ஹலால்- அனுமதிக்கப்பட்டது
ஹராம்- தடுக்கப்பட்டது.
சுன்னத் - செய்தால் சிறப்பு, ஆனால் செய்யாவிட்டாலும் தவறில்லை.
பர்ளு - அவசியம் செய்ய வேண்டும். செய்யாவிட்டால் பாவம்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் இஸ்லாம் மனிதனுக்கு எதை செய்ய வேண்டும். எதை செய்யக்கூடாது என்று சொல்லி அவற்றுக்கான பிரிவுகளையும் சொல்கிறது. இங்கே சிவப்பு நிறத்தில் உள்ளவை குரானில் குறிப்பிடப்பட்டுள்ள அரபு வார்த்தைகள். அதன் அர்த்தத்தை தான் அருகில் நீல நிறத்தில் பார்க்கிறீர்கள்.
உதாரணத்திற்கு
மது அருந்துவது இஸ்லாத்தில் ஹராம். அதாவது தடுக்கப்பட்டது.
மாமிசம் உண்பது இஸ்லாத்தில் ஹலால் - அதாவது அனுமதிக்கப்பட்டுள்ளது
தொழும் போது தொப்பி அணிவது சுன்னத். அதாவது கூடுதல் சிறப்பு. செய்யாவிட்டால் குற்றமில்லை.
மனிதனுக்கு தொழுகை பர்ளு - அதாவது அவசியம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் அது பாவத்திற்கு நிகரானது. புரிந்ததா நண்பரே..?
Quote:
Originally Posted by lolluvathiyar இவற்றில் எனக்கு சுன்னத என்றால் என்ன என்றூ மட்டுமே தெரியும் |
அந்த விஷயத்திலும் முழுதும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. சுன்னத் என்ற அரபு வார்த்தைக்கு ஒரு செயல் செய்தால் சிறப்பு, செய்யாவிட்டால் குற்றமில்லை என்று பொருள் படும். ஆனால், மாற்றுமத நண்பர்களை பொருத்தவரை சுன்னத் என்பதற்கு ஆண் உறுப்பின் முன் தோல் நீக்கும் செயல் விழாவாக எடுக்கப்படுதல் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். அதுவல்ல அர்த்தம்.
முன் தோல் நீக்கப்படுதல் இஸ்லாத்தை பொருத்தவரை சிறப்பு கொடுக்கும் ஒன்று. சுத்தம், நோய்க்கு எதிரான நடவடிக்கை, உடலுறவில் கூடுதல் இன்பம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டுள்ளது. ஆனால், அதைச் செய்யாவிட்டால் குற்றமில்லை. அப்படி என்றால் அப்படி செய்யப்படாமலும் ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியும். உதாரணத்திற்கு ஒரு மாற்றுமத நண்பர் இஸ்லாத்தை தழுவினால் அவர் கட்டாயம் அந்த செயலை செய்து கொள்ளவேண்டியதில்லை. அது அவர் இஷ்டம். அதன் பயன்பாட்டை வைத்து விரும்பி செய்து கொண்டால் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் தேவையில்லை.
இஸ்லாத்தில் உள்ள ஷியா, சன்னி மதப்பிரிவுகள் பற்றி அடுத்த பதிப்பில் இடுகிறேன்.
Quote:
Originally Posted by agnii முஸ்லீம்கள், மாமிசம் உண்பதானால் அல்லது வாங்குவதானால், முஸ்லீம் கடைகளைத் தேடிப் போவதுண்டு. வேறு இடங்களில் உண்பதும் பெரும்பாலும் இல்லை. இது வெளிநாடுகளில் கூட காணக்கூடியதாயுள்ளது. ஏன்? |
பொதுவாக உயிர் எடுக்கும் நிகழ்ச்சியான கொலை என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இதில் சிறிய, பெரிய, விலங்கு, மனிதன் என்ற பேதம் இஸ்லாத்தில் இல்லை.
ஆனால், சில இடங்களில் கொலையும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஒருவன் ஒரு பெண்ணை கற்பழித்தால் அவனுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும். அவனை தூண்டுமளவுக்கு அந்த பெண் அரைகுறை ஆடை அணிந்து தூண்டியிருந்தால் அது அவன் தவறு மட்டுமே இல்லையே என்று நீங்கள் சொல்வீர்கள். அதற்கும் தான் இஸ்லாம் தீர்வு சொல்கிறதே. பெண்கள் அந்நிய ஆண்களை கவராத அளவிற்கு உடை உடுத்த வேண்டும். உடம்பின் வளைவு நெளிவுகள் தெரியாத அளவிற்கு லூஸான உடை என்றும் சொல்லிக்கொடுக்கிறது. அதையும் தாண்டி ஒரு பெண்ணை அவன் கற்பழித்தான் என்றால் அந்த தண்டனை நியாயம் தானே.
மரணதண்டனை என்பது அதிகம் இல்லையா..? என்று கேட்பீர்கள். மூன்றாம் மனிதனான உங்களுக்கு அது அதிகம். நம் குடும்ப பெண்கள் அந்த இடத்தில் இருந்தால் நிச்சயம் நியாயம் என்பீர்கள். இஸ்லாம் பிரச்சினைகளை சம்பந்தவர்களின் இடத்தில் இருந்து யோசித்து சொல்கிறது. அது தானே நியாயம்.??
உயிர்க்கொலையை பொருத்தவரை அனுமதிக்கப்படும் இன்னொரு விஷயம் உணவுக்காக. ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரை உணவுக்காக சார்ந்தே இருக்கிறது. அது இயற்கை. அதை மாற்ற நினைப்பது முட்டாள் தனம். அப்படித்தான் உணவுக்காக விலங்குகளை கொல்வது. இதில் விலங்குகளை உணவைத்தவிர வேறு எதற்காகவும் கொல்ல அனுமதி இல்லை. விலங்கு வேட்டையை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
அந்த விலங்கு உணவுக்காக தான் கொல்லப்படுகிறது என்பதை உறுதி செய்ய இஸ்லாம் ஒரு வழிமுறை சொல்லுகிறது. உணவுக்காக எந்த உண்ண அனுமதிக்கப்பட்ட விலங்கை கொல்லும் போதும் "உணவுக்காக இறைவன் பெயரில் பலியிடுகிறேன்" என்று உறுதி மொழி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு வேறு காரணம் இருக்கலாம் என்பது அர்த்தமாகிவிடும். அப்படி சொல்லப்படாத எந்த விலங்கையும் உண்ணக்கூடாது. உதாரணத்திற்கு விபத்தில் அடிபட்டவை, நோயில் இறந்தவையும் அனுமதிக்கப்படவில்லை. காரணம், அதன் இறப்பு உணவுக்காக இல்லை என்ற விஷயத்தை அங்கும் இஸ்லாம் நிலை நிறுத்துகிறது. மேலே சொன்னவற்றை முஸ்லீம்கள் செய்கிறார்கள் என்பதால் அவர்களிடம் போய் வாங்குகிறார்கள். காரணம், கொல்பவன் மட்டுமல்ல, அதை அறிந்தே வாங்கி உண்பவனும் பாவியாகிறான்.
அக்னி:
அருமையான பொறுமையான அழகான விளக்கம்...
நன்றிகள்...
ஜோய்ஸ்:
இன்னமும் எழுதுங்கள் ஜாபர் சாப்.
அக்னி:
கண்ணியமான கருத்துப் பகிர்வு செய்வதற்கு வாழ்த்துக்கள். கருத்துத் திணிப்பு இல்லாதவிடத்து இயல்பாகவே கவர்ச்சி ஏற்படும் என்பதற்கு உதாரணமாக இத்திரி விளங்கும்.
LOLLUVAATHIYAR:
Quote:
Originally Posted by agnii முஸ்லீம்கள், மாமிசம் உண்பதானால் அல்லது வாங்குவதானால், முஸ்லீம் கடைகளைத் தேடிப் போவதுண்டு. வேறு இடங்களில் உண்பதும் பெரும்பாலும் இல்லை. இது வெளிநாடுகளில் கூட காணக்கூடியதாயுள்ளது. ஏன்? |
மாமிசம் சாப்பிடுவது முஸ்லீம்கள் மட்டுமல்ல, அனைத்து மதங்களிலும் உள்ளது.
ஹிந்துகள் மாமிசம் சாப்பிடுவது தொண்று தொட்டு உள்ள பழக்கம்.
ஹிந்துகளில் மாமிசம் சாப்பிடாத பிரிவுகள் குரைவுதான்.
இன்று ஹிந்துகளில் 60 % மாமிசம் சாப்பிடுவார்கள்.
இதயம்:
நண்பரின் கேள்வி முஸ்லீம்கள் மாமிசம் சாப்பிடுவது மட்டும் பற்றியல்ல, அவர்கள் ஏன் முஸ்லீம்களிடம் மற்றும் குறிப்பிட்ட கடைகளை தேடிப் போய் வாங்குகிறார்கள் என்பது பற்றியும் தான்.
இதற்காகவே மாற்று மத இறைச்சி கடை நண்பர்கள் ஒரு முஸ்லீமைக் கொண்டு விலங்குகளை பலியிட்டு, பிறகு இறைச்சியை விற்பார்கள். மத நல்லிணக்கத்திற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்.
சிவா.ஜி:
இஸ்லாம் தொடங்கப்பட்ட காலத்தில் முஹம்மது நபி அவர்கள் சில பழக்க வழக்கங்களை யூதர்களிடமிருந்து பெற்று இஸ்லாத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.சுன்னத்,பன்றி இறைச்சி உண்ணாமை மற்றும் உண்ணா நோன்பு ஆகியவைகள். அதனால் தான் சுன்னத் என்பது கட்டாயமாக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.
ஆதாரம ்
A General History of the Middle East என்ற கட்டுரையில் 157 ஆவது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Mohammed thought that Jews and Christians would readily follow him, once they recognized him as a prophet. Several Judeo-Christian traditions found their way into the Koran, and Mohammed initially adopted some Jewish practices, like circumcision, a prohibition on pork, fasting on the Day of Atonement, and praying toward Jerusalem. Later, when he realized that the Dhimmi would not convert so easily, he made Islam a religion with an Arabian character
இதயம்:
முஸ்லீம்களின் நம்பிக்கை படி இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள் எல்லாம் இறைவனால் முஹம்மது நபிகள் வழியாக அருளப்பட்டவை. அவையே தொகுக்கப்பட்டு திருக்குரான் ஆகியது.
நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் ஒரு தனி மனிதரால் எழுதப்பட்டிருக்கிறது. அதில் இஸ்லாத்திற்கு முரணான விஷயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாம் என்பது நபிகள் தோற்றுவித்த மதம் அல்ல. இறைவனால் அருளப்பட்ட வாழ்க்கை நெறி. அதை உலகுக்கு எடுத்துச் சொன்னது, அதன் மூலம் வாழ்ந்து காட்டியது நபிகளின் பங்கு.
ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். அதெல்லாம் உண்மையாகாது. நம்பகத்தன்மை என்பது ஆதாரம் என்பது மூலமே நிரூபிக்கப்படும். இஸ்லாம் சம்பந்தப்பட்ட பெரும்பாலான வரலாற்று ஆதாரங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
சிவா.ஜி:
தெரிந்து கொண்டதை தெளிவுபடுத்திக்கொள்ளத்தான் கேட்டேன். தெளியவைத்ததற்கு நன்றி.தனி நபரின் கருத்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தெரிந்தவரிடம் கேட்டால் தான் உண்மையான தகவல் கிடைக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.நன்றி.
இணைய நண்பன்:
தோழர் ஜாபர் அவர்களே.உங்கள் சேவை பாராட்டத்தக்கது.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
அக்னி:
Quote:
Originally Posted by lolluvathiyar மாமிசம் சாப்பிடுவது முஸ்லீம்கள் மட்டுமல்ல, அனைத்து மதங்களிலும் உள்ளது.
ஹிந்துகள் மாமிசம் சாப்பிடுவது தொண்று தொட்டு உள்ள பழக்கம்.
ஹிந்துகளில் மாமிசம் சாப்பிடாத பிரிவுகள் குரைவுதான்.
இன்று ஹிந்துகளில் 60 % மாமிசம் சாப்பிடுவார்கள். |
Quote:
Originally Posted by mehajaafar நண்பரின் கேள்வி முஸ்லீம்கள் மாமிசம் சாப்பிடுவது மட்டும் பற்றியல்ல, அவர்கள் ஏன் முஸ்லீம்களிடம் மற்றும் குறிப்பிட்ட கடைகளை தேடிப் போய் வாங்குகிறார்கள் என்பது பற்றியும் தான்.
இதற்காகவே மாற்று மத இறைச்சி கடை நண்பர்கள் ஒரு முஸ்லீமைக் கொண்டு விலங்குகளை பலியிட்டு, பிறகு இறைச்சியை விற்பார்கள். மத நல்லிணக்கத்திற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம். |
நான் கேட்டது சரி. பதிலும் கிடைத்துவிட்டது. இடையில் ஒரு விளக்கம் என்னவென்றால்...
Quote:
Originally Posted by agnii முஸ்லீம்கள், மாமிசம் உண்பதானால் அல்லது வாங்குவதானால், முஸ்லீம் கடைகளைத் தேடிப் போவதுண்டு. வேறு இடங்களில் உண்பதும் பெரும்பாலும் இல்லை. இது வெளிநாடுகளில் கூட காணக்கூடியதாயுள்ளது. ஏன்? |
உண்பதனால் - உண்பது ஆகையால் > வழக்கமான செயல்
உண்பதானால் - உண்பது என்றால் > விருப்பம் என்றால் செய்யும் செயல்
இதுதான் வித்தியாசம்.
இதே விளக்கம்தான்,
வாங்குவதானால் என்பதிலும் என்பதிலும் வரும்...
மொக்கச்சாமி:
மிக்க நன்றி...ஜாபர்
ரொம்ப நாளாக இருந்த சந்தேகங்கள் தீர்ந்தது...
உங்கள் பகிர்தலுக்கு நன்றி
அக்னி:
புனித நூலான குர்ரான் தமிழில் உள்ளதா..?