பெண்ணே..!
கண்ணில் உனை நான்
கண்ட நேரம் கனவானாய்.!
உன்னை பிரிய மனமின்றி
என்னில் உனை ஒளித்தேன்.!
கனவாய் போன கன்னியின்
கணவனானது காதலின் வரம்.!
மண்ணில் நான் கண்ட
மாணிக்க கல் உனக்கு
என்னில் பிடிக்க சிறப்பாய்
ஏதும் இருக்கிறதா..?
பொன்னின் தரம் கொண்ட
பெண்ணின் வடிவம் நீ.!
விண்ணின் உயரமாய் காதலை
உன்னில் க(கொ)ண்டேன்..!
வரமளிக்கா கடவுளுக்கும்
வருடா வருடம் திருவிழா..!
அனுதினமும் அன்பு காட்டி எனை
ஆளும் தேவதைக்கு எடுப்பேன்
தினந்தோறும் திருவிழா..!!
நீ வேறு, நான் வேறு – புதிய தொடர்
-
Pa Raghavan
பாகிஸ்தானின் முகம் என்று நாம் அறிந்த ஒன்றனுக்கு அப்பால் இன்னொரு முகம்
அதற்குண்டு. அது இன்னும் பயங்கரமானது. மேலும் கொடூரமானது. ஈவு இரக்கமற்றது...
6 நாட்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக