நேரம்:

திங்கள், 14 ஜூலை, 2008

படிக்கப்போறேன்..!

கல்லு ரோட்டுல பஸ்ஸு
காத்து போல பறக்குது!
அடம் புடிக்கும் மனசு
ஆத்தா மடியில் கிடக்குது.!!

படிச்சி கலெக்டராவணும்னு
பாடுபடும் அப்பனோட ஆசை!
மடிப்பு கலையாத ட்ரெஸ்ஸோட
மகராசி என் ஆத்தாவுக்கு நான்
மனம் நெறஞ்சி வாழணுமாம்..!!

அப்பன், ஆத்தா ஆசை நிறைவேத்த்
அத்தை வீட்டில் தங்கி படிக்க
அழுதுகிட்டே போறேன்..!
விலா ஒடிக்கும் வீட்டுவேலை,
திணறடிக்கும் தீப்பெட்டி வேலை
எல்லாத்துக்கும் இனி விடுதலை..!!

பசிச்சாக்கா பாலும், பழமும்
பட்டணத்தில் கிடைக்கலாம்..!
அச்சப்பட்டு அழுவும் போது
உச்சிமோந்து வாரியணைக்க
ஆத்தா அன்பு அங்க இருக்குமா?

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails