நேரம்:

புதன், 15 மே, 2013

நடப்பதெல்லாம் அவலம்..!!



இன்றைய காலத்தில் தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளாக மாறிவிட்ட நிலையில் அதில் வன்முறை, முறையற்ற பாலுறவு, கலாச்சார சீர்கேடுகள் இல்லாத நிகழ்ச்சிகளை, தொடர்களை திரைப்படங்களை பார்ப்பது என்பது அரிதாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் இருக்கும் குடும்பங்களில் தொலைக்காட்சியை மிகவும் கவனத்துடன் பயன்படுத்துவது என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.

ரியாலிட்டி ஷோ மற்றும் டாக் ஷோ என்ற பெயரில் தொலைக்காட்சியின் மூலம் வெளிப்படும் உண்மைகள் நம் சமூகம் எத்தனை சிதைந்தும், சீர்குலைந்தும் போய் இருக்கிறது என்பதை காட்டுகிறது. விஜய் டிவியின் நீயா நானா மற்றும் ஜி தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். அதுவும் குறிப்பாக சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி ஏற்படுத்தும் அதிர்வுகள், வெளிப்படுத்தும் அவலங்கள் காண்பவர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. குடும்ப உறவுகளுக்குள் எத்தனை கோபம், குரோதம், வன்முறை, துரோகங்கள் இருக்கின்றன என்பதை உணரும் போது குடும்ப உறவுகள் பாதுகாப்பானவை, பிரச்சினைகள் அற்றவை என்ற எண்ணமே பலவீனப்படுகிற உணர்வே ஏற்படுகிறது.

சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் வெளிப்பட்ட உண்மைகளை அறிந்தால் நீங்கள் அதிர்ந்தே போவீர்கள். ராஜி என்ற 35 வயதுக்கு மேலான ஒரு பெண். அவளின் கணவன் ஒரு குடிகாரன் மற்றும் சந்தேகப் புத்திக்காரன். வேலைக்கு போவதில் இஷ்டமில்லாதவன், அப்படியே போனாலும் சம்பாத்தியத்தை மனைவிக்கு தராதவன். அவர்களுக்கு 4 குழந்தைகள். அதில் 2 வயதுக்கு வந்த மகள்கள் மற்றும் 2 மகன்கள். இதில் ஒரு மகன் ஏதோ காரணத்தால் இறந்து விட்டான். அடுத்த மகன் ஒரு கொலையில் சம்பந்தம் என்று குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் இருக்கிறான். அவனுக்கு ஒரு நண்பன். ஆண் பிள்ளை துணை இல்லாத வீட்டில் உதவிகள் செய்ய வருகிறான் புஷ்பராஜ் என்கிற 20 வயதிற்குட்பட்ட நண்பன். கணவனால் பல வகைகளில் கஷ்டப்பட்ட, ஏமாற்றம் அடைந்த ராஜிக்கு புஷ்பராஜ் உறவு ஆறுதலாக அமைகிறது. நண்பனின் தாய் என்பதால் அவளை அம்மா என்றே அழைக்கிறான்.

ஒரு கட்டத்தில் இருவரின் நெருக்கம் கூடி போய் அவர்களுக்குள் தவறான உறவு உண்டாகிறது. கணவன், தாய், புஷ்பராஜின் பெற்றோர், உறவுகள் என்று பலரும் கண்டித்தும் இருவரும் உறைவை முறித்துக்கொள்ள தயாரில்லை. இந்த சூழ்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டார்கள் இருவரும். தாயை போன்ற நண்பனின் தாயோடு கள்ள உறவு என்ற அதிர்ச்சியில் நாம் உறைந்து இருக்கும் பொழுது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக வருகிறது மேலும் சில அசிங்கமான உண்மைகள்.

ராஜியோடு நெருங்கி பழகியதால் அவர்கள் குடும்பத்தில் ஒன்றிய புஷ்பராஜ் அடுத்து செய்த காரியம் ராஜியின் மூத்த மகளான கல்கியை காதலிப்பதாக கூறி ஏமாற்றியிருக்கிறான். அந்த அப்பாவி பெண்ணும் நம்பி மோசம் போய் இருக்கிறாள். ஒரே நேரத்தில் அந்த அயோக்கியன் தாய், மகளை ஏமாற்றி இருக்கிறான் என்பதறிந்து அனைவருக்கும் பேரதிர்ச்சி. இந்நிலையில் நிகழ்ச்சியில் ராஜி, அவளின் கள்ளக்காதலன் புஷ்பராஜ், அவளின் இரு மகள்கள், ராஜியின் கணவன், புஷ்பராஜின் பெற்றோர் கலந்து கொண்டனர். நடந்த விஷயங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது, புஷ்பராஜ் ராஜியின் மகளை காதலிப்பதாக ஏமாற்றியதை தவிர. அதுவும் இறுதியில் அனைவருக்கும் தெரிந்து போனது.

ராஜியின் கணவன் அவள் திருந்தி வந்தாள் ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறினான். ஆனால் ராஜிக்கு அவனோடு வாழ்வதில் இஷ்டமில்லை. புஷ்பராஜின் பெற்றோரோ தங்கள் பிள்ளை தனக்கு வேண்டும் என்று கண்ணீர் விட்டனர். ஆனால் புஷ்பராஜ்க்கு ராஜி இல்லாமல் வாழ முடியாது என்று (கள்ளக்)காதல் வசனம் பேசினான். நிகழ்ச்சியின் போது புஷ்பராஜ் ராஜியின் மகளை ஏமாற்றிய விஷயம் வெளிவந்த போது ராஜிக்கு பெரும் அதிர்ச்சி. தன்னிடம் நடித்து துரோகம்(!) செய்த "அவன் இனி எனக்கு வேண்டாம்" என்று சொன்னாள். இதனால் பெரும் வேதனையான புஷ்பராஜ் தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் படி கண்ணீருடன் அவள் காலில் விழுந்து மன்றாடினான்.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் செய்ய முயற்சி செய்த முடிவுகள்:

1. ராஜியின் மகள் காதலில் ஏமாற்றிய புஷ்பராஜின் பக்கமே இனி போகக்கூடாது. இடையில் நிறுத்திய பள்ளிப்படிப்பை தொடர வேண்டும்.

2. புஷ்பராஜ் ராஜியை மறந்து பெற்றோருடன் வாழ வேண்டும்.

3. ராஜி நடந்ததை மறந்து கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும்.

இறுதியில் புஷ்பராஜ் பெற்றோருடன் சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டு அவர்களுடன் கிளம்பி சென்றான். ஆனால், ராஜி இறுதி வரை கணவனுடன் வாழ மறுத்துவிட்டாள்.

இத்தனை அசிங்கங்கள் அரங்கேறிய அந்த நிகழ்ச்சியில் ஆறுதலான விஷயம் என்றால் புஷ்பராஜ்க்கு விழுந்த அடிகள் மற்றும் கிடைத்த அவமானம் தான்.

இது போன்ற நிகழ்ச்சிகள் சம்பந்தவர்களை திருத்திவிடும் என்றோ, பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விடுமென்றோ எனக்கு தோன்றவில்லை. ஆனால், நாம் அறியாத, நம் எண்ணங்கள் மற்றும் கற்பனையையும் தாண்டிய கேவலமான விஷயங்கள் சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணரவும், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி இது போன்ற கலாசார அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தன் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ளவும் மட்டுமே பயன்படும் என்பது தான் உண்மை. 


கணவன் மனைவி இருவருக்கிடையே இருக்க வேண்டிய காதல், அன்பு, பாசம், புரிதல், விட்டுக்கொடுத்தல், அர்ப்பணிப்பு, சம உரிமை, அதே போல் குழந்தைகள் மேல் பெற்றோர் காட்ட வேண்டிய பாசம், அக்கறை, கண்டிப்பு ஆகியவை இல்லாத பட்சத்தில் எந்த குடும்பத்திலும் இது போன்ற அவலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பது தான் இந்நிகழ்ச்சிகள் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.!!!

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

மருத்துவத்துறையில் கொள்ளைக்கும்பல்.!



ஒரு விவசாயி வயலில் வேலை செய்யாமல் ஜீவிக்க முடியாது. ஒரு பாட்டாளி உழைக்காமல் உயிர் வாழ முடியாது. கட்டடப் பொறியாளர் கூட, கட்டடம் பக்கமே வராமல் சம்பாதிக்க முடியாது.

ஆனால், ஒரு டாக்டர் நோயாளியைக் குணப்படுத்தாமலேயே லட்சம் லட்சமாய் குவிக்க முடியும்.

மருத்துவ உலகில் வளர்ந்துவரும் ஆய்வக நோயறியும் முறையினால் (லேபரட்டரி டயக்னோசிஸ்) ஏற்பட்டிருக்கும் நூதன மாற்றம் இது. ஒரு நல்ல டாக்டருக்கான முன் நிபந்தனையாக அவர் எந்த அளவுக்கு நோயாளியைக் குணப்படுத்துவார் என்பது இருந்தது. அவரை ஊரில் "கைராசி" டாக்டர் என்பார்கள்.

ஒரு டாக்டர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமெனில், நோயாளிக்குச் சிறந்த சிகிச்சையளித்து குணப்படுத்தியாக வேண்டும். இதெல்லாம் அந்தக் காலம்!

இன்றைக்கு நோயாளிகளைக் குணப்படுத்த வேண்டிய அவசியம் டாக்டர்களுக்கு இல்லை. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றுக்குப் பரிந்துரை செய்தாலே போதும், அதிலிருந்து வருகிற கமிஷன், சிகிச்சை பெற வருவோர் தரும் ஃபீûஸக் காட்டிலும் பலப்பல மடங்கு அதிகம். சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் டாக்டர்களுக்குக் கிடைக்கிற கமிஷன் விகிதத்தைக் கேட்டால் நமக்குத் தலை சுற்றும்; பி.பி. எகிறும்.
 மதுரை போன்ற நகரத்தில், மூளைக்கான சிடி ஸ்கேனுக்கு ரூ. 2,500 வசூலிக்கப்படுகிறது; இதில் டாக்டருக்கான கமிஷன் ரூ. 1,500. சிடி ஸ்கேன் நடத்தும் நிறுவனத்துக்கு கிடைப்பது ரூ. 1,000 மட்டுமே.

அதேபோல், மூளைக்கான எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு வசூலிக்கப்படுவது ரூ. 6,000. இதில் டாக்டருக்கு கமிஷன் ரூ. 4,000. மீதி ரூ. 2,000 மட்டுமே ஸ்கேன் நடத்தும் நிறுவனங்களுக்கு. இது தவிர டாக்டரிடமிருந்து வரும் ஒவ்வொரு 6-வது பரிந்துரை மூலமாகக் கிடைக்கும் முழுத் தொகையும் கமிஷனாக டாக்டருக்கே தரப்படுகிறது.

டாக்டருக்குத் தந்தது போக மீதியுள்ள தொகையில் ஸ்கேன் நடத்தும் நிறுவனங்களுக்கு நிச்சயம் ஒரு லாபம் இருக்கும். அது இல்லாமல் நிறுவனத்தை நடத்த இயலாது. அப்படியெனில், ஒரு ஸ்கேனுக்கான அசலான மதிப்புதான் என்ன? கமிஷனையும் லாபத்தையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு ஸ்கேன் ரூ. 500-க்கும் ஒரு எம்.ஆர்.ஐ. ரூ. 1,000-க்கும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.

ஆனால், ரூ. 500 மதிப்புள்ள சி.டி. ஸ்கேனை ரூ. 2,500-க்கும்; ரூ. 1,000 மதிப்புள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேனை ரூ. 6,000-க்கும் பெற்று வருகிறோம். கிட்டத்தட்ட 5 அல்லது 6 மடங்கு லாபம் இந்தத் துறையில் புகுந்து விளையாடுகிறது. இதில் பெரும்பகுதி டாக்டர்களுக்குக் கொடுப்பதற்காக நோயாளிகளிடமிருந்து பறிக்கப்படுவதாகும்.

எந்தத் துறையிலும் கமிஷன் பெறுவது என்பது லஞ்சத்துக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், மருத்துவத் துறையில் இது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே நடந்து வருகிறது.

இதுதான் இப்படியெனில், மருந்துப்பொருள்கள் விற்பனையிலும் மருத்துவ அறிவியல் உபகரணங்கள் விற்பனையிலும் (சயன்டிஃபிக் எக்யுப்மென்ட்ஸ் சேல்ஸ்) அடிக்கப்படும் கொள்ளை அளவு கடந்தது.

 உதாரணமாக, லேடக்ஸ் கையுறைகள் 100 கொண்ட டப்பாவின் சந்தை விலை (எம்ஆர்பி விலை) ரூ. 600. இதனை மருந்துக் கடைகளில் வாங்காமல் மொத்த விற்பனையாளரிடம் வாங்கினால், ரூ. 200-லிருந்து ரூ. 250-க்குள் கிடைக்கும்.
இதில், மொத்த விற்பனையாளருக்கு ஒரு லாபம் இருக்கத்தான் செய்யும். கையுறைகளை அவருக்கு விநியோகித்தவர் இன்னும் குறைவான விலைக்குத்தான் விநியோகித்திருப்பார்.

குறைவான விலைக்கு விநியோகித்தவரும் ஒரு லாபத்துடன்தான் சரக்கைத் தள்ளிவிட்டிருப்பார். கையுறைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் அந்த விநியோகஸ்தருக்கு இன்னும் குறைவான விலையில்தான் சப்ளை செய்திருக்கும். அதில், உற்பத்தி செய்யும் கம்பெனிக்கும் ஒரு லாபம் இருக்கும். இப்படியே கழித்துக்கொண்டு போனால், அந்தக் கையுறைகளின் அசல் மதிப்பு ரூ. 50 தேறினால் அதிசயம்! ஆனால், அது சந்தை விலையில் ரூ. 600-க்கு விற்கப்படுகிறது.

அதாவது பொதுமக்களை வந்து சேர்கிபோது, சராசரியாக 1,000 சதவிகித லாபத்தில் விற்கப்படுகிறது.
மக்களின் உயிர்காக்கும் இந்தத் துறையில் இத்தனை திருவிளையாடல்கள் இருப்பது, இந்தியா மாதிரியான கோடானுகோடி "தரித்திர நாராயணர்'களைக் கொண்ட தேசத்துக்கு அடுக்குமா?

இதற்குக் காரணம் என்ன?
அரசின் அபத்தமான கொள்கை. அல்லது கொள்கையே இல்லாமல் இருப்பது. மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் துறையை தனியாருக்கு தாரைவார்த்து விட்டதும்; தன் வசம் இருக்கும் மருத்துவத் துறையை நம்பகத்தன்மை இல்லாமல் ஆக்கியதும் அரசு செய்த மாபெரும் தவறு.
தனியாருக்குப் போட்டியாக பல்வேறு ஸ்கேன் மையங்களை அரசே தனது முதலீட்டில் ஏன் தொடங்கக் கூடாது? அப்படிச் செய்தால், அசல் விலையில் மக்கள் பயன் பெறுவார்களே!

மேலும், அரசின் போட்டி காரணமாக தனியார் நிறுவனங்களும் தங்கள் கட்டணத்தைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அல்லவா!

மருத்துவத் துறையில் மக்களை மையமாகக் கொண்ட கொள்கையை அரசு உருவாக்காத வரை, இந்த அவலம் தொடர்கதையாகத்தான் இருக்கும். அதுவரை, குணமாக்குவதே டாக்டரின் கடமை என்கிற நிலை மாறி, பணமாக்குவதே அவர்கள் பணி என்ற நிலை தொடரத்தான் செய்யும்.

நன்றி: இணையம்

புதன், 7 டிசம்பர், 2011

”ஒஸ்தி”யான பாட்டு..! (கொலவெறி Ver.02)


என் தோழிக்கு சினிமா பாட்டு அதிகம் பிடிக்காது...!! ரொம்பவே செலக்டிவா, மெலடியா கேட்கிற இரசனை உள்ளவர். குத்துப்பாட்டு, சிம்பு போன்றவர்களின் பாட்டுன்னா வேப்பங்காய் கசப்பு..!! நேத்து திடீர்னு ச்சேட்ல வந்து “ஒஸ்தி பட பாட்டு கேட்டீங்களா..?”னு கேள்வி..எனக்கு என்னையே நம்ப முடியல...காரணம் ஒஸ்தி சிம்பு படம்..!

இல்லையே ஏன்னு கேட்டேன். இன்னும் கேட்கலையா..? அதெல்லாம் கேட்காம என்ன தான் இண்டர்நெட்ல பொழுதை கழிக்கிறீங்களோன்னு மிரட்டல் கேள்வி. ”அந்த பாட்டை முதல்ல கேளுங்க.. அதைக் கேட்டா நீங்க பாடுறது போலவே ஃபீல்”னு பில்டப் வேற..!! இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை..? அப்படி என்னதான் சிம்பு பாட்டில் இருக்குனு எனக்கு ஒரே கேள்வி.( அத்தோட விடாம “எவ்ளோ அழகான, அர்த்தமுள்ள வரிகள்...அந்த பாட்டை கேட்கவே சந்தோஷமா இருக்கு”ன்னு ஒரே புலம்பல். முதலில் ”அதை கேட்டுட்டு அப்புறம் வந்து பேசுங்க”ன்னு சொல்லிட்டு .ஃபோன் கட்..!! சரி அப்படி என்ன தான் அந்த பாட்டுல இருக்கு, அதுவும் சிம்பு படப்பாட்டுலனு இண்டர்நெட்ல தேடி எடுத்து கேட்டா.... அடப்பாவிகளா.....இதுக்கு பேர் தான் கொல வெறியா..? பெண்கள் எப்பவும் பெண்களா தான் இருக்காங்கப்பா.!!


கீழே இருக்கிறது தான் அந்த “ஒஸ்தி”யான பாட்டு..!!

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
பொண்டாட்டி அடி நீதானே என் ஸ்வீட்டி


ஒஸ்தியில் லவ் யூ டில் யூ ஆர் ஏ பாட்டி...
தேவையில்லை வாப்பாட்டி..
நல்ல கணவனா நான் இருப்பேன்..
ஒரு உத்தமனா நடப்பேன்..
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்..
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்...
உன் கண் கலங்க விட மாட்டேன்...

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்..
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..

உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்...
என்னை நீ சந்தேக படுற மாதிரி நடக்க மாட்டேன்...
உன் உயிரா நான் இருப்பேன்.. என் உயிரா உன்னை நினைப்பேன்...
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்...
உன்னை டெய்லி நான் ரசிப்பேன்..
உன் நிழல போல நான் இருப்பேன்...

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது...
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது...
என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்...
நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்...
ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்...
உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்...
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

ஐ லவ் யூ டி மை பொண்டாட்டி....



அந்த பாடலை கேட்க...




 பின் குறிப்பு:
எனக்கும் அவங்க போலவே ஒரு நல்ல, புகழ் பெற்ற பாட்டை அறிமுகப்படுத்த தான் ஆசை.. ஆனா அந்த பாட்டு ஆரம்பிப்பதே ”ஒய் திஸ் கொல வெறி  கொலவெறிடி..!”னு தான்... அதான் யோசிக்கிறேன்...அவ்வ்வ்வ்வ்வ்..!!

சனி, 26 மார்ச், 2011

அ.தி.மு.க அணி வகுக்கும் தொகுதிகள்..!! - தேர்தல் ஸ்பெஷல்

கூட்டணிகளுடான தொகுதிப்பங்கீட்டில் ஏகப்பட்ட குழப்பங்கள், மாற்றங்களுக்கு பிறகு அதிமுக தான் போட்டியிடப்போகும் தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

1. ஸ்ரீரங்கம்:- ஜெ.ஜெயலலிதா

திருவள்ளூர் மாவட்டம்
2. பொன்னேரி (தனி):- பொன்.ராஜா
3. திருவள்ளூர்:- பி.வி.ரமணா,
4. பூவிருந்தவல்லி (தனி):- இரா.மணிமாறன்,
5. ஆவடி:- எஸ்.அப்துல் ரஹீம்
6. அம்பத்தூர்:- எஸ்.வேதாச்சலம்
7. மாதவரம்:- வி.மூர்த்தி
8. திருவொற்றியூர்:- கே.குப்பன்

சென்னை மாவட்டம்
9. ராதாகிருஷ்ணன் நகர்:- பி.வெற்றிவேல்
10. கொளத்தூர்:- சைதை சா.துரைசாமி
11. வில்லிவாக்கம்:- ஜே.சி.டி.பிரபாகர்
12. திரு.வி.க.நகர் (தனி):- வ.நீலகண்டன்
13. ராயபுரம்:- டி.ஜெயக்குமார்
14. துறைமுகம்:- பழ.கருப்பையா
15. ஆயிரம்விளக்கு:- பா.வளர்மதி
16. அண்ணாநகர்:- எஸ்.கோகுல இந்திரா
17. சைதாப்பேட்டை:- ஜி.செந்தமிழன்
18. தியாகராயநகர்:- வி.பி.கலைராஜன்
19. மைலாப்பூர்:- ஆர்.ராஜலட்சுமி
20. வேளச்சேரி:- எம்.கே.அசோக்

காஞ்சீபுரம் மாவட்டம்
21. சோழிங்கநல்லூர்:- கே.பி.கந்தன்
22. ஸ்ரீபெரும்புதூர் (தனி):- மொளச்சூர் இரா.பெருமாள்
23. பல்லாவரம்:- ப.தன்சிங்
24. தாம்பரம்:- டி.கே.எம்.சின்னையா
25. திருப்போரூர்:- தண்டரை கே.மனோகரன்
26. செய்யூர் (தனி):- வி.எஸ்.ராஜி
27. மதுராந்தகம் (தனி):- எஸ்.கணிதா சம்பத்
28. உத்திரமேரூர்:- வாலாஜாபாத் பா.கணேசன்
29. காஞ்சீபுரம்:- வி.சோமசுந்தரம்

வேலூர் மாவட்டம்
30. அரக்கோணம் (தனி):- சு.ரவி
31. காட்பாடி:- எஸ்.ஆர்.கே.அப்பு (எ) ராதாகிருஷ்ணன்
32. ராணிப்பேட்டை:- அ.முஹம்மத்ஜான்
33. ஆற்காடு:- ஆர்.சீனிவாசன்
34. வேலூர்:- டாக்டர் வி.எஸ்.விஜய்
35. வாணியம்பாடி:- கோவி.சம்பத்குமார்
36. ஜோலார்பேட்டை:- கே.சி.வீரமணி
37. திருப்பத்தூர்:- கே.ஜி.ரமேஷ்

தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்கள்
38. ஊத்தங்கரை (தனி):- மனோரஞ்சிதம் நாகராஜ் 39. பர்கூர்:- கே.இ.கிருஷ்ணமூர்த்தி
40. கிருஷ்ணகிரி:- கே.பி.முனுசாமி
41. பாலக்கோடு:- கே.பி.அன்பழகன்
42. பாப்பிரெட்டிப்பட்டி:- பி.பழனியப்பன்

திருவண்ணாமலை மாவட்டம்
43. திருவண்ணாமலை:- எஸ்.ராமச்சந்திரன்
44. கீழ்பென்னாத்தூர்:- ஏ.கே.அரங்கநாதன்
45. கலசபாக்கம்:- அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,
46. போளூர்:- எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன்
47. செய்யார்:- முக்கூர் என்.சுப்பிரமணியன்
48. வந்தவாசி (தனி):- செய்யாமூர் வே.குணசீலன்
49. மைலம்:- கே.பி.நாகராஜன்
50. திண்டிவனம் (தனி):- டாக்டர் த.அரிதாஸ்
51. வானூர் (தனி):- ஐ.ஜானகிராமன்
52. விழுப்புரம்:- சி.வி.சண்முகம்
53. உளுந்தூர்பேட்டை:- இரா.குமரகுரு
54. சங்கராபுரம்:- ப.மோகன்
55. கள்ளக்குறிச்சி (தனி):- பா.அழகுவேல் பாபு

சேலம்-நாமக்கல் மாவட்டங்கள்
56. ஆத்தூர் (தனி):- எஸ்.மாதேஸ்வரன்
57. ஏற்காடு (பழங்குடி):- செ.பெருமாள்
58. ஓமலூர்:- பல்பாக்கி சி.கிருஷ்ணன்
59. எடப்பாடி:- எடப்பாடி கே.பழனிசாமி
60. சங்ககிரி:- விஜயலட்சுமி பழனிச்சாமி
61. சேலம் (மேற்கு):- ஜி.வெங்கடாஜலம்
62. சேலம் (தெற்கு):- எம்.கே.செல்வராஜ்
63. வீரபாண்டி:- எஸ்.கே.செல்வம்
64. ராசிபுரம் (தனி):- ப.தனபால்
65. நாமக்கல்:- கே.பி.பி.பாஸ்கர்
66. குமாரபாளையம்:- பி.தங்கமணி

ஈரோடு-திருப்பூர் மாவட்டங்கள்

67. ஈரோடு (மேற்கு):- கே.வி.ராமலிங்கம்
68. மொடக்குறிச்சி:- ஆர்.என்.கிட்டுசாமி
69. தாராபுரம் (தனி):- கே.பொன்னுசாமி
70. காங்கேயம்:- என்.எஸ்.என்.நடராஜ்
71. பெருந்துறை:- தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்
72. பவானி:- பி.ஜி.நாராயணன்
73. அந்திïர்:- எஸ்.எஸ்.ரமணீதரன்
74. கோபிசெட்டிப்பாளையம்:- கே.ஏ.செங்கோட்டையன்
75. உதகமண்டலம்:- புத்தி சந்திரன்

கோவை மாவட்டம்
76. மேட்டுப்பாளையம்:- ஓ.கே.சின்னராஜ்
77. அவினாசி (தனி):- ஏ.ஏ.கருப்புசாமி
78. திருப்பூர் (வடக்கு):- எம்.எஸ்.எம்.ஆனந்தன்
79. பல்லடம்:- பல்லடம் கே.பி.பரமசிவம்
80. கவுண்டம்பாளையம்:- வி.சி.ஆறுக்குட்டி
81. கோயம்புத்தூர் (வடக்கு):- தா.மலரவன்
82. தொண்டாமுத்தூர்:- எஸ்.பி.வேலுமணி
83. கோயம்புத்தூர் (தெற்கு):- சேலஞ்சர் துரை (எ) ஆர்.துரைசாமி,
84. சிங்காநல்லூர்:- ஆர்.சின்னசாமி
85. கிணத்துக்கடவு:- செ.தாமோதரன்
86. பொள்ளாச்சி:- எம்.கே.முத்துகருப்பண்ணசாமி
87. உடுமலைப்பேட்டை:- பொள்ளாச்சி ஏ.ஜெயராமன்
88. மடத்துக்குளம்:- சி.சண்முகவேலு

திண்டுக்கல்-கரூர் மாவட்டங்கள்
89. பழனி:- கே.எஸ்.என்.வேணுகோபாலு
90. ஒட்டன்சத்திரம்:- பி.பாலசுப்பிரமணி
91. நத்தம்:- இரா.விசுவநாதன்
92. வேடசந்தூர்:- ச.பழனிச்சாமி
93. அரவக்குறிச்சி:- வி.செந்தில்நாதன்
94. கரூர்:- வி.செந்தில்பாலாஜி
95. கிருஷ்ணராயபுரம் (தனி):- எஸ்.காமராஜ்

திருச்சி-பெரம்பலூர்
96. குளித்தலை:- பாப்பாசுந்தரம்
97. மணப்பாறை:- ஆர்.சந்திரசேகர்
98. திருச்சி (மேற்கு):- என்.மரியம்பிச்சை
99. திருச்சி கிழக்கு:- ஆர்.மனோகரன்
100. மணச்சநல்லூர்:- பூனாட்சி
101. முசிறி:- என்.ஆர்.சிவபதி
102. துறையூர் (தனி):- இந்திராகாந்தி
103. பெரம்பலூர் (தனி):- இளம்பை இரா.தமிழ்ச்செல்வன்,
104. அரியலூர்:- துரை.மணிவேல்
105. ஜெயங்கொண்டம்:- பா.இளவழகன்
106. நெய்வேலி:- எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன்

கடலூர்-நாகை மாவட்டங்கள்
107. கடலூர்:- எம்.சி.சம்பத்
108. குறிஞ்சிப்பாடி:- சொரத்தூர் இரா.ராஜேந்திரன்
109. புவனகிரி:- செல்வி ராமஜெயம்
110. காட்டுமன்னார்கோயில் (தனி):- என்.முருகுமாறன்
111. சீர்காழி (தனி):- ம.சக்தி
112. பூம்புகார்:- எஸ்.பவுன்ராஜ்
113. நாகப்பட்டினம்:- கே.ஏ.ஜெயபால்
114. வேதாரண்யம்:- என்.வி.காமராஜ்
115. மன்னார்குடி:- சிவா.ராஜமாணிக்கம்
116. திருவாரூர்:- குடவாசல் எம்.ராசேந்திரன்
117. நன்னிலம்:- ஆர்.காமராஜ்
118. திருவிடைமருதூர்(தனி):- டி.பாண்டியராஜன்

தஞ்சை மாவட்டம்
119. கும்பகோணம்:- இராம.ராமநாதன்
120. பாபநாசம்:- இரா.துரைக்கண்ணு
121. திருவையாறு:- எம்.ரெத்தினசாமி
122. தஞ்சாவூர்:- எம்.ரெங்கசாமி
123. ஒரத்தநாடு:- ஆர்.வைத்திலிங்கம்
124. கந்தர்வகோட்டை (தனி):- ந.சுப்ரமணியன்
125. விராலிமலை:- டாக்டர் சி.விஜயபாஸ்கர்
126. திருமயம்:- பி.கே.வைரமுத்து
127. ஆலங்குடி:- கு.ப.கிருஷ்ணன்

சிவகங்கை-மதுரை மாவட்டங்கள்
128. அறந்தாங்கி:- மு.ராஜநாயகம்
129. காரைக்குடி:- சோழன் சித.பழனிச்சாமி
130. திருப்பத்தூர்:- ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்
131. மானாமதுரை (தனி):- ம.குணசேகரன்
132. மேலூர்:- ஆர்.சாமி
133. மதுரை கிழக்கு:- கே.தமிழரசன்
134. சோழவந்தான் (தனி):- எம்.வி.கருப்பையா
135. மதுரை வடக்கு:- ஏ.கே.போஸ்
136. மதுரை மேற்கு:- செல்லூர் கே.ராஜு
137. திருமங்கலம்:- ம.முத்துராமலிங்கம்

தேனி-விருதுநகர் மாவட்டங்கள்
138. ஆண்டிபட்டி:- தங்க தமிழ்செல்வன்
139. போடிநாயக்கனூர்:- ஓ.பன்னீர்செல்வம்
140. ராஜபாளையம்:- கே.கோபால்சாமி
141. சாத்தூர்:- ஆர்.பி.உதயகுமார்

142. சிவகாசி:- கே.டி.ராஜேந்திர பாலாஜி
143. அருப்புக்கோட்டை:- வைகைச்செல்வன்
144. பரமக்குடி (தனி):- டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ்
145. முதுகுளத்தூர்:- மு.முருகன்

நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்கள்
146. விளாத்திகுளம்:- ஜி.வி.மார்க்கண்டேயன்
147. தூத்துக்குடி:- ஏ.பால்         
148. திருச்செந்தூர்:- பி.ஆர்.மனோகரன்
149. ஸ்ரீவைகுண்டம்:- எஸ்.பி.சண்முகநாதன்
150. கோவில்பட்டி:- கடம்பூர் செ.ராஜா
151. சங்கரன்கோவில் (தனி):- சொ.கருப்பசாமி
152. வாசுதேவநல்லூர் (தனி):- டாக்டர் எஸ்.துரையப்பா,
153. கடையநல்லூர்:- பி.செந்தூர்பாண்டியன்
154. ஆலங்குளம்:- பி.ஜி.ராஜேந்திரன்
155. திருநெல்வேலி:- நயினார் நாகேந்திரன்
156. அம்பாசமுத்திரம்:- இசக்கி சுப்பையா

குமரி மாவட்டம்
157. கன்னியாகுமரி:- கே.டி.பச்சைமால்
158. நாகர்கோவில்:- நாஞ்சில் ஏ.முருகேசன்
159. குளச்சல்:- பி.லாரன்ஸ்
160. கிள்ளியூர்:- ஆர்.ஜார்ஜ்

புதன், 16 மார்ச், 2011

என்னைக் கவர்ந்த ஜப்பானியர்கள் - மலரும் நினைவுகள்..!


கடந்த 11-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவில் மிகவும் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் அந்நாட்டில் பெரும் சீரழிவு ஏற்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து ஜப்பானைப்பற்றி வரும் செய்திகள் மனதுக்கு மிகவும் வேதனை தருகின்றன. இது வரை பலியானவர்கள் எண்ணிக்கை 17,000-ஐ தாண்டியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம் என்றும் செய்திகளில் சொல்லப்படுகிறது. இலட்சக்கணக்கானவர்கள் வீடிழந்திருக்கிறார்கள். மின்சாரம், குடிதண்ணீர் இல்லாமல் மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அங்கிருந்த அணு உலைகள் குளிரூட்டப்படுவது நின்று போனதால் வெப்பம் அதிகரித்து வெடித்து விட்டிருக்கிறது. இதனால் அணு உலை கதிர் வீச்சு அபாயமும் உண்டாகியிருக்கிறது. பொதுவாகவே இது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிர்கள் பலியாவது இப்பொழுதெல்லாம் சகஜமாகிப்போனது. ஆனால்,  நான் குறிப்பாக ஜப்பானைக் குறித்து வேதனைப்பட இது ஒரு பேரழிவு என்ற ஒரு காரணம் மட்டுமில்லாமல் இன்னொரு காரணமும் இருக்கின்றது. பொதுவாக ஜப்பான் என்றால் வல்லரசு நாடுகளில் ஒன்று, வறுமை இல்லாத தேசம், தொழில்நுட்பத்தில் உயர்ந்த நாடு என்று உங்களைப்போல் தான் நானும் தெரிந்து வைத்திருந்தேன். அதை விட அதிகமாக ஜப்பானை, ஜப்பானியர்களை பற்றி நான் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதைப்பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு.

ஜித்தாவிலிருந்து 170 கிமீ தூரத்தில் மதினா செல்லும் வழியில் இருக்கிறது ராபிக் என்ற சிறிய நகரம். ஒரு நேரத்தில் அதிக வசதிகள் இல்லாத பெரிய கிராமம் போல் இருந்த ராபிக்கில் இன்று பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. காரணம், சவுதியின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக விளங்கும் அராம்கோ என்ற எண்ணெய் நிறுவனம். அது ராபிக்கில் ஒரு மிகப்பெரும் எண்ணெய், எரிவாயு ஆலையை கட்ட முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக அராம்கோ நிறுவனம் ஜப்பானின் புகழ்பெற்ற சுமிட்டோமோ (sumitomo) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி, இருவரும் சேர்ந்து அந்த ஆலையை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. அதில் வரும் வருமானத்தை இரு நிறுவனங்களும் சரி சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து, புது நிறுவனத்திற்கு பெட்ரோராபிக் எனப்பெயரிட்டு ஆலை கட்டும் வேலையை தொடங்கினார்கள். அதன் கட்டுமானத்தின் தலைமை நிர்வாகக் குழுவில்(Project Management Team) நானும் ஒருவனாக 4 வருடங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தேன். அதில் பெரும்பாலோனோர் ஜப்பானியர்கள். மீதி இந்தியர் மற்றும் சவுதியை சேர்ந்தவர்கள். இது தவிர கட்டுமான பகுதியில் வேலை பார்க்கும் எஞ்சினியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களில் கணிசமான ஜப்பானியர்கள் இருந்தனர். எங்களின் புராஜெக்ட் மேனேஜர் தக்கெஹிக்கோ கவாசே (Takehiko Kawase) என்ற ஜப்பானியர் தான். சவுதி வந்த பின் ஜப்பானியர்கள் பலரை நான் பார்த்திருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய கிடைத்த முதல் வாய்ப்பு அது. மற்ற எந்த நாட்டவரையும் விட ஜப்பானியர்கள் என்னை பல வகைகளில் கவர்ந்தனர். வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் அவர்களிடம் பார்த்த பல விஷயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது, கற்றுக்கொள்ள உதவியது.

ஜப்பானியர்களுக்கு தாய் மொழிப்பற்று ரொம்ப அதிகம். அவர்களின் படிப்பு முதல், பார்க்கும் வேலை, பயன்படுத்தும் கம்ப்யூட்டர் என்று எல்லாவற்றிலும் ஜப்பானிய மொழி தான். ஆங்கிலம் என்றாலே அவர்களுக்கு கசப்பு தான். சவுதியில் நாங்கள் வேலை தொடர்பான மின்னஞ்சல், டாக்குமெண்டேஷன் போன்ற எல்லாவற்றிலும் ஆங்கிலத்தை பயன்படுத்தினோம். ஆனால் அவர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பும் போது ஜப்பானிய மொழியில் தான் அனுப்பி கொள்வார்கள். ஆங்கிலம் புரியாமல் பல ஜப்பானியர்கள் கையோடு ஜப்பான் - ஆங்கில அகராதி சாதனத்தை எப்பொழுதும் கையில் வைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் அவர்களின் உடைந்த ஆங்கிலம் எனக்கு புரியவில்லை. T உச்சரிப்பு சுட்டுப்போட்டாலும் அவர்களுக்கு வராது. தேங்க்ஸ் என்பதை சேங்க்ஸ் என்று தான் சொல்வார்கள். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் அவர்கள் மற்றவர்களை மதிக்கும் பண்பு. வயது வித்தியாசம் பார்க்க மாட்டார்கள். பதவியில் உயர்ந்தவர், குறைந்தவர் பார்க்கமாட்டார்கள். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக மிகுந்த மரியாதையுடன் பழகுவார்கள், பேசுவார்கள்.

நாம் மரியாதைக்கு ”சார்” என்று சொல்வது போல் அவர்கள் ”சான்” என்பார்கள்.  நானும் சான் போட்டு தான் எல்லோரையும் கூப்பிடுவேன். இப்படியே பழக்கமாகி அதன் பிறகு சவுதிகளையும் நான் சான் போட்டு கூப்பிட ஆரம்பித்தது பெரிய காமெடி. அவர்கள் முறையில் வணக்கம் சொல்ல உடம்பை கொஞ்சம் முன்பக்கம் வளைத்து செய்வது பார்க்க சுவராஸியமாக இருக்கும். அவர்களிடம் நான் கற்றுக்கொள்ள பல நல்ல விஷயங்கள் இருந்தன. அவர்கள் கடும் உழைப்பாளிகள். வேலை என்று இறங்கி விட்டால் ஊண், உறக்கம் பார்க்க மாட்டார்கள். அதே போல் நேரத்தை பேணுவதில் மிகவும் சிறந்தவர்கள். அலுவலகம் ஏழு மணிக்கு என்றால் அனைவரும் ஆறே முக்காலுக்கே வந்து விடுவார்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கோபமே வராது. மிகவும் பொறுமைசாலிகள். மற்றவர்களை ஊக்கப்படுத்தி வேலை வாங்குவதில் மன்னர்கள். நாங்களெல்லாம் கலர் கலரா உடையுடன் வேலைக்கு போவோம். ஆனால் ஜப்பானியர்களில் புராஜெக்ட் மேனேஜரிலிருந்து கடை நிலை பணியாளர் வரை யூனிஃபார்மில் தான் வருவார்கள். அவர்களின் சாப்பாடை பார்த்தால் ஆச்சரியம் வரும். நம்மை விட மிகவும் குறைவாக சாப்பிடுவார்கள். நம்மை போல் அரிசி சாதம் தான் அவர்களும் சாப்பிடுவார்கள் என்றாலும் அது எவ்வளவு, எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதில் தான் சுவராஸியம் அடங்கி இருக்கிறது. நம்மை போல் அவர்கள் அரிசியை அடுப்பில் வேக வைத்து வடித்து சாப்பிடுவதில்லை. ப்ளாஸ்டிக் பேப்பர்களுக்குள் உருண்டையாக சுற்றிய அரிசியை வைத்திருக்கிறார்கள். சாப்பிடுவதற்கு முன் கொதிக்கும் நீரில் அந்த அரிசி உருண்டைகளை போடுகிறார்கள். 5 நிமிடம் கழித்து எடுத்து சுற்றி இருக்கும் ப்ளாஸ்டிக் பேப்பரை பிரித்து பார்த்தால் சோற்று உருண்டைகள் நம் ஊரில் கிடைக்கும் லட்டு அளவில்..!! ஒரு ஆள் அதிகபட்சம் 3 அல்லது 4 உருண்டைகள் தான் சாப்பிடுகிறார்கள். நமக்கு அதையெல்லாம் வைத்து பசியடக்க முடியுமா.? கூடவே கொஞ்சம் காய்கறி, பழங்கள் அடங்கிய சாலட் சாப்பிடுகிறார்கள். சில நேரங்களில் எங்கள் அலுவலகத்தில் ஜப்பானிய முறையில் விருந்து கொடுப்பார்கள். அதில் பல உணவுகள் நம் ஊர் மசாலா எதுவும் இல்லாததால் சாப்பிடவே முடியாது.

நிறுவன பயிற்சிக்காக சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை அராம்கோ நிறுவனம் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவுக்கு அனுப்பினார்கள். அங்கு போய் வந்த நண்பர்கள் அங்கு கண்டவற்றை அதிசயத்துடன் எங்களிடம் வாய்வலிக்க சொன்னார்கள். அங்குள்ள அதி வேக புல்லட் ட்ரெய்ன், அதிநவீன பாலங்கள், பெரும் அடுக்குமாடி கண்ணாடி கட்டிடங்கள், சுரங்க பாதைகள், பொம்மை போல் இருக்கும் ஜப்பானிய பெண்கள், எங்கும் வரிசை கட்டி நிற்கும் கார்கள், போகுமிடமெல்லாம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், அங்கிருக்கும் விண்ணை முட்டும் விலைவாசி என்று அவர்கள் சொன்ன பல விஷயங்கள் மிகவும் சுவராஸியமாக இருந்தன. இன்றைய தேதியிலும் ஜப்பானிய பொருட்கள் தான் தொழில்நுட்பத்திலும், தரத்திலும் சிறந்தவை. அப்படிப்பட்ட பெருமைகள் கொண்ட ஜப்பான் சிதைந்து நொறுங்கி நிற்கிறது. ஜப்பானுக்கு அழிவு ஒன்றும் புதிதல்ல. அடிக்கடி சுனாமி, பூகம்பம் என சந்தித்துக்கொண்டிருப்பவர்கள். அவ்வளவு ஏன், அமெரிக்கா 1945-ம் வருடம், ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதி ”லிட்டில் பாய்” என்ற அணுகுண்டுகளை வீசி ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற பெரு நகரங்களை முழுதும் அழித்த பின்னும் தங்களின் கடுமையான உழைப்பால் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட கடும் உழைப்பாளிகளை இறைவன் அடிக்கடி இயற்கை சீற்றங்களை கொண்டு சோதித்துக்கொண்டே இருக்கின்றான். வாழ்க்கையை இழந்து நிற்கும் அவர்களுக்கு இப்பொழுது இறைவன் மட்டுமே துணை..!!

செவ்வாய், 15 மார்ச், 2011

காங்கிரஸ் களமிறங்கும் தொகுதிகள்..!! - தேர்தல் ஸ்பெஷல்



தேர்தல் தீபாவளி தொடங்கி விட்டது. கூட்டணிகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சுயேட்சைகள், லெட்டர் பேட் கட்சிகள் கூட சுறுசுறுப்புடன் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள். இப்போதைக்கு திமுகவுடன், பாமக கூட்டணி சேர்ந்ததும், காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டில் பிணக்கு ஏற்பட்டு பிறகு பாமக மற்றும் முஸ்லீம் லீக்கிடம் இருந்து 3 தொகுதிகளை எடுத்து காங்கிரஸுக்கு தானம் செய்ததும் சுவராஸியமான நிகழ்வுகள். அதை விட பெரும் சுவராஸியம் விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை விட்டுக்கொண்டிருந்த ஜெயலலிதாவும், மக்களுடன் மட்டுமே கூட்டணி என வசனம் பேசிக்கொண்டிருந்த விஜயகாந்தும் கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள். இனியும் கட்சி மாற்றம், காட்சி மாற்றம் நிறைய பார்க்கலாம். 

இது வரை உறுதியாகியிருக்கும் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு கீழே:

* திமுக – 121
* காங்கிரஸ் – 63
* பாமக – 30
* விடுதலைச் சிறுத்தைகள் – 10
* கொங்குநாடு முன்னேற்றக் கழகம் – 7
* இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 2
* மூவேந்தர் முன்னேற்றக் கழகம் – 1



காங்கிரஸ் தான் போட்டியிடப்போகும் 63 தொகுதிகளின் பெயர்களை இன்று வெளியிட்டுள்ளது. இதனடிப்படையிலேயே அதிமுக கூட்டணியின் தொகுதி ஒதுக்கீடு இருக்கும் என அரசியல் வட்டாரம் சொல்கிறது.

காங்கிரஸ் போட்டியிடப்போகும் தொகுதிகள் கீழே:

சென்னை மாவட்டம்

1. தி.நகர்
2. அண்ணா நகர்
3. ராயபுரம்
4. மைலாப்பூர்
5. ஆவடி
6. திரு.வி.க.நகர்

திருவள்ளூர் மாவட்டம்

7. மதுரவாயல்
8. பூந்தமல்லி
9. திருத்தணி

காஞ்சிபுரம் மாவட்டம்

10. மதுராந்தகம்
11. ஆலந்தூர்
12. ஸ்ரீபெரும்புதூர்

வேலூர் மாவட்டம்

13. வேலூர்
14. சோளிங்கர்
15. ஆம்பூர்

திருவண்ணாமலை மாவட்டம்

16. செய்யார்
17. கலசப்பாக்கம்

கடலூர் மாவட்டம்

18. விருத்தாச்சலம்

விழுப்புரம் மாவட்டம்

19. ரிஷிவந்தியம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

20. கிருஷ்ணகிரி
21. ஓசூர்

சேலம் மாவட்டம்

22. சேலம் (வடக்கு)
23. ஆத்தூர்

நாமக்கல் மாவட்டம்

24. திருச்செங்கோடு

கோவை மாவட்டம்

25. சிங்காநல்லூர்
26. வால்பாறை
27. தொண்டாமுத்தூர்

திருப்பூர் மாவட்டம்

28. திருப்பூர் (தெற்கு)
29. அவினாசி

ஈரோடு மாவட்டம்

30. மொடக்குறிச்சி
31. ஈரோடு (மேற்கு)
32. காங்கேயம்

நீலகிரி மாவட்டம்

33. ஊட்டி

திண்டுக்கல் மாவட்டம்

34. நிலக்கோட்டை
35. வேடசந்தூர்

நாகப்பட்டினம் மாவட்டம்

36. மயிலாடுதுறை

தஞ்சாவூர் மாவட்டம்

37. பேராவூரணி
38. பட்டுக்கோட்டை
39. பாபநாசம்

திருவாரூர் மாவட்டம்

40. திருத்துறைப்பூண்டி

புதுக்கோட்டை மாவட்டம்

41. அறந்தாங்கி

பெரம்பலூர் மாவட்டம்

42. அரியலூர்

கரூர் மாவட்டம்

43. கரூர்

திருச்சி மாவட்டம்

44. முசிறி
45. மணப்பாறை

மதுரை மாவட்டம்

46. மதுரை (மேற்கு)
47. மதுரை (வடக்கு)
48. திருப்பரங்குன்றம்

ராமநாதபுரம் மாவட்டம்

49. ராமநாதபுரம்
50. பரமக்குடி

சிவகங்கை மாவட்டம்

51. சிவகங்கை
52. திருமயம்
53. காரைக்குடி

விருதுநகர் மாவட்டம்

54. விருதுநகர்

தூத்துக்குடி மாவட்டம்

55. விளாத்திகுளம்
56. ஸ்ரீவைகுண்டம்

நெல்லை மாவட்டம்

57. வாசுதேவநல்லூர்
58. கடையநல்லூர்
59. நாங்குநேரி
60. ராதாபுரம்

கன்னியாகுமரி மாவட்டம்

61. குளச்சல்
62. விளவங்கோடு
63. கிள்ளியூர்

திங்கள், 31 ஜனவரி, 2011

மீளுமா மீனவர்கள் உயிர்..?!!



#tnfisherman தொடர்பான ட்விட்டர்கள் மற்றும் பதிவர்களின் சந்திப்பு நேற்று (30/01/2010) மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் அனைவரின் பங்கும் எப்படி இருக்கலாம் என்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

1. முழுமையான தகவல்கள் தொகுப்பு.
இதுவரை இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட 539 மீனவர்கள் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்ட வேண்டும். அவர்களது பெயர், ஊர், சம்பவம் நடைபெற்ற நாள், இடம் உள்ளிட்டவற்றோடு பத்திரிகைச் செய்திகள், பேட்டிகள் உள்ளிட்ட தரவுகளை முழுமையாக சேகரிக்க வேண்டும். நடைபெறும் பிரச்சனையை பேசுவதற்கு அடிப்படையான தகவல்கள் இவை.

பங்களிப்பு: நேற்று வந்திருந்த நண்பர்களில் சிலர் ஒரு சில பகுதிகளுக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்ட பொறுப்பெடுத்துக் கொண்டனர். மேலும் சிலர், 539 மீனவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் இருப்பதாகவும், அதனை அளிப்பதாகவும் ஒத்துக்கொண்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட நண்பர்கள் தவிர மற்றவர்கள் இது சம்பந்தமான தகவல்கள் உங்களிடம் இருந்தாலோ, அல்லது திரட்டித் தர முடிந்தாலோ பதிவின் கடைசியில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வையுங்கள்.

2. பொதுநல வழக்கு (Public Interest Litigation)
மீனவர் பாதுகாப்பு குறித்து பொது நல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய சந்திப்புக்கு சில வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். இது சம்பந்தமாக நிலுவையில் இருக்கும் ரிட் மனுக்கள் பற்றியும், சட்ட விபரங்களும் அலசப்பட்டன.

பங்களிப்பு: வந்திருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருவர், தான் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். வரும் சனி அல்லது ஞாயிறு வழக்குத் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெறும். மேலும் சில வழக்கறிஞர்களும் அக்கூட்டத்திற்கு வருவார்கள். சட்ட நுணுக்கங்கள் தெரிந்த மற்ற ஆர்வலர்களும் அதில் கலந்துகொள்ளலாம்.

3. ஊடகங்களோடு தொடர்பு
நமது தொடர்ந்த கவன ஈர்ப்பின் மூலம் சில ஊடகங்கள் மீனவர்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், வட இந்திய ஊடகங்கள் இன்னும் பாரா முகமாகவே இருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களின் எடிட்டர்களை சந்தித்து இந்நிலையை விளக்கிச் சொல்லி, மீனவர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நாம் சந்தித்து ஒத்துக்கொள்ள வைப்பதற்கு #tnfisherman தொடர்ந்து ட்ரெண்டில் இருக்கவேண்டியது அவசியம்.

பங்களிப்பு: தமிழ் ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கென ஒரு குழுவினரும், ஆங்கில ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கு சிலரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக ட்ரெண்டில் இருந்து வந்த #tnfisherman இன்று காலையில் சில நிமிடங்கள் ட்ரெண்டில் இல்லாமல் போனது. அப்படி நேராமல், குறைந்த பட்சம் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்டில் நிலைத்து நிற்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. உங்களுக்கு 5 நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் 10 ட்வீட்டுகளாவது அனுப்பி இதனை தொடருங்கள். இது மிக மிக முக்கியமான விஷயம். நாம் சென்று எடிட்டர்களோடு பேசும்போது நான்கு நாட்கள் இருந்துவிட்டு இப்பொழுது இல்லாத ஒன்றைப் பற்றி பேச வேண்டாம் என்று ஒதுக்க முடியாத அளவிற்கு நம்முடைய தொடர் போராட்டம் இருக்கவேண்டும்.

4. ஆன்லைன் பெட்டிஷன்.
பிரதமருக்கு அனுப்புவதற்கென நாம் உருவாக்கியுள்ள ஆன்லைன் பெட்டிஷனில் இன்னும் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. இதனை இன்னும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

பங்களிப்பு: நீங்கள் கையொப்பம் இடுவது மட்டுமின்றி உங்கள் நண்பர்கள், உடன் பணிபுரிவோர், உறவினர்கள் ஆகியோரிடமும் இதனைப் பற்றி எடுத்துரைத்து கையொப்பம் இடச்செய்யுங்கள். இப்பிரச்சனை உங்கள் சுற்று வட்டாரத்தில் விளக்கிச் சொல்லி இன்னும் பல கையொப்பங்கள் பெற்றுக் கொடுங்கள்.

5. அரசியல் கட்சியினரை சந்தித்து அவர்களை குரல் கொடுக்கச் செய்வது.
இதுவரை இப்பிரச்சனையில் கவனம் செலுத்தாத அரசியல் கட்சிகளின் தலைமையை அணுகி, இப்பிரச்சனை குறித்து அவர்களின் நிலைப்படை அறிவது, மற்றும் அவர்களையும் குரல் கொடுக்கச் செய்வது.

பங்களிப்பு: சில நண்பர்கள் தங்களது தொடர்புகள் மூலம் சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க முயல்கின்றனர். உங்களுக்கு அது போன்ற தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்தி சந்திப்புகளுக்கு வகை செய்யுங்கள்.

6. சுஷ்மா ஸ்வராஜ் - நேரில் சந்திப்பது.
வரும் 4 ம் தேதி அன்று பாரதீய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் நாகப்பட்டிணம் வருகின்றார். அப்பொழுது வட இந்திய ஊடகங்களும் அவரது பயணத்தைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். இந்தத் தருணத்தில் அவரை நேரில் சந்தித்து, முழுமையான தகவல்கள் அடங்கிய விளக்கங்களை நாம் நேரில் அளித்தால், மீனவர் பிரச்சனையை பற்றி விரிவான விவாதத்திற்கு வழி ஏற்படக்கூடும்.

பங்களிப்பு: அவரது சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒரு நண்பர் முன்வந்துள்ளார். உங்களுக்கு தொடர்புகள் இருந்து அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் தகவல் தெரிவித்து ஏற்பாடுகள் செய்யுங்கள்.

==================================================================================
#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.


நீங்கள் தகவல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :
savetnfisherman@gmail.com
tnfishermancampaign@gmail.com

http://www.petitiononline.com/TNfisher/petition.html
நன்றி: http://allinall2010.blogspot.com/
Related Posts with Thumbnails