நேரம்:

செவ்வாய், 24 நவம்பர், 2009

(S)iringa (M)anasara (S)iringa..! - SMS ஜோக்ஸ்

 

SMS ஜோக்ஸ்

 

 

 

 

 

 

 

நோயாளி: டாக்டர் ரொம்ப நாளா வயிற்று வலி என்னால பொறுக்கவே முடியலை.

 

டாக்டர்:வயிறு வலிக்கும் போது ஏன் பொறுக்கப் போனிங்க ரெஸ்ட் எடுக்கலாமே?!!!...

 

 

ஒரு "சின்னத்" தத்துவம்.

 

பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கும் போது

 

ஆண்களுக்கு பெரிய வீடு, சின்னவீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கக்கூடாதா?

 

 

காதலுக்கு மதிப்பெண்கள்:

 

சுமாரா காதல் பண்ணுனா 35 மார்க்

 

சூப்பரா காதல் பண்ணுனா 80 மார்க்

 

சின்சியரா காதல் பண்ணுனா

-

-

-

 

 

வேறு என்ன "டாஸ் மாக்" தான்

 

 

ஒருவர்: பஸ்ஸ்டாப்புல நின்னு மேலயே பாத்துகிட்டு இருக்கிங்களே ஏன்?

 

சர்தார்: சென்னைக்கு போற பஸ்ஸு ரெண்டு மணிக்கு "மேல" வரும்ன்னு சொன்னாங்க.

 

 

பெண்வீட்டார்: மாப்பிள்ளை என்ன பண்ணுறாரு.?

 

புரோக்கர்: அவர் நின்னா ரெயில் ஓடும் ரெயில் நின்னா மாப்பிள்ளை ஓடுவாரு

 

பெண்வீட்டார்: அப்படியா அப்படி என்ன முக்கியமான வேலைப் பார்க்குறாரு

 

புரோக்கர்: மாப்பிள்ளை ஸ்டேசன்ல முறுக்கு விக்கிறாரு.

 

 

பார்த்திபன்: வடிவேலு உன் மெடிக்கல் கடையில எல்லா மருந்தும் இருக்கா?

 

வடிவேலு: ஆமா உனக்கு என்ன மருந்து வேணும்?

 

பார்த்திபன்: அப்படின்னா ஒரு கிலோ வெடிமருந்து கொடு.

 

 

ஒருவர்: டாக்டர் நான் சிம்கார்டை முழுங்கிட்டேன்

 

டாக்டர்: கையை உள்ளே விட்டு எடுக்க வேண்டியதுதானய்யா?

 

ஒருவர்: உள்ளே விட்டுப் பாத்துட்டேன் டாக்டர் Not reachable ன்னு சத்தம் வருது

 

 

பெத்தப் பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு

என்னன்னா…..

 

ரெண்டையும் கட்டிக் கொடுக்கிற வரைக்கும் அடிவயிற்றுல ஒரு நெருப்பு பத்தி எரிஞ்சுக்கிட்டே இருக்கும்.

 

 

சர்தார் 1: வெயிட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கல

 

சர்தார் 2: அப்படி என்ன படிப்பு படிச்சுருக்க

 

சர்தார் 1: pre (Kg) L(Kg) U(Kg)

 

 

கணவன்: நான் திடீர்ன்னு செத்துப் போனா நீ என்ன செய்வே?

 

மனைவி: நானும் கூடவே செத்துப் போயிடுவேங்க.

 

கணவன்: ஜோசியக்காரன் எனக்கு அப்பவே சொன்னான் நீ செத்தாலும் சனி உன் கூடவே வரும்ன்னு

 

 

ஒரு மொபைல் தத்துவம்:

 

பொண்ணுங்க மனசு தண்ணி மாதிரி

 

பசங்க மனசு மொபைல் மாதிரி

 

தண்ணி மேல மொபைல் விழுந்தாலும்

 

மொபைல் மேல தண்ணி விழுந்தாலும்

 

சேதம் என்னவோ மொபைலுக்குத்தான்.!!!

 

 

.சிறப்பு தத்துவம்.

ஒரு மஞ்சக்கயித்த உன் கையில கட்டுனா அதுக்கு பேரு காப்பு..!!

 

அதையே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா அது நீ

 

உனக்கு வச்சுக்கிட்ட ஆப்பு.!!

 

 

 

.நீதிபதி: ஏண்டா சரவணா ஸ்டோர் கடையில திருடுன?

 

திருடன்: சதா அக்காதான் "எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோன்னு சொன்னாங்க அதான் சாமி எடுத்தேன்.

 

 

நச்சுன்னு ஒரு உண்மை சொல்லுறேன் கேட்டுக்குங்க.

 

என்னதான் 220CC பல்சரிலும், 350CC ராயல் என்பீல்டுலயும் இந்த பசங்க சுத்தினாலும் ஃபாலோ பண்ணப்போறது என்னவோ 80CC ஸ்கூட்டியைதான்.

 

 

143 அப்படின்னா என்ன அர்த்தம் சொல்லுங்க.

 

I love you வா ம்ஹூம் இல்லை

 

I hate you வா இல்லவே இல்லை

 

I like you வா ம்ஹூம்

 

I miss you வா இல்லை

 

I wish you வா இல்லை இல்லை இல்லை

 

சரி நான் சரியாக சொல்லுறேன்

 

143ன்னா

-

-

நூத்தி நாப்பத்து மூன்று. (அய்யோ அடிக்க வராதிங்க)

 

 

ஹமாம் சோப் ரீ மிக்ஸ் விளம்பரம்:

 

பவித்ரா கடைக்குப் போயி ஒரு குவார்ட்டர் சரக்கு வாங்கிட்டு வர்றியாம்மா?

 

சரிம்மா.....

 

அய்யய்யோ என் பொண்ணுகிட்ட என்ன சரக்குன்னு சொல்லலியே

 

வாந்தி வருமே

 

தலைவலிக்குமே

 

ஒவர் ஹேங் ஆகுமே

 

போதை ஏறாதே

 

பவித்ரா ..........

 

என்னம்மா (பவித்ரா கையில் ஒல்ட் மங்குடன்)

 

ஓல்ட் மங்கிருக்க பயமேன்.!!!

 

 

தொண்டன்: தலைவரே நீங்க சொன்ன மாதிரி அசிஸ்டண்ட் கமிசனர போட்டுத் தள்ளிட்டோம்

 

அரசியல் தலைவர்: என்னடா சொல்லுறிங்க எப்படா நான் அசிஸ்டண்ட் கமிசனர கொல்லச் சொன்னேன்?

 

தொண்டன்: போங்க தலைவா நேத்துத்தான சொன்னிங்க ரொம்ப டென்சனா இருக்கு அந்த ஏசியப் போடுங்கடான்னு.

 

 

தண்ணீர் தெளிச்சு ஏன் கோலம் போடுறாங்க தெரியுமா?

 

ஏன்னா

 

கோலம் போட்டுட்டு அப்புறம் தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சுடும்.

 

 

காந்தி 13 வயசுல கல்யாணம் பண்ணுனாரு

 

நேரு 14 வயசுல கல்யாணம் பண்ணுனாரு

 

பாரதி 7 வயசுல கல்யாணம் பண்ணுனாரு

 

இப்பத்தான் தெரியுது நாம ஏன் வரலாற்றுல இடம் பெறலன்னு.!!

 

 

.ஜோசியர்: உங்க ஜாதகப் படி நீங்க ரொம்ப பணக்கஷ்டத்துல இருக்கனுமே

 

ஜோசியம் பார்ப்பவர்: ஆமாம் சாமி.. இப்ப உங்களுக்கு கொடுக்கக் கூட கையில் பத்துப் பைசா இல்லை.

 

 

படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்

 

படிப்புத்தான் வரல

 

தூக்கமாவது வருதேன்னு நினைச்சு

 

சமத்தா தூங்கிடனும்.

 

 

.தினம் ஒரு kural படிக்கனும்

 

எனவே இன்னிக்கு இந்த kural படிங்க

 

"மியாவ் மியாவ் "

 

சரியா நாளைக்கு வேற kural படிக்கலாம் என்ன?(சரி சரி அழக்கூடாது)

 

 

பையன்: அம்மா எல்லா வெடியும் தீந்துப் போச்சு இந்த சிவப்பு கலர் பெரிய வெடியை விடவா?

 

அம்மா: சனியனே அது கேஸ் சிலிண்டருடா.....

 

 

.மனசு இருந்தா SMS அனுப்புங்க...

 

அன்பு இருந்தா பிக்சர் மெசேஜ் அனுப்புங்க

 

காசு இருந்தா CALL பண்ணுங்க...

 

எல்லாம் இருந்தா .....

 

உங்க செல்லை கொரியரில் அனுப்புங்க ஹி ஹி....

 

 

.ஒரு பையன் ரோட்டுல தும்மிகிட்டே போறான்

 

ஏன்?

 

ஏன்னா

 

அவன் பொடிப் பையன்.

 

 

நாம் வாழனும்னா எத்தனைப் பொண்ணை வேனும்னாலும் காதலிக்கலாம்

 

ஆனா சாவனும்னா

 

ஒரே ஒரு பொண்ணை

 

கல்யாணம் கட்டிக்கிட்டாப் போதும்.

 

 

பசங்க காதலுக்கும் பொண்ணுங்க காதலுக்கும் என்ன வித்தியாசம்.

 

பசங்க பிரண்டுன்னு சொல்லிட்டு பின்னாடி காதலிப்பாங்க

 

பொண்ணுங்க காதலிச்சுட்டு பின்னாடி பிரண்டுன்னு சொல்லுவாங்க.

 

 

.நண்பா..!! நேற்று என் கனவில் நீ வந்தாய்

 

கட்டுக்கட்டாக பணத்தினை எண்ணிக்கொண்டிருந்தாய்

 

ஆனால் ஒரு விசயம் மட்டும் புரியவில்லை

 

அது என்னவென்றால்

 

ஏன் கோவில் வாசலில் உட்கார்ந்திருந்தாய்?

 

 

ஒருவர். ஹலோ சிங்ஜி ஏன் உங்க புது வீட்டுக்கு பாடி ஸ்பிரே அடிக்கிறிங்க

 

சர்தார். ஏன்னா இது வியர்வை சிந்தி கட்டிய வீடு.

 

 

திருடர்கள் ஜாக்கிரதை என்னும் தலைப்பில் கவிதை எழுத

கண் மூடி ஒரு நிமிடம் யோசித்தேன் விழித்துப் பார்த்தால்

என் பேனாவை காணவில்லை.

 

 

இப்ப நீங்க பைசா செலவில்லாம டென்னிஸ் பார்க்கப் போறிங்க

 

IS IS IS IS IS IS IS IS IS IS

 

பாத்தாச்சா டென்னிஸை

 

மீண்டும் வருகிறென்.

 

நன்றி

 

 

.தங்கச் செயினை உருக்கினால் தங்கம் வரும்

 

வெள்ளிச்செயினை உருக்கினால் வெள்ளி வரும்

 

அதுமாதிரி சைக்கிள்செயினை உருக்கினால் சைக்கிள் வருமா?

 

 

ஒருவன்: பாவம் அந்த பொண்ணுக்கு காது கேட்காது போல நான் ஒன்னு சொன்னா அது ஒன்னு சொல்லுது

 

கேட்பவர்: ஏன் என்னாச்சு

 

ஒருவன்: நான் ஐ லவ் யூன்னு சொன்னா அதுக்கு செருப்பால அடிப்பேன்னு சொல்லுது.

 

 

 

அவளுக்கு எண்ணை பிடிக்கவில்லை

 

அதனால் எனக்கும் எண்னைப் பிடிக்கவில்லை.

 

ஆகவே

 

-

 

-

 

ரெண்டு பேரும் எண்ணை இல்லாமல் தோசை சுட்டு சாப்பிட்டோம். ஒகே.

 

 

.ஓட்டுப்போடுவதற்கான அதிகாரபூர்வ வயது 18

 

திருமணத்திற்கான அதிகாரபூர்வ வயது 24

 

இதிலிருந்து என்ன தெரியுது.

 

IT IS TOUGHER TO CONTROL A LADY THAN A COUNTRY

 

 

 

 

 

 

 

 

நன்றி: இணையம்

 

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails