நேரம்:

புதன், 16 ஏப்ரல், 2008

பெண்ணின் பெருமைகள்..! (தாய்) - 01

தாய்..! இந்த உலகில் உள்ள அனைத்து படைப்புகளையும் விட ஒரு அற்புத படைப்பு இருக்குமென்றால் அதை நான் தாய் தான் என்று சொல்வேன். தனக்கென்று எந்த ஒரு தேவைகளும் இல்லாமல் பிறர்க்கென்று வாழ்ந்து இந்த உலகை உய்வித்துக் கொண்டிருக்கும் உன்னதம் தான் தாய். அந்த உன்னதத்தைப் பற்றி உச்சி முகர்ந்து பெருமை உரைத்துத் தா‎ன் தெரிய வேண்டும் எ‎ன்ற அவச்�யம் இல்லாவிட்டாலும், நம்மைப் பெற்ற கடனை என் எழுத்து இம்மியளவு குறைத்தால் குளிர்ந்து போவேன். உங்களிடம் நான் ஒரு சிறு பொருளை தந்து உங்களிடமே இது இருக்க வேண்டும், படுக்கும் போது கூட பக்கத்தில் வைத்து விட வேண்டாம் என்றால் எத்தனை நாள் வைத்திருப்பீர்கள். ஒரு நாள் முடியுமா உங்களால்..? ஆனால் தாய் தன் வயிற்றில் கருக்கொள்ளும் சிசுவை பத்து மாதங்களாக அது கொடுக்கும் தொந்தரவை, தொல்லைகளை துடைத்து தூர எறிந்து வ்�ட்டு, அதையே இன்பமாய் ஏற்றுக் கொள்கிறாளே..! அந்த குணம் வருமா இந்த ஆண் வர்க்க வானரங்களுக்கு..! சேயை சுமக்கும் பொழுதில் ஒழுங்காக உண்ண முடியாது, உடை உடுக்க முடியாது, உறங்க முடியாது, எண்ணியபடி நடக்க முடியாது. ஆனாலும், அடி வயிற்றில் குடி கொண்டிருக்கும் குழந்தையே அவள் உலகமாகிறது.

நீங்கள் கருவைச் சுமக்கும் கர்ப்பிணிகளை கவனித்திருக்கிறீர்களா..? நடக்க அல்ல நகர கூட நான்கு நிமிட யோசிக்க வேண்டிய நிலை இருந்தும், அதைப் பற்றிய வேதனையோ, வருத்தமோ இல்லாமல் முகத்தில் புதுப்பொலிவோடும், இழையோடும் புன்னகையோடும் காணும் அந்த எதிர்காலத் தாயை காணும் பொழுது எ‎ன் மனம் ஈரமாய் கச்�யும். ஒரு பிள்ளையைப் பெறுவதில் ஆணுடைய பங்கு படுக்கையறை சம்பந்தப்பட்டது மட்டுமே. ஆனால், அந்தப் பிள்ளையை சுமந்து, பெற்று, வளர்ப்பது எ‎ன்பது பெண்ணுக்கு பெரும்பாடாகும். ஒருவன் எவ்வளவு மோசமானவனாக, கெட்டவனாக, அயோக்கியனாக இருந்தாலும் சரி..! அவன் தாயிடம் அவனைப் பற்றி கேளுங்கள். �என் பிள்ளையா..? அவனைப் போல் வருமா..? அவனுக்கு ஒன்றுமே தெரியாது, அவன் குழந்தை மாதிரி..!� என்று தான் பதில் வரும். நீங்கள் கேட்டது �ஆட்டோ� சங்கர், �ஆசிரமப் புகழ்� பிரேமானந்தா, �இன்டர்நெட் புகழ்� டாக்டர் பிரகாஷ், �அயோத்தியாக்குப்பம்� வீரமணி ஆகியோரைப் பற்றி இருந்தால் கூட இருந்தால் கூட அப்படித்தா‎ன் சொல்வார்கள்..! அப்படி அவர்கள் சொல்வது தவறில்லை. அது தாயி‎ன் தனித் தன்மை. தாய்மைக்கு வெறுக்கத் தெரியாது, கோபப்பட தெரியாது, சுயநலம் தெரியாது, தற்பெருமை தெரியாது, ஆசைகள் தெரியாது. அவளுக்கு தெரிந்தது மூன்றே மூன்று தான். அவை அன்பு, பாசம், பொறுமை.

பெரும்பாலும் வாலிப வயது வரை ஆண்களுக்கு வில்லன் வெளியில் யாரும் கிடையாது. தந்தை என்ற பெயரில் தான் அவர் தரிசனம் தருவார். அவர் உக்ரமடைந்து, சாமியாடும் போதெல்லாம் பொறுமையாய் இருந்து அன்பு நீர் தெளித்து, ஆறுதல் வேப்பிலை அடித்து, அவர் கோபத்தை மலையேற வைக்கும் மகராசி தான் தாய்..! நான் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை, கவலைகளை அடைந்தாலும் கண்ணீர் சிந்துமளவுக்கு கலங்கிப் போவதில்லை. அதுவும் சவுதி வந்து கற்ற வித்தைகளும், கஷ்டங்களும் அதிகம் என்பதால் உணர்வுகள் மரத்து கல்லாகிப் போனே‎ன். இந்த நிலையிலும் ஏதோ ஒரு காரணத்திற்காக என் தாயின் கண்கள் கலங்குவதைக் கண்டால் என்னை நானே கட்டுப்படுத்த முடியாமல் எ‎ன் விழிகளில் இருந்து நீர் சுரக்கும். இது எனக்கு மட்டுமல்ல, தாயை நேசிக்கும் எல்லா தனயனுக்கும் ஏற்படும் உணர்வுதான்.

இத்தனை மகத்துவம் வாய்ந்த தாயை இக்கால மகன்கள் நடத்தும் விதம் நல்லவர்களை நம்பிக்கை இழக்க வைக்கிறது. இதயத்தில் ஏந்தி, போற்ற வேண்டிய தாயை முதியோர் இல்லத்தில் வைத்து அழகு பார்க்கும் அலங்கோலம் நடக்கிறது. அடுக்குமா அந்த ஆண்டவனுக்கே..? உதிரம் தந்து உயிர் கொடுக்கும் தாயை உள்ளம் பதற வைக்காதீர்கள்..! அதல பாதாளத்தில் விழுந்து, அழிந்து போவீர்கள்..!! உங்களுக்கு இவ்வுலகில் சொர்க்கத்தை காண வேண்டுமா..? உங்கள் தாயை உங்களோடு வைத்து, உள்ளங்கையில் வைத்து தாங்கி பணிவிடை செய்யுங்கள். ஆம்..! சொர்க்கம் தாயின் காலடியில் இருக்கிறது..!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails