நேரம்:

ஞாயிறு, 20 ஏப்ரல், 2008

இதயத்தின் இம்சை கடிகள்..!-08

தீவிரவாதிகள் எங்கள் கல்லூரி பேராசிரியர்களை பணயக்கைதிகளாக பிடித்துக்கொண்டு 10 கோடி ரூபாய் கேட்கிறார்கள். கொடுக்கவில்லை என்றால் அவர்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே தயவு செய்து உங்கள் பங்கை அளியுங்கள்..!

என்னது நான் எவ்வளவு கொடுத்தேனா..?
நான் 50 லிட்டர் கொடுத்திருக்கிறேன்..!!!!!!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போலீஸ்: உம்பேரென்ன...?

அவன்: குப்புசாமி..!

போலீஸ்: என்ன தொழில் பண்றே...?

அவன்: உப்பு சாமி..!

போலீஸ்: ஏன் தள்ளாடுறே..?

அவன்: மப்பு சாமி..!!

போலீஸ்: மாமூல் எடு..!

அவன்: தப்பு சாமி..!!!

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க்கைன்னா....
1000 மேடு, பள்ளம்
1000 கல்லு, முள்ளு எல்லாம் இருக்கத்தான் செய்யும்.
அதையெல்லாம் கடந்து போகணும்னா.....




நல்ல குவாலிட்டியான செருப்பு வாங்கி போட்டுக்கங்க..!!!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails