அன்புத்தேனை சேகரிக்க
அனுதினமும் அலையும்
ஆண் வண்ணத்துப்பூச்சி நான்..!
அள்ள அள்ளக்குறையா
காதல் தேனை கனிவுடன்
தரும் வண்ண மலர் நீ..!
தேன் குடித்து நானும்,
தேன் கொடுத்து நீயும்
களைக்காது போனாலும்
போதுமென்று காலம் ஒரு நாள்
பொறாமையுடன் சொல்லிற்று.!!
காலத்தின் கட்டளையை
கவலையுடன் ஏற்றோம்..!!
பிரிவென்பது நம்மை
பிரித்து போட்டாலும்
என் வண்ணம் உன்னிலும்
உன் மணம் என் உடலிலுமாய்
இருந்து உயிரோடு வைத்திருக்கிறது
நம் பூங்காவன காதலை..!!
பர்க்-இ-அல்பானி என்ற ரவிவர்மா ஓவியம்
-
"பர்க்-இ-அல்பானி" என்று அழைக்கப்படும் இந்த ஓவியம், இஸ்லாமிய வரலாற்றில் மிக
முக்கியமான ஆன்மீகப் பயணமான மிஃராஜ் நிகழ்வைச் சித்தரிக்கும் ஒரு
கலைப்படைப்பாகு...
1 வாரம் முன்பு



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக