அம்மா..!
தனக்கென்று வாழா
தன்னிகரற்ற ஜீவன் நீ..!
கணக்கின்றி இரவுகளில்
கண் விழித்து காத்தவள் நீ..!
எனக்கென்று உதிரம் தந்த
என் அன்னை நீ..!
பிணக்கென்ற நேரமெல்லாம்
பிள்ளை பாசம் பொழிந்தவள் நீ..!
உனக்கென்று எதுவும் தேடா
உத்தம பெண் நீ..!
அன்னை வடிவில் வந்த
அன்பின் அவதாரம் நீ.!
என்னை காத்து வளர்த்த
என் இதய தெய்வம் நீ..!
கண்ணின் இமை போல்
கருத்தாய் பார்த்தவள் நீ..!
தன்னலம் மறந்தே போன
தகைமை வாய்ந்த தாய் நீ..!
என்ன செய்து கடன் தீர்ப்பேன்..?
என்று உன் மடி பார்ப்பேன்..?
என் செல்லத்தாயே...
எனக்கு எல்லாம் நீயே..!!
குழந்தை மொழி - சித்திரக் கதை
-
நான் எழுதிய 'குழந்தை மொழி' என்னும் சொற் சித்திரத்தை - AI மூலம் ஒரு
சித்திரக்கதையாக்கிப் பார்த்திருக்கிறேன்.
அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
(படத்...
1 நாள் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக