நேரம்:

வியாழன், 12 நவம்பர், 2009

நவீன கைப்புள்ள..!!!

எச்சரிக்கை: இந்த கதையில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல..!!-என்று நான் சொல்ல மாட்டேன். நீங்கள் யாரை நினைத்துக்கொண்டு படிக்கிறீர்களோ அவர்கள் தான் இந்த கதையில் வருபவர்கள். !!!!

 

 

நவீன கைப்புள்ள..!!!

 

 

 

 

 

எல்லோரும் ஜரீர் ஹெட் ஆஃபீஸ் மீட்டிங் ரூமில் கூடி உட்கார்ந்து இருக்கிறார்கள். அப்பொழுது கூட்டத்தில் பரபரப்பு...

 

ஏய்..அண்ணன் வரார்.. அண்ணன் வர்ரார்.. எல்லாரும் தள்ளி நில்லுங்க...!

 

அல்லக்கைகள் இரண்டு பக்கமும் வரஅதன் நடுவே அலம்பலாக நம் "காத்தான் குடி கைப்புள்ள" இர்ஷத் வருகிறார்.!

 

 

இர்ஷத் கூட்டத்தை பார்த்து...

 

ம்ம்ம்.... எல்லாரும் வந்தாச்சா.. அப்புறம் பர்ச்சேஸ்லேர்ந்து ஜாஃபர் வரலை, ஹெச்.ஆர்லேர்ந்து சாதிக் வரலை,  ஐ.டி-லேர்ந்து ஆசிம் வரலைன்னு குறையெல்லாம் சொல்லக்கூடாது..  ஆமா..!!  ஒரு சான்ஸ் கொடுத்தா எல்லாம் "கப்"புன்னு பிடிச்சி யூஸ் பண்ணிக்கணும்..!!

 

கூட்டத்தில் இருந்த பெரியவர் ரஸ்வி எழுந்து கோபத்துடன்...

 

ஏய்.. நாங்கல்லாம்..வருஷக்கணக்கில ஜரீர்ல வேலை பார்த்தும் அதே வேலையில் தான் இப்பவும் இருக்கோம். நீ வந்த மூணு வருஷத்திலேயே ப்ரொமோஷனுக்கு ரிக்வெஸ்ட் குடுத்தியாமே.?!!

 

அவரை இர்ஷத் எகத்தாளமாக பார்த்துவிட்டு கூட்டத்தை நோக்கி...

 

ஏண்டா... இத்துணூண்டு ப்ரொமோஷன் லெட்டர் எழுதினேன்னு இத்தனை பேரு வேலை வெட்டியெல்லாம் போட்டுட்டு வந்து உட்கார்ந்திருக்கீங்களே.. நீங்கள்லாம் விருந்தாளிக்கு பொறந்தவனுங்களாடா..?

 

பக்கத்தில் இருந்த சாதிக் முகத்தில் கொலை வெறியுடன்..

 

ஏண்டா எடுபட்ட பயலே.. . அக்ரம் கொஞ்சம் சிரிச்சி பேசினா உடனே நீ ப்ரமோஷனுக்கு அப்ளை பண்ணிடுவியா..?

 

அவரை நோக்கி புயலாய் திரும்பிய இர்ஷத் கடுப்புடன்..

 

ஏய்...ஏண்டா நீ சவுண்டு கொடுக்கிறே... ஏன் கொடுக்கிறே..?!! உன்னை எப்பவும் தனிச்சி செயல்படக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல..?!!  ரொம்ப சவுண்ட் விட்டா உன்னை உபைத் கிட்ட போட்டு கொடுத்துடுவேன் ஆமா..! -என்றவுடன் வாயை மூடிக்கொண்டு உட்காருகிறார் சாதிக்.

 

 

பிறகு இர்ஷத் கூட்டத்தின் பக்கம் திரும்பி...

 

ஆமாய்யா.. வேலையில போட்டு வெளுத்து எடுக்கிறாய்ங்களேன்னு நினைச்சி, ஒரு நப்பாசையில ப்ரோமோஷனுக்கு ரிக்வெஸ்ட் அனுப்புனது தப்பு தான். அதனால என்னை எல்லாரும் உங்க வீட்டு பிள்ளையா நினைச்சி மன்னிச்சிக்கங்க..!!  என்று எகத்தாளத்துடன் மன்னிப்பு கேட்க.

 

கூட்டம் கொஞ்சம் கூட கொலை வெறி குறையாமல் முறைக்கிறது. அங்கிருந்த அக்ரமின் வலது கை "சோகம்" ஷஃபீக் இர்ஷத்தை பார்த்து...  

 

"செய்றதையும் செஞ்சிட்டு என்னடா மன்னிப்பு....? மொத்துங்கடா அவனை..!! - சொன்னவுடன் ஆளாளுக்கு பாய்ந்து வந்து இர்ஷத்தை பின்னி எடுக்கிறார்கள். அவர்கள் விலகி போன பிறகு பார்த்தால் அவரின் சட்டை, பேண்ட், டை எல்லாம் நார் நாராக கிழிந்து தொங்கியபடியே நிமிருகிறார்

 

அவர் அடி வாங்கியதை பொறுக்காமல் அவரின் அல்லக்கைகள் எல்லாம் கலங்கி போய் நிற்கிறார்கள். ஆனால் அவரோ அடி வாங்கிய வலி கொஞ்சம் கூட முகத்தில் காட்டாமல் தன் அல்லக்கைகளை பார்த்து...

 

டேய் எல்லாம் ரெடியாடா..?

 

அல்லைக்கைகள் அழுத படியே உடம்பு காயத்துக்கு போட மருந்து, புது பேண்ட், ஷர்ட், டை எடுத்து கொடுக்கிறார்கள்.

 

"அண்ணே.. உங்களுக்கா இந்த நிலமை..?!!"  என்று கதறி அழுகிறான் ஒரு ஆழ்ந்த அன்புள்ள அல்லக்கை..!

 

அவர்கள் கொடுத்த புது சட்டை, பேண்டை போட்டுக்கொண்டே...

 

டேய் அழாத நீ..! அழுதா அண்ணனுக்கு அசிங்கம்ல..!! நீ ஒண்ணும் கவலைப்படாதே.. இந்த அடிவாங்கின அனுதாபத்த வச்சே அண்ணன் அராம்கோவுக்கு வைஸ் ப்ரசிடண்ட் ஆகிடுவேன்ல..!!

 

டையை கொடு..!! என்று கேட்டு வாங்கி ஸ்டைலாக உதறி கழுத்தில் கட்டிக்கொள்கிறார். 

 

தான் அடி வாங்கியதை நினைத்து "ம்ம்ம்...ஏதோ உடம்பு சவுதியில் ப்ரோஸ்டும், பிரியாணியுமா தின்னதால இந்த அடியெல்லாம் தாங்குது.. இல்லாட்டி என்னாகும் நிலமை...?!!

 

பிறகு கூட்டத்தை பார்த்து...

 

சரி.. மக்கா நான் கிளம்புறேன்..நெக்ஸ்ட் மீட்டிங்ல மீட் பண்ணுவோம். ..!!!  என்று கையசைத்தபடி அல்லக்கைகளுடன் கிளம்புகிறார்.

 

அல்லக்கைகள் அவரை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு..

 

இடி தாங்கி இர்ஷத்..!! வாழ்க..!!

 

வலி தாங்கும் மாவீரன் இர்ஷத்.. வாழ்க..வாழ்க..!!!

 

என்ற கோஷத்துடன் அவரை கொண்டு போகிறார்கள்.!!!!

 


கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails