மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா
-
Pa Raghavan
இன்று மாலை ஆறு மணிக்கு மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா கூகுள் மீட் வழி நடைபெற
உள்ளது. பத்திரிகையாளர் சந்திரமௌலி விழாவுக்குத் தலைமை ஏற்கிறார்.
பத...
I Sharmi Diamond Ep-40
-
42. 40 A Flashback
"What is it, Raja? You're the one who's always 'busy, busy' when I call,
and now you've called me? What do you need?" I looked ...
நெடுங்குருதி - கசப்பின் எல்லையில் கனியும் மணம்
-
(அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த கூடுகையில் , மூத்த எழுத்தாளர்
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் 'நெடுங்குருதி' நாவலைப் பற்றிய சிற்றுரை)
*இ*ன்றைய கா...
திரை புத்தகம் – புதிய தொடர்
-
Zero Degree பதிப்பகத்தில் இருந்து புதிதாக வெளிவந்திருக்கும் சினிமா பற்றிய
இணைய இதழ் – The Talkie – https://thetalkie.in/ . இந்த இணைய இதழின்
பதிப்பாசியர்களா...
காசா க்ராண்ட் எச்சரிக்கை
-
இந்த காசா க்ராண்ட் எலீஸியம் ப்ராஜக்ட் லாஞ்ச் சென்று வந்தது பற்றி கீழே உள்ள
லிங்கில் விரிவாக எழுதி உள்ளேன்,மொத்தம் 1350 அடுக்கக வீடுகளில் இதுவரை 500
வீட...
பங்குசந்தையில் பயணிக்கும் ஒருவனின் சுவாரஸ்ய வாழ்வு
-
ஏன் சமூக வலைத்தளங்களில் இயங்குவதில்லை. அதற்கான பதிலே பாட்ஷா மாணிக்கமாய்
இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தான். வலையுலக வழக்கமே
எதிர்வினையும்...
அன்பு வாசகர்களே ‘அருஞ்சொல்’லுக்கு வாருங்கள்!
-
www.arunchol.com
என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!
‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம்
தெரிவிப்பேன் என்று க...
குழந்தை அண்ணா!
-
பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில்
இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம்
இருந்திருக்கிறது. நாளந்தா ...
உண்மை உறங்காது - நாடக விமர்சனம்
-
இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும்
சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில்
...
2019- சிறந்த 10 படங்கள்
-
இவ்வருடம் 175 க்கும் மேல் தமிழ் படங்கள் வெளியானது. அவற்றில் போட்ட பணத்தை
எடுத்த படங்கள் 20 அல்லது 25 இருக்கலாம். இவ்வருடம் சின்ன படங்கள் -
தியேட்டரும் கிட...
பெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்
-
*பெருங்கற்கள் சுமக்கும் குளம்*
*’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும்
எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்துள்ள என்னுரை....
சீனி கிழங்கு...
-
சீனி கிழங்கு...
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய
குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
-
நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார
நெருக்கடியை சந்திக்கும்னு
சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்...
ஒச்சாயி - சினிமா விமர்சனம்
-
*25-03-2018*
*என் இனிய வலைத்தமிழ் மக்களே..!*
*தியேட்டருக்கு போயி படம் பார்த்து ரொம்ப நாளாச்சு. வேலை நிறுத்தப்
போராட்டத்தினால் வேலையும் இல்லை. வீட்லேயும் ...
adwords find keywords
-
[image: adwords find keywords]
having the right keywords is the key to getting your ads to show on
relevant searches. but what if you’re not sure which o...
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
-
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட
நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு (
https://www.facebook.com/grou...
இறைவி - எண்ணங்கள் எனது !
-
ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய
தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது.
வி...
கோழிக்குஞ்சு
-
சிறு வயதிலிருந்தே கோழிக்குஞ்சுகள் என்றாலே கொள்ளைப்பிரியம் எனக்கு.
கிராமத்தில் எனது வீடு தோட்டத்துடன் சேர்ந்தே இருக்கும். அதனாலேயே, அம்மா
நிறைய கோழிக...
வழுவுச்சம்
-
முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன்
அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும்
பாறையில் எப்போத...
.நாண்டுக்கிட்டு செத்துப்போ
-
ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...),
இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே
பிளாக் ப...
இணையம் வெல்வோம் - 23
-
முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில்
சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும்,
தங்களைப் பற்றியும், வாழ்...
ஆகாயத்தாமரைகள்..
-
கெட்டிலில் இருந்து வெந்நீரை ஊற்றி பச்சைத்தேயிலை தேனீரை தயாரித்தேன்
..மீண்டும் அதே சிந்தனை .. எப்போது ஒரு பெண் நள்ளிரவில் பத்திரமாக நடமாட
முடியுமோ அப்போ...
Deeper Analysis of "Vishwaroopam" :
-
These are just spoilers,if you haven’t watched vishwaroopam yet,Don't go
further.Let me get to core of the movie.Right fro...m first scene,
Kamal use...
திரும்பி வந்த சிங்கம்
-
லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு
பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி
வந்தால் ஒரு ...
அனுகிரகம்
-
மித வெப்பம் இதமான காற்று ஈரப் பதம் சுரக்கும் நீரூற்று பழாச்சுளைகள் நான்
உயிர் வாழ தேவையான அத்தனை அம்சங்களும் இருக்கிறது உன் செவ்வாயில். என்
உ'தட்டை' தரையிற...
ப்ளாட் படும் பாடு....!!
-
ப்ளாட் படும் பாடு....!! ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர்
ப்ரோமொடர்ஸ் இன் சென்னை நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும்
பெண் புது பட்...
ஆரண்ய காண்டம்
-
ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம். எக்கச்சக்க எதிர்பார்ப்பை
எகிறவிட்டிருந்தார்கள். The film deserve all those.
ஒரு Gangster கதைதான். முதல...
சின்ன சின்ன நடை நடந்து...
-
இன்னிசைப் பாடல்களை மனது தேடித்தேடி ரசித்தாலும், பழைய பாடல்களில் உள்ள
இனிமையை ரசிக்க ஒருவிதத் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. பழைய பாடல்களின்
காட்சியைமைப்பு...
மன்மதன் அம்பு - திரை விமர்சனம்.
-
நிஷா (அம்புஜம்) பிரபல நடிகை. அவரை மாதவன் (மதனகோபால்) என்கிற பணக்கார வாலிபர்
காதலிக்கிறார். நடிகையானதால் மதனுக்கு சந்தேகம். காதல் ஒரிடத்தில் ஊடலாக நிஷா
ப...
அவளுடன் காணும் பொங்கல்
-
செங்கரும்பின் சாறு
செவ்விதழ்களை தாண்டி
வழிந்தோட நீ அடிக்கரும்பை
சுவைக்க ஆரம்பிக்கும்போது
அதை நான் ரசிக்க
ஆரம்பிக்கும்போது
என்ன என என்னைப் பார்க்க
பொங்கல் வா...
அங்கே நாத்திகம் தொடர்பான பிரமாண்ட கடவுள் மறுப்பு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் தந்தை பெரியார் கலந்து கொண்டு பேசுகிறார் என்பதால் பெரும் கூட்டம் திரண்டிருக்கிறது. எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த பெரியாரின் சிறப்புரை முடிந்து வேறொருவர் நன்றியுரை நிகழ்த்த வேண்டும். நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் அதற்கான ஆளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் பேச்சை கேட்ட மக்கள் கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்து வரப்போகும் நன்றியுரையை கேட்க பொறுமை இல்லாமல் கலைகிறார்கள். அந்த நேரத்தில் இவற்றை எல்லாம் மேடையின் ஓரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்த அந்த இளைஞன் திடீரென்று மேடையின் மேல் ஏறி மைக்கை கைப்பற்றுகிறான். ”கடவுள் இல்லை.. கடவுள் இல்லவே இல்லை” என்று இத்தனை நேரமும் திராவிட தோழர்கள் முழங்கிய அதே மேடையில் அந்த இளைஞன் முழங்கியது என்ன தெரியுமா..? “சாமியேஏஏஏஏய்.... சரணம் ஐயப்பா..!!! சபரி மலை சாஸ்தாவே.. சரணம் ஐயப்பா..!!” என்பது தான்..!!
“பகுத்தறிவு பகலவன்” என்று புகழப்படும் பெரியாரின் மேடையில் இப்படி ஒரு நாத்திக முழக்கத்தை கேட்டதும் கலைந்து கொண்டிருந்த அதிர்ச்சியில் கல் சிலை போல் அப்படி நிற்கிறார்கள். குரல் வந்த மேடையின் திசை நோக்கி அதிர்ச்சியும், ஆர்வமுமாய் திரும்பி பார்க்கிறார்கள். இப்பொழுது மைக்கை கையில் பிடித்திருந்த இளைஞன் தன் பேச்சை “.....என்றெல்லாம் முழங்கி கொண்டிருப்பவர்களுக்கு எதிராய் நாத்திக கொள்கையை நிலை நாட்ட வந்திருக்கும் திராவிடர் கழக சிங்கங்களே..!!!” என்று முடிக்கிறான். கூட்டம் இளைஞனின் புத்திசாலித்தனத்தில் புல்லரித்துப்போய் அப்படியே அமர்ந்து அவன் பேச்சை கேட்க தயாராகிறார்கள். அதன் பிறகு அந்த இளைஞன் 45 நிமிடங்கள் அதே மேடையில் பேசுகிறான். நன்றியுரையை அவன் 45 நிமிடங்கள் நிகழ்த்தியதும், அதனை அத்தனை ஆர்வமுடன் குழுமியிருந்த மக்கள் கேட்டு ரசித்ததும் தமிழக பொதுக்கூட்ட வரலாற்றில் அது தான் முதல் முறையாக இருக்க வேண்டும்.!!
அந்த இளைஞன் சாஸ்திர சம்பிரதாயங்கள் மிகுந்த ஒரு குலத்தில் பிறந்தவன். ஆனால் அவன் சிந்தனைகளோ அவன் குலத்திற்கு எதிரான நாத்திகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் அவனிருக்கும் ஊருக்கு அருகில் இருக்கும் ஊருக்கு பெரியாரின் பிரமாண்ட கடவுள் மறுப்பு தொடர்பான பொதுக்கூட்டம் சில நாட்களில் நடக்கவிருக்கிறது. இவனின் நாத்திக சிந்தனைகளை அறிந்த திராவிடர் கழக தோழர் ஒருவர் பெரியாரின் வருகை குறித்து அவனிடம் சொல்லி, அதில் பேசுகிறாயா என்று கேட்கிறார். ஏற்கனவே பெரியாரின் கருத்துக்களில் அளவற்ற பற்று கொண்டிருந்த அவனும் அதை பெரும் பேறாக நினைத்து ஆவலுடன் அதற்கு சம்மதிக்கிறான். அடுத்து வந்த இரவுகளில் எல்லாம் தூங்காமல் அந்த மேடையில் பேசுவதற்கு உரை தயாரிக்கிறான். பொதுக்கூட்ட நாளன்று மேடையில் பேசப்போவதை தன் தந்தையிடம் தெரிவிக்கிறான். நாத்திக மேடையில் பேசப்போகும் அந்த இளைஞனுக்கு அவன் தந்தை சொன்னது என்ன தெரியுமா..? “நல்லா சாமியை கும்பிட்டு விட்டு போய் மேடையில் ஏறி பேசு..!!”
ஆனால் பாவம்.. அத்தனை கஷ்டப்பட்டு உரை தயார் செய்து கொண்டு போன அவனுக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டே போனார்கள். கடைசியாக நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர் பெரியாரும் பேசி முடித்து விட்டார். அவனுக்கு தெரிந்து விட்டது, சிறப்பு பேச்சாளர் பேசி முடித்து விட்டார் என்றால் நன்றியுரையோடு பொதுக்கூட்டமே முடிந்து போகும் என்று..! ஆனால் அவன் நினைத்தது ஒன்று.. கடவுள் நினைத்தது ஒன்று..!! அப்படியென்றால் அன்று என்ன தான் நடந்தது..? அன்று நடந்ததை தான் முதல் பாராவில் படித்தீர்கள்..!!
இரசனைக்குரிய மேற்கண்ட நிகழ்ச்சியில் வரும் அந்த இளைஞன் வேறு யாருமல்ல, சமீபத்தில் இஸ்லாத்தை தழுவி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெரியார்தாசன் என்கிற அப்துல்லா தான்.!! ஒரு சிறு திருப்பம் நம்மில் பலரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விடும். அப்படி தான் கல்லில் கடவுளை கண்டு, அதை கண்ணெதிரே வைத்து வைத்து வழிபடும் குலத்தில் பிறந்த இவர், அந்த கல்லால் ஆன சிலைகளை உடைக்கும் கழக கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பெரியார்தாசன் ஆனார். அதே பெரியார்தாசன் என்கிற நாத்திகவாதி கண்ணுக்கு தெரியாத நிலையிலும் கடவுளை வணங்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கு வந்திருக்கிறார். யார் இந்த பெரியார்தாசன்..? கருத்தம்மா திரைப்படம் வரும் வரை இந்த பெரியார்தாசன் யாரென்று எனக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் தெரியாது. அந்த திரைப்படத்தில் இவர் பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கொலைகார தந்தையின் வேடத்தில் நடித்திருந்தார். இவரின் பாமர தோற்றம், எளிய பேச்சு பெரும் ஆர்வத்தை அவர் மேல் எனக்கு ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர் பெயரின் முன் ஒட்டியிருந்த பேராசிரியர் பட்டமும், பெரியார்தாசன் என்ற அடை மொழியும் அவரை பற்றி அறியும் ஆர்வத்தை எனக்குள் விதைத்தது.
பிறகு தெரிந்தது...அந்த பாமர தோற்றத்திற்குள் ஒரு பழுத்த பகுத்தறிவாளர் நிறைந்திருந்தார். சிறந்த சிந்தனாவாதி ஒளிந்திருந்தார். மனோவியலை கரைத்துக்குடித்த மனோதத்துவ நிபுணர் மறைந்திருந்தார். பட்டங்கள் பல பெற்ற படிப்பாளி மறைந்திருந்தார். பெரியாருடனான நேரடி தொடர்பு வைத்திருந்தவர் போன்ற அவரைப்பற்றிய தகவல்கள் எனக்கு பெரும் ஆச்சரியத்தை விதைத்தாலும், இத்தனை பெருமைகளுக்கு பிறகும் தளும்பா நிறை குடமாக அவர் காட்சியளித்தது அவரை என் மனதில் பெரிதும் உயர்த்தி கொண்டு சென்று வைத்தது. இந்துவாக பிறந்த இந்த சேஷாசலம், பிறகு நாத்திக கொள்கையில் ஈடுபட்டு பெரியார்தாசன் என்ற அவதாரம் எடுத்தார். பின் ”அன்பே கடவுள்” என உபதேசிக்கும் புத்தமதக்கொள்கைகளால் கவரப்பட்டு அதில் இணைந்து சித்தார்த்தன் ஆனார். பிறகு ஓரிறைக் கொள்கையை கொண்ட இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அப்துல்லாவாக ஆகியிருக்கிறார். அப்படி என்றால்... அடுத்து...?????????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக