நேரம்:

புதன், 16 ஏப்ரல், 2008

பிரகாஷ்ராஜ்-லலிதா குமாரி: விவாகரத்து.!

நடிகர், நடிகையர் குறைந்த கால அவகாசத்தில் தங்களுக்கு கிடைக்கும் அதீத பணத்திற்கும், பொருளுக்கும் கிடைக்கும் விலை தான் இப்படி சொந்த வாழ்க்கையில் தோற்றுப்போவது. இதில் மிகவும் பாதிக்கப்படுவது நடிகைகள் தான். பொதுவாகவே திரையுலகம் (நடிக்கும்) பெண்களை ஒழுக்கத்தோடும் உண்மையோடும் இருக்கவிடுவதில்லை. அவற்றை அவர்கள் பலி கொடுப்பதால் கிடைப்பது தான் பணமும், புகழும். அதன் பிரதிபலனாக தான் பெரும்பாலானவர்கள் சொந்த வாழ்க்கையில் தோற்கிறார்கள். அதன் பிறகு காலத்தை ஓட்ட முன்பை விட மிக கேவலமானவற்றை வேறு வழியில்லாமல் அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. நடிகர்கள் நடிப்பது சினிமாவில் தான் என்றாலும் சமூகம் அவர்களை நிஜத்திலும் நடிக்க வேண்டிய நிலையை உண்டாக்கி விடுகிறது.

பிரகாஷ் ராஜ் நல்ல நடிகர் மற்றும் நல்ல மனிதர் என்பதை அவர் நடித்த படம்+அவர் தயாரித்த படங்களை வைத்து நம்புகிறேன். ஆனால், அவர் பொதுவாழ்க்கையில் இருப்பவர் என்பதால் ஒழுக்கத்தை பேணுவதும் அவசியமே..! இந்த பிரிவிற்கு இருவரில் யார் காரணம் என்பது தெரியாமல் யாரையும் குறை சொல்ல கூடாது. அது மட்டுமல்லாமல் ஒரு நடிகரின் அந்தரங்க வாழ்க்கையில் அதிக ஆர்வம் காட்டுவது நமக்கு சினிமா மேல் உள்ள அதீத மோகத்தை தான் காட்டுகிறது. மணமுறிவு எல்லா துறையினர்களிடமும் இருக்கிறதென்றாலும், இந்த துறையில் தான் அதிகம். நம்மால் அதிகம் பேசப்படுகிறது. இது தமிழர்களின் தலையெழுத்து. நம்முடைய கடமை நல்ல திரைப்படங்களை வரவேற்பது, அதில் நடிப்பவர்களை பாராட்டுவது மட்டுமே..!!

ஒரு நடிகை கணவனாக நடிப்பவனின் அருகாமையை நடிப்பின் மூலம் பெற்ற பிறகு, உண்மையான கணவன் தரும் அருகாமை குடும்ப பெண்களுக்கு கிடைப்பது போன்ற இனிமையை தரும் என நம்புகிறீர்களா..? இதே போல் காதலையும் சிந்தித்தால் நடிக, நடிகர்களின் ஆயுள் பலவீனத்திற்கு காரணம் புரியும். ஒரு சராசரி மனிதனே ல.குமாரியை மணக்க விரும்பாத போது பி.ராஜ் மணக்க காரணம் காதல் என்பதை விட சூழ்நிலை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். காரணம், அப்போது பி.ராஜ் வாய்ப்பு தேடும் சிறிய நடிகர். ல.குமாரி வாய்ப்பே இல்லாத வாடகை வீடு தர வாய்ப்புள்ள நடிகை. தங்கள் பலவீனங்களை மறைத்து ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்ள அவர்கள் வைத்துக்கொண்ட பெயர் தான் காதல்..!!

பணம் புகழ் வந்தாலே அதற்கு தகுந்தாற் போல் தன்னை மாற்றிக்கொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில் ஒரு ஆபாச நடிகையின் தங்கையை இத்தனை நாளும் வாழ வைத்ததே பெரிய விஷயம் தான். பல பிரச்சினைகளுக்கு நடுவிலும் கணவன், மனைவி உறவை கட்டி வைப்பது அவர்களுக்குள் இருக்கும் அந்நியோன்யம். சினிமாவில் அதீத அந்நியோன்யத்தை மற்ற நடிக, நடிகைகளுடன் கேமராவிற்கு முன் பார்த்து விடுவதாலோ அல்லது நடித்துவிடுவதாலோ என்னவோ நிஜ உறவுக்கு அர்த்தமில்லாமல் போய் விடுகிறது. இது தான் இந்த துறையினரின் வாழ்க்கை தோல்விக்கு பெரும் காரணம்.!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails