நேரம்:

புதன், 16 ஏப்ரல், 2008

பிரியாத பிரிய சகி..!

நிஜமில்லை நம் நீண்ட பிரிவும்,
நெஞ்சை உலுக்கும் தனிமையும்..!
உள்ளுக்குள் உறைந்திருக்கும்
உன்னுடனேயே என் பொழுதுகள்
ஒவ்வொரு நிமிடமாய் கரைகிறது!

நம் இனிய நினைவுகள் கை கோர்க்க..
பகிர்ந்து கொண்டவை பக்கமிருக்க..
என் இதயம் எப்போதும் போல்
காதலை கசிந்த படி..!

எனக்கொன்றும் வித்தியாசமோ,
விநோதமோ தெரியவில்லை..!
உன்னை பிரிகையில்
நான் தான் சொன்னேனே..
உன்னுள் இருக்கும் என்னை
வெளியே தேடாதே என்று..!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails