நேரம்:

புதன், 16 ஏப்ரல், 2008

செல்வா பெருமையுடன் வழங்கும் சந்துல மிதி..!!

சந்திரமுகியில் வந்த மிகப்பிரபலமான ரஜினி, வடிவேலு நகைச்சுவை உங்களுக்கு தெரிந்திருக்கும். பேய் பங்களாவை பார்க்க போய், அங்கே வடிவேலுவை தனியாக விட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார் ரஜினி..!! அந்த காட்சியை அப்படியே கொஞ்சம் உல்டா செய்து இங்கே வேறு விதமாக தந்திருக்கிறேன். படித்துவிட்டு பதிலிடுங்கள்..!!


செல்வா பெருமையுடன் வழங்கும் சந்துல மிதி..!!


நம் இலக்கியச்சோலை செல்வாவுக்கு அது திருமணமான புதிது..! தம்பதிகள் இருவரும் வீட்டின் பின்பகுதியில் ஜாலியாக நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். செல்வா தன் மனைவியின் தோளில் கையை போட்டவாறு மனைவியிடம் கேட்கிறார்....

செல்வா: ஏம்மா.... என்னைப்பத்தி நம்ம உறவுக்காரங்க என்ன பேசிக்கிறாங்க..?

திருமதி. செல்வா: அதை ஏன் கேட்கறீங்க..? நீங்க நல்லவரில்லையாம்..!

செல்வா: பொறாமை பிடிச்சவனுங்க..!!

திருமதி. செல்வா: நீங்க யாருக்கும் உதவவே மாட்டீங்களாம்..!!

செல்வா: சின்னப்பசங்க..!!

திருமதி. செல்வா: உங்களுக்கு மத்தவங்களை மதிக்க தெரியாதாம்..!!

செல்வா: கெட்ட எண்ணம் புடிச்சவனுங்க..!!

திருமதி. செல்வா: நீங்க என்னை லவ் பண்ணவேயில்லையாம்..!!

செல்வா: புரியாத பசங்க..!!

திருமதி. செல்வா: நீங்க எங்க சொந்தக்காரங்களை மதிக்கவே மாட்டீங்களாம்..!!

செல்வா: திருட்டுப்பசங்க...!

திருமதி. செல்வா: என்னை கடைசி வரை வச்சி வாழ வைக்க மாட்டீங்களாம்.!!

செல்வா: அரைவேக்காடுங்க..!!

திருமதி. செல்வா: என் ஆசையை நிறைவேத்தவே மாட்டீங்களாம்..!

செல்வா: முட்டாள் பசங்க..!!

திருமதி. செல்வா: நான் என்ன கேட்டாலும் வாங்கி தரமாட்டீங்களாம்...!!

செல்வா: தூண்டிவிடுற பசங்க.!!

திருமதி. செல்வா: அதுமட்டுமில்லாம லலிதா ஜூவல்லரில புதுசா வந்திருக்கிற அரையடி நீளமும், 25 பவுன் எடையும் உள்ள நெக்லஸை இன்னிக்கு நீங்க எனக்கு வாங்கி தரமாட்டீங்களாம்...!!

கடைசியாக சொன்னதை கேட்டதும் செல்வாவின் முகம் திடீரென்று மாறுகிறது..!!

நெ...நெ...நெக்...நெக்....நெக்கு... நெக்..நெ...நெக்கு..நெக்...நெக்...(திருமதி சொன்ன நகை கொடுத்த அதிர்ச்சியில் உயிர் சிக்கிக்கொண்டது போல் செல்வா திக்க, அது தெரியாமல் கணவருக்கு விக்குவதாக நினைத்து வீட்டினுள்ளே ஓடிப்போய் செம்பில் தண்ணீர் கொண்டு வருகிறார். அவர் திரும்பி வந்து பார்த்தால் செல்வா முதற்கொண்டு அங்கே ஒரு ஈ, காக்காய் கூட காணோம்..!!)

அதிர்ச்சியுடன் தன் கணவரை கூப்பிடுகிறார்..!!
செல்வா...செல்லு...!! செல்லு...!! செல்...(எந்த பதிலுமில்லை..!!!) செல்வா..!! எனக்கு குடுத்துட்டான்யா அல்வா.!!! என்ற அலறி அழுதபடி அவரை சந்தில் மிதிக்க தேடி வீட்டுக்குள் ஓடுகிறார்..!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails