அம்மா..!
தனக்கென்று வாழா
தன்னிகரற்ற ஜீவன் நீ..!
கணக்கின்றி இரவுகளில்
கண் விழித்து காத்தவள் நீ..!
எனக்கென்று உதிரம் தந்த
என் அன்னை நீ..!
பிணக்கென்ற நேரமெல்லாம்
பிள்ளை பாசம் பொழிந்தவள் நீ..!
உனக்கென்று எதுவும் தேடா
உத்தம பெண் நீ..!
அன்னை வடிவில் வந்த
அன்பின் அவதாரம் நீ.!
என்னை காத்து வளர்த்த
என் இதய தெய்வம் நீ..!
கண்ணின் இமை போல்
கருத்தாய் பார்த்தவள் நீ..!
தன்னலம் மறந்தே போன
தகைமை வாய்ந்த தாய் நீ..!
என்ன செய்து கடன் தீர்ப்பேன்..?
என்று உன் மடி பார்ப்பேன்..?
என் செல்லத்தாயே...
எனக்கு எல்லாம் நீயே..!!
வாசன் மலர்
-
Pa Raghavan
உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம்
ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில் இருக்கும் எந்தப்
...
3 நாட்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக