அன்புத்தேனை சேகரிக்க
அனுதினமும் அலையும்
ஆண் வண்ணத்துப்பூச்சி நான்..!
அள்ள அள்ளக்குறையா
காதல் தேனை கனிவுடன்
தரும் வண்ண மலர் நீ..!
தேன் குடித்து நானும்,
தேன் கொடுத்து நீயும்
களைக்காது போனாலும்
போதுமென்று காலம் ஒரு நாள்
பொறாமையுடன் சொல்லிற்று.!!
காலத்தின் கட்டளையை
கவலையுடன் ஏற்றோம்..!!
பிரிவென்பது நம்மை
பிரித்து போட்டாலும்
என் வண்ணம் உன்னிலும்
உன் மணம் என் உடலிலுமாய்
இருந்து உயிரோடு வைத்திருக்கிறது
நம் பூங்காவன காதலை..!!
சுற்றிப் படரும் தீ
-
"இதெல்லாம் மூலப் பிரதியில் சொல்லவே இல்லப்பா. இவங்களா எதையாவது
எழுதிக்கிறாங்க" என்று சில உரையாசிரியர்களைப் பற்றிக் கிண்டலடிப்பார்கள்.
யாப்பிலக்கணம், அணி...
4 நாட்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக