அன்புத்தேனை சேகரிக்க
அனுதினமும் அலையும்
ஆண் வண்ணத்துப்பூச்சி நான்..!
அள்ள அள்ளக்குறையா
காதல் தேனை கனிவுடன்
தரும் வண்ண மலர் நீ..!
தேன் குடித்து நானும்,
தேன் கொடுத்து நீயும்
களைக்காது போனாலும்
போதுமென்று காலம் ஒரு நாள்
பொறாமையுடன் சொல்லிற்று.!!
காலத்தின் கட்டளையை
கவலையுடன் ஏற்றோம்..!!
பிரிவென்பது நம்மை
பிரித்து போட்டாலும்
என் வண்ணம் உன்னிலும்
உன் மணம் என் உடலிலுமாய்
இருந்து உயிரோடு வைத்திருக்கிறது
நம் பூங்காவன காதலை..!!
குழந்தை மொழி - சித்திரக் கதை
-
நான் எழுதிய 'குழந்தை மொழி' என்னும் சொற் சித்திரத்தை - AI மூலம் ஒரு
சித்திரக்கதையாக்கிப் பார்த்திருக்கிறேன்.
அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
(படத்...
1 நாள் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக