நேரம்:

புதன், 9 ஏப்ரல், 2008

என் அறிமுகம்..!

என் இயற்பெயர் ஜாஃபர். இதயம் என்ற புனைப்பெயரில் மனதில் பட்டதை எழுதி வருகிறேன். இந்த பெயரை நான் தேர்ந்தெடுக்க காரணம்,

1. இதயம் உயிர் வாழ தேவையான இரத்தத்தை சுத்திகரிப்பு செய்கிறது. அங்கு தான் உயிர் துடிப்பும் தோன்றுகிறது. அது போல சமூகத்தில் இருக்கும் மூடநம்பிக்கை, சமுதாய முரண்பாடுகள் என்ற கெட்ட இரத்தத்தை சுத்திகரிக்க இந்த இதயம் முயற்சி செய்யும்.

2. அன்பிற்கும் இதயத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அது மூளை என்ற எஜமானனின் ரசவாதமே. ஆனால், அன்பு பற்றிய எல்லா விஷயத்திலும் அதற்கு காரணமான மூளையின் பெயர் வராமல் இதயத்தின் பெயர் தான் குறிப்பிடப்படுகிறது. அது போலவே நான் என்னவோ சாதித்தது போலும், சாதிப்பது போலும் பெயர் இதயம் என்ற எனக்கு எப்போதும் கிடைக்கிறது. ஆனால், அதன் பின்னணியில் மூளை போன்ற ஒரு காரணம் இருக்கிறது என்பது தான் உண்மை.

நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவன். தற்பொழுது சவூதியில் வாசம். Real வாழ்க்கையை இழந்து விட்டு Riyal வாலை பிடித்து துரத்திக்கொண்டிருப்பவன். கணிணிக்காதலன். தமிழ் மீதும், தமிழ் எழுதுவதிலும் கூடுதல் ஈடுபாடு. சமூக அவலங்கள் எங்கு இருந்தாலும் எதிர்த்து குரல் கொடுப்பவன். இந்தியாவிற்கு சிறந்ததொரு எதிர்காலம் இருக்கிறது என்று நம்புபவன். மற்றபடி பெரிதாக சொல்லுமளவுக்கு என்னிடம் ஒன்றுமில்லை.

வழக்கம் போல் உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன். இனி இவன் இதயம்..!! நன்றி.

என்றும் அன்புடன்,
இதயம்


கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails