skip to main |
skip to sidebar
நான் ஒரு ஜாக்கிசான் ரசிகன். அவருடைய ஏறக்குறைய எல்லா படங்களையும் பார்த்துவிட்டவன். என்னை பொருத்தவரை ஏற்கனவே பார்த்துவிட்ட ஒரு படத்தை மீண்டும் பார்க்கும் ஆவல் இருந்தால் அது பெரும்பாலும் ஜாக்கிசான் படமாகத்தான் இருக்கும். பொதுவாக நடிகர்கள் திரைப்படங்களில் தங்கள் அதிகபட்ச உழைப்பை கொடுக்க நினைப்பார்கள், ஆனால் இவர் கொடுக்க நினைப்பது உயிரையும் கூட..! பல விபத்துக்களில் இருந்து இவர் உயிர் தப்பியிருக்கிறார். சரி.. அதற்கும் இந்த விழாவுக்கும் என்ன சம்பந்தம்..? இருக்கிறது..!!
ஜாக்கிசானின் பெரும்பாலான படங்களை இந்தியாவில் ரிலீஸ் செய்தவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அதற்காகவே ஆஸ்கார் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அவரின் படங்களின் இந்திய உரிமை பெற்று வெளியிட்டு வந்தார். ஆரம்ப காலகட்டங்களில் நம் ரசிகர்களிடம் ஜாக்கிசான் படங்களுக்கு இருக்கும் பெரும் வரவேற்பை, தியேட்டர்களில் நடக்கும் ஆரவாரங்களை படம் பிடித்து சென்று ஜாக்கியிடம் காட்டினார். அதை பார்த்தவருக்கு இந்திய இரசிகர்களின் மேல் பெரும் அன்பும், மதிப்பும் ஏற்பட்டுவிட்டது. அந்த இந்திய அன்பு நம் தேச நடிகையான மல்லிகா ஷெராவத்தை மித் (Myth) என்ற படத்தில் நடிக்க வைத்தது. அவரின் படங்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து இன்று தமிழ் திரையுலகில் பெரிய தயாரிப்பாளர்களில் ரவிச்சந்திரனும் ஒருவராக வளர்ந்திருக்கிறார். இன்று பெரும் பட்ஜெட் படத்தை கமலை வைத்து தயாரிக்கும் அளவுக்கு அபரிதமான வளர்ச்சி இது. ஜாக்கிக்கும், அவர் இரசிகர்களுக்கும் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார் ரவி என்று தான் சொல்ல வேண்டும்..!
தசாவதாரம் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் ஹைலைட் ஜாக்கி தான். அவரின் குழந்தை தனம், எளிமை இந்த விழாவில் முழுமையாக வெளிப்பட்டது. அவர் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் எழுந்த கரவொலிக்கு எழுந்து அவர்களின் கலாச்சாரப்படி குனிந்து நிமிர்ந்து நன்றி தெரிவித்தார். சின்ன குழந்தை போல் அடிக்கடி இரசிகர்களுடன் சேர்ந்து கை தட்டி குதூகலித்தார். ஒலிநாடா வெளியிட்ட போது பிரித்து கீழே போட்ட காகித குப்பையை எடுத்து சென்று மேடை ஓரத்தில் இருந்தவர்களிடம் கொடுத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. நம் மக்களும் அதற்கு கரவொலியால் தங்கள் பாராட்டை தெரிவித்தார்கள். விஜய்க்கும், கே.எஸ் ரவிக்குமாருக்கும் மேடை பேச்சு வரவில்லை. மம்முட்டி, அமிதாப், கலைஞர், கமல் வழக்கம் போல் நன்றாக பேசினார்கள். சோனி ஆடியோ நிறுவனத்திற்காக பேசியவர் தன் ஆங்கிலத்தில் அருவியாய், அழகாய் கொட்டி மகிழ்வித்தார். மல்லிகா ஷெராவத்தின் பேச்சு, நடவடிக்கைகள் அநாகரீகமாக தெரிந்தது. நம் கலாச்சாரத்துடன் ஒன்றாத பெண் அவர்.
ஜாக்கியின் பேச்சு பெரும் ஹைலைட். அவரால் நம்மவர்களின் பெயரை உச்சரிப்பது மிகவும் கடினமாக இருந்தது. கமலுடன் சேர்ந்து நடிக்கவும், இந்திய திரைப்படங்களில் நடிக்கவும் விரும்புவதாக அவர் தெரிவித்தது இந்தியர்களுக்கு பெருமை. கமல் தன் பேச்சில் ஜாக்கியையும் சேர்த்து தனக்கு 3 சகோதரர்கள் என்று சொன்னதை அவர் மிகவும் இரசித்தார். இந்நிகழ்ச்சி மூலம் தசாவதாரம் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கிறது. அப்படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் கூடியிருக்கிறது. சிவாஜி படத்தின் அதிக பட்ச எதிர்ப்பார்ப்பே அந்த படம் சரியாக ஓடாததற்கு அல்லது படம் சரியில்லை என்ற கருத்து நிலவ காரணமாக அமைந்தது. அதனால் இந்த படம் வெறும் எதிர்ப்பார்ப்பை கூட்டுவது மட்டுமல்லாமல் அதை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். இல்லையென்றால் இந்த படத்தின் சம்பந்தப்பட்ட அனைவரும் விரும்பத்தகாத எதிர்மறை விளைவுகளை பெறுவார்கள்..!! தசாவதாரம் இன்னொரு ஆளவந்தானாகும்..!!! கவனம் கமல்..!!!
இந்த படத்தை இ. அ. 23-ம் புலிகேசியை பார்க்க போகும் மனநிலைக்கு என்னை தயார் படுத்திக்கொண்டு தான் பார்க்க தொடங்கினேன். ஆனால், படத்தின் ஆரம்பத்திலேயே மேன்ஷன் வாழ்க்கையை அப்பட்டமாக காட்டுவதிலிருந்தே இது யதார்த்தத்தை சொல்லும் படம் என புரியத்தொடங்கியது. இன்றைய எதார்த்த உலகில் பெரும் கஷ்டத்தில் இருக்கும் இரு இளைஞர்களுக்கு உதவ காக்கும் கடவுள் விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகம் வந்தால் என்ன நடக்கும் என்று கற்பனையில் படத்தை உருவாக்கியிருக்கிறார். மக்களை சிரிக்க வைக்கும் படம் என்று போனால் நம்மை சிந்திக்கச்சொல்லி பாடமே நடத்தியிருக்கிறார் சிம்பு தேவன். ஆனால், யாருக்கு தான் பாடம் பிடிக்கிறது..? அதனால் இந்த படம் வரவேற்பை பெறாமல் போக வழக்கம் போல் நிறைய வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள் வற்புறுத்தும் கருத்துக்களில் பெரும்பாலும் நாம் பின்பற்ற அவசியமானவை. உழைப்பின்றி சோம்பி திரிவது, இந்த போட்டி உலகில் கொஞ்சமும் எடுபடாத தன் கல்வி தகுதியை பெருமை பேசி திரிவது. 5 பைசாவுக்கு வக்கில்லாவிட்டாலும் காதல் என்கிற பெயரில் கண்ட பெண்கள் பின்னால் அலைவது, கடவுளின் பெயரால் களவாணித்தனம் செய்வது, பொய் சொல்வதையே பிழைப்பாக கொண்டிருப்பது, வெட்டி பந்தா செய்வது, கெட்ட சகவாசங்களில் ஈடுபடுவது போன்ற இவையெல்லாம் சரி என்று சொல்பவர்களை தவிர மற்றவர்களுக்கு இந்த படம் பிடிக்கும்.
கண்ணால் தெரியாத கடவுளின் பெயரால் நாம் நடத்தும் கேலிக்கூத்துக்களை இந்த படத்தில் வெகு அழகாக படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் இயக்குநர். கடவுள் பக்தி என்பது வெறும் வியாபாரமாக்கப்பட்டதை பல இடங்களில் பெரும் கோபத்துடன் குத்திக்காட்டி உணர்த்துகிறார். அதற்கு கடவுள் நம்பிக்கை அற்ற பிரகாஷ்ராஜ் வெகு அழகாக பொருந்துகிறார். கடவுளை கூட தன் சுயநலத்துக்காக தவறாக பயன்படுத்த, ஏமாற்ற தயங்கமாட்டார்கள் என்று காட்டியிருப்பது வாழ்வியல் எதார்த்தம். கடவுள் என்றால் யார் என்று ராஜேஷிடம் கடவுள் பிரகாஷ்ராஜ் கொடுக்கும் விளக்கம் வெகு அற்புதம். படத்தின் நாயகன் என்று சந்தானம் சொல்லப்பட்டாலும் உண்மையில் கடவுளாக வரும் பிரகாஷ்ராஜ் தான் கதையின் நாயகன். கடவுளாக பூமியில் அவதரித்த பிறகு சந்தானத்தையும், கஞ்சா கருப்பையும் தன் நடிப்பினால் தூக்கி தூர வீசி விடுகிறார். மொக்கை ஜோக்குகள், இரட்டை அர்த்த வசனங்கள் சொல்லாத சந்தானத்தை நம்மால் நம்ப முடியாமல் அவர் தான் சந்தானமா என்று எண்ண வைத்திருக்கிறார். நடிப்பு நன்றாக வருகிறது. முயற்சித்தால் தமிழக முதலமைச்சர் நாற்காலியை குறிவைக்கும் தகுதியை அடையலாம்..!
கஞ்சா கருப்பு என்னண்ணே இப்புடி சொல்லிப்புட்டிய..? என்ற தன் பாணி நடிப்பில் சிரிக்க வைத்திருக்கிறார். இரண்டாம் கதாநாயகனாக வளர்ந்திருக்கும் க.கருப்புவின் இந்த அவதாரம் அவரின் வெள்ளந்தி தனமான நடிப்புக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். ஊரிலிருந்து வந்த சொந்தக்காரனிடம் புருடா விடுவது, காவல் நிலையத்தில் பெண் காவல் அதிகாரியையே கமெண்ட் அடித்து தர்ம அடி வாங்கும் இடங்களில் சிரிப்பு பீறிடுகிறது. நிறைய இடங்களில் நடிப்பில் சந்தானத்தை பின்னுக்கு தள்ளி விடுகிறார். ஒரு நகைச்சுவைப்படத்தில் பெரும் நகைச்சுவை பஞ்சம் ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை நிறைய நகைச்சுவை இருந்தால் கருத்தையும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு விடுவார்களோ என்ற பயமாக இருக்கலாம்.
ஆக மொத்தத்தில் பார்த்து சிரிக்கவும், சிந்திக்கவும் ஏற்ற படம். சிரிப்பதற்கு பதிலாக சிந்திக்க தூண்டியதற்காக சிம்பு தேவனுக்கு ஷொட்டு..! ஆனால், சிரிக்க நினைத்த நேரத்தில் சிந்திக்க சொன்னதால் அவருக்கு குட்டு..!!
ராசா: அசின் ஃபோன் நம்பர் வேணுமா..?
சுகந்த ப்ரீதன்: ம்ம்ம்..!
ராசா: தப்புடா செல்லம்..! அத்தை ஃபோன் நம்பர் உனக்கு எதுக்கு..?
அதான் மாமா நம்பர் இருக்கில்ல..!! அது போதும்..!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வணிகவியல் பேராசிரியர்: ஒரு தொழில் செய்ய தேவைப்படும் மிக முக்கிய ஆதார மூலதனம்..?
மாணவன்: மாமனார்..!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்போ நீங்க உங்க செல்லுல TENNIS பார்க்கணுமா..?
அது ரொம்ப சுலபம்..!!
is is is is is
is is is is is
இப்ப எண்ணி பாருங்க.. Ten is இருக்கும்.!! என்ன தேடறீங்க..?? இதயம்... எஸ்ஸாயிடு..!!
உன் திருமண தேதியை தெரிந்து கொள்ள வேண்டுமா..?
Pls. visit, www.mundirikottai.com
இப்ப என்ன உனக்கு அவசரம்..?!!
போ.. போ.. போயி சுட்டி டிவி பாரு..!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராசா: உங்களுக்கு நீச்சல் தெரியுமா..?
இதயம்: தெரியாது..!
ராசா: உங்களை விட நாய் மேல்..! அது நீந்தும்..!
இதயம்: உங்களுக்கு நீச்சல் தெரியுமா..?
ராசா: தெரியுமே..!!
இதயம்: அப்படின்னா உங்களுக்கும், நாய்க்கும் என்ன வித்தியாசம்..?!!
ராசா: !!!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பு: ஏன் பாப்கார்ன் சூடான பாத்திரத்தில் போட்டதும் குதிக்குது..?!!
ஓவியன்: ம்ம்ம்... நீ அதுல உட்கார்ந்து பார்.. ஏன் குதிக்குதுன்னு உனக்கே தெரியும்..!!!
தீவிரவாதிகள் எங்கள் கல்லூரி பேராசிரியர்களை பணயக்கைதிகளாக பிடித்துக்கொண்டு 10 கோடி ரூபாய் கேட்கிறார்கள். கொடுக்கவில்லை என்றால் அவர்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே தயவு செய்து உங்கள் பங்கை அளியுங்கள்..!
என்னது நான் எவ்வளவு கொடுத்தேனா..?
நான் 50 லிட்டர் கொடுத்திருக்கிறேன்..!!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போலீஸ்: உம்பேரென்ன...?
அவன்: குப்புசாமி..!
போலீஸ்: என்ன தொழில் பண்றே...?
அவன்: உப்பு சாமி..!
போலீஸ்: ஏன் தள்ளாடுறே..?
அவன்: மப்பு சாமி..!!
போலீஸ்: மாமூல் எடு..!
அவன்: தப்பு சாமி..!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கைன்னா....
1000 மேடு, பள்ளம்
1000 கல்லு, முள்ளு எல்லாம் இருக்கத்தான் செய்யும்.
அதையெல்லாம் கடந்து போகணும்னா.....
நல்ல குவாலிட்டியான செருப்பு வாங்கி போட்டுக்கங்க..!!!!
கண்டக்டர்: யோவ் டிரைவர்..! என்னய்யா இது... நான் விசிலடிச்சும் வண்டி நிக்காம போகுது..?!
டிரைவர்: போயா புண்ணாக்கு...! நான் ப்ரேக் அடிச்சே இங்க வண்டி நிக்கல..!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் உன் மேல வச்சிருக்கிற அன்பு வெங்காயம் மாதிரி..!
அதை கட் பண்ண நினைச்சா கண்ணீர் உனக்குத்தான்..!! 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கப்பல் கேப்டன்: (மகிழ்ச்சியில்) நண்பர்களே.. கரை தெரியுது.. கரை தெரியுது..!!
ராசா: சர்ஃப் எக்ஸல் போடுங்க.. அந்தக்கறை... இந்தக்கறை... எந்த கறைனாலும் போய்டும்..!
இந்தியாவுல...
தோண்டினா தங்கம் கிடைக்கும்.!
வெட்டினா வெள்ளி கிடைக்கும்.!
அடிச்சா அலுமினியம் கிடைக்கும்.!
இடிச்சா இரும்பு கிடைக்கும்.!
ஆனா,
படிச்சா வேலை மட்டும் கிடைக்காது..!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதயம்: மாப்ள..சிகரெட் பிடிச்சா கேன்ஸர் வரும்னு டாக்டர் சொல்றது உண்மையா..?
ராஜா: தெரியல மச்சான்.. நான் பிடிச்சா புகை மட்டும் தான் வருது..!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்: டாக்டர்... டாக்டர்..! என் வீட்டுக்காரர் தவறுதலா பெட்ரோலை குடிச்சிட்டார்.. என்ன செய்றது..?
டாக்டர்: அவரை 2, 3 கிலோ மீட்டர் ஓடச்சொல்லுங்க.. காலி ஆயிடும்..!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------