நேரம்:

ஞாயிறு, 29 ஜூன், 2008

தசாவதாரம் - அலசல்

தசாவதாரம் படத்தை நான் பார்த்துட்டேன்.. பார்க்கலை..!! என்ன.. என் பதில் குழப்புதா..? ஆமா.. நானும் படத்தை பார்த்தேன்.. ஆனால் முழுதும் பார்க்கலைங்கிறது தான் அதுக்குள்ள இருக்குற செய்தி..! தசாவதாரம் படத்தை சவுதியில் கேமரா பிரிண்டில் வரும் சிடியிலோ, இணையத்தில் சுட்டி தேடி பதிவிறக்கி பார்க்கிற படமோ கிடையாது. அதை நவீன தொழில்நுட்பம் இருக்கும் தியேட்டர்ல நிறைவா பார்க்கிறது தான் சரி..! அது இல்லாத அரைகுறை உணர்வு தான் என்னை முழுதும் பார்க்க விடாம நிறுத்திடிச்சி..! ஒருவேளை நான் அதை முழுதும் பார்த்திருந்தா அதில் இருக்கிற குறைகள் கமல்-ங்கிற திறமைசாலி கலைஞனின் படைப்பை நிராகரிக்க வச்சிடுமோங்கிற கணிப்பு காரணமா இருந்திருக்கும்..!! நமக்கு யார் மேலயோ இருக்கிற கோபத்தை யார் மேலயோ காட்டுற பழக்கம் புதுசில்லையே..!!

படத்தை பத்தி சொல்லணும்னா இந்த திரியோட தலைப்பு மாதிரி படம் முழுதும் கமல்..கமல்..கமல் தான்..!! கமல் திறமைக்கான பரிணாம வளர்ச்சியின் அடுத்த படியை இரசிகர்கள்கிட்ட அழுத்தமா சொல்றதுக்கு ஆஸ்கார் ரவிச்சந்திரனின் செலவில் கமலுக்காக செய்யப்பட்ட பிரமாண்ட விளம்பரம் தான் இந்தப்படம். அடுத்தவன் செலவில் அவருக்கு விளம்பரம் செஞ்சிருந்தாலும் மக்களின் ஆதரவு இல்லாட்டி கமலுக்கு இருக்கிற புகழும் போயிடுற ரிஸ்க்கும் ஏகத்துக்கு இதில் இருக்கு. ஆனாலும், திறமையை மட்டுமே நம்பும் கமல், இந்த முறை திறமையை மட்டும் நம்பி அதிக ரிஸ்க் எடுத்திருக்கார், ஆஸ்கார் ரவிச்சந்திரனை விட..!! ஏன்னா.. பணம் போய்ட்டா சம்பாதிச்சிடலாம்... ஆனால், புகழை தக்க வச்சிக்கிறது தான் ரொம்ப கஷ்டம். அந்த தைரியத்துக்கே முதல்ல அவரை நெஞ்சார பாராட்டலாம். இந்த படத்துக்காக அவர் எடுத்துக்கிட்ட கடும் உழைப்பு, கடந்த ஆளவந்தான் மாதிரி காலை வாராம அவர் கழுத்தில் பூ மாலை போட்டிருக்கு..!!

பொதுவா கதையை வச்சிக்கிட்டு தான் நடிகர்கள், தலைப்பு உள்ளிட்ட எல்லாத்தையும் தேர்ந்தெடுப்பாங்க..!! இங்கே கமல் மனசில் மின்னிய 10 அவதார ஆசை தசாவதாரம்-கிற தலைப்பா உருவெடுத்து, பிறகு அது கே.எஸ்.ரவிக்குமார், ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்று எல்லாத்தையும் தேர்ந்தெடுக்க வச்சிருக்கு..! தொழில் பக்தி இல்லாதவன் திறமைசாலியா உருவாகிறதில்ல.. அதில் உருப்படுறதும் இல்ல..! மக்களின் மனம் போன இரசனை கமல்-ங்கிற நல்ல திறமையான கலைஞனை பல தடவை காயப்படுத்தியிருந்தாலும் இந்த முறை கை கொடுத்து ஆதரவா காயங்களுக்கு மருந்து தடவியிருக்காங்க..!! படத்தில் கதைன்னு ஒண்ணும் இல்ல.. இல்லாட்டி என்ன.. ? படம் 3 மணி நேரத்துக்கு மேல படம் ஓடினாலும் அலுக்காம இருக்க கமல் நிறைய அசத்தியிருக்கார். ஃப்ரேமில் சும்மா வந்து நின்னுட்டு பல கோடிகளை அள்ளிக்கிட்டு போற சினிமா கொள்ளையர்களுக்கு நடுவுல சினிமாவிலேயே விழுந்து, புரண்டு, சம்பாதிச்சி, அழிச்சின்னு அத்தனையும் செய்ற கமலை நாம பாராட்ட வேண்டியது அவசியம்.

கமலோட திறமைங்கிறது நடிப்புங்குற கலையோட பரிமாணத்தை கொஞ்சமாவது புரிந்தவர்களுக்கு மட்டுமே புரிஞ்ச ஒண்ணு..!! அதை புரியாதவங்க அந்த கலைக்கு அவர் கொடுக்கிற விலைகள், படுற கஷ்டங்களுக்காகவாவது அவரை பாராட்டணும்..!! அதான் ஒரு உண்மையான கலைஞனுக்கு நாம் செய்யற மரியாதை..!!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails