நேரம்:

ஞாயிறு, 20 ஏப்ரல், 2008

இதயத்தின் இம்சை கடிகள்..!

தினமும் இந்த மந்திரத்தை கோவில் முன்னாடி நின்று சொன்னா நீங்கள் சீக்கிரம் கோடீஸ்வரன் ஆவீர்கள். அப்படி ஆகவில்லை என்றால் ஏன் என்று என்னைக்கேளுங்கள்..!! சரி.. அதென்ன மந்திரம்...?!! கீழே போய் பாருங்க.!!

-





-





-



-




-




-




அய்யா... தர்மம் பண்ணுங்க சாமீ...!!


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------



நடிகர் விஜய்: சார்.... நம்ம படத்தில காமெடியே இல்லையே..!! ஏன்..?

டைரக்டர் பரதன்: படத்துக்கு கூட பேர் அழகிய தமிழ் மகன்னு தான் வச்சேன். அதுக்கு ஏதாவது கேள்வி கேட்டீங்களா..?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


மிரட்டல் கவிதை:

காதலித்து பார் கவிதை வரும்..!
பிரிந்து பார் சோகம் வரும்..!
அதை நினைத்து பார் அழுகை வரும்.!
என்னை மறந்து பார்..
அடிக்கிற அடியில் ஆம்புலன்ஸே வரும்..!!



கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails