நேரம்:

புதன், 16 ஏப்ரல், 2008

கடவுள்களுக்கு கண்டனம்..!

தெரியாமல் போனது
தெய்வத்தின் பலவீனங்கள்..!!
அவதார புருஷர்களுக்கு
ஆயுள் மிகக்குறைவு..!!
பாலாபிஷேக கடவுளை
பல்வலி படுத்துகிறதாம்..!!

பகுத்தறிவை பயன்படுத்தாமல்
பாழாகும் கூட்டம் இங்கே..!
ஏழையின் வயிற்றிலடித்து
ஏய்த்துப்பிழைக்கும் இறைவன்கள்
இறுமாப்புடன் வரிசையில்.!!

என்ன கொடுமையடா இது..?
எப்போது சிலிர்த்து எழும்
சிந்தனை பறவை
இந்த சீர்கெட்ட மாக்களிடம்..?

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails