள்ளன.


3. மனிதன் இறைச்சி உண்ணலாம் என்பதை இறைவன் கொடுத்த உடலில் உள்ள பற்களின் அமைப்பில் இருந்தே அறியலாம். நீங்கள் சைவத்தை உணவாக உட்கொள்ளும் விலங்குகள் (எ.கா) பசு, ஆடு, ஒட்டகம் ஆகியவற்றை கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். அவற்றிற்கு பற்கள் அமைப்பு ஒத்திருக்கும். அது மட்டுமல்லாமல் சைவ உணவிற்கு ஏற்ற வகையில் கடவாய் பற்கள் தட்டையாக அமைந்திருக்கும். இதுவே அசைவத்தை உண்ணும் புலி, சிங்கம், சிறுத்தை போன்றவற்றின் பற்களை அமைப்பை கண்டால் அவைகளின் அசைவ உணவு பழக்கத்திற்கேற்ப மாமிசத்தை குத்திக்கிழித்து உண்ண ஏதுவாக நீண்ட, கூர்மையான கோரைப்பற்கள் இருக்கும். மனிதனின் பற்களைக்கண்டால் இருவகையான பற்களையும் கொண்ட அமைப்பாக இருக்கும். இதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம், நாம் இருவகையான உணவையும் உண்ணலாம் என்பதை.


4. பற்களின் அமைப்பு மட்டுமல்ல, விலங்குகளின் ஜீரண அமைப்பை எடுத்துக் கொள்வோம். சைவ உணவு உண்ணும் விலங்கு அசைவத்தை உண்ணாது. அதே போல் அசைவ உணவு உண்ணும் விலங்கு சைவத்தை உண்ணாது (அதைத்தான் நம் முன்னோர்கள் புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது என்றார்கள்..!!). அப்படி தின்றால் ஜீரண மண்டலத்தில் சிக்கல் ஏற்பட்டு அவை உயிரிழக்க நேரிடும். ஆனால், மனிதன் இரு வகையான உணவை உண்டாலும் ஜீரணிக்க கூடிய ஜீரண மண்டலம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது அசைவம் கூடாது என்று சொல்வது பொருத்தமாக இருக்காது.


5. இந்து மதத்தில் பெரும் எண்ணிக்கையில் அசைவத்தை உண்ணாதவர்கள் உள்ளார்கள். குறிப்பாக இந்து மதத்தின் குறிப்பிட்ட பிரிவைச்சேர்ந்த ஜைனர்கள், பிராமணர்கள் அசைவத்தை உண்பது தன் மதத்திற்கு எதிரானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. இந்து மதம் அசைவம் உண்ண அனுமதித்திருக்கிறது என்பது உண்மை. அதை இந்துக்களின் புனித நூலிலிருந்தே என்னால் எடுத்துச் சொல்ல முடியும். உதாரணத்திற்கு சில:



(அ) இந்து சமய சட்ட நூலான மனு ஸ்மிருதியில் அத்தியாயம் 5, பகுதி 30 -ல் கீழே உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

"The eater who eats the flesh of those to be eaten does nothing bad, even if he does it day after day, for God himself created some to be eaten and some to be eater."

(ஆ) அதே நூலில் அதே அத்தியாயம் 5, பகுதி 31-ல் சொல்லப்படுகிறது..

"Eating meat is right for the sacrifice, this is traditionally known as a rule of the gods."

(இ) அதே அத்தியாயம் 5, பகுதி 39 மற்றும் 40 -ல்...

"God himself created sacrificial animals for sacrifice, ...., therefore killing in a sacrifice is not killing."

(ஈ) மஹாபாரதத்தில் அனுஷாஷன் பர்வா அத்தியாயம் 88 பகுதியில் பீஷ்மருக்கும் யுதிஷ்திடருக்கும் நடைபெறும் உரையாடலில் இறந்த முன்னோர்களின் ஆன்மாக்களை திருப்திபடுத்த எந்த வகையான உணவுகளை படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. அதன் ஆங்கில வடிவம் கீழே:

"Yudhishthira said, "O thou of great puissance, tell me what that object is which, if dedicated to the Pitiris (dead ancestors), become inexhaustible! What Havi, again, (if offered) lasts for all time? What, indeed, is that which (if presented) becomes eternal?"

"Bhishma said, "Listen to me, O Yudhishthira, what those Havis are which persons conversant with the rituals of the Shraddha (the ceremony of dead) regard as suitable in view of Shraddha and what the fruits are that attach to each. With sesame seeds and rice and barely and Masha and water and roots and fruits, if given at Shraddhas, the pitris, O king, remain gratified for the period of a month. With fishes offered at Shraddhas, the pitris remain gratified for a period of two months. With the mutton they remain gratified for three months and with the hare for four months, with the flesh of the goat for five months, with the bacon (meat of pig) for six months, and with the flesh of birds for seven. With venison obtained from those deer that are called Prishata, they remaingratified for eight months, and with that obtained from the Ruru for nine months, and with the meat of Gavaya for ten months, With the meat of the bufffalo their gratification lasts for eleven months. With beef presented at the Shraddha, their gratification, it is said , lasts for a full year. Payasa mixed with ghee is as much acceptable to the pitris as beef. With the meat of Vadhrinasa (a large bull) the gratification of pitris lasts for twelve years. The flesh of rhinoceros, offered to the pitris on anniversaries of the lunar days on which they died, becomes inexhaustible. The potherb called Kalaska, the petals of kanchana flower, and meat of (red) goat also, thus offered, prove inexhaustible.


அப்படியென்றால் முன்னோர்களை திருப்தி படுத்த சிவப்பு இறைச்சி கொண்ட ஆடுகளையும் படைக்க வேண்டும் என்று கூறப்படுவதை தெரிந்து கொள்ளலாம். என் மொழிபெயர்ப்பின் மூலம் அதன் பொருள் மாறிவிட வாய்ப்புள்ளது என்பதால் மேலே உள்ளவற்றை நான் ஆங்கிலேயத்திலேயே கொடுத்துள்ளேன். நான் கொடுத்துள்ளது சரிதானா என்பதை மன்றத்தின் சிறந்த இந்து மத ஆன்மீகவாதியான திரு. சிவசேவகன் அவர்கள் படித்து தன் விளக்கத்தை அளிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவர் ஒரு சைவர் என்பதால் அவர் சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.


7. இந்துத்துவம் என்பது பல கூறுகளாக பிரிந்து தன் சமய நூல்கள் சொல்லும் விஷயங்களை பின்பற்றமுடியாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. உதாரணத்திற்கு இந்து சமயத்தில் அசைவம் உண்ணலாம் சமய நூல்களில் சொல்லப்பட்டிருந்தாலும் அவர்கள் தன்னுடைய சுய விருப்பத்திற்காக பிராமண, ஜைன பிரிவுகளை சேர்ந்த இந்துக்களும், தன் மதத்தை நேசிப்பதாக சொல்லும் பல இந்துக்களும் சைவத்தை மட்டும் உண்ணுகிறார்கள். இதன் தொடர்ச்சியாக இன்னும் சில கருத்துக்களை எழுத உள்ளேன். 


உயிர்களை கொல்லக்கூடாது என்பது தான் சைவத்தை வற்புறுத்துவதின் நோக்கம் என்றால் சைவர்கள் உண்ணும் தாவரங்கள் மட்டும் உயிர் இல்லையா..? இன்றைய விஞ்ஞானம் தாவரங்களுக்கும் உயிர் உள்ளதை நிரூபித்துவிட்டது. அதனால் தான் அவைகள் வளர்கின்றன, பூக்கின்றன, காய்க்கின்றன, நம்மைப்போல் இனப்பெருக்கமும் செய்கின்றன. உயிர்களை உணவுக்காக கொல்லாமல் மனிதன் வாழ்வது என்பது நடைமுறைச்சாத்தியம் இல்லை.

உடனே நம்மவர்கள் தாவரங்களுக்கு விலங்குகளைப்போல் ஐந்தறிவு கிடையாது, மிகக்குறைந்த அறிவே இருப்பதால் கொல்வது தவறில்லை என்று தர்க்கம் செய்வார்கள். அந்த தர்க்க ரீதியிலேயே அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுடைய காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத சகோதரன் (மூன்றறிவுடன்) இருக்கிறார். அவர் யாராவது ஒருவரால் கொல்லப்பட்டால் மூன்றறிவு மனிதனைத்தானே கொன்றான் என்று தண்டனையை குறைக்கச் சொல்லி நீதி மன்றத்தில் சொல்வீர்களா..? அப்படி நீங்கள் சொன்னாலும் சட்ட கேட்காது. அறிவு குறைந்த அப்பாவியை கொன்றதற்காக அந்த குற்றவாளிக்கு உண்மையான தண்டனையை விட கொடுமையான தண்டனை கொடுக்கத்தான் பரிந்துரைப்பார்கள். அதனால் தாவரங்களின் குறைந்த அறிவு பற்றிய வாதம் இங்கு எடுபடாது.

சிலரோ, நம்மை போல் தாவரங்களுக்கு வலியும், வேதனையும் கொல்லும் போது இல்லை. அதனால் அது குற்றம் இல்லை என்று விஞ்ஞானம் வழியாக சொல்வார்கள். யார் சொன்னது அப்படி..? உயிர் என்று வரும் போது வலி என்பது பொதுவாகிவிடும். இன்றைய விஞ்ஞானம் தாவரங்களுக்கும் வலியை உணர்கின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவைகள் துன்புறுத்தப்படும் போது நம்மைப் போலவே சத்தமிட்டு அழுகின்றன. இதென்ன கதை என்கிறீர்களா..? கதையல்ல ஐயா.. அறிவியல் உண்மை..!! மனிதனின் உடல் செயல்பாடுகளில் ஏகப்பட்ட குறைபாடுகள் உண்டு. அதில் ஒன்று தான் இயற்கையாக அமைந்த கேட்கும் திறனில் உள்ள குறைபாடும்.

மனிதக்காதின் கேட்கும் திறனானது ஒலி 20 ஹெர்ட்ஸ் கீழோ அல்லது 20,000 ஹெர்ட்ஸ் மேலோ போகும் போது கேட்க இயலாது. ஒரு நாய் 40,000 ஹெர்ட்ஸ் வரை மனிதனை விட கூடுதலாக கேட்க முடியும். அதனால் தான் அருகில் நிற்கும் நமக்கு கேட்காத அந்த நாய் எஜமானனின் விசில் ஒலி நாய்க்கு கேட்டு ஓடுகிறது. அமெரிக்காவில் ஒருவர் கண்டுபிடித்த ஒரு சாதனம் தாவரங்களின் ஒலியை மனிதர்களின் கேட்கும் திறனுக்கு ஒத்துபோகும் படி செய்கிறது. அதை அவர் பயன்படுத்திய போது தாவரங்கள் நீரில்லாமல் இருக்கும் போது அதற்காக அவை அழுவதை தெரிந்து கொள்ள முடிந்தது. நாம் ஒரு தாவரத்தை பார்ப்பதின் மூலம் அதன் தோற்றத்தின் அடிப்படையில் அதன் சந்தோஷம், வேதனையை தெரிந்து கொள்கிறோம். ஆனால், தற்போதைய கண்டுபிடிப்புகள் தாவரம் சந்தோஷம், வேதனையினால் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் தெரிந்து கொள்ள உதவுகின்றன.

உலகில் உள்ள எல்லோரும் சைவத்தை மட்டும் உண்டால் அது விலங்குகளின் கூடுதல் இனப்பெருக்கத்திற்கு வழி செய்துவிடும். அதை பராமரிப்பதில், விவசாயத்தை, நம்மை விலங்குகளிடமிருந்து காப்பதில் பெரும்பிரச்சினை ஏற்படும். இதை தடுக்க இறைவனால் அருளப்பட்ட பரிசே அசைவ உணவு என்பது. அதுமட்டுமல்ல எல்லோரும் சைவ உணவு உண்டால் காய்கறிகளின் தேவை அதிகமாகி, உற்பத்தி சமநிலைப்படாமல் அதன் விலைகள் விண்ணை நோக்கி உயர்ந்து விடும். அசைவ உணவின் விலை அதளபாதாளத்திற்கு தாழ்ந்து விடும். இதையா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்..?

நான் இங்கு எழுதியிருப்பவை அனைத்தும் குற்றம்சாட்டும் முயற்சி அல்ல. நான் செய்வது தவறில்லை என்பதை உங்களைக் கொண்டே நிரூபிக்கும் தன்னிலை விளக்கம். அவ்வளவே..!!  





சத்தியம்:
வாழ்த்துக்கள் ஜாபர் தொடருங்கள் உன்கள் அழைப்பு பணியை அல்லா உன்களுக்கு அருள் புரிவனாக 


LOLLUVATHIYAR:

Quote:
Originally Posted by இதயம் View Post
நீங்கள் என் கருத்தில் உடன்பாடில்லை எனில் அதற்கு தகுந்த ஆதாரங்களோடு, காரணங்களோடு மறுத்த கூறவேண்டும். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதை ஏற்க வேண்டியது என் கடமை. [/COLOR]
நண்றி இதயம், நான் உங்கள் கருத்தில் உடன் பாடு இல்லை ஆனால் ஆதரம் தர மாட்டேன் என்று கூறவில்லை.
நான் நினைப்பது முதலில் இஸ்லாம் மதத்தை பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொள்ள.
அதாவது உங்கள் மூலம் இந்த திரியில் பதித்து கொள்ள வேண்டும்.
சர்சைகள் அனைத்தும் பிறகு விவாதித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
சர்ச்சை இல்லாமல் எந்த கருத்தும் இல்லை. ஆனால் முதலில் கருத்து சொன்னவர் தான் சொல்ல வந்த கருத்தை அனைத்து பதித்து விட வேண்டும்.
அப்படி மற்றவர்கள் இந்த திரியை தொடர்ச்சியாக முழுவதும் படித்து விட்டு, பிறகு ஆட்சேபம் ஏதாவது இருந்தால் தெரிவித்து விட்டு விவாதம் தொடரலாம்.
விவாதம் ஆரம்பத்திலேயே தொடங்கினால், விவாதம் வளரும்
ஆனால் மாற்று மத பிரிவினர் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தெரிந்து கொள்ள வாய்பில்லாமல் போய்விடும்.

அடுத்தது இந்துகள் மதத்தில் அசைவம் பற்றிய உங்கள் கருத்து சரியானதே.

மனு, வேதம் எதை சாப்பிட்டால் ஆரோக்கியம், சிறந்தது , எதை சாப்பிட்டால் உடலுக்கு கெடுதல் என்று மட்டுமே கூறும்,
இதை சாப்பிட்டே ஆக வேண்டும், இதை சாப்பிடவே கூடாது என்று கட்டாய படுத்தாது.
ஒரு குறிப்பு : வேதம் பொதுவாக மனித வாழ்கை அமைவதை பற்றி எழுதபட்டது. இந்து என்ற மதத்துக்காக எழுதபட்டதல்ல.
அந்த காலத்தில் இந்து மதத்தவர்கள் அதை பின்பற்றினார்கள் அவ்வளவுதான். வேதத்துக்கும் மதத்துக்கும் சம்மந்தம் இல்லை 



 இதயம்

Quote:
Originally Posted by to_hero View Post
வாழ்த்துக்கள் ஜாபர் தொடருங்கள் உன்கள் அழைப்பு பணியை அல்லா உன்களுக்கு அருள் புரிவனாக
படித்துவிட்டு வெறுமனே போவதை விட தங்கள் கருத்தை இடும் உங்களைப்போன்றவர்கள் தான் என் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறார்கள். அதற்காக மற்றவர்கள் என்னை பாராட்டித்தான் எழுதவேண்டும் என்பதில்லை. என் பதில்களில் முரண், நடைமுறைக்கு ஒத்துவராத, பொய்யான தகவல்கள் இருந்தால் எந்த தயக்கமும் இருந்தால் சுட்டிக்காட்டலாம்.

தங்கள் ஆதரவுக்கு நன்றி..! 



LOLLUVATHIYAR:
இதயம் அவர்களே என் அடுத்த கேள்வி முஸ்லீம்களின் ஹஜ் பயனத்தை பற்றி கூறுங்கள்.
எந்த வயது பிரிவினர் ஹஜ் பயனம் மேற்கொள்ளலாம்.
பெண்கள் ஹஜ் பயனம் போவார்களா.

ஹஜ் பயனம் எங்கு செல்கிறார்கள், அங்கு என்ன பன்னுகிறார்கள்.
அங்கு தூனுக்கு கல் எறிவார்கள், அது ஏன்?
ஹஜ் பயனத்தின் மகிமை என்ன?



 இதயம்
Quote:
Originally Posted by lolluvathiyar View Post
நான் நினைப்பது முதலில் இஸ்லாம் மதத்தை பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொள்ள.
நீங்கள் குறிப்பிட்ட படி இஸ்லாம் பற்றி ஆழ்ந்து அறியாத காரணத்தால் தான் என்னை இந்த திரி எழுதும்படி வேண்டிக்கொண்டீர்கள். உங்கள் அன்பு வேண்டுகோள் ஏற்று எழுதி வருகிறேன். உங்கள் கருத்துப்படி இஸ்லாம் பற்றி கொஞ்சமே தெரிந்த நீங்கள் இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்படவில்லை என்பதை நான் தகுந்த ஆதாரம், காரண காரியங்களுடன் விளக்கும் போது அதை ஏற்க மறுப்பது முரண்பாடாக தெரியவில்லையா வாத்தியார் அவர்களே..?!! அப்படியானால் அடுத்தவர்கள் எப்படி போதித்தார்களோ, அதையே அறைகுறையாக அறிந்து நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்கு மனிதனுக்கே உரிய குற்றம் கண்டு பிடிக்கும் குணம் உறுதுணையாக இருக்கிறது. அப்படி தானே..?
Quote:
Originally Posted by lolluvathiyar View Post
சர்சைகள் அனைத்தும் பிறகு விவாதித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
சர்ச்சை இல்லாமல் எந்த கருத்தும் இல்லை. ஆனால் முதலில் கருத்து சொன்னவர் தான் சொல்ல வந்த கருத்தை அனைத்து பதித்து விட வேண்டும்.
அப்படி மற்றவர்கள் இந்த திரியை தொடர்ச்சியாக முழுவதும் படித்து விட்டு, பிறகு ஆட்சேபம் ஏதாவது இருந்தால் தெரிவித்து விட்டு விவாதம் தொடரலாம்.
விவாதம் ஆரம்பத்திலேயே தொடங்கினால், விவாதம் வளரும்
நான் எழுதும் இஸ்லாம் பற்றிய விளக்கங்கள் மற்றவர்களுக்கு சந்தேகங்களை, குழப்பத்தை ஏற்படுத்தி கேள்வி வரலாம் என்று தான் ஒவ்வொரு பகுதியையும் முடித்த பிறகு இடைவெளி விடுகிறேன். ஆனால், நான் எதிர்பார்ப்பது போல் கேள்விகள் வருவதில்லை. என் விளக்கங்களில் அவர்கள் ஒத்துப்போவதாக தான் இவ்வளவு நாளும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். எல்லாம் முடிந்த பிறகு கேள்வி கேட்கிறேன் என்று நீங்கள் சொல்வது நடைமுறை சாத்தியம் இல்லை. காரணம், இஸ்லாத்தில் உள்ள விஷயங்களை சொல்ல ஆரம்பித்தால் என் வாழ்நாள் போதாது. அதனால், அவ்வப்போது உள்ள சந்தேகங்களை உடன் கேட்டுவிடுவதே சிறந்தது. மறப்பதற்கோ, விடுபட்டு போவதற்கோ வாய்ப்பிருக்காது. ஆன்மீகம் என்பது நம்பிக்கை ஒன்றை மட்டும் அடிப்படையாக கொண்டதால் இங்கு உள்ள பல திரிகளுக்கு கேள்வி கேட்பது என்பது இயலாத காரியம். காரணம், தர்க்க ரீதியாக, அறிவியல் ரீதியாக பதில் இருக்காது. ஆனால், நான் எழுதும் திரி இவை இரண்டுக்கும் ஒத்துப்போகும் என்பதால் இருவகையிலும் என்னால் பதிலளிக்க முடியும். இந்த எண்ணமே இந்த திரியை ஆன்மீகப்பகுதியில் இட்டது தவறோ என்று சில நேரங்களில் என்னை எண்ண வைத்துவிடுகிறது.

Quote:
Originally Posted by lolluvathiyar View Post
வேதம் பொதுவாக மனித வாழ்கை அமைவதை பற்றி எழுதபட்டது. இந்து என்ற மதத்துக்காக எழுதபட்டதல்ல.அந்த காலத்தில் இந்து மதத்தவர்கள் அதை பின்பற்றினார்கள் அவ்வளவுதான். வேதத்துக்கும் மதத்துக்கும் சம்மந்தம் இல்லை
எனக்கு தெரிந்த வரை மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் பொருட்டு மனிதர்களால் எழுதப்பட்டவை தான் சமயநூல்கள். உதா. இராமாயணம், மஹாபாரதம். நீங்கள் சொன்னபடி இந்து மதத்திற்காக எழுதப்பட்டதில்லை என்றால் அதன் கொள்கைகளை வாழ்க்கை நெறிமுறைகளை எதன் மூலம் இந்து சகோதரர்கள் அறிந்து கொள்கிறார்கள்.? வேதத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றால் அந்த மதச்சட்டங்களாக வேதங்களில் குறிப்பிடப்பட்டவை ஏன் பின்பற்றப்படுகிறது.? உங்களுடைய பதில் இந்துத்துவத்தின் அடிப்படையையே உலுக்குகிறது. தயவு செய்து விபரமாக விளக்குங்கள். அறிய ஆவலாய் இருக்கிறேன்.
அக்னி:
அட, இவ்வளவு பக்கங்களாகிவிட்டனவா..?
வாசித்துவிட்டு வருகின்றேன் இதயம்... வாசித்தவரை, அருமையாக உள்ளது...
பாராட்டுக்கள்... 



இதயம்:
நன்றி அக்னி..! உங்களைப்போன்றவர்கள் ஆதரவு, ஊக்கம் இல்லாமல் என்னால் இதைச் செய்ய முடிந்திருக்காது..!!  

LOLLUVATHIYAR:
உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது இதயம்.
Quote:
Originally Posted by இதயம் View Post
இஸ்லாம் பற்றி கொஞ்சமே தெரிந்த நீங்கள் இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்படவில்லை என்பதை நான் தகுந்த ஆதாரம், காரண காரியங்களுடன் விளக்கும் போது அதை ஏற்க மறுப்பது முரண்பாடாக தெரியவில்லையா வாத்தியார் அவர்களே..?
இஸ்லாம், குரானின் நெரிகள் பற்றி தான் எனக்கு அதிகமாக தெரியாது என்று சொன்னேன் இதயமே. அது உன்மையும் கூட.
ஆனால் வரலாறு தெரியாது என்று நான் சொல்லவில்லை. நான் முரன்படவில்லை.
இஸ்லாம் மதம் வாளின் உதவியால் பரப்ப வேண்டும் என்று குரான் கூறவில்லை என்பதை உங்கள் படைப்பின் மூலமாக தான் தெரிந்து கொண்டேன்.
ஆனால் வரலாறு வேறு, அதுக்கு குரானுக்கும் சம்மந்தமில்லை அல்லவா?
தோராயமாக 750 வருடக்க்களுக்கு முன் சில இஸ்லாமிய மனிதர்கள் (மன்னர்கள்) செய்த தவறுக்கு இஸ்லாம் காரனமல்ல என்பதை உங்கள் படைப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் முகலாய மன்னர்கள் இஸ்லாமை வாள் முனையில் பரப்பவில்லை என்ற ஒரே கருத்தை தான் ஏற்க மறுகிறேன்.
இந்த திரி இஸ்லாம் பற்றிய திரி, முகலாய மன்னர்களை பற்றி இப்பொழு ஏன் விவாதிக்க வேண்டும் என்று தான் என் கேள்வி.


!! அப்படியானால் அடுத்தவர்கள் எப்படி போதித்தார்களோ, அதையே அறைகுறையாக அறிந்து நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். அதற்கு மனிதனுக்கே உரிய குற்றம் கண்டு பிடிக்கும் குணம் உறுதுணையாக இருக்கிறது. அப்படி தானே..?

ஆன் உன்மைதான் நான் அப்படிதான் குரானை பற்றி தவறாக நினைத்து கொண்டிருந்தேன். உங்கள் குற்றத்தை ஒப்பு கொள்கிறேன்.


எல்லாம் முடிந்த பிறகு கேள்வி கேட்கிறேன் என்பது நடைமுறை சாத்தியம் இல்லை. காரணம், இஸ்லாத்தில் உள்ள விஷயங்களை சொல்ல ஆரம்பித்தால் என் வாழ்நாள் போதாது.

உன்மைதான் , முழுவதாக தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் ஓரளவுக்காக தெரிந்து கொள்ளாமல்லவா?
அதனால் தான் நான் உங்களை கேள்வி மூலம் கேட்கிறேன். நீங்கள் என் கேள்வியை உற்று நோக்கினாலே தெரியும்.


வேதத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றால் அந்த மதச்சட்டங்களாக வேதங்களில் குறிப்பிடப்பட்டவை ஏன் பின்பற்றப்படுகிறது.?

வேதங்களில் சட்டம் என்று எதுவுமே குறிப்படவில்லை. முன்பு எப்படி நீங்கள் சொன்னீர்கள் பலவிசயம் இடை சொருகல்கள் அது போல தான்.
வேதத்தின் சட்டத்தை இந்துகள் பின்பற்றவில்லை, சட்டம் வேறு வாழ்கை முரை வேறு. வேதம் ஆரோக்கியமாக வாழவும் அமைதியாக வாழவும் தனி மனிதனுக்கும், சமுதாயதுக்கும் கற்று கொடுக்கும் ஒரு நூல்.
எந்த குறிபிட்ட மததுக்கும் எழுத படவில்லை.


உங்களுடைய பதில் இந்துத்துவத்தின் அடிப்படையையே உலுக்குகிறது. தயவு செய்து விபரமாக விளக்குங்கள். அறிய ஆவலாய் இருக்கிறேன்.

இந்துகள் (அந்த் காலத்தில் சைவர்கள், வைனவர்கள் இன்னும் பல) வேதத்திலிருந்து சில கோட்பாடுகளை பின் பற்றினார்கள் என்பது உன்மை.
ஆனால் வேதம் இந்துகளுக்காக எழுதபடவில்லை. வேதம் எழுதிய போது இந்து என்ற மதமே இல்லை.
இந்துத்துவா என்பதும் முழுவதாக ஒரு மதத்தை குறிப்பிடுவதல்ல, அதை பற்றியும் தவறாக புரிந்து கொண்டார்கள்.
சமீபத்தில் தான் சுப்ரீம் கோர்ட் அதை பற்றி விளக்கியது.
இதை பற்றி ஒரு தனி திரியாக எழுத வேண்டும் என்பது என் ஆசை.
இந்துத்துவா என்பது - இமயம் முதல் குமரி வரை அனைத்து மக்கள் மற்றும் விலங்கினம், இயர்கை செல்வம் அனைத்தையும் பாத்காப்பது ஆகும்.


கவலை படாதீர்கள், நிச்சயம் சர்சையான கேள்விகளும் பின்னால் வரும். (நான் கேட்பேன்)

அதன் மூலம் நீங்கள் இஸ்லாம் ஒரு அண்பு மதம் என்று நிருபிக்க முடியும். அப்பொழுது விவாதம் சுறுப்பாக இருக்கும்.

ஒன்றை மட்டும் நான் சொல்லி கொள்கிறேன் இதயம் நான் அமாம் சாமி போடுபவன் அல்ல, அது உங்களுக்கு தெரியும்.

சிவசேவகர் திரிகளில் அவரையும், தேவேந்திரரையும், உதயசூரியனையும் நான் பல இடங்களில் விமர்சித்தவன். 


சிவா.ஜி:
வாத்தியார் அவர்களே மிக மிக அழகாக விளக்கங்களை அளித்துள்ளீர்கள். இஸ்லாம் என்ற மதத்தை அறிந்துகொள்வதுதான் உங்கள் நோக்கம் என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள் இதயம் அவர்களும் மிக நேர்த்தியானா முறையில் அதைப்பற்றி விளக்கங்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.இந்த திரியை நான் முதலிலிருந்தே படித்து வந்தாலும் நீங்கள் நினைத்ததுபோலத்தான் நானும் அவரின் விளக்கங்கள் முடிந்த பிறகு சில கேள்விகளை எழுப்பலாம் என்று நினைத்திருந்தேன். ஆரம்பத்திலேயே இதயம் அவர்கள் இஸ்லாம் வாள் முனையில் பரப்பபட்டதல்ல என்று சொன்னதில் வரலாறு படித்த எனக்கு உடன்பாடு இல்லை. பழமையில் ஊறிப்போயிருந்த,ஒரே தத்துவத்தை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் கடைபிடித்து வந்த அந்தக்காலத்து மக்கள் விரும்பி வேறு மதத்தை ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. இப்போது வேறு. பகுத்தறிவு மிகுந்துவிட்ட காலம். தான் என்ன செய்கிறோம் என்பதை நன்றாக ஆலோசித்துத்தான் செய்கிறார்கள். முகலாய அரசர்கள் எல்லோருமே அப்படி இல்லை. செங்கிஸ்கான் என்ற மங்கோலிய அரசன் இப்போதுள்ள கஸக்ஸ்த்தான் என்ற நாட்டை கிறித்துவத்திலிருந்து முழுவதுமாய் எப்படி மாற்றினான் என்று சரித்திரம் சொல்கிறது.அதனால் நீங்கள் சொல்வதைப்போல இஸ்லாம் என்ற அன்பு மதம் பற்றி எந்த தவறான அபிப்பிராயமும் இல்லை. 

இதயம்:


வாத்தியார் கேள்வி, பதில்களில் என்றும் சோடை போனதில்லை. என்னுடைய கேள்விக்கு வாத்தியாரின் பதில்கள் மிகச்சிறப்பு. ஆனால், இந்த உண்மையை சிவா.ஜியைப்போல் எத்தனை நண்பர்கள் ஏற்பார்கள் என்று தெரியவில்லை. ஏற்காவிட்டாலும் உண்மை உண்மை தானே. எனவே அதைப்பற்றி நாம் விவாதிக்க வேண்டியதில்லை.

அடுத்து நான் மிகவும் எதிர்பார்த்த சிவா.ஜியின் பின்னூட்டம் கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதைப்போன்ற விவாதங்களும், பகிர்தலும் தான் உண்மையை வெளிக்கொணரும். அவருடைய கருத்துக்கு நான் பதிலை இடவேண்டியது என் கடமை.


Quote:
Originally Posted by சிவா.ஜி View Post
பழமையில் ஊறிப்போயிருந்த,ஒரே தத்துவத்தை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் கடைபிடித்து வந்த அந்தக்காலத்து மக்கள் விரும்பி வேறு மதத்தை ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. இப்போது வேறு. பகுத்தறிவு மிகுந்துவிட்ட காலம். தான் என்ன செய்கிறோம் என்பதை நன்றாக ஆலோசித்துத்தான் செய்கிறார்கள்.
மனிதர்களின் பகுத்தறிவு என்பது அவன் கற்காலத்தில் தீயை கண்டுபிடித்த காலத்திலேயே தொடங்கிவிட்டது. அன்றைய காலத்தில் தேவைகளைப்பற்றிய சிந்தனைகள் இல்லாததால் அவன் பகுத்தறிவில் கொஞ்சம் குறைந்திருந்திருக்கலாம். ஆனால், முட்டாளாக இருக்கவில்லை. கல் சக்கரம் தொடங்கி இன்றைய விமானம் வரை கண்டுபிடிக்க காரணமாக இருந்தது நீங்கள் சொன்ன மனிதனின் பகுத்தறிவோ, புத்திசாலித்தனமோ அடிப்படையல்ல. அவன் அந்த கண்டுபிடிப்பை செய்ய காரணமாக இருந்த தேவை (Necessity). ஒரு அறிஞர் தேவைகள் தான் கண்டுபிடிப்புகளின் தாய் (Necessity is the mother of invention) என்று சொன்னார். அது தான் உண்மை. பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறளில் இல்லாத நல்ல விஷயங்களா..? மனிதன் பகுத்தறிவோடு தான் எப்போதும் இருக்கிறான். ஆனால், அதற்கான அவசியம் இல்லாததால் அதைப்பற்றிய சிந்தனையில்லாமல் இருந்து விடுகிறான். இந்த நிலை இன்றைய விஞ்ஞான உலகத்திலும் பகுத்தறிவின்றி நீடிப்பது தான் வேதனைக்குரிய விஷயம். உதா. கடவுள் என்ற பெயரில் மனிதன் செய்யும் அட்டகாசங்கள், அட்டூழியங்கள். பகுத்தறிவைக் கொண்டு யோசித்தால் ஒரு நிமிடத்தில் தெரிந்துவிடக்கூடிய விஷயத்தை ஏதோ ஒரு உப்புப்பெறாத விஷயத்திற்காக மாற்றிகொள்ள, திருத்திக்கொள்ள மனிதன் தயங்குகிறான். எனவே நல்வழி நடக்க தேவை பகுத்தறிவு மட்டுமல்ல, நல்லவற்றை ஒப்புக்கொள்ளும் பக்குவம்.

இஸ்லாத்தின் பலம் மாசு, மருவற்ற அதன் கொள்கைகள். பலவீனம் இஸ்லாத்தின் பெயரில் சில காலிகள் செய்யும் செயல்கள் இஸ்லாத்தின் பெயரால் சொல்லப்படுவது. அப்படித்தான் நான் நண்பர் சிவா.ஜி சொன்னதும் என்று நினைக்கிறேன். எனக்கு கஜகஸ்தான் பற்றிய வரலாறு தெரியாது. அதனால், அவர் சொல்வதை இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால், வரலாறு தெரிந்து கொண்டு திரும்பி வருகிறேன். ஜகஸ்தானைப்பற்றி சொன்ன சிவா.ஜி நான் சொன்ன மற்ற நாடுகளைப்பற்றிய கருத்தை சொல்லவில்லை. அதற்கு காரணமாக என்ன இருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும்..?


இந்தியாவில் முகலாயர்கள் நினைத்திருந்தால் அனைவரையும் மதமாற்றியிருக்க முடியும். ஆனால், அவர்கள் செய்யவில்லை. அதுமட்டுமல்ல, முகலாய சக்ரவர்த்திகளில் மிக புகழ்பெற்ற அக்பர் இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாக பின்பற்றவில்லை. அவர் "தீன் இலாஹி" என்ற பெயரில் ஒரு மதத்தை தோற்றுவித்தவர். அவரை ஒரு முஸ்லீம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. கருத்துக்களுக்கும், கேள்விகளுக்கும் நன்றி..! 



சிவா.ஜி:

நன்றி ஜாஃபர்.நான் சொல்லவந்ததும் இதைத்தான்.எல்லா முகலாய மன்னர்களும் மதம் பரப்ப வாள் எடுக்கவில்லை. மாறாக மற்ற மதத்தினரையும் மதித்து அவர்களுக்கான சலுகைகளையும் செய்து கொடுத்தனர்.இன்றளவும் மிக அற்புதமாக திகழும் இந்தொ-மொகல் கட்டிடக்கலையை அறிமுகப்படுத்தினர். அப்படி சமநோக்கு உடையவர்கள் அதிகம் இருந்ததால்தான் எல்லோரையும் மாற்றவில்லை.அந்தக்காலத்து மக்களுக்கு பகுத்தறிவே இல்லை என்று சொல்லவில்லை. மதசம்பிரதாயங்களில் தங்கள் பகுத்தறிவைக்காட்ட விரும்பவில்லை அவர்கள்.விரும்பி ஏற்றுக்கொண்டடவர்கள் ஒருகோடி பேர்கள் இருக்கலாம்.நாம் அவர்களைப்பற்றி பேசவில்லை, வாள்முனை மாற்றத்தைப்பற்றித்தான் நாம் பேசுகிறோம். ஆரோகியமான இந்த விவாதம் மிக்க மகிழ்ச்சி தருகிறது. உங்கள் எழுத்தை மிக மிக நேசிப்பவன் நான். தொடர்ந்து எழுதுங்கள்.தெரிந்துகொள்ளவேண்டியது இன்னும் பலப்பல இருக்கின்றன.  
 



 













இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-11)




இஸ்லாம் உண்மையிலேயே அமைதி மார்க்கமா..?!!

இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், சமாதானத்தை விரும்பும் மார்க்கம். உடனே நீங்கள் கேள்வி எழுப்புவீர்கள். இஸ்லாம் உலகெங்கும் பரப்பப்பட்டதே வாள் முனையில் தான் என்று சொல்லப்படும் போது அது எப்படி அமைதியான மார்க்கமாக இருக்கும்..? சமாதானத்தை விரும்பும் மார்க்கமாக இருக்கும்..? இஸ்லாத்தின் உயரிய கொள்கைகளில் ஒன்று பட விரும்பாதவர்களால் பரப்பப்பட்ட செய்தி இது.  நான் சில விஷயங்களை இது சம்பந்தமாக சொல்ல விரும்புகிறேன். அதன் பிறகு சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களை.

இஸ்லாம் என்ற வார்த்தை "சலாம்" என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்தது. அரபி மொழியில் சலாம் என்றால் அமைதி, சமாதானம் என்று பொருள். அது மட்டுமல்ல, அதற்கு அடிபணிதல், அர்ப்பணித்தல் என்ற பொருளும் உண்டு. அதாவது இஸ்லாம் என்பது கடவுள் என்ற மகா சக்திக்கு அடிபணியும், அற்பணிப்பவர்கள் பின்பற்றும் சன்மார்க்கம் என்பது பொருள்.



உங்களுக்கு தெரியுமா..? மனித சமூகத்தில் அமைதி என்பது தானாக கிடைக்காது. சில நேரங்களில் அதற்காக சில வழிகளில் அடக்குமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது. இந்த உலகில் எந்த மனிதனும் அமைதியை தானாக சிந்தித்து செயல்படுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மையோர் மனித சமுதாயத்தில் அடுத்தவர்களுக்கு பல வகைகளில் தொந்தரவையும், கஷ்டத்தையும் உண்டாக்குபவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை அடக்கி அமைதியை கொண்டு வர அடக்குமுறையை கையாள வேண்டியிருக்கிறது. அப்போது தான் தேசத்தில் அமைதியை, சமாதானத்தை தவழ விட முடிகிறது. அந்த அடிப்படையில் தான் நாம் காவல்துறையும், நீதித்துறையும் பெற்றுள்ளோம். சமாதானத்தை போதிக்கும் இஸ்லாம், அதே நேரத்தில் சமாதானத்திற்கு எதிராக ஊறு விளைவிப்பவர்களை அடக்க வேண்டும் என்று சொல்கிறது. அந்த வகையில் சமாதானத்தை, அமைதியை நிலை நாட்ட மட்டுமே அடக்குமுறை என்பது இஸ்லாத்தில் கையாளப்படுகிறது.



De Lacy O�Leary என்ற வரலாற்று ஆசிரியர் தன்னுடைய "Islam at the cross road" புத்தகத்தின் 8-வது பக்கத்தில் என்ன சொல்கிறார் தெரியுமா..? "History makes it clear however, that the legend of fanatical Muslims sweeping through the world and forcing Islam at the point of the sword upon conquered races is one of the most fantastically absurd myth that historians have ever repeated."



முஸ்லீம்கள் ஸ்பெயினை 800 வருஷங்கள் ஆண்டார்கள். ஸ்பெயினில் உள்ள முஸ்லீம்கள் ஒரு போதும் வாளின் முனையில் மற்றவர்களை மதமாற்ற ஒரு போதும் முயற்சித்ததில்லை. ஆனால் அதன் பிறகு ஸ்பெயினுக்கு வந்த கிறிஸ்துவர்கள் அங்குள்ள முஸ்லிம்களை அழிப்பதிலேய தன் நோக்கமாக கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு முன் அழைக்கும் பாங்கு என்ற வணக்க அழைப்பை வெளிப்படையாக செய்ய முடியாத அளவுக்கு அவர்களுடைய நடவடிக்கைகள் இருந்தன. 1400 வருடங்களாக அரபு தேசத்தின் பிரபுக்களாக முஸ்லீம்கள் இருந்தார்கள். சில காலம் அரபு தேசம் பிரிட்டிஷாராலும், ஃப்ரெஞ்சுக்காரர்களாலும் ஆளப்பட்டாலும் நீண்ட நெடுங்காலம் ஆளப்பட்டது முஸ்லீம்களால் மட்டுமே. அந்த அரபு தேசத்தில் இப்போது இருக்கும் 14 மில்லியன் மக்கள் யார் தெரியுமா..? கிறிஸ்துவர்கள் அதாவது முந்தைய கிறிஸ்துவர்களின் வாரிசு வந்தவர்கள். அந்த நேரத்தில் வாளை பயன்படுத்தி இஸ்லாத்தை பரப்பியிருந்தால் அந்த 14 மில்லியன் மக்களில் ஒருவர் கூட கிறிஸ்தவராக இருந்திருக்க மாட்டார்கள்.


உலகிலேயே அதிக முஸ்லீம்களை கொண்ட நாடு இந்தோனேஷியா. மலேஷியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் முஸ்லீம்கள். மிக வேகமாக இஸ்லாம் பரவி வரும் ஒரு நாடு தென்னாப்பிரிக்கா. நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். எந்த இஸ்லாமிய படை இந்த நாடுகளுக்கு சென்று வாள்முனையில் இஸ்லாத்தை பரப்பியது..??


அவ்வளவு ஏன் வெளிநாடுகளைப்பற்றி பேச வேண்டும். நம் நாட்டிற்கே வருவோம். இந்தியாவை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர்கள் முஸ்லீம்கள். அவர்கள் அப்போது நினைத்திருந்தால் தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு முஸ்லிம் அல்லாதவரையும் மிரட்டி, அடிபணியவைத்து முஸ்லீமாக மாற்றியிருக்க முடியும். அப்படி செய்யவில்லை. அதனால் தான் நம் நாட்டில் இப்போது 80% பேர் முஸ்லீம் அல்லாதவர்கள். இஸ்லாம் வாள் முனையில் தன் மார்க்கத்தை பரப்பவில்லை என்பதற்கு இந்த 80% மக்களைத்தவிர வேறு யார் சாட்சியாக இருக்க முடியும்..?? இஸ்லாத்தின் இந்த அபரித வளர்ச்சிக்கு காரணம் கொலை வெறி பிடித்த வாளல்ல, அது கொண்ட கொள்கை தான்..!! இஸ்லாத்தின் உயரிய கொள்கை உங்களிடம், என்னிடம், அரேபியர்களிடம் என்று யாரிடமிருந்தும் கற்க வேண்டிய அவசியமில்லை. அதன் ஆதாரமாக விளங்கும் புனித குரானிலிருந்து கற்க வேண்டும். இஸ்லாத்தின் கொள்கைகளை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எடுத்துச்சொல்வது பற்றி குரான் என்ன சொல்கிறது தெரியுமா..?


உங்களுடைய இறைவனின் கருணையை கொண்டு அனைவரையும் வரவேற்று அழைத்து அழகான முறையில் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதற்கான தர்க்கங்களில் மிகவும் சிறப்பான, கனிவான முறையில் ஈடுபடுங்கள் என்று சொல்கிறது.


1984- வெளிவந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் "அல்மனாக்"-ல் 1934 முதல் 1984 வரையிலான அரை நூற்றாண்டில் பெரும்பான்மையான மதங்களின் வளர்ச்சிபற்றிய ஒரு புள்ளிவிபரம் வெளியிடப்பட்டது. அதில் 235% அளவில் இஸ்லாம் அசுர வளர்ச்சி பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. கிறிஸ்துவ மதம் அதில் 47% வளர்ச்சியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அரை நூற்றாண்டு கால கட்டத்தில் எந்த போர் நடைபெற்று, எந்த முஸ்லீம்களால் இத்தனை மில்லியன் கணக்கானோர் முஸ்லீம்களாக மாற்றப்பட்டனர்..? உங்களுக்கு தெரியுமா..? ஒரு நேரத்தில் இஸ்லாம், முஸ்லீம் என்றால் எதிரியைப் போல் கண்ட அமெரிக்காவில், ஐரோப்பிய தேசத்தில் இஸ்லாம் மிக வேகமாக வளரும் சமயங்களில் முதலாவதாக இருக்கிறது. அங்கு இதற்கு காரணமாக யார் வாளை பயன்படுத்தினார்கள்..?



டாக்டர் ஜோசஃப் ஆதம் பியர்சன் சொன்னார்; "நியூக்ளியர் அணு ஆயுதம் அரபுக்களின் கைகளுக்கு வந்து உலகை அவர்கள் ஆளும் நிலைக்கு வந்து விடுமோ என்று பயப்படுகிறவர்கள் ஒரு விஷயத்தை அறியவில்லை. அதை விட சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் முன்பே இஸ்லாம் என்ற பெயரில் முகமது பிறந்த அன்றே கிடைத்துவிட்டது."







LOLLUVATHIYAR

திரு இதயம் அவர்களே, இஸ்லாம் மதம், குரான் அமைதி வழியில் தான் பரப்ப சொன்னதாக எழுதி இருகிறீர்கள்
அதை நான் மனமார ஏற்று கொள்கிறேன். ஆனால் இஸ்லாம் வாள் முனையில் பரவ வில்லை என்று கூறுவதை நான் ஏற்கவில்லை
(மன்னிக்கவும் உன் மனதில் உள்ள உன்மையை தான் நான் கூறினேன், இஸ்லாமியர்களை புன்படுத்த அல்ல)

ஆனாலும் நீங்கள் ஆரம்பித்த இந்த திரி இஸ்லாம் மதத்தை பற்றி நல்லவைகளை பற்றி விளக்கி செல்லும் ஒரு ஆண்மீக பயனம்.

இந்த திரியில் என் கருத்தை இட்டு அதை பற்றிய விவாதம் வளர நான் விரும்பவில்லை.
எனக்கு இந்த திரியின் நோக்கம் நிறைவேற வேண்டும். இடையில் விவாதம் செய்து இந்த புனித பயனத்தை திசை மாற்ற விரும்பவில்லை.
ஆகையால் மற்ற ஹிந்து நன்பர்களும் இந்த திரியை திசை மாராமல் பார்த்துகொள்ளுங்கள்.
நண்றி.

மேலும் சில சந்தேகம்

இஸ்லாம் சகோதரர்கள் குரானை அடிபடையாக கொண்டு வாழ்கை நடத்துகிறார்கள்
பல நாடுகளில் ஷரியத் என்ற சட்டம் தான் இஸ்லாமியர் சட்டம் என்று கேள்வி பட்டிருகிறேன்
ஷரியத் என்றால் என்ன?

ஷரியத் சட்டம் இந்தியாவிலும் உண்டா?

அது குரானோடு சம்மந்தபட்டதுதானா? இல்லை வேறு நூலா?

இதை பற்றி சற்று விளக்கவும் 



இதயம் 
ஐயா லொள்ளு வாத்தியார் அவர்களே.. இந்த திரி தொடங்க முக்கிய காரணமாக இருந்தவர் நீங்கள். நானறிந்த இஸ்லாத்தை மற்ற மாற்றுமத நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்ல காரணமான உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல் பெரும் பணிப்பளுவிற்கிடையில் இதை தொடங்கி எழுதி வருகிறேன். இஸ்லாம், முஸ்லீம்களைப் பற்றி மாற்றுமதத்தவர்களின் மனதில் உள்ள முரண்பாடுகளைக் களையவே நான் இதை எழுதுகிறேன்.

என்னுடைய கடைசி பதிவின் நோக்கம் இஸ்லாம் வாளின் முனையில் பரப்பப்படவில்லை என நிரூபிப்பது. அதை தகுந்த ஆதாரங்களோடு, காரணங்களோடு, மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறேன். அதைப்படித்த நீங்கள் என் கருத்தில் உடன்பாடில்லை எனில் அதற்கு தகுந்த ஆதாரங்களோடு, காரணங்களோடு மறுத்த கூறவேண்டும். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதை ஏற்க வேண்டியது என் கடமை. ஆனால், அதை விடுத்து மனதை புண்படுத்தும் என்றோ, திரியின் போக்கை மாற்றும் என்று எழுதுவதில் அர்த்தமில்லை. அது என் எழுத்தையும், கருத்தையும் அவமதித்தது போலாகிவிடும். அதற்கு நீங்கள் இப்படி சொல்லாமலேயே இருந்திருக்கலாமே..!! இப்படி போகிற போக்கில் ஒரு கல்லை எடுத்து வீசிவிட்டு போகவேண்டிய அவசியமில்லையே..?!


தமிழ்மன்றத்தில் கூடும் நாமெல்லாம் நாகரிகம் அறிந்தவர்கள், நற்கல்வி கற்றவர்கள் என்று நம்புகிறேன். தவறு எங்கிருந்தாலும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டவர்கள். அதைவிடுத்து கண்டும் காணாமல் போவதென்பது நல்ல குடிமகனுக்கு அழகல்ல. என் கருத்தில் நீங்கள் முரண்படும் பட்சத்தில் அதற்கு ஈடான ஏற்றுக்கொள்ளத்தகுந்த எதிர்கருத்தை கூறவேண்டும் என்பது தான் நம் மன்ற நண்பர்களின் விருப்பமாக இருக்கும். நான் எழுதுவதையெல்லாம் "ஆமாம் சாமி" போட வேண்டும் என்றால் நான் இவ்வளவு எழுதவேண்டியதில்லையே..! "இஸ்லாம் தான் உலகின் உயர்ந்த சமயம்" என்று எழுதி ஒரு வாக்கியத்தோடு முடித்துக் கொள்ளலாமே..! ஆரோக்கியமான விவாதம் என்பது என்னைப்பொறுத்தவரையில் வரவேற்கத்தக்கது. விவாதம் செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் தான் நாம் மன்றத்திற்கு வருகிறோம். எனவே உங்கள் கருத்துக்களை தாராளமாக விளக்குங்கள். அப்படி எழுதவில்லை என்றால்
என் கருத்தை ஆமோதிப்பதாக அர்த்தமாகிவிடும்.
குறிப்பு: இதைப்பற்றி மற்ற நண்பர்கள் என்ன நினைக்கிறீர்கள்..? நான் சொன்னது நியாயமா இல்லையா..?




Quote:
Originally Posted by lolluvathiyar View Post
இஸ்லாம் சகோதரர்கள் குரானை அடிபடையாக கொண்டு வாழ்கை நடத்துகிறார்கள் பல நாடுகளில் ஷரியத் என்ற சட்டம் தான் இஸ்லாமியர் சட்டம் என்று கேள்வி பட்டிருகிறேன்

ஷரியத் என்றால் என்ன?


ஷரியத் சட்டம் இந்தியாவிலும் உண்டா?


அது குரானோடு சம்மந்தபட்டதுதானா? இல்லை வேறு நூலா?

இதை பற்றி சற்று விளக்கவும்

இஸ்லாத்தில் முஸ்லீம்களை பொருத்தவரை குரான் என்பது ஒரு மார்க்க நூல் மட்டுமல்ல அல்ல. அது இறைவனால் அருளப்பட்ட இறைச்செய்தி. அந்த இறைச்செய்தியில் அடங்காத விஷயங்களே இல்லை. வாழ்க்கைக்கு தேவையான, வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும் அலசி ஆராய்ந்து அதில் உள்ள பிரச்சினைகளைச் சொல்லி, அதற்கான தீர்வுகளையும் சொல்கிறது. அதை சார்ந்து விளக்கிச் சொல்வது நபிகளாரின் வழிமுறைகள். இவை இரண்டையும் ஒன்றிணைந்தது தான் ஷரியத் என்பது. ஷரியத் என்பது ஷரியா என்ற அரபி மொழியில் இருந்து வந்தது. ஷரியா என்ற அரபிச்சொல்லுக்கு அனுமதிக்கப்பட்டது என்று பொருள். ஒரு மனிதன் எதைச்செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை அதன் ஆதாரம், வழிமுறை, விளைவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து சொல்லப்பட்ட சட்டதிட்டங்கள் ஷரியத் எனப்படுகிறது.

ஷரியத் சட்டத்தை இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து முஸ்லீம்களும் பின்பற்றுகிறார்கள். ஏற்கனவே நான் சொன்னது போல் முஸ்லீம்களைப் பொருத்தவரை குரான் உலகப்பொதுமறை. அது நாட்டுக்கு, மொழிக்கு, இனத்திற்கு தகுந்தாற்போல் மாறுபடுவதில்லை.
Related Posts with Thumbnails